Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசியா மற்றும் கிழக்காசியா மீது தனது கவனத்தை திருப்பும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

China-US-Security.jpg

'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.

வங்காள குடாவின் கிழக்க்கு கடற்கரை நாடான மியன்மாரில் [பர்மாவில்] இந்திய - சீன வல்லரசுகளிற்கு இடையேயான அதன் புவியியல் அமைவிடம் காரணமாக மியன்மாரின் இராச தந்திரயுக்திகள் வெற்றியை நோக்கி செல்வதையும் சனநாயக ஊக்குவிப்பாளர்களும், மனித உரிமை போராளிகளதும், சிறுபான்மை சமூகங்களதும் போராட்டங்கள் செயல்வலுகுன்றிய நிலையில் இருப்பதையும் கடந்த கட்டுரையிலே பார்த்தோம். தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு

இந்த கட்டுரையிலே தென்மேற்குப் பசுபிக்கடற்கரை நாடுகள் குறித்த நிலவரங்களை ஆராயலாம்.

Darwin2.jpg

தென்மேற்கு பசுபிக்கடற்கரை எனும் போது அது அவுஸ்திரேலிய மற்றும் தென் சீன கடற்பரப்பையே பொதுவாக கொள்ளப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தென்சீனக் கடற்பரப்பில் பதட்டநிலைகள் பலகோணங்களில் தென்பட்டன.

இந்திய - வியட்னாமிய எண்ணை அகழ்வு நடவடிக்கைகள், அதே கடற்பகுதியில் சீன - இந்திய கடற்படை கப்பல்களுக் கிடையிலான முறுகல்நிலை என்பன மிக முக்கியமாக தென்சீன கடற்பரப்பின் பக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இக்கடற்பரப்பில் பிரதானமாக தமது ஆதிக்கத்தை செலுத்தகூடிய நாடுகளாக சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகியவற்றுடன் 'தென்கிழக்காசிய நேட்டே அமைப்பு' என கூறக்கூடிய 'ஆசியான்' நாடுகளும் அந்நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் கூட்டாளியான அமெரிக்காவும் உள்ளன.

பொருளாதார ரீதியான ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளரும் நாடுகளின் கூட்டாகவே இந்தபிராந்தியத்திலே உள்ள நாடுகள் பார்க்கப்படுகிறன. இவ்வளர்ச்சியின் நிமித்தம் தேவைகளும் உள்ளன. எரிபொருள் தேவையும் அவ்வெரிபொருளை பாதுபாப்பு உத்தரவாதத்துடன் வளங்கலை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

இதனால் இக்கடற்பிராந்தியத்தை உரிமை கோருவது தொடர்பாப ஏனைய நாடுகள் எல்லாவற்றையும்விட சீன பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானதாகும். அத்துடன் பிராந்திய அமைதியின் தேவையும் சீனாவுக்கு உள்ளது.

இதன் பொருட்டு அனைத்துலக நியதிகளுக்கு ஏற்ற வகையிலான கூட்டுகளும் ஒப்பந்தங்களும் உருவாகி வருகின்றன. ஆதிக்கம் செலுத்த விரும்பும் இதர வல்லரசுகளும்; முனைப்புடன் இவ்வொப்பந்தங்களை செய்து வருகின்றன.

கேந்திர முக்கியத்ததுவத்தின் காரணமாக இக்கடற்பரப்பை சீனா தனதென உரிமை கோருகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது கடற் போக்கு வரத்தின் நலன்கருதி இக்கடற்பகுதி அரசியல் எல்லைத் தடைகள் எதுவுமற்ற சமாதானமான கடற்பாதையாக திறந்து விடப்படவேண்டும் என கூறிவருகின்றன.

தனது ஆட்சிக்குட்பட்ட கடல் எல்லைக்குள் தென்சீன படற்பரப்பு வருவதால் வெளிச்சக்திகள் யாவும் இக்கடற்பிராந்தியத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும்.

ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளோ சீனாவின் அதிகரித்த அழுத்தம் காரணமாக சீனாவுடன் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு ஒருவரது கடற்பரப்பின் மேல் இன்னொருவர் உரிமை கோரும் பிரச்சனையானது அவ்வப்போது கடற்படைகளுக்கு இடையேயான முறுகல் நிலைகளுக்கும் காரணமாகி விடுகிறன.

இத்தகைய ஆட்சி அதிகாரம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக நாடுகள், கடல்சார் அனைத்துலக விதிகளின்படி நட்புரீதியான பேச்சுகள் மூலமும் புரிந்துணர்வின் அடிப்படையிலும் தாம் உரிமை கோரும் பகுதிகளை புவியியல் நிலையத்துக்கு ஏற்றவகையிலும் அப்பகுதிகளின் சமூக பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும் தமக்கிடையே தீர்த்து கொள்ள வேண்டு மென 1982ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் இதற்கென விரிவாக எழுதப்பட்ட சாசனத்தின் கடல் சார்சட்டம் கூறுகிறது.

ஆனால் நடைமுறை உலகில் சீனா தனது பொருளாதார பலத்தையும் இராணுவ வலிமையையும் பயன்படுத்தி இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்க முனைவதாக பிலிப்பையின், வியட்னாம், தாய்வான் மற்றும் புறூனை போன்ற 'ஆசியான்' அங்கத்துவ நாடுகள் கூறிவருகின்றன.

obama%20in%20darwin.jpg

இம்மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் தனது பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஓபாமா தென் கிழக்காசியா தொடர்பாக ஒரு மிக முக்கிய கொள்கை நோக்கை வெளியிட்டிருந்தார்.

இதிலே ஈராக், மற்றும் ஆப்கனிஸ்தானில் மையம் கொண்டிருந்த அமெரிக்க பார்வையை இனிவரும் காலங்களில் ஆசிய, கிழக்காசிய நாடுகள் மீது கூர்மையுறச் செய்வது அதில் குறிப்பாக தெரிகிறது.

"இன்றைய யுத்தங்கள் முடிவுக்கு வந்துள்ள இடத்தில் உள்ள எமது பாதுகாப்பு பிரிவுகளை ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் எமது முன்னிலையையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதீத கவனம் செலுத்த இயக்கி விட்டுள்ளேன்" என்பது எந்த ஒளிவு மறைவுமின்றி அதிபர் ஓபாமா குறிப்பிட்ட விடயமாகும்.

அதுமட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் சீனாவின் அண்மைய வளர்ச்சியின் பலனாக ஜப்பான் தென் கொரிய நாடுகளுக்கு பக்கபலமாக இந்த நகர்வை அமெரிக்கா மேற் கொள்வதாக தெரிகிறது. இதன் முதற்படியாக வட அவுஸ்திரேலிய பகுதியில் டர்ர்வின் என்னும் நகரை ஒட்டியதாக புதிய தொரு பாரிய பாதுகாப்பு படைத் தளம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் அதிபர் ஓபாமா.

2500 கடற்படை வீரர்களை கொண்ட இலக்கை நோக்கிய படை அணியை கொண்ட கடற்படை கப்பல் ஒன்று அவுஸ்திரேலிய வடநகரான டார்வினில் அடுத்தாண்டு தொடக்கம் தங்கி நிற்க ஏற்பாடாகி உள்ளது.

இந்த புதிய முன்னேற்றம் தென்சீன கடல் வலயத்தில் பெரும் பாதுகாப்பு தளம்பல் நிலையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடல் ரீதியான புதிய நடைமுறைகள் இப்பிராந்தியத்திலே உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சங்கிலிதொடர் நிகழ்வாக இந்து சமுத்திரபிராந்தியத்திலும் மாற்றங்களை கொண்டு வரலாம்.

இது சீனாவுக்கு சிறீலங்கா பர்மா போன்ற நாடுகள்மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென் சீன கடற்பரப்பை கண்காணிப்பதற்கென அமெரிக்க கடற்படையின் பிரசன்னம் குறித்து சீனா அதிருப்தியை தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் அடுத்தாண்டு தனது தலைமைத்துவ தேர்தலை எதிர்பார்த்து நிற்கும் சீனா பாரிய இராசதந்திர மாற்றங்களை ஏற்படுத்த முனைய வில்லை.

அதே வேளை தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா தனது கவலை நிலையை வெளிப்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

இத்தகைய அமெரிக்க கடற்படை பிரசன்னம் பதில் நடவடிக்கைகளுக்கும் அதற்கான எதிர் பதில் நடவடிக்கைகளுக்குமே இட்டு செல்லவுள்ளது. இதன் மூலம் நம்பிக்கையீன போக்கை இருதரப்பிலும் உருவாக்கி விடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் கருதுகிறார்.

உலகின் தலைமை நிலையை என்றும் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டுமென அவாகொண்டுள்ள அமெரிக்க வல்லரசு ஈராக் ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் தான் நடாத்திய போர் நடவடிக்கைகளின் பலனாக பொருளாதார செலவீனத்தால் வலு இழந்து போயுள்ளதாக கருதப்பட்ட போதிலும் புதிய நிதி ஒதுக்கீடுகளுடன் தென்சீன கடலில் சீனாவுடனான சிறிய நாடுகளின் சமபல நிலையை உருவாக்கும் பொருட்டு தமது நகர்வுகளை மேற்கொள்வது நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

http://www.puthinapp...?20111123105087

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.