Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - ஜனநாயகவாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NaduKadanthaArasu2010.gif

தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமை கோரி விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் உச்சம் கொண்டிருந்த வேளையில், வல்லாதிக்க சக்திகளின் பிடி ஈழத் தமிழர்களது கழுத்தைப் பிடித்து உலுக்கிய நிலையில் தமிழீழம் பொங்கு தமிழராய்ப் பொங்கி எழுந்தது.

ஆயுதப் போராட்டத்திற்கு நிகராக, விடுதலைப் புலிகளது தாயகக் கனவுடன் தங்களை இணைத்துத் தீப்பிழம்பாக எரிந்த ஈழத் தமிழ் இளையோர் இதயங்களில் பொங்கியதே பொங்கு தமிழ். குறிப்பாகச் சொல்வதானால், இது தமிழீழ விடுதலைப் போரின் இன்னொரு வடிவம். விடுதலைப் புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றிப் புகழ்ந்து தமிழீழ மாணவர்கள் மேடையில் எழுதிய புதிய புறநானூறு. ஆயுதம் ஏந்தாத தமிழர்களின் இன்னொரு சன்னதம். அது மீள உயிர்கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்தது என்று சிங்கள தேசம் மட்டுமல்ல, அதன் அடிவருடிகளும் கொண்டிருந்த நம்பிக்கைகள் புலம்பெயர் தமிழர்களால் முறியடிக்கப்பட்டது. அந்த மண்ணில் வீழ்ந்த தமிழர்களின் உயிர் மூச்சை சுவாசித்து மீண்டும், மீண்டுமாய் புலம்பெயர் தமிழர்கள் எழுந்து நின்றதனால் ஐ.நா. செயலரும் திகைத்துப் போனதால், நிபுணர் குழு அறிக்கை வெளிவந்தது. ஈழத்தில் தமிழர்கள் சிந்திய இரத்தமும், புலம்பெயர் தமிழர்கள் சிந்திய கண்ணீரும் 'சனல் 4' இன் காட்சிப் பதிவுகளாக உலகை அதிர்ச்சிக்குள் தள்ளியது.

தேசியத் தலைவர் அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய ஈனர்கள் புலம்பெயர் தமிழர்களை நோக்கி வலை விரிக்க ஆரம்பித்தார்கள். குருடர்கள் யானையைப் பார்த்தது போல், புலம்பெயர் தேசியத் தளங்களுக்குப் புது விளக்கம் கூற முனைந்தார்கள். தேசியத் தலைவரின் பாதையில் மலர்ந்த பூக்களையும் முள் செடிகள் என்றார்கள். சிங்கள தேசத்தின் விருப்பங்களோடும், வெகுமதிகளோடும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழ்த் தேசிய சிதறடிப்புக்களை மேற்கொண்டார்கள்.

பொறுத்தது போதும் என்ற இளைய தலைமுறை களத்தில் குமிறி எழுந்தது. கனடிய தமிழ் இளையோருடன் கரம் கோர்த்துக்கொண்டது கனடியத் தமிழ்ச் சமூகம். 'பகை வென்று தமிழ் வெல்லும், தமிழீழம் எமதாகும்' என்ற போர்ப் பரணியுடன் பொங்கு தமிழராய் தமிழ் மக்கள் போர்க் கோலம் பூண்கிறார்கள். தமிழீழக் களம் நீட்டிய விடுதலைத் தீயுடன் கனடிய மண்ணில் இன்னொரு 'பொங்கு தமிழ்' களை கட்டி வருகின்றது.

வழக்கம் போலவே, சிங்களத்தின் கைக் கூலிகள் இதனைப் பொறுக்காது ஊளையிடுகின்றனர். சிங்களக் கொடூரன் மகிந்தவைக் காப்பாற்ற, இப்போது எதற்குப் பொங்கு தமிழ் என்று தப்பாமல் கேள்வியும் எழுப்புகின்றார்கள். இது காலம் எமக்கிட்ட கட்டளை என்று கனடியத் தமிழர்கள் ஒன்றாய் எழுகின்றார்கள்.

தேசியத்திற்கான எமது கடமைகளிலிருந்து எக்காரணம் கொண்டும் விலகிவிடமாட்டோம்! நாங்கள் வீழமாட்டோம்! என்ற வேதத்தை உச்சரித்தபடி, கனடிய ஈழத் தமிழர்கள் ஒன்றாக எழுந்து பொங்கு தமிழராய்க் காணும் களத்தினை நாம் கண்கொண்டு பார்ப்போம்!

வாருங்கள் எம் உறவுகளே! வந்து தமிழராய் நீங்களும் கரம் சேருங்கள்!! நாளை பிறக்கும் தமிழீழம் என்ற உறுதியோடு 29-10-2011 அன்று எங்கள் தேசத்து மக்களுக்காய் குரல் கொடுக்கும் உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்! நாம் வாழ வந்த தேசத்தின் ஈழத் தமிழர் குறித்த அக்கறைகளை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்!

பொங்கு தமிழ் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!

ஊடகப் பிரிவு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - ஜனநாயகவாதிகள்

கனடா

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.