Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை எதிர்ப்பு

Featured Replies

மரண தண்டனை எதிர்ப்பு

எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குரல்களில் பல, மரண தண்டனை தரப்பட்டுள்ள கைதிகள் எவ்விதத்திலும் குற்றமற்றவர்கள் என்கின்றன. வேறு சிலரோ, தமிழர்கள் தூக்கில் இடப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா என்கின்றனர். அங்கிருந்து, இந்திய நீதித்துறை, புலனாய்வுத்துறை ஆகியவைமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உணர்வுரீதியாக எழும் இந்தக் குரல்கள் மக்களில் பெரும் பகுதியினரைத் தள்ளிவைக்கும்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அவர்கள்தான் இன்று பேரறிவாளன் மற்றும் பிறருக்கான மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று வாதாடும் செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். அது குற்றம், இது குற்றமே இல்லை என்றெல்லாம் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்வது நியாயமில்லை.

இன்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது பலரும், பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை என்பதில் தொடங்கி, மூன்று அப்பாவித் தமிழர்கள் தூக்கு மேடைக்குப் போகிறார்கள் என்பதுவரை பேசினார்கள். முருகன் அப்பாவியா? சம்பந்தப்பட்ட கொலையில் அவருக்குப் பங்கே இல்லையா? சாந்தன் எந்த அளவுக்கு அப்பாவி என்பது தெரியவில்லை. பேரறிவாளன் பற்றி ரகோத்தமன் போன்றோர் சொல்வது முற்றிலும் வேறுவிதமானது.

எனவே, குற்றம் செய்துள்ளார்களா, இல்லையா என்பதைத் தாண்டி, எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்ற வாதத்தின்படி, நடக்க இருக்கும் தூக்கு தண்டனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அனைத்தையும் மீறி இந்தத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், நான் மிகவும் வேதனை அடைவேன்.

Edited by akootha

  • தொடங்கியவர்

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் சில இடங்களில் எதிர்க்கவும் சில இடங்களில் ஆதரிக்கவும் முடியாது என்பதுதான் உண்மை. என் கருத்து: மரண தண்டனை என்பது இருக்கவே கூடாது. அப்சல் ஆனாலும் சரி, நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆனாலும் சரி, மரண தண்டனை கொடுக்கக்கூடாது.

சில கொள்கைகளுக்காக ஓர் அரசும் மக்களும் சில விலைகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. உதாரணம் தனி மனித சுதந்தரம். தனி மனித சுதந்தரத்தைப் பாதுகாக்க, பல நாடுகளில் தனியார் பேச்சுவார்த்தைகளை ஒட்டு கேட்க முடியாது. ஆனால் பல நேரங்களில் 'நாட்டு நலனை முன்னிட்டு' என்ற காரணத்தைக் காட்டி தொலைபேசியை ஒட்டு கேட்பது பல நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. இதை ஆள்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு எதிர்க்கட்சியினரையும் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் பழிவாங்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தனிமனித சுதந்தரத்துக்குப் பங்கம் வரும் வகையில் பல உலக நாடுகள் இன்று இயற்றியிருக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டங்கள் இப்படியானவையே.

இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கலாம். இவ்வாறு இருக்கும்வரை 'rarest of the rare cases' என்று எந்த வழக்கையும் சுட்டிக்காட்டி, கீழிருந்து மேல்வரையான நீதிபதிகள் தண்டனை வழங்குகிறார்கள். மரண தண்டனைக்கு எதிரானவர்கள் முதலில் இந்தச் சட்டத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்க முயற்சி செய்யவேண்டும். அதுவரையில் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டு மட்டும்தான் இருப்போம்.

===

தீவிரவாதிகளையும் சட்டத்துக்கு உள்ளாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு என்று தனியான சட்டங்களைப் பிறப்பித்து (உதாரணம் TADA, POTA ஆகியவை), அவை எந்த அளவுக்கு மோசமாக வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் போன்ற சாதாரணர்கள்மீது பிரயோகிக்கப்பட்டன என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

கடுமையான சட்டங்கள், கண்டதும் சுடும் உத்தரவு ஆகியவற்றால் தீவிரவாதத்தை எந்நாளும் அடக்க முடியாது. அதிகரிக்க மட்டுமே முடியும்.

http://thoughtsintamil.blogspot.com/2007/02/blog-post_21.html

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.