Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு :

10 அக்டோபர் 2011

பிரித்தானியாவில் திடீரென சில கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு கல்லூரிகள் இவ்வாறு திடீரென மூடப்பட்டதாகவும் இதனால் இலங்கையைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தளத்திற்கு எதிரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.

கல்வியைத் தொடர்வதற்கு தேவையான வீசா ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பிரதமரிடம் மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் பிரதமரின் பெயருக்கு எழுதப்பட்ட மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் குறித்த மாணவர்களின் வீசாக்கள் தன்னிச்சையாகவே ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அதிகாரிகளிடமும் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டு மாணவர்கள் வாரமொன்றில் பத்து மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற புதிய நிபந்தனை மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாணவர் வீசாவில் லண்டன் சென்ற பலர் 1.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், மூடப்பட்ட கல்லூரிகளிலிருந்து கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏழு கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் 400 இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68414/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

இன்று சீனா நாட்டு பொறியியலாளர்கள் உட்பட அந்தநாட்டு நிபுணர்களே மகிந்த சிந்தனைக்கு வடிவம் கொடுக்கின்றனர். எனவே இவர்களும் (அநேகமானோர் சிங்கள மாணவர்கள் என்றே எண்ணுகிறேன்) அங்கே சென்று படித்து நாட்டை கட்டி எழுப்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.