Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கசிந்தது LLRC ரிப்போட்!.. கேணல் ரமேஷைக் கொண்றவர்கள் தண்டிக்கப்படுவார்களாம்! உலக நாடுகளுக்கு அல்வாவும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாக்ளேட்டும் ரெடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SriLanka_disappeared_150news.jpg

சனல் 4 வெளியிட்ட(கண்களையும் கைகளையும்) கட்டி தலையில் சுடும் வீடியோவில் தோன்றும் இராணுவத்தையும், மற்றும் கேணல் ரமேஷ் அவர்களை விசாரணை செய்யும் இராணுவத்தினர் அனைவரையும் கைதுசெய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டுள்ளார். இவர்களது வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்து அவர்கள் மீது பழியைப் போடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தப்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

கோத்தபாய ராஜபக்ஷவின் இரகசிய ஆலோசகரரும் புலனாய்வுத் துறையின் முக்கிய பொறுப்பாளருமான கபில ஹந்தவிதாரண இக் கைதுகளை மேற்கொள்ளவிருப்பதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகத் தமிழர் பேரவையால்(GTF) சனல் 4க்கு கொடுக்கப்பட்ட காணொளியில் கேணல் ரமேஷை விசாரணை நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. பின்னர் அவர் சடலமாகக் கிடக்கும் காட்சி அடங்கிய புகைப்படமும் வெளியாகியிருந்தது. இக் காட்சிகளால் தான் இலங்கை அரசு பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கேணல் ரமேஷை விசாரணை நடத்திய இராணுவத்தைக் கைதுசெய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டாராம். இந்த 100 சிப்பாய்களில் கொஞ்சப் பேரைப் பிரித்து அவர்கள் மீது போர் குற்றச்சாட்டையும் மற்றையவர்கள் மீது மனிதப் படுகொலைக் குற்றச்சாட்டையும் சுமத்த அரசு முடிவெடுத்துள்ளதாம்.

அதுமட்டுமல்லாது இவ்வாறு கைதுசெய்யப்படும் 100 சிப்பாய்களும் குற்றவாழிகள் என இனங்காணப்பட்ட பின்னர் அவர்கள் சிறைச்சாலை செல்ல நேரிடும் என்றும் அவ்வாறு செல்லும் ஒவ்வொரு இராணுவத்தின் குடும்பங்களுக்கும் தலா 1 வீடு இலவசமாக வழங்கப்படும் எனவும் மகிந்தர் தரப்பால் சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சிறையில் இருக்கும் இராணுவத்தினருக்கு அவ்வப்போது பண்டிகைகளை முன்னிட்டு மகிந்தரால் பொது மன்னிப்பும் வழங்கப்படுமாம். அதன் அடிப்படையில் சில வருடங்களில் அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.

மற்றும் சிறையில் அவர்களை தனியாகக் கவனித்து உல்லாசமாக வாழ தாம் ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதாகவும் குடும்பங்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். மற்றும் இரகசிய தடுப்பு முகாமில் உள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சிலருக்கு மகிந்தர் பொதுமன்னிப்பு வழங்கவுள்ளாராம். இதனூடாக புலம் பெயர் தமிழ் மக்களின் செயல்பாடுகளின் வேகத்தை சற்று தடுக்க முடியும் எனவும் இலங்கை அரசு கருதுகிறது என்ற செய்தியும் கசிந்துள்ளது.

மகிந்தர் தனது தனிப்பட்ட நண்பர் ஒருவருடன் போசும்போது கூறியுள்ளார் தனக்கு பெரும் தலையிடியாக உள்ளது புலம்பெயர் தமிழர்கள் மட்டும்தான் என்று. மற்றும் தன்னைக் கேட்க்காமல் எந்த ஒரு வெளிநாட்டு அழைப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என அவர் தனது மனைவிக்கு கூறியுள்ளதாக அவர் தனது நண்பியிடம் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை 2 டாப் பிரிக்க வெளிநாடுகளில் உள்ள மக்கள் தொடர்பு சாதனங்களையும் மக்கள் தொடர்பு அமைப்புகளையும் இலங்கை அரசாங்கம் தற்போது தொடர்புகொண்டுள்ளதாம். அவர்களூடாக இலங்கையில் வட கிழக்கை அபிவிருத்தி செய்யும் நோக்குடைய தமிழர்களை ஒரு புறமாகவும், மற்றும் புலிகளின் ஆதரவாளர்களை ஒரு புறமாகவும் பிரித்து அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க இலங்கை அரசு தயாராகி வருகிறது. இது இலங்கை அரசின் 2012ம் ஆண்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.

வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் சரணடைவு தொடர்பாக, அமெரிக்காவுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அதுமட்டுமல்லாது ஐரோப்பிய நாட்டு தூதுவர் ஒருவருக்கும் அனுப்பிய குறுஞ்செய்தி தொடர்பாக LLRC அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

இச் சரணடைவில் அமெரிக்கா ஐரோப்பிய நாடு ஒன்று பசில் ராஜபக்ஷ நம்பியார் பாலித கோகன்ன போன்றோர் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடையம் கோத்தபாயவுக்கும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரே அக் கொலைகளைச் செய்யத் தூண்டினார் எனப் பல செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல முக்கியமான பல விடையங்களுக்கு எத் தீர்வையும் முன்வைக்கவில்லை LLRC யின் அறிக்கை

நல்லிணக்க ஆணைக்குழு(LLRC) தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை சில வேளைகளில் பாராளுமன்றமூடாக மகிந்தர் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. மிதவாதப் போக்குள்ள சிங்களவர்களைத் திருப்திப்படுத்தவே மகிந்தர் இந் நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எது எவ்வாறு இருந்தாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பாவித்து தப்பித்துக்கொள்ளவே மகிந்தர் முனைப்புக்காட்டி வருகிராரே தவிர அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடையங்களையும் பரிந்துரைகளையும் இவர்கள் சற்றும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே யதார்த்தமாகும்.

http://www.seithy.co...&language=tamil

சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்பும் நல்லிணக்க ஆணைக்குளுவின் அறிக்கையும் சேர்ந்து இலங்கையில் பெரிய ராணுவப்புரட்சியை ஏற்படுத்தபோகின்றன.என் நேரமும் இலங்கையில் ராணுவபுரட்சி ஏற்படலாம்.ராஜபக்ச குடும்பமும் அழிக்கபடலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.