Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: 155 தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய Atlantic Reaper குழுவினரை கெளரவிக்கும் விருந்துபசார விழா

Featured Replies

1986ம் ஆண்டு நியூபவுண்ட்லாண்டின் கடற்கரையினை அடைந்த கப்பலிலிருந்து 155 தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய Atlantic Reaper குழுவினரை கெளரவிக்கும் விருந்துபசார விழா.

1986ம் ஆண்டு நியூ பவுண்ட்லாண்ட் கடற்கரையினை அடைந்த படகிலிருந்து 155 தமிழ் அகதிகள் Atlantic Reaper என்னும் குழுவினரால் காப்பாற்றப்பட்டனர். மிகவும் கடினமான சூழலில் 155 பேரையும் மீட்ட Atlantic Reaper குழுவினரைக் கெளரவிக்கு முகமாகவும் கனடிய மண்ணிற்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் கனடியத் தமிழர் பேரவை இராப்போசன விருந்து ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது.

Atlantic Reaper குழுவின் தலைவரான காப்டன் கஸ் டால்டன் என்பவர் உடனடியாக கனடிய கரையோரச் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அழைத்ததோடு அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை திரும்பிச் செல்லுமாறு அறிவித்து கணமும் தாமதியாது மீட்பு வேலையில் ஈடுபட்டார். முதலில் பெண்களும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர். பின்னர் கனடிய கரையோரச் சேவையின் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மீதிப்பேர் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்டு அகதிகளாக இந்நாட்டில் கால்பதித்த இந்த மக்கள் மிகவும் குறைந்த ஆங்கில அறிவினையும் மடியில் மிகவும் குறைந்தளவு பணத்தினையும் கொண்டிருந்த போதிலும் இன்று இவர்கள் இக் கனடிய மண்ணில் பெருமை கொள்ளும் வகையில் தங்கள் பொருளாதாரம் குடும்பம் வர்த்தகம் ஆகியவற்றை மிகவும் சிறந்த முறையில் கட்டியெழுப்பி கனடிய தேசத்தின் பொருளாதார மேம்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். மேலும் இவர்கள் கனடாவின் சிறந்த பிரசைகளாக இருப்பதுடன் தங்களுக்கு வரவேற்புக் கரம் நீட்டிய கனடிய மண்ணுக்கும் தங்களைப் பாதுகாப்பாக மீட்ட Atlantic Reaper குழுவினருக்கும் மிகுந்த நன்றியுடையவர்களாக இருக்கின்றனர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளாக கனடிய மண்ணில் தஞ்சம் கொண்ட இவர்களும் அதற்கு முன்னதாக கனடிய மண்ணை வந்தடைந்த அகதிகளைப் போன்றவர்கள் தான். வந்தடைந்த காலங்களில் வேறுபாடுண்டே தவிர வேறொன்றிலும் மாறுபாடில்லை எனவும் தனது நேசக் கரங்களை நீட்டி எமது மக்களை வரவேற்ற கனடிய மண்ணிற்கு நன்றி கூறுவதில் ஒரு கனடிய தமிழனாக பெருமை கொள்வதாக கனடிய தமிழர் பேரவையின் பணிப்பாளராகிய பிரகல் திரு அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கப்டன் டால்ரன் அவர்களதும் அவரின் குழுவினதும் துணிச்சலும் உதவும் மனப் பான்மையினையுமிட்டு கனடிய மக்கள் பெருமை கொள்ள வேண்டும். அதுமாத்திரமன்றி இந்த நிகழ்வு காப்பாற்றப்பட்ட மக்களின் மனதில் என்றும் நீங்காது இருக்கும் எனவும் கூறினார்.

இந் நிகழ்வினை நினைவு கூருமுகமாகவும் கொண்டாடுமுகமாகவும் கனடிய தமிழர் பேரவையானது தனது நன்றியறிதலை நியூபவுண்ட்லாண்ட் சஞ்சிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் கப்டன் டால்ரனையும் அவரது குழுவினையும் கெளரவிக்கும் முகமாக இராப்போசன விருந்து ஒன்றினை 171 Water Street, St. John’s, Newfoundland ல் அமைந்துள்ள Bianca’s Restaurant ல் வழங்குகின்றது.

மேலதிக தொடர்புகட்கு: கனடிய தமிழர் பேரவையின் பணிப்பாளர் பிரகல் திரு (416) 727- 3430

கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகர் கரி ஆனந்தசங்கரி (416) 564-9991

கனடிய தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை (905) 781- 7034

நியுபவுண்லாந்துக்கு நன்றி!

1986ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் திகதி கடலில் பரவவிட்ட வலைகைளை சேகரிக்கச் சென்ற அட்லாண்டிக் ரீப்பர் மீன்பிடிக் கப்பலின் மாலுமிகள் அந்த நாள் ஒரு சாதாரண நாளாகவே நிறைவுபெறும் என எண்ணியிருந்தனர்.

ஆனால் கடலில் அனாதரவாக தத்தளித்துக்கொண்டிருந்த 155 தமிழர்களை காப்பாற்ற ஒரு வாய்ப்பு வரும் என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நியுபவுண்லாந்தின் செயின்ட் ஷொட்ஸ் அருகாமையில் இரண்டு சிறிய உயிர் காப்புப் படகுகளில் தவித்துக்கொண்டிருந்த தமிழர்களை திரு. கஸ் டால்டன் காப்டனாக பணிபுரிந்த கப்பல்தான் முதல் முதலாக அவதானித்தது. 146 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள், ஒரு 2 வயது குழந்தை உட்பட இக் குழுவில் அடங்கியிருந்தனர்.

செயினட் மேரி பே-யைச் சேர்ந்தவர்களான காப்டன் டால்டன் மற்றும் அவரது மாலுமிகளான ஜோ மல்ரூனி, ஜோன் மக்கெவோய், டாம் பவர் செய்த உடனடி உதவியால் அகதிகளாக நிர்க்கதியாக வந்த 155 தமிழர்களும் கனடிய கரையோரக் காவல்படையினரால் நியூபவுண்லாந்து மெமோரியல் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நூற்றுக்கு மேற்பட்ட நியுபவுண்லாந்தின் பிரஜைகள் செஞ்சிலுவை அங்கத்தவர்களுடன் சேர்ந்து கனடாவின் கடற்கரையில் அடியெடுத்துவைத்த தமிழரை தமது உடன் பிறப்பினரைப்போல் விருந்தோம்பிப் பராமரித்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லமுடியாவிடினும் இந்தச் சம்பவம் நடந்து

இருபத்தைந்து வருடங்களாகிய பின்னரும் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்துவரும் இந்த 155 தமிழர்களுக்கும் நியூபவுண்லாந்துடனான தொடர்பும் நன்றியுணர்வும் விட்டுப்போகவில்லை என்பதே உண்மை.

கனடாவுக்கும் உலகளாவிய தமிழ்; சமூகத்துக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இச் சம்பவத்தின் உடனடி உயிர் காப்பு உதவிகள் வழங்கிய 'கதாநாயகர்களான' காப்டன் கஸ் டால்டன், காலஞ்சென்றவர்களான காப்டன் அல்பன் டால்டன், காப்டன் பீலிக்ஸ் டாபின், காப்டன் ஜிம் கோக்கரோன் மற்றும் செயினட் மேரி பே-யைச் சேர்ந்த அனைத்துச் சமூகத்துக்கும் கனடியத் தமிழர் பேரவை சம்மேளனம் பெரு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. பெருநலம் சார்ந்து இவர்கள் செய்த உதவிகள் இதுவரை காலமும் அங்கீகரிக்கப்படாமல் போய்விட்டாலும் கனடாவாழ் தமிழர்கள் மனதில் இவர்கள் என்றும் உயர் இடம் பெற்றிருப்பார்கள்.

அல்லலுறும் அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் கனடாவின் பெருநோக்கு உலகறிந்தது. உலகில் சம உரிமை, சமாதானம் நிலைநாட்டக்கூடிய நடவடிக்கைகளில் கனடிய தலைவர்களும், மக்களும் ஈடுபடுவதும் நாமறிந்ததே. அவ்வாறான ஒரு நாட்டில் பிரஜைகளாக இருப்பதற்கு ஒவ்வொரு தமிழரும் நன்றியும் பெருமையடைகிறோம்.

நன்றியுடன்,

எஸ். உமாசுதன் தலைவர், கனடியத் தமிழர் பேரவை

- கனடியத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.