Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காந்தி தோளில் ஹிட்லர்

Featured Replies

காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது:

15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.”

அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்தக் குரல் அவருக்கு இடும் கட்டளைகள் அவருடைய மிக அணுக்கமானவர்களுக்குகூட தெரியாமலே இருந்தது. பல நேரங்களில் அவரது அணுக்கத் தளபதிகளான நேரு, படேல் போன்றவர்களுக்குக்கூட அது அதிசயமான எதிர்பாராத முடிவாக அமைந்தது. காந்தி தன் அகக்குரலை இறை குரலாக கண்டறிந்தார். அது தனது அகம்பாவத்தின் குரல் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

காந்தியின் அகக்குரலுக்கும் ஹிட்லரின் அகக்குரலுக்குமான வேறுபாடு இறுதியாக தனிமனிதனில் முடிகிறது. தனிமனிதன் அவன் முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் காந்தியின் இயக்கம் அவனை நிறுத்துகிறது. அகிம்சை, சத்தியம் ஆகியவை குறித்த தனிமனித புரிதலே இறுதி கணத்தில் அதிகாரத்தின் முன்னால் தனிமனித எதிர்வினையை தீர்மானிக்கிறது. ஹிட்லரின் அகக்குரல் உருவாக்கிய இயக்கத்தில் இறுதி முடிவு தனிமனித சுதந்திரத்தால் அல்ல, கீழ்படிதல் மூலமாக மட்டுமே.

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்களும், ஹிட்லர் காந்தி குறித்து பிரிட்டிஷாருக்கு அளித்த அறிவுரையும் இவ்வேறுபாடுகளை வெளிப்படுத்தும். இந்தியாவில் வைஸிராயாக இருந்த இர்வின் ஹிட்லரை சந்தித்தபோது ஹிட்லர் கூறினார், “இந்தியாவில் நீங்கள் ஏன் இத்தனை கஷ்டப்படுகிறீர்கள்? காந்தியைச் சுட்டுக் கொல்லுங்கள்… கலகம் அடங்கவில்லையா, இன்னும் கொஞ்சம் காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக் கொல்லுங்கள். எத்தனை சீக்கிரமாக இது ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்யும் மக்களை அடக்கும் என்பது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.”

காந்தியின் முதல் கடிதம் 23-ஜூலை-1939ல் எழுதப்பட்டது. காந்திக்கே உரிய விதத்தில், தன்னைச் சுட்டுக்கொல்ல அறிவுரை கொடுத்த ஹிட்லரை, தன் நண்பன் என்றே அழைக்கிறார். ‘இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதலாமா தெரியவில்லை. தவறென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.’ மேலும் எழுதுகிறார்: “இன்றைய சூழலில் உலகின் மிக மோசமான போரை தவிர்க்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த நபர் நீங்கள்தான்.” பிறகு அகிம்சையே சிறந்த ஆயுதம் எனச் சொல்லி அதனைப் பயன்படுத்த கோருகிறார் காந்தி. எதற்கான ஆயுதம்? ‘நீங்கள் விரும்பும் இலக்கை – அது எத்தனை மதிப்பு வாய்ந்ததாக உங்கள் பார்வையில் இருந்தாலும் – அந்த இலக்கை அடைய அகிம்சையே சிறந்த ஆயுதம்’. ஹிட்லரின் இந்த ‘மதிப்பு வாய்ந்த இலக்கு’ போலந்து என்பதை 1939ன் சூழல் காட்டும். போலந்தின் ஜெர்மானிய இன சிறுபான்மையினர் அன்றைய போலந்தில் கொடுமைகளை அனுபவித்தனர். யூதர்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய ஒரு கொடுமை இல்லை என்றாலும், போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்கு ஆதரவாக ஜெர்மனி குரல் எழுப்பி வந்தது. அதை தன் ஆக்கிரமிப்புக்கான துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தி வந்தது. இந்நிலையில்தான் போலந்தின் ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக அகிம்சையைப் பயன்படுத்தும்படி ஹிட்லருக்கு ஆலோசனை அளிக்கிறார் காந்தி.

ஆனால் காந்தி கடிதத்தை எழுதிய நேரம் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரின் முழுமையான சுழலுக்குள் தேசங்கள் இழுக்கப்படவில்லை. ஹிட்லர் அகிம்சைப் போராட்டம் ஒன்றின் மூலம் போலந்து ஜெர்மானிய சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது சுவாரசியமான மாற்று வரலாறு! Parallel Universes வைத்து அறிவியல் புனைகதை எழுதுவோர் கற்பனை செய்யலாம்! எதுவானாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கடிதத்தைப் போக அனுமதிக்கவில்லை.

காந்தியின் இரண்டாவது கடிதம் 1940ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் முன்னிரவில் எழுதப்பட்டது. இதிலும் காந்தி ஹிட்லரை ‘என் நண்பரே’ என விளித்து ‘தங்கள் உண்மையுள்ள நண்பன்’ என்றே முடிக்கிறார்.

‘நான் உங்களை நண்பனாக விளிப்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. …எனக்கு எதிரிகள் இல்லை. என் 33 ஆண்டு காலப் பொதுவாழ்வில் நான் எப்போதும் அனைத்து மக்களிடமும், நிறம், மதம், தேசம் ஆகிய பிளவுக்களுக்கெல்லாம் அப்பால், நட்புடன் இருக்கவே முயன்று வருகிறேன்…’

அடுத்ததாக ஹிட்லரின் தேசப்பற்றையும் வீரத்தையும் பாராட்டுகிறார். அதில் அவருக்கு ஐயமில்லை. அதே போல ஹிட்லருக்கு எதிராக அவரது எதிரிகள் உருவாக்கும் ராட்சச சித்திரம் பொய்யானதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் ‘உங்கள் எழுத்துகளையும் செய்கைகளையும் பார்க்கும்போது உங்கள் செயல்பாடுகளில் பல அரக்கத்தனமாகவும் மானுட நன்மைக்கு எதிராகவும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.’ காந்தி நேராக வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அடுத்ததாக ‘நாசியிசத்தையும்’ ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும்’ ஒரு சேர எதிர்ப்பதாக காந்தி கூறுகிறார்.

இறுதியாக கூறுகிறார், “பிரிட்டிஷ் இல்லையென்றால் உங்கள் செயல்முறைகளில் உங்களைவிட வலிமையான இன்னொரு எதிரி உங்களை தோற்கடிப்பார். நீங்கள் உங்கள் தேச மக்கள் பெருமைப்படும்படியான ஒரு பாரம்பரியத்தை அவர்களுக்கு அளிக்கப் போவதில்லை.”

வரலாறு காந்திய சொன்ன வார்த்தைகளின் உண்மையை பறைச்சாற்றும். காந்தியின் அகக்குரல் ஹிட்லரின் அகக்குரலைக் காட்டிலும், சர்வதேச நிலையையும் அதன் விளைவுகளையும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய தேசியவாதிகளின் பொதுப்புத்தி ஹிட்லரை தம் ஆதரவாளராகவே கண்டது. ஸ்ரீ அரவிந்தர் போன்றவர்கள் ஹிட்லரைத் தீய சக்தி என்று வர்ணித்தனர். நாசிகளுக்கு எதிராக இந்தியர்கள் பிரிட்டிஷை ஆதரித்தால்கூடத் தவறில்லை என்பது அரவிந்தரின் நிலைபாடு. ஆனால் சுபாஷ் போஸின் நாசி ஆதரவு கோரல் மக்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. ஆனால் காந்தியே மகாத்மா. விடுதலைப் போராட்டத்தின் இறை அவதாரம். உலக நிகழ்வுகள் அனைத்தும் அந்த அவதாரத்தின் போக்குக்கு இணைந்தே செயல்படுகின்றன. இந்த இந்தியப் பொதுப்புத்தியில் ஹிட்லரும் காந்தியின் ஒரு கருவி.

எனவேதான் காந்தி தோளில் ஹிட்லர்.

-அரவிந்தன் நீலகண்டன்

http://www.tamilpaper.net/?p=4283&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.