Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா போல டென்மார்க்கிலும் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்ப வழியுண்டா..?

Featured Replies

கனடா போல டென்மார்க்கிலும் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்ப வழியுண்டா..?

September 13, 2011

valg13-flash.jpg

கனடாபோல் டென்மார்க்கிலும் தமிழ் வேட்பாளர் பா.உ ஆக வரமுடியுமா..?

கனடாவில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்தது தெரிந்ததே. நாளை மறுதினம் டென்மார்க்கில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டவர் போட்டியிடுவது மிகவும் குறைவாக உள்ளதாக கணிப்புக்கள் கூறுகின்றன.

அதேவேளை வெளிநாட்டவரின் வாக்குகளை நம்பி நகரசபைகளில் வெற்றிபெற்ற தமிழர்கள் பாராளுமன்றம் போகுமளவுக்கு வாக்குப்பலம் பெறவில்லை. டேனிஸ் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் படைபஸ்களாக தமிழர் இருக்கப் போகிறார்களா இல்லை பாராளுமன்று நோக்கி நகரப் போகிறார்களா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் தமிழருக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆய்வு செய்கிறார் யோசப் அருளையா.

புலம் பெயர்ந்து டென்மாhக்கில் கிட்டத்தட்ட 11.000 தமிழர்கள் வசிக்கின்றனர், இவர்களில் கிட்டத்தட்ட 6000 தமிழர்கள் டெனிஸ் பிராஐhவுரிமையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்கள் வரும் டென்மாhக் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏன் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்பக் கூடாதா என்ற கேள்வி சில தமிழர்கள் வீடுகளில் விவாதிக்கும் ஒரு விடயமாக இருப்பதால், இந்த விடயம் ஒரு சாத்தியமா என்பதை அவதானிப்பது நல்லது.

டென்மார்க்கில் வாக்குரிமையுடன் இருக்கும் 6000 தமிழர்களும் ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியுமா?

பொதுத் தேர்தல் என்று வரும் பொழுது 10 தேர்தல் தொகுதிகளாக பிரித்திருப்பதால் இந்த தேர்தல் தொகுதிக்குள் வசிக்கும் மக்கள் இந்த தேர்தல் தொகுதிகளுக்குள் நிற்கும் வேட்பாளருக்கு மட்டும் தான் வாக்களிக்க முடியும். எனவே 6000 தமிழர்களும் ஒரு தேர்தல் தொகுதியில் நிற்கும் தமிழருக்கு வாக்களிக்க முடியாது.

இதையும் தாண்டி இந்த 6000 தமிழர்களும் ஒரே தேர்தல் தொகுதிக்குள் வசித்தால் ஒரு தமிழருக்கு வாக்களிக்க முடியுமல்லவா?

ஆம், வாக்களிக்க முடியும் ஆனால் பொதுவாக டென்மார்க்கில் வசிக்கும் தமிழர்கள் டென்மார்க்கின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் பரவலாக வசிப்பதால் இந்த 6000 வாக்குகளையும் ஒரு தேர்தல் தொகுதிக்குள் கொண்டு வர முடியாது.

தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் தேர்தல் தொகுதி எது?

வெஸ்யூலண்ட் தேர்தல் தொகுதியாகும், இந்த தேர்தல் தொகுதிக்குள் ஸ்ரூவர், கொஸ்ரபுரோ, வீபோ, சில்கபோ, கெயானிங், ரிங்கூபின், ஈக்காஸ்ட், ஸ்கீவ போன்ற நகரங்கள் அடங்கியுள்ளன.

இந்த தொகுதிக்குள் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்பமுடிமா?

இந்த தொகுதி அல்ல வேறு எந்த தொகுதியிலும் சரி தமிழர்களின் வாக்குகளை அடிப்படையாக வைத்து ஒருவரை பராளுமன்றம் அனுப்ப முடியாது ஆனால் தமிழ் வேட்பாளர் ஒருவர் பெருபான்மை இனத்தின் வாக்குகளையும் பெறும் பட்சத்தில் பராளுமன்றம் செல்ல முடியம்.

பெரிய கட்சிகளில் வேட்பாளராக நிற்பதாலா அல்லுது சிறிய கட்சிகளில் வேட்பாளராக நிற்பதாலா தெரிவு செய்யப்படுவது இலகுவாய் இருக்கும்?

பெரிய கட்சிகளில் நிற்பதோ, சிறிய கட்சிகளில் நிற்பதற்கு அப்பால், இந்த கட்சிகள் விருப்ப வாக்கு முறையிலோ, அல்லது கட்சி இலக்க முறைப்படி நிறுத்தப் படுகின்றனரோ என்பதுதான் இங்கு முக்கியம். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விருப்ப வாக்கு முறையின் கீழ் ஒரு வேட்பாளர் நிற்கும் பொழுது, யார் கூடுதலாக விருப்ப வாக்கு பெறுகிறார்களோ அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதும், இலக்க முறையின் கீழ் ஒரு வேட்பாளர் நிற்கும் பொழுது, குறிப்பிட்ட கட்சியில் இலக்கத்தின் வரிசை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவதுமே முறையாக உள்ளது.

ஒரு தொகுதியில் ஒரு கட்சியில் கீழ் நின்று 3000 விருப்ப வாக்குகள் பெறும் பொழுது பாராளுமன்றம் செல்ல முடியுமா?

தேர்தல் தொகுதிகளை எடுத்துக் கொண்டால் வெஸ்ய10லண்ட் தேர்தல் தொகுதிதான் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருப்பதால், எந்த தொகுதியில் வேட்பாளர் நிற்கின்றார் என்பதும் இந்த வேட்பாளார் தனியாக 3000 தமிழ் வாக்குகளை பெற வாய்பு இல்லை ஆனால் பெருபான்மை இன மக்களின் வாக்குகளை பெறுவதன் மூலம் ஒரு தமிழர் தெரிவு செய்யப்படுவதற்கு கூடுதல் வாய்புகள் உண்டு.

கட்சிகளை தவிர்த்து சுயேச்சையாக தேர்தலில் நின்று வெல்ல முடியுமா?

வெல்ல முடியும், டென்மார்க் சரித்திரத்தில் இரண்டு முறைகள் நடந்துள்ளன. எல்லோருக்கும் ஞாபகம் இருக்கலாம் நகச்சுவை நடிகர் யாக்கோப் கௌகோ ஒஸ்;ய10லண்ட் தேர்தல் தொகுதியில் தெரிவு செய்யப்பட்டது. துவிசக்கர வண்டியில் பிரயாணம் செல்லும் வேளையில் காற்றும் எம்மோடு வரவேண்டும் ( எதிர் காற்று அடிக்கக் கூடாது ) ஓகூஸ் நகரத்தில் அநேக ரொயிலட்களை உருவாக்குதல் போன்றவை இவரின் தேர்தல் பிரச்சாரங்களாக இருந்தது. இவருடைய பிரச்சாரங்கள் இவரை பராளுமன்றம் அனுப்பியது.

தற்போதைய நிலையில் சுயேட்சையாக நிற்பவர் ஒருவர் ஆகக் குறைந்தது 20000 – 25000 வாக்குகள் பெறவேண்டும் என்பதோடு எந்த தொகுதியில் போட்டி போடுகிறார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணக்கு கிறிஸ்தவ ஐனநாயக்கச்சி அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் 1.1 வீத வாக்குகளை பெற வாய்பு இருப்பதால் பராளுமன்ற அங்கத்துவத்தை இழக்கின்றனர். ஆனால் இதன் தலைவர் வெஸ்ய10லண்ட் தேர்தல் தொகுதியில் 20000 வாக்குகளை பெற்றால், தனி அங்கத்துவராக இவர் பாராளுமன்றம் வர முடியுமென தேர்தல் சட்டங்கள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் எமது வாக்குகள் முக்கியமானதா?

ஆம், ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானதே, 1998 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 178 வாக்குககள் வித்தியாசத்தில் தற்போபதைய அரசாங்கம் தனது ஆட்சியை மீண்டும் வென்றது. எனவே இந்தத் தேர்தலிலும் பிடித்த கட்சிக்கோ பிடித்த தனி மனிதருக்கோ சுதந்திரமாக வாக்கைப் போட்டு இந்த தேர்தலை சிறப்படையச் செய்ய வேணடியது அவசியம்.

-யோசப் அருளையா 13.09.2011

http://www.alaikal.com/news/?p=82168

  • தொடங்கியவர்

டென்மார்க் வரலாற்றில் முதலாவது பெண் பிரதமர்

இன்று நடைபெற்ற டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் சோசல் டெமக்கிரட்டி தலைமையிலான சிவப்பு அணி 89 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது. இதுவரை ஆட்சியில் இருந்த வென்ஸ்ர தலைமையிலான நீல அணி தோல்வியடைந்தது. இவர்களுடைய கூட்டணிக்கு 86 ஆசனங்கள் கிடைத்தன.

புதிய பிரதமராக கெல தொனிங் சிமித் பதவியேற்க உள்ளார். இவர் டென்மார்க்கின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பையும் பெறுகிறார். மேலும் இந்தத் தேர்தலில் சிவப்பு அணியில் போட்டியிட்ட நான்கு பிரதான கட்சிகளில் சிறு கட்சிகளாக இருந்த இரண்டு கட்சிகள் அமோக வெற்றியீட்டியுள்ளன. றடிகல வென்ஸ்ர 17 ஆசனங்களை பெற்றதோடு எஸ்.எப் கட்சியையும் முந்திச் சென்றுள்ளது. அதேபோல என்கில்ஸ்லிஸ்ற் கட்சியும் 12 ஆசனங்களை பெற்று முன்னணி வகித்துள்ளது. சோசல் டெமக்கிரட்டி, எஸ்.எப் இரண்டும் பின் தங்கினாலும் மற்றய இரண்டு கட்சிகளும் வெற்றி பறிபோய்விடாது காப்பாற்றியுள்ளன.

http://www.alaikal.com/news/?p=82389

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.