Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா செயலரை சந்திக்காவிட்டால் போர்க் குற்றத்தில் இருந்து தப்ப முடியுமா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா செயலரை சந்திக்காவிட்டால் போர்க் குற்றத்தில் இருந்து தப்ப முடியுமா..?

hillary.jpg

கூட்டமைப்பின் ஐ.நா பயணம் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்கு சிறீலங்காவின் இராணுவத்தை சேர்ந்த சவேந்திர டி சில்வாவின் கருத்துக்கள் இன்று சிறீலங்காவில் அதிகபட்சம் வெளியாகியுள்ளன. நேற்று பொறுப்புள்ள அமைச்சர் பீரீஸ் பொது நலவாய நாட்டிலும் தமக்கே வெற்றியென மார் தட்டிய பின்னர் இன்று அடுத்த மார்தட்டல் வெளியாகியுள்ளது.

இந்த மார்தட்டல்களும் வெற்றியும் சரியானவையாக இருந்தால் எதற்காக கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும், அவர்களுடனான பேச்சுக்களை இடை நிறுத்த வேண்டுமென ஜாதிக கெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் கோஷமிடுகின்றன. சிங்கள அரசு சொல்லும் வெற்றி உண்மையானால் இவர்கள் கொழும்பில் வெடி கொழுத்தியல்லவா கொண்டாடியிருக்க வேண்டும். ஏன் தந்தை செல்வாவின் சிலையின் தலையை துண்டிக்க வேண்டும்..? இது எங்கோ ஒரு முரண்பாட்டை வெளிக்காட்டுகிறது என்கிறார்கள் ஐரோப்பிய அரசியல் நோக்கர்கள்.

மேலும் போர்க்குற்றம் தொடர்பான விடயங்களையும், இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களையும் பேசும்போது ஐ.நா செயலருடனும், அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கிளரி கிளின்டனுடனும் பேசினால்தான் வெற்றியென நினைப்பது 21ம் நூற்றாண்டின் அதி உச்ச பாமரத்தனமாகும். அதைத்தான் சவேந்திர டீ சில்லா அன் கம்பனி சிங்கள மக்களுக்கு பிரச்சாரம் செய்துள்ளது.

பான் கி மூனும், கிளரி கிளின்டனும் சிறீலங்கா – இந்தியபாணி தலைவர்கள் அல்ல. நபர்கள் அல்ல ஐ.நாவிற்கு அறிக்கைகளே முக்கியம், அது உரிய முறையில் போய்விட்டது. மேலும் ஒரு நாட்டு அரசு ஐ.நா செயலருடன் சந்திக்கக்கூடாது என்று தனது நாட்டின் சிறுபான்மைக் கட்சிக்குழு ஒன்றைத் தடுப்பது அந்த நாட்டின் சுற்றவாளி தன்மைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் நல்ல உதாரணமாகிவிடாது. மேலும் குற்றமற்ற ஒரு நாடு ஏன் அவர்களை தடுக்கிறது என்ற கேள்வியையே எழுப்பும். இது தெரியாதளவு மேலை நாட்டு ராஜதந்திரிகள் மூடர்களும் அல்ல. அதைவிட முக்கியம் இதை ஒரு விவகாரமாக சிங்கள அரசுத் தலைவர்கள் பேசுவதும் பிரச்சாரம் செய்வதும் சர்வதேச அரங்கில் அவர்களுக்கு பாரிய பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதுதான் நிஜமாகும்.

கூட்டமைப்பை யார் சந்திப்பது என்பது முக்கியமல்ல அவர்கள் அமெரிக்கா அழைக்கப்பட்டவுடனேயே சிறீலங்கா தோல்வியடைந்துவிட்டது. அதனுடைய மீசையில் மண்படவில்லை என்ற செய்திகளே இப்போது வருகின்றன. போர்க்குற்ற விசாரணையை நிறுத்தியதாக ஐ.நா செயலர் தெரிவிக்கவில்லை. ஐ.நாவின் அதிகாரிகள் சந்தித்து விபரங்களை சேர்த்துள்ளார்கள், அது ஐ.நாவின் செயற்பாட்டுக்கும், அடுத்த கட்ட பணிகளுக்கும் போகும். மற்றப்படி இதில் அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.

ஐ.நா செயலர் சிறீலங்காவின் அழுத்தத்திற்கு பணிந்தார் என்று தமிழ் ஊடக செய்திகளை வடிவமைப்பதும் தப்பான சிறுபிள்ளைத்தனமான செயலாகும். சிறீலங்கா என்ற நாடு ஐ.நாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு தரும்படி இரகசியமாக மன்றாடி, கூட்டமைப்பை சந்திக்க வேண்டாமென கேட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கி சிறீலங்காவின் அடுத்த கட்ட நகர்வை அவர் ஆழம் பார்ப்பதற்காக சந்திப்பதை தவிர்த்திருப்பார். இது நிராகரிப்பல்ல சர்வதேச அரசியல் விவகார முறைமையாகும். இதை வைத்து கூட்டமைப்பின் பயணம் தோல்வி என்பதும் அதிர்ச்சி என்பதும் சிறுபிள்ளைத்தனமான பிரச்சாரமாகும்.

ஐ.நா செயலரையும், கிளரி கிளின்டனையும் சந்திப்பதை தடுத்துவிட்டால் போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைப்பது சீப்பை மறைத்து வைத்துவிட்டு கல்யாணம் நின்றுவிட்டது என்று கூறுவது போன்ற கூத்தாட்டமாகும்.. இன்றைய உலக ஒழுங்கு தமிழர் சிங்களவர், இந்தியர் என்றல்ல அனைத்து போர்க்குற்றவாளிகளையும் நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டமைப்பு போனாலும் போகாவிட்டாலும் அதனுடைய இரும்புக் கரங்கள் குற்றவாளிகளை இறுக்கும், அது தானாக நடைபெறும். ஐயப்பனை பார்க்க சபரிமலையேறிவிட்ட கூட்டமைப்பு மகரஜோதியை பார்க்கவில்லை என்று கூச்சலிடுவது வெற்றியாகாது என்கிறார்கள் மேலை நாடுகளின் அரசியல் நோக்கர்கள்.

தந்தை செல்வா சிலையின் கழுத்து உடைக்கப்பட்டதன் கருத்து பான் கி மூனுக்கு விளங்காத விடயமல்ல.

http://mykathiravan....a-news/?p=18315

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.