Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்: நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Seeman_200.gif

என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,

வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.

நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.

'எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்" என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.

சங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை�பயங்கரவாதம்" என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.

எந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர்.

நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.

எந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு.

தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர்.

இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.

அதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர்.

உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது.

இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.

அரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.

இனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.

'எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக� என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான்

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.