Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வருகிறது?

Featured Replies

அவசரகாலச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் வருகிறது??

அவசரகாலச் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவசரகால விளைவு விதிகள் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

அவசரகாலசசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

2005 ஆம் ஆண்டு அமுலிலிருந்த அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், பயங்கரவாத சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவசரகால சட்டம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களுக்கு எதிரான நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போது அவசரகால சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவ்வட்டாரங்கள் கூறின.

புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அச்சட்டமூலத்தை வரையும் நடவடிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது. அதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டமும் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilmirror.l...6-22-31-48.html

  • தொடங்கியவர்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து அச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் புதிய குற்றச்சாட்டுகளை; சட்டமா அதிபரால் சுமத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சட்டத்தின்படி, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளை தொடர்ந்து நடத்த முடியும். ஆனால் அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி;க்குப் பின்னர், புதிய குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என தமிழ் மிரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு அவ்வதிகாரி கூறினார்.

எவ்வாறெனினும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்தலாம் எனவும் மேற்படி அதிகாரி கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/26970-2011-08-26-19-30-23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.