Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழோடு இருப்பாய் நீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43.jpg 19.10.11 தொடர்கள் லகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்படுவதாகவும், காலநடையில் பலமொழிகள் வழக்கழிந்து போவதாகவும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆறாயிரம் மொழிகளுள் ஆறுமொழிகளே உயர்தனிச் செம்மொழிகள் என்று போற்றப்படுகின்றன. லத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவையே அந்த உயர்ந்த பெருமைக்கு உரியவை. இப்போது லத்தீன் பேச்சு வழக்கில் இல்லை. கிரேக்கம் வழக்கழிந்து மீண்டும் மறுவுயிர்ப்பைப் பெற்றிருக்கிறது. ஹீப்ரு மொழியிலிருந்து பிறந்த ‘இவ்ரித்’ மொழியையே இன்று இஸ்ரேலியர்கள் பேசுகின்றனர். சமஸ்கிருதம் தெய்வமொழியாகி மனிதர்கள் பேசமுடியாமல் மரித்துப் போனது. சீனமும் தமிழும் மட்டுமே இடையறாமல் இன்றுவரை மக்கள் நாவில் நடமிடுகின்றன. நாளைய தமிழுக்கு என்ன நேரும்? பாரதி அஞ்சியதுபோல் மெல்லத் தமிழ் இனிச் சாகக் கூடும்.

இன்றுள்ள தமிழனுக்கு முதலில் தமிழ் பேசுவது அவமானமாகப்பட்டது. அடுத்து, தமிழில் படிப்பது அவமானமாகத் தோன்றியது. இன்று, தமிழனாக இருப்பதே அவமானமாக மாறிவிட்டது. நம் கல்லூரிப் பிள்ளைகள் ‘டுமாரோ ஈவினிங் சிக்ஸ் ஓ கிளாக் ஃ?பங்ஷன்ல மீட் பண்ணுவோம்’ என்று பேசித்தான் கன்னித் தமிழைக் கற்பழிக்கிறார்கள். ஆங்கிலச்43a.jpg சொல் இல்லாமல் ஒரு வாக்கியத்தைக்கூட முழுமையாகத் தாய்மொழியில் இந்த ‘அறிவுஜீவி’களால் பேசமுடிவதில்லை. ‘தமிழ் படித்தால் சோறு போடுமா?’ என்று ஏளனக் குரலில் கேள்வி கேட்கிறார்கள்.

தாய்மொழியை வெறும் சோற்று மொழியாகச் சிந்திப்பதே அருவருப்பானது. மொழியின்றி இனமில்லை. இனவுணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வேறு வழியே இல்லை. உலகில் வாழும் 600 கோடி மக்களில் நமக்கென்று ஓர் தனித்த அடையாளத்தைத் தேடித் தருவதுதான் தாய்மொழியின் சிறப்பு.கடலில் கலக்கும் எந்த நீர்த்துளிக்குத் தனி த்துவம் உண்டு?மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்துவிடாமல்,நமக்கென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் நாம் பேசும் நல்ல தமிழ் என்பதை இன்றைய தலைமுறை உணரவேண்டும்.

தமிழ் பேசுவது தற்குறித்தனம்: நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதுதான் அறிவின் அடையாளம் என்று நாம் நினைக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஆங்கிலத்தில் எழு துவதை விட லத்தீன் மொழியில் எழுதுவதுதான் உயர்வு என்று கருதிய பிரான்சிஸ் பேகன் இங்கிலாந்தில் பிறந்தவன் என்பதை நாம் அறிவோமா? ஆங்கிலக் கால்வாய் (English Channel) இடையில் இல்லாவிட்டால் இங்கிலாந்தும் பிரான்சும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கும். பிரான்சில் இன்றுவரை ஆங்கிலத்திற்கு இடமில் லையே. ஆங்கிலம் ‘உலகமொழி’ என்கிறோம். ஐரோப்பாவின் எந்த நாட்டிலும் இந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு குப்பை கூடக் கொட்ட முடியாது என்பதை நேரில் சென்று பார்த்த என்னைப் போன்றவர்கள் நன்கறிவார்கள்.

இரண்டாவது உலகப்போர் நடந்தபோது ஹிட்லரின் அமைச்சர் கோயபெல்ஸ், ‘ஆங்கிலேயரிடம் நாம் தோற்றுவிட்டால் மிகக் கடினமான ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படும்’ என்று அச்சமூட்டினான் என்பது வரலாறு. ‘நம் தாய்மொழி உயிர் வாழும் வரை நாட்டுக்கு அழிவில்லை’ என்பது செக்கோஸ்லோவகியரின் ஆழ்ந்த நம்பிக்கை. மொழியைப் புறந்தள்ளும் இனத்தின் ஒருமைப்பாடும் பண்பாடும் நாகரிகமும் நிச்சயம் நலிவுறும் என்பது மாற்றமில்லாத உண்மை.

தாய்மொழி வழியாகக் கல்வியைப் பெறும்போதுதான் கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் பெருகும் என்பது காந்தியப் பார்வை. அதுவே விவேகானந்தர் முதல் பாரதி வரை எடுத்து வைத்த கருத்து. அறிவியல் கண்டுபிடிப்புகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில்தான் அதிகம். அதற்குக் காரணம் அவரவர் தாய்மொழியில் பெறும் கல்வியே. நம் பிள்ளைகள் அறிவுக் கூலிகளாக இருக்கிறார்களே43b.jpg தவிர புதிய கண்டுபிடிப்பாளர்களாகப் பரிணமிக்கவில்லை. இவர்களுடைய நேரம் ஆங்கிலத்தோடு போராடுவதிலேயே போய்விடுகிறது.

மருத்துவம், பொறியியல், சட்டம் போன்றவற்றைக் கற்பிக்க நம் தமிழால் ஆகாது என்றுரைப்பது தகாது. ஒரு பூ பூத்து உதிர்வது வரை உள்ள ஏழு நிலைகளை அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்று பகுத்துப் பதங்களைத் தந்தது தமிழ். மலர்வது மலர். முற்றும் மலர்ந்து விரிந்தால் அலர். வாடத் தொடங்கினால் வீ. வாடி உதிர்ந்தால் செம்மல் என்று எந்த மொழியால் சொல்ல முடிந்தது? உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் இந்திக்கு இடமுண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இன்றும் தாழ்வாரத்தில்தான் தலை குனிந்து நிற்கிறது. ஏன் இந்த அநீதி? ‘வழக்கு மன்றங்களில் மக்களுக்குப் புரியாத மொழியில் விவகாரம் நடப்பதால் குருடன் கூத்துப் பார்த்த கதையாய் முடிகிறது’ என்றார் முன்சீப்பாக இருந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

‘என்னுடைய வாழ்க்கையில் எதற்காகவாவது நான் கவலைப்படவேண்டும் என்றால், உயர்ந்த தமிழ் மொழியைக் கற்க முடியாமற் போனதற்கு மட்டும்தான்’ என்றார் மகாத் மா. ‘தாய்மொழியே ஒவ்வொரு மனிதனின் மனம் பேசும் மொழி’ என்றார் கோல்ரிஜ். ‘ஒவ்வொரு பறவைக்கும் தன் கூடே தனியழகு’ என்ற உண்மையை எப்போது நாம் உணரப் போகிறோம்?. -குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.