Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு

Featured Replies

ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு

இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த 45 வயதான விதவைப் பெணணான இரத்தினம் பூங்கோதை என்பவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் 4 பிள்ளைகளின் தாயான இரத்தினம் பூங்கோதை சாட்சியம் அளித்திருந்தார்.

2007க்குப் பின்னர் - அதாவது தற்போதை அரசாங்கத்தின் பதவிக் காலத்தின்போது, சட்டவிரோதமான முறையில் தான் கடத்தப்பட்டு ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதேபோல பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான தனது சகோதரியொருவர் காணாமல் போயுள்ளதாகவும் எல்.எல்.ஆர்.சி.யிடம் தெரிவித்திருந்த பூங்கோதை தனக்கு நியாயம் வழங்குமாறு கோரியிருந்தார்.

இது தொடர்பாக விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் துறையினர் தன்னை கொழும்பிலுள்ள விசாரணை மையத்தின் 4ஆம் மாடிக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வருமாறு கல்முனை பொலிஸ் ஊடாக அழைத்துள்ளதாக இவர் கூறுகிறார்.

தனது பாதுகாப்பு மற்றும் குடும்ப பொருளாதார நிலைமையை சுட்டிக் காட்டி கொழும்பிற்கு செல்ல முடியாத நிலை பற்றி தான் ஆணைக்குழுவிடம் தெரிவித்தபோது, கல்முனையிலேயே இந்த விசாரணைக்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக ஆணைக்குழு பதிலளித்ததாக அவர் கூறுகிறார்.

கல்முனையில் இந்த விசாரணை நடைபெறும்போது மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியொருவர் அல்லது சட்டத்தரணி ஒருவர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவிக்கிறார்.

2007ஆம் ஆண்டிற்கு முன்னர், முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலங்களில் தனது இரு சகோதரர்கள் காணாமல் போனதாகவும், ஒரு சகோதரி பாலியல் வன்முறைக்கு இலக்காகி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவன் சுற்றி வளைப்பில் கைதாகி சடலம் கூட கிடைக்கவில்லை என்றும் இவர் தெரிவிக்கிறார்.

ஆனால் 2007 ம் ஆண்டிற்கு பின்னர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே தான் ஆணைக்குழுவிடம் நியாயம் கோருவதாக அவர் தெரிவிக்கிறார்.

http://www.bbc.co.uk...manrights.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

எனக்கு நேர்ந்த அவலத்தை சி.ஐ.டியிடம் அல்ல எங்கும் எவரிடமும் கூறத் தயங்கமாட்டேன்!; 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைக்கப்பட்ட பூங்கோதை குமுறல்

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கண்ணீர்மல்க கொட்டித்தீர்த்தேன். அந்த விடயங்களை சி.ஐ.டியினரிடம் கூறுவதற்கும் தயங்கப்போவதில்லை. உண்மையை எங்கும், எப்பொழுதும் கூறலாம். எனக்குத் தற்போது தேவைப்படுவது நீதியும், நியாயமும்தான் இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் சி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.பூங்கோதை மேலும் கூறியவை வருமாறு:

தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் அதன் வேதனை புரியும் என்பார்கள். அவ்வாறுதான் நான்பட்ட கஷ்டங்கள் வேறு எவருக்கும் புரியாது.சொல்லொணாத் துன்ப, துயரங்களை நான் அனுபவித்துவிட்டேன். உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக் கிறேன். கருணை உள்ளம் படைத் தோர் நான்பட்ட துன்பங்களை இலகுவில் புரிந்துகொள்வர். அந்த வலிச்சுமைகளை வார்த்தை களால் சொல்லமுடியாது.2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி என்னை ஆயுதக் குழுவினர் கடத்திச்சென்றனர். வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களையும் அவர்கள் சூறையாடினார்கள்.

என்னைக் கடத்திச்சென்ற அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தினர். பெண் என்று கூடப் பார்க்காமல் துன்புறுத்தினர். கடத்திச்சென்றதிலிருந்து சுமார் 14 நாள்களுக்குப் பின்னர் நான் ஒருவாறு தப்பித்துவந்தேன். இந்த விடயங்களையே நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் தெரிவித்தேன்.நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு கடந்த மார்ச் 27 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்றபோது நான் சாட்சியமளித்தேன். இதன்போது பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயான எனது சகோதரியொருவரும் காணாமற்போன சம்பவம் தொடர்பாகவும் எடுத்துரைத்தேன்.

நான் கொட்டித்தீர்த்த குறைகளுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாளாந் தம் காத்திருந்தேன். கடந்த புதன் கிழமை எனக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. என்னுடன் கதைத்தவர், தாம் நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர் பேசுகிறேன் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்தத் தொலைபேசி இலக்கம்: 0113135783 எனத் தெரிந்துகொண்டேன்

என்னுடன் நீண்டநேரம் பேசிய அந்த உறுப்பினர், "நீங்கள் பட்ட துன்பங்களுக்கு அவலங்களுக்கு நியாயம் தேடித்தர நாம் முயற்சிக்கின்றோம். நீங்கள் எங்களிடம் கூறிய விடயங்களை கொழும்புக்கு வந்து 4ஆம் மாடியில் அமைந்துள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் கூறவேண்டும் என அவர் கோரினார்.இது விடயம் தொடர்பாக அதாவது, 25 ஆம் திகதி கொழும் புக்கு வருமாறு சி.ஐ.டியினர் அழைத்துள்ளனர் என்று கல் முனைப் பொலிஸார் கிராம சேவையாளர் ஊடாக எனக்கு அறிவித்துள்ளனர்.

எனக்கு நேர்ந்த அவலங்களையே நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறினேன். உண்மையைத் தவிர வேறொன்றும் கூறவில்லை. எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறிய விடயங்களை சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கத் தயங்கப்போவதில்லை.உண்மையாக நடந்த சம்பவங்களை எங்கும், எப்பொழுதும் கூறலாம். அதில் எவ்வித தவறும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=30301646614551659

  • தொடங்கியவர்

நல்லிணக்கக்குழு முன் சாட்சியமளித்தவரை சி.ஐ.டியினர் விசாரணைக்கு அழைப்பது ஏன்?; ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சுமந்திரன் எம்.பி.

பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை. அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது.

இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தான் வழங்கிய சாட்சியம் தொடர்பாக விசாரிப்பதற்கு சி.ஐ.டியினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என்ற விடயத்தை குறித்த பெண் நேற்று எமது செய்தியாளரிடம் உறுதிப்ப டுத்தினார்.

ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ள நிலையிலும், அறிக்கை வெளியாக இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையிலும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியவர் தொடர்பான இரகசியம் கசிந்துள்ளதானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டும்போது இரகசியத்தன்மை 100 சதவீதம் பேணப்படும் என உறுதியளிக்கப்பட்டே நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைத் திரட்டியது. ஆனால், இப்போது இரகசியம் எப்படி அம்பலமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த பொதுமகன் தொடர்பான பெயர், அவர் தொடர்பான விவரம் கசிந்துள்ளதானது அறிக்கை மீதுள்ள நம்பகத்தன்மையை திசை திருப்பியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த இரத்தினம் பூங்கோதை என்பவருக்கு சி.ஐ.டியினர் விசாரணை அழைப்பாணை விடுத்துள்ளதானது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, பல்வேறு கோணங்களில் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கருத்துக்கேட்டபோது அவர் கூறியதாவது:

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினால் இரகசியத்தன்மை பேணப்படாது. அதேபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என மக்கள் கருதினர். இந்தக் காரணிகளைக் கருத்திற்கொண்டே கணிசமானோர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைக் கூறுவதற்கு முன்வரவில்லை. மக்கள் அன்று நினைத்த எதிர்வு கூறிய உண்மைகள், நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெண்ணிடம் சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொள்ளவுள்ள விடயம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது.

நல்லிணக்க ஆணைக்குழு தனது பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தறுவாயிலோ அல்லது அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரோ மக்கள் நலன்கருதி விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் அதனை நியாயப்படுத்த முடியும். ஆனால், அறிக்கை தயாரிப்பு நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்து, ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சாட்சிகளின் பாதுகாப்புக் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது நாம் சுட்டிக்காட்டிய விடயங்கள் சரியாகவே நடந்துள்ளன. என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=74290645814538022#

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.