Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகால சட்ட நீக்கம் ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை காப்பாற்றுமா - பா.உ. சுமந்திரனுடனான நேர்காணல்

Featured Replies

அவசரகால சட்ட நீக்கம் ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை காப்பாற்றுமா - பா.உ. சுமந்திரனுடனான நேர்காணல்

ஆக்கம்: ஜீவா சதாசிவம்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் கூட மக்களுக்கு சுமுகமானதொரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் முகமாவே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் அதன் ஷரத்துக்கள் உட்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது என்று தெரிவித் துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிவிட்டாலும் அது ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து இலங்கையை எவ்வாறு காப்பாற்றும் என்று கூற முடியாது என்று அவர் எமது இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது தெரிவித்தார்.

கேள்வி: அவசரகாலச் சட்டத்திலுள்ள ஷரத்துக்கள் சில பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் அரசாங்கம் உட்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தெந்த ஷரத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்று விரிவாக கூறமுடியுமா?

பொதுஜன பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் கீழே, இரண்டாவது பகுதி நடைமுறைக்கு கொண்டு வருவதைத்தான் அவசரகாலச்சட்டம் என்கிறோம். அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ஒரு பிரகடனம் செய்து அந்த பிரகடனம் பத்து நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது ஒரு மாத காலத்துக்கு வலுவுள்ளதாக இருக்கும்.

அந்த ஒரு மாத காலத்துக்குள் ஜனாதிபதி இன்னொரு பிரகடனத்தை செய்ய வேண்டும். அந்த இரண்டாவது பிரகடனத்தையும் பாராளுமன்றத்தில் பத்து நாட்களுக்குள் அங்கீகரிக்க வேண்டும். அப்படியாக ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்ப டுவதால் அவசரகாலச் சட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும். இவ்வாறு நீடிக்கப்படாது விட்டால் பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாம் பகுதி வலுவற்றதாக மாறிவிடும்.

இது அமுலில் இருக்கும் காலத்தில் அதற்கு கீழ் சில சட்ட விதிகளை ஜனாதிபதி உருவாக்கலாம். இதனை உருவாக்கும் போது, அந்த விதிகள் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தைப் போலவே வலுவுள்ளதாக இருக்கும். ஆகவே, இவ்வாறான சட்டவிதிகள் 2005 ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வேறு தருணங்களில் வௌ;வேறு காரியங்களில் வேறு சட்டவிதிகளும் உருவாக்கப்பட்டது. அவை கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாமல் பகுதி - 2 வலுவிழக்கும்போது, அதன் கீழ் செய்யப்பட்ட இந்தச் சட்ட விதிகளும் வலுவிழந்து போய்விடும். அவசரகால சட்டத்தைப்போல் அல்லாது பயங்கரவாததடைச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கின்ற பகுதிகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதற்கு தேவைப்பட்டால் விதிகளை இயற்றலாம். ஆனால், அவசரகாலச் சட்டம் வலுவிழக்கின்றபோது அந்த 27 ஆம் பிரிவை உபயோகித்து அதற்கு கீழ் எந்தெந்த சட்டவிதிகள் வலுவிழக்கின்றனவோ அவற்றை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழே சட்டவிதிகளாக அறிவித்துள்ளனர்.

1. தடுப்புக்காவலில் இருப்பவர்கள்

2. சரணடைந்தவர்கள்

3. சரணடைந்தவர்கள் சம்பந்தமாக அவர்களது புனருத்தாரண ஆணையாளர்களை நியமிப்பது

4. சில இடங்களில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடந்து முடியும் வரை அதற்கான ஆணை யாளர்களை நியமிப்பதற்கு தேவையாக இருந்தால், அதைக்கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள் செய்திருக்கின்றார்கள். தேர்தலுக்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் தொடர்பில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கும் இதற்கும் வெகு தொலைவு. ஆனால் அதையும் செய்திருக்கிறார்கள்.

4. தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்கின்ற சட்டத்தை திரும்பவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் செய்திருக்கின்றார்கள்.

கேள்வி. பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் அது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்?

அவசரகாலச் சட்டத்தை விட பயங்கரவாதத் தடைச் சட்டம் மோசமான நிலைக்கு கொண்டு வருகிறது. அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்படவேண்டியது. அதனை நீடிப்பதற்கு பாராளுமன்றம் ஒவ்வொரு மாதமும் அனுமதி வழங்கி வந்தது. ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகள் அப்படியான தேவைப்பாடுகள் கிடையாது. ஒரு தடவை செய்தால் அது நீண்டகாலத்துக்கு இருக்கக் கூடியது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது 1979 ஆம் ஆண்டு ஆறு மாதத்திற்கு மாத்திரம் வலுவில் இருப்பதற்காக ஒரு விசேட தேவைக்காக கொண்டு வரப்பட்டது. வடக்கிலே உருவாகியுள்ள பயங்கரவாதத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதற்கான விசேட ஏற்பாடாகத்தான் இருந்தது. சாதாரண சட்டத்தை விட்டு விலகி சட்டவியல் கோட்பாடுகளில் இருந்து மீறி பல ஷரத்துக்கள் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருக்கின்றன.

இது நெடுநாள் இருக்கின்ற சட்டம் அல்ல. ஒரு விஷேட தேவைக்காக ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் இயற்றப்பட்டது.

அப்படியாக அது 1982 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆறு மாதமும் நீடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆறு மாத காலத்துக்கு மாத்திரமே வலுவில் இருக்கும் என்று சொல்லப்பட்ட சட்டப் பிரிவை ஒரு சட்ட திருத்தத்தின் மூலமாக நீக்கிவிட்டார்கள்.

1982 ஆம் ஆண்டின் பின்னர் அது என்றுமே இருக்கின்ற ஒரு சட்டமாக சட்டப்புத்தகத்திலேயே வந்துவிட்டது.

ஆறு மாத காலத்திற்கு மட்டும் தான் நாங்கள் இதனை செயற்படுத்தப்போகின்றோம் என்று சொல்லி நியாயப்படுத்திக் கொண்டு வந்த சட்டம், இன்று 32 வருடங்கள் தொடர்ந்து அமுலிலேயே இருக்கின்றது. இதில் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லுபடியாகும். நீதிமன்றில் குற்றவாளிக்கு எதிரான சாட்சியமாக இதனைப் பயன்படுத்தலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் இருக்கப்போகின்ற சட்டவிதிகளுடன் இந்தச் சட்டத்தை நிரந்தரமாகவே இப்போது உருவாக்கி இருக்கின்றார்கள்.

கேள்வி. இது தமிழ் மக்களுக்கு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கின்றீர்கள்?

தடுப்புக்காவலில் இருக்கின்றவர்கள் விசாரணை இல்லாமல், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக காவலில் வைத்திருப்பதற்கு இது உதவுகின்றது. ஆகவே, இது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கே தெரியாத நிலையும் கூட இருக்கின்றது.

பெருந்தொகையான இளைஞர்கள் விசாரணைகள் இன்றி, வழக்கின்றி நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினர் உட்பட பலருக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் திடீரொன நீக்கியுள்ளமையானது, ஐ.நா மனித உரிமைப்பேரவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு எவ்வாறான சாதக நிலையை ஏற்படுத்தும்?

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியது. ஏனெனில் தற்போது ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நாங்கள் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டோம் என்பதை அறிவிக்க முனைகிறார்கள்.

ஆகையாலேயே அவசரகாலச் சட்டத்தை நீக்கியுள்ளார்கள். அதனை அங்கு சொல்லவும் போகிறார்கள். ஆனால், உண்மையாகவே அது நீக்கப்படவில்லை. இப்படியான சட்டத்தினூடாக அவர்கள் பிடித்திருக்கும் பிடியை கொஞ்சம் கூட தளரவிடாமல் இருப்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால், வெளியுலகுக்கு தாங்கள் அவசரகாலச்சட்டத்தை நீக்கிவிட்டோம் என்று சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.

சர்வதேசத்தின் பல்வேறு அழுத்தம் காரணமாகத்தான் அரசாங்கம் சில காரியங்களைச் செய்வது தெளிவாகத் தெரிகின்றது. இப்போது நடக்கும் கூட்டத்தொடரில் இலங்கையைப் பற்றிய விடயம் எடுக்கப்போகும்போது, தாங்கள் செய்திருக்கும் பல கருமங்களை சொல்வதற்கு அவர்கள் தயாராகி உள்ளனர். அவ்வாறு அவர்கள் சொல்ல முயற்சிப்பது பிரயோசனமற்றதாகவே உள்ளது. இதனை அவர்கள் சொல்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. அதனை சொல்வதால் அரசாங்கம் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படக்கூடும். இதனால், அரசாங்கம் நினைக்கும் காரியங்கள் பல கைகூடாமல் போகக் கூடிய வாய்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இத்தருணத்தில் இலங்கைக்கு எதிராக பலர் எதிர்பார்ப்பதுபோல் எதுவும் நடக்கும் என்று கூற முடியாது. ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான பல சம்பாஷணைகள் இடம்பெறும் என நாங்கள் நினைக்கின்றோம்.

மூலம்: வீரகேசரி - ஐப்பசி 13, 2011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.