Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி

Featured Replies

முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களைப் பலவந்தமாகக் குடியேற்றி இப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. இந்த நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களினூடாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வடக்குகிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பது இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த பல்வேறு ஆட்சியாளர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியஇலங்கை உடன்படிக்கையிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது அதனை இல்லாதொழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தோற்றுவித்து புதிய சிங்கள உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தையும் அமைத்து தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. இது தமிழர்களின் அடையாளத்திற்கு விடப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும் என்பதுடன் தமிழ் மக்களின் இருப்பிற்கு விடப்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தலுமாகும்.

திம்புப் பேச்சுவார்த்தையிலும் அதனை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்தத்திலும் வடக்குகிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் யுத்த வெற்றியின் மாயையில் இலங்கை அரசாங்கம் இனி தமிழர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் செயற்படுவதாகவே அரசாங்கத்தின் இந்தச் செயலினை நாம் பார்க்க வேண்டியுள்ளது. எமது பகுதியில் முன்னர் இருந்த சிங்கள சகோதரர்களை அரவணைக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எமது நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் புதிதாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்போகும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான எல்லையை நிர்ணயம் செய்யும் பணியினை அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதிதாக அமையவிருக்கும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வெலிஓயா பிரதேசம் மட்டும் போதாது. எனவே, மேற்கொண்டு சில தமிழ் கிராமங்களும் முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய அலுவலகத்துடன் சேர்க்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கொக்கிளாய் கிழக்கு மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, நித்தியாகுளம், குமுளமுனை, முந்திரிகைகுளம், தண்ணீர் முறிப்புகுளம், கடற்கரை எல்லைப் பிரதேசம், தென்னைமரமாவடி, டொலர் பண்ணை, கென்பண்ணை போன்ற பல பூர்வீகக் கிராமங்கள் புதிதாக அமையவுள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ளது.

இது அப்பட்டமான தமிழரின் நில அபகரிப்பு நடவடிக்கையாகும். இனப்பரம்பலில் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோ என்ற அச்சத்தை எமது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் இச்செயல் தோற்றுவித்துள்ளது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், வெலிஓயா பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசம் செயலகத்துக்குட்பட்ட பகுதியாக இருப்பதினால் இதற்குத் தனியான பிரதேச செயலகம் தேவையற்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே நெடுங்கேணியில் உள்ள மக்களை வெலிஓயாவுடன் இணைந்து கொள்ளுமாறும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நெடுங்கேணி மக்கள் நிராகரித்த பின்னர், சிங்கள மக்கள் செறிந்துவாழும் வெலிஓயாவைச் சேர்ந்த ஆறு கிராமசேவையாளர் பிரிவை தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றுவதற்காக தமிழர்களின் மேற்கண்ட கிராமங்களும் பல்லாயிரக்கான ஏக்கர் காணிகளும் அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு இணைக்கப்படவுள்ளன.

புதிய உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கான சிங்கள உதவி அரசாங்க அதிபரை நியமித்து பிரதேச அபிவிருத்திக்கான நிதியை தாராளமாக வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதில் இருந்தே சிறிய அளவில் சிங்கள மக்களைக் கொண்டுள்ள புதிய பிரதேச செயலகத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதேஅரசாங்கத்தின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால் அவரவர்களின் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். இனங்களின் அடையாளங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkur...1-01-30-38.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.