Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை உடன் முன்வைக்க வேண்டும் மாவை

Featured Replies

அரசியல் தீர்வை உடன் முன்வைக்க வேண்டும் மாவை

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே செயற்படுகின்றது. எனினும், அரசு ஒருமித்த கருத்துடன் செயற்படுகிறதா என்பது சந்தேகமே. கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு அரசே தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேசுவதற்கு முன்வரவேண்டும் என நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இது தொடர்பாக மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:

பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே கலந்துகொள்கிறது. ஆனால், அரசு ஒருமித்த கருத்துடன், நோக்கத்துடன் பங்குகொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பேச்சில் தமிழ் மக்களின் ஒருமித்த யோசனைகளையே கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. எனினும், அரசு அவ்வாறு செயற்படுவதில்லை. ஒவ்வொரு கலந்துரையாடலின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி, திகதிகளை இழுத்தடிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளைச் சமர்ப்பித்தபோது அவற்றை நிராகரிப்பதாகக் கூறிய அரசு, காலம் தாழ்த்தியது. தொடர்ந்து வந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி பேச்சை ஒத்திவைத்தது. இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும் என்ற காரணத்தை அரசு கூறியுள்ளது.பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பங்கேற்கவேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பன வலியுறுத்தி வருகின்றன.

தமிழ் மக்களும் கடந்த தேர்தலின்போது அதனையே எடுத்துக்காட்டினர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையைக் கருத்திற்கொண்டு, இனிமேலும் தீர்வை இழுத்தடிக்காது தனது திட்டத்தை அரசு முன்வைக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றார்.

http://www.alaikal.com/news/?p=85200

  • தொடங்கியவர்

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைவரும் அணி திரள வேண்டும்: த.தே.கூ.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு அனைவருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 4 மணி வரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து கூட்டமைப்பு துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு துண்டுப்பிரசுரங்களையும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

1.முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகளை மாற்றி வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதன் மூலம் அம்மாவட்டத்திலுள்ள இனவிகிதாசாரத்தை மாற்றி இடங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் அமைதி இன்மையையும் ஏற்படுத்தும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.

2.வடக்கிழக்கு மாகாணங்களில் போரினால் சின்னாபின்னமாக்கப்பட்டு உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கும் நிலையில் காணிப்பதிவு எனும் போர்வையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மோசடியான நில அபகரிப்பு செயற்பாடுகளை உடன்நிறுத்தவும்

3.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் ( அரச ஊழியர்கள் உட்பட) சிறுபான்மை இனமக்கள்; காணி, வீடு இன்றி நிர்க்கதியற்று இருக்கும் வேளையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் படையினரது குடியேற்றத்திட்டம் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதன் ஊடாக ஏற்படும் இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தவும்.

இவ்வாறான எமது மக்களின் அடிப்படை செயற்பாடுகளை கண்டித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், பொது அமைப்புகள், பொதுமக்களென அனைத்து தரப்பினரும் அணிதிரள்வோம்.

http://www.alaikal.com/news/?p=85213

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.