Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதைக்கப்பட முடியாத மாவீரர் கனவும், தமிழ் மக்களது உணர்வும்!

Featured Replies

maaveeranaal2q.gif'விடுதலைப் போராட்டத்திற்காக மக்களிடம் திரட்டப்பட்ட பணம் குறித்த கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக, ஜி.ரிவி. தனது நிதி மூலம் குறித்த தமிழ் மக்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டணமற்ற தொலைக்காட்சியாக இயங்கும் ஜி.ரிவி விளம்பரம் மூலம் பெற்றுக்கொள்ளும் சிறிய வருமானத்தில் தனது சேவைக்கான செலவையும், ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்குவது சாத்தியமே அற்றது. அப்படியானால், ஜி.ரிவியின் நிதி மூலம் என்ன? யார் வழங்குகின்றார்கள்? மக்களிடம் இருந்து பங்களிப்புப் பெறப்பட்டால் அதன் விபரம் என்ன? என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியம் பின்னால் அணி திரண்டுள்ள மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யாதவிடத்து, ஜி.ரிவியின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாகவே நோக்கப்படும்.'

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழீழ மக்கள் முற்றுமுழுதான சிங்கள அடக்குமுறைக்குள் உயிர் வாழ மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தங்களது சோக உணர்வுகளைக் கண்ணீராக வெளிப்படுத்தவும் முடியாத கொடுமைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழத்தின் போர்க் களத்தை வெற்றி கொண்ட சிங்கள இனவாதம், சர்வதேச யுத்த நியமங்களையும் மீறி, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொண்று குவித்தது மட்டுமல்ல, அவர்களது தன்மான உணர்வுகளைச் சிதைக்கும் வகையில், அதனைச் சிங்கள தேசத்தின் வெற்றியாகக் கொண்டாடியும் வருகின்றார்கள்.

மிகப் பெரிய தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், அதில் தப்பித் தம்மிடம் சரணடைந்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து அவர்களை இழிவு படுத்தியது. அங்கே, விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் என்று இனம் கண்ட தமிழர்கள் இரகசியமான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, சித்திரவதைகள் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னமும் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ மக்களது விடுதலை உணர்வு மீண்டும் துளிர்விட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால், அவர்களது வீர வரலாற்றுச் சின்னங்கள் சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்டது. மாவீரர்களுக்கான துயிலும் இல்லங்களும், நினைவுத் தூபிகளும் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள் விடுதலைப் போரில் உயிர் நீத்த தங்கள் உறவுகளுக்காக, அவர்களது தடங்கள் மீது பூ வைக்கவும், அஞ்சலி செலுத்தவுமான கடமைகளையும் நிராகரித்த சிங்கள ஆட்சியாளர்கள் மாவீரர் தினத்தன்று கோவில்களில் வழிபாடு செய்வதற்கும், மணியோசை எழுப்புவதற்கும் தடை விதித்தனர்.

இந்த அவலமான வாழ்வின் கொடுமைகள் புலம்பெயர் தமிழர்களைப் பொங்கி எழ வைத்துள்ளதையும், தமிழீழ விடுதலை நோக்கிய அவர்களது போர்க் களம் விரிவடைந்து செல்வதையும் கடந்த இரண்டரை வருடங்களாக உணர்ந்து கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரிய உளவியல் போர் ஒன்றைப் புலம்பெயர் தமிழர்கள்மீது தொடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளது கள முனைத் தோல்விக்குப் பின்னரும், சிதைக்க முடியாத விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள்மீதான தமிழ் மக்களது நம்பிக்கை மீது குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போரினை முன்னெடுத்த விடுதலைப் புலிகளது வழங்கல் சக்தியாகச் செயற்பட்ட புலம்பெயர் கட்டமைப்புக்களிடம் பதில் கொடுக்க முடியாத கேள்விகள் தொடுக்கப்பட்டன.

தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மீறி நிதி திரட்டி, விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கியதான குற்றச்சாட்டில் பல்வேறு மேற்குலக நாடுகளிலும் செயற்பட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனைகளுக்கும் உள்ளானார்கள். இந்த நிலையில், தமிழ்த் தேசியத் தளங்கள்மீது சுமத்தப்படும் நிதி சேகரிப்புக் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் திரட்டும் வகையில், அவர்களிடம் நிதி மூலங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்களது பணிப்பின்பேரில் புலம்பெயர் தமிழர்களிடம் திரட்டப்பட்ட நிதி விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டங்களுக்குச் சென்றடைந்தது என்பதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அது, தமிழீழ விடுதலை என்ற ஒரே இலட்சியத்திற்காகத் தம் உயிரையும் ஈகம் செய்த மாவீரர்களை அவமதிப்பதாகவும், தேசியத் தலைவர் அவர்களது விடுதலைப் போராட்ட இலட்சிய உறுதியைச் சிதைப்பதாகவுமே உள்ளது.

விடுதலைப் புலிகள் என்றுமே தனி மனிதர்களது எண்ணங்களுடனும், செயற்பாடுகளுடனும் தமது போராட்டத்தை வடிவமைத்திருக்கவில்லை. அதற்குப் பல படிமானங்களும், நெறிமுறைகளும் உள்ளன. மக்களிடம் திரட்டப்பட்ட பணம், விடுதலைப் புலிகளது தேவைக்கான பரிமாற்றங்கள் பெற்று அங்கு சென்றடைவற்குப் பல படிமானங்கள் உண்டு. அதில், கையாடல் செய்து யாரும் தப்பிவிட முடியாது. அப்படி நிகழ்ந்திருந்தாலும், காலம் கடந்தேனும் அதற்கான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டே தீரும்.

விடுதலைப் புலிகள் தங்களது உயிர்களை ஈகம் செய்து நடாத்திய தமிழீழ விடுதலைப் போருக்காக நாங்கள் பங்களிப்பு வழங்கினோம். முள்ளிவாய்க்கால் வரை அவர்கள் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நகர்த்தி வந்துள்ளார்கள். அதை, முன்நகர்த்திச் சென்று விடுதலையைப் பெற்றெடுக்கும் கடமை எங்களுக்கு உண்டு என்ற தார்மீக சிந்தனைக்கு அப்பால், நாம் சிங்கள ஆட்சியாளர்களது சதிக்குள் நின்று கேள்விகள் மட்டுமே கேட்பது நியாயம் ஆகாது. அது, இதுவரை விடுதலைக்காகத் தம்மை ஈகம் செய்த விடுதலைப் புலிகளையும், உயிர்த் தியாகம் புரிந்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்து விடும். நாங்கள் வழங்கிய சிறு தொகை பணத்திற்குக் கணக்குக் கேட்கும் நிலையில், அவர்கள் செலுத்திய விலைக்கு எங்களில் யார் கணக்குக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளோம்?

பல மில்லியன் ரூபாய் பணத்தையும், இலங்கைத் தீவின் மொத்த வளத்தையும், உலக நாடுகளின் உதவியையும் பெற்று, தமிழீழ மக்களது விடுதலைக் கனவு மீது நடாத்திய போருக்காக சிங்கள மக்கள் கணக்குக் கேட்கவில்லை. இப்போதும், அதற்காக வழங்குவதற்கு அவர்கள் மறுப்பேதும் சொல்வதில்லை. நாங்கள் எங்களுக்காக, எங்களது மக்களது சுதந்திர வாழ்வுக்காக, எங்களது மண்ணின் விடுதலைக்காகப் போராடிய எங்களது விடுதலை அமைப்பின்மீது கேள்விகள் கேட்பதைப்போன்ற அநாகரீகம் எதுவும் கிடையாது. விடுதலைப் புலிகளது வெற்றிகளின் பின்னால் ஆரவாரமாக அணி திரண்ட நாங்கள், அவர்களது ஒரு கள முனைத் தோல்வியுடன் அவர்களை விமர்சனத்துக்குள்ளாக்குவது மனிதாபிமானமற்ற செயலாகவே கருதப்படும்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்கி, தமிழீழ விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சிங்கள தேசத்தின் சதியினை தமிழ்த் தொலைக்காட்சியான ஜி.ரிவி மூலம் முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கே.பி.யை முன்நிறுத்துவதற்கான முயற்சியில் ஜி.ரிவி வெளிப்படையாகவே செயற்பட்டது. அதற்காக, கே.பி.யால் தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழையும் ஒளிபரப்பியது மறக்கப்பட முடியாத நிகழ்வு. அதன் பின்னரும், ஜி.ரிவி தமிழீழ விடுதலை சார்ந்த கருத்துக்களோடு, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் கருத்துக்களையும், கேள்விகளையும் தொடுத்தே வருகின்றது.

கடந்த இரவு அறிவிப்பாளர் தினேஷ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதொரு நிகழ்ச்சி ஊடாகவும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் மீதான சிதைவுக் கருத்துக்களே வெளிப்படுத்தப்பட்டது. விடுதலைப் போராட்டத்திற்காக மக்களிடம் திரட்டப்பட்ட பணம் குறித்த கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக, ஜி.ரிவி. தனது நிதி மூலம் குறித்த தமிழ் மக்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். கட்டணமற்ற தொலைக்காட்சியாக இயங்கும் ஜி.ரிவி விளம்பரம் மூலம் பெற்றுக்கொள்ளும் சிறிய வருமானத்தில் தனது சேவைக்கான செலவையும், ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்குவது சாத்தியமே அற்றது. அப்படியானால், ஜி.ரிவியின் நிதி மூலம் என்ன? யார் வழங்குகின்றார்கள்? மக்களிடம் இருந்து பங்களிப்புப் பெறப்பட்டால் அதன் விபரம் என்ன? என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியம் பின்னால் அணி திரண்டுள்ள மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்யாதவிடத்து, ஜி.ரிவியின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாகவே நோக்கப்படும்.

- தொல்காப்பியன்

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=10986:2011-11-29-11-04-15&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.