Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தி என்று சொல்லி இந்த உலகத்தின் பார்வையை இனப்படுகொலையில் இருந்து திசை திருப்பும் செயல்பாடுகளை சிறி லங்கா அரசு செயல்படுத்த துவங்கி விட்டார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

france%20peravai.jpg

செப்டம்பர் 12 ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வு ஆரம்பம், சிறி லங்கா அரசு ஒரு படையணியே தான் செய்த இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்க அனுப்பி இருக்கிறது. அத்துடன் அணிசேரா நாடுகளின் உதவியுடன் கியூபா நாட்டில் துதுவர் ஆக இருந்த, பிரான்சு நாட்டின் சிறி லங்காவின் தூதுவரான தயான் ஜெயதிலகவிட்கும், மகிந்த ராஜபச்கேவுக்கும் நெருக்கமான தாமர குணநாயகம் என்னும் தமிழ் பெண்ணை அபிவருத்தி பிரிவின் தலைவியாக நியமித்துள்ளார்கள், அத்துடன் வட மாகாண அரசாங்க அதிபர் இமேல்டவும் ஜெனிவவிட்கு அனுப்பபட்டுளார்.

அபிவிருத்தி என்று சொல்லி இந்த உலகத்தின் பார்வையை இனப்படுகொலையில் இருந்து திசை திருப்பும் செயல்பாடுகளை சிறி லங்கா அரசு செயல்படுத்த துவங்கி விட்டார்கள். அதன் பிரதிபளிப்பே சிறி லங்காவில் அவசர கால சட்டம் அகற்றப்பட்டது, ஆனால் பயங்கரவாத சட்டத்தில் (Prevention Terrorist Act) ராணுவம்,

காவல் படைக்கு அதன் அதிகாரங்கள் மேலும் வலுப்படுதப்பட்டுள்ளது.

இன்று தமிழர் பகுதிகளில் மாய மனிதர்களின் அடக்கு முறை உச்சகட்டத்தில் இருக்கின்ற வேளையில், . நாவாந்துறையில் அந்த மாய மனிதனை மக்கள் பிடித்து ஆர்பாட்டம் செய்ய, இரவில் அங்கு வந்த ராணுவத்தினர் 150க்கு மேற்பட்ட இளைஞர்களை வீடு புகுந்த பிடித்து, நிருவாணப்படுத்தி அடித்து ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போட்டார்கள்.

சிறி லங்கா சிறையில் பல பத்து வருடங்களாக எந்த வித விசாரணையும் இன்றி இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மேல் சிங்கள சிறைக்கைதிகளை கொண்டு தாக்கப்படுவதும், தமிழர் நிலங்களில் புத்த ஆலயங்களை அமைப்பதும் என்று தமிழர்களை ஒரு தொடர்ந்த வன்முறைக்குள் வைத்திருப்பதும், அதன் மூலமாக தமிழர் பகுதிகளை சிங்கள மயப்படுத்துவதும், சிறி லங்கா அரசின் தொடர் இனச்சுத்திகரிப்பை தமிழ் அரச பிரதிநிகளை கொண்டே உலகத்தை ஏமாற்றும் செயலாக இருக்கிறது. ஆரம்பகாலத்தில் ஒரு கதிர்காமர், இன்று தாமர குணநாயகம், இமெல்ட போன்றவர்களை கொண்டே அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை அழிக்கும் செயல்களை சிறி லங்கா அரசு செய்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது காரியதரிசி, தான் நியமித்த விசாரணை குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை மையத்திடம் சமர்ப்பிக்கும் நோக்கத்தில் இருக்கும் போது சிறி லங்கா அரசு மனிதவுரிமை மையத்தில் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகளின் ஆதரவை தேடும் செயல்களை சிறி லங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

உலக தமிழ் அமைப்புகளும் அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளிடம் சிறி லங்கா அரசின் உண்மை முகத்தை வெளிகாட்டும் பரப்புரையை விரைவு படுத்தவேண்டும்.

அத்துடன் உலக தமிழர்களின் போராட்டம் வலுப்பெறவேண்டிய நேரமிது. உலகத்தமிழர்களின் ஒருங்கிணைத்த போராட்டம் தான்

தமிழ் மக்களின் விடுதலையை விரைவுபடுத்தும்.

இதன் ஒரு கட்டமாக செப்டம்பர் 19ஆம் திகதி நாம் தமிழர்கள் எல்லோரும் ஜெனிவா மனிதவுரிமை சதுக்கத்தில் தமிழரின் விடுதலைக்காக தன்னையே தீக்கு தானமாக்கிய முருகதாசன் திடலில் நின்று தமிழர்கள் நாம் ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கேட்டு தமிழர்களை குற்றவாளிகள் சிறி லங்கா சிங்கள அரசின் பிடியில் இருந்து விடுவிக்க ஈழத்தமிழர்களிடையே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை உருவாக்கும் படி கேட்டிடுவோம்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.