Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சந்தர்ப்பத்தை நழுவ விடாது தீர்க்கமான தீர்வினைக் காண்போம்!" இரா சம்பந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA_DinnerCanada_301011_150HGF.jpg

"வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம். எம்மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமையை வழங்காது அழித்தொழிக்க ஸ்ரீலங்கா அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. எமது உரிமைகளைப் பெறுவதற்கு சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப் பங்களை நாம் தவற விட்டுள்ளோம்.

அதனால் இச்சந்தர்ப்பத்தினையும் தவற விடாது நிதான மாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது. சர்வதேச நாடுகளளின் அனுசரணையுடன் நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழினத்தின் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வினைக் காண்போம்".

http://youtu.be/xOwe8ea9VJg

ஞாயிறு மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இங்கு வருகை தந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தன் இவ்வாறு உறுதி அளித்தார். கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கும் ஆவலில் நூற்றுக் கணக்கில் திரண்டு வந்து மண்டபம் நிறைய குழுமி இருந்த மக்கள் அவரது உறுதி மொழியைக் கேட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தினால் கரகோஷம் செய்தனர்.

"கனடாவில் பிரெஞ் இனத்தவர்களும் ஆங்கில இனத்தவர்களும் வௌவேறு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தத்தமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றினைக் கடைப்பிடிக்கும் அதிகாரமும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தான் நாமும் கோருகின்றோம். எமது போராட்டம் நியாயமானது. மனித உரிமையை கடைப்பிடிப்பது ஸ்ரீலங்கா அரசுக்கு மாத்திரமல்ல சர்வதேச சமூகத்துக்குமே உரியதாகும். அமெரிக்க விஜயத்தின் போது நாம் உரையாடிய மேற்சபை உறுப்பினர்கள் மனித உரிமைக்குப் பொறுப்பானவர்கள் ஆகியோருக்கு நாம் எமது நாட்டில் மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளமையை விளக்கிக் கூறி னோம்.

அது மாத்திரமல்ல மனித உரிமை மீறப்பட்டதா? சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப் பட்டதா? என்பது பற்றி நாம் அது சம்பந்தமான ஆவணங்களை அனுப்பி சர்வதேச சமூகத்துக் குமே விளக்கி வருகின்றோம். அரசுடன் பேசி தீர்வு காணுமாறு இந்தியாவும் கூறியது. தற்போது அமெரிக்காவும் அதனையே கூறுகின்றது.

கட்டாயத் தீர்வினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் நிதா னமாகச் செயற்பட வேண்டும். அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உங்கள் அனைவரின தும் ஆதரவு வேண்டும். நீங்கள் மீண்டும் அங்கு வரவேண்டும். சந்தர்ப்பம் ஏற்படும் போது அங்கு முதலீடுகளைச் செய்ய வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

திரு.சுமந்திரன் எம்.பீ. உரையாற்றுகையில்"பத்துப் பதினைந்து பேர்களுக்கு மத்தியில் உரையா ற்றி வந்த நான் நீண்டகாலத்தின் பின்னர் இன்று முதன் முறையாக பெருந் திரளாகக் கூடியிருக் கும் மக்கள் மத்தியில் பேபசுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஜனாதிபதி மஹிந்த வெளி நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கடந்த இரண்டரை வருட காலமாக நிறைவேற்றவில்லை. அதனாலேயே சர்வதேச சமூகம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசகின்றன.

அமெரிக்க அரசு எம்மை அழைத்து பேசியமைக்கும் அரசின் தாமதமே காரணமாகும். அரசுகளு டன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் அமெரிக்க தற்போது முதன் முறையாக எம்மை அழைத்து மூன்று தினங்களாகப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது. திரு.சம்பந்தன் ஐயா அளித்த விளக்கத்தினைக் கேட்ட ஒரு பெண்மணி சரியான தலைவரைத் தான் தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளனர் என்றார். அப்பேச்சுவார்த்தையின் முழு விபரங்களையும் வெளியிட முடியாத நிலையில் நாம் உள்ளோம். நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்� என்றார்.

திரு.மாவை சேனாதிராசா உரையாற்றுகையில் "இன்று எமது பிரதேசங்களில் உள்ள எமது அடையாளங்களை அழிப்பதில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் தீவிரமாகச் செயற்பட்டு வரு கின்றன. அரசியல் தீர்வினை எட்டுவதற்கு தமிழ் மக்களின் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். இதனை நாம் சர்வதேசத்தினருக்கு எடுத்து ரைத்து வருகின்றோம். தீர்வினை முன்வைக்க அரசு தயாராக இல்லை. எங்கள் நிலத்தில் நாம் வாழவும் ஆளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமக்காக வாதிட இங்கு எமது தாய்க்குலத் தைச் சேர்ந்த ராதிகா சிற்சபைஈசன் இருக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் எனக் கூறி னார்.

"பல்வேறின மக்களும் சேர்ந்து என்னை தமது எம்.பீ.யாகத் தெரிவு செய்த தொகுதிக்கு வந்து ள்ள உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல் செயல்கள் குறித்து விசாரணை நடாத்தப் பட வேண்டும் என நான் எதிர்க் கட்சியில் இருந்து கனடா அரசுக்கு வலியுறுத்தி வருகின்றேன். தமிழ் மக்களுக்கு மனித உரிமையும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும். இது குறித்து கனடா பிரதமரும்�� வெளிநாட்டு அமைச்சரும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்� என ராதிகா சிற்சபைஈசன் கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கட்டாயத் தீர்வினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது."

ஒரு சன நாயக நாடு தனது இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மக்கள் வாழ் பகுதிகளில் இராணுவத்தை நிறுத்த முடியாது.

ஸ்ரீ லங்கா போரில் வென்றார்கள் என்றால் இந்த மார்ஷல் லோவை இல்லாதொழிக்கவேண்டும். பின்பு தான் எந்த தீர்வை பற்றியும் பேசலாம்.

"இன்று எமது பிரதேசங்களில் உள்ள எமது அடையாளங்களை அழிப்பதில் ஸ்ரீலங்கா அரசும் இராணுவமும் தீவிரமாகச் செயற்பட்டு வரு கின்றன."

யாழ் மாவட்டத்திற்கு திரும்பவும் பனை வழம் வருமா? ஒரு இனத்தை அழிப்பதற்கு அந்த பிராந்தியத்தில் இருக்கும் முக்கிய இயற்கை மரங்களை அழித்தாலே போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.