Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 05:20.28 PM GMT ]

netha0.jpg நெதர்லாந்தில் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அல்மேர என்னுமிடத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் தேசியக்கொடியேற்றல் பின் மாவீரர் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு இன உணர்வாளர்களின் மாவீரர் உரை ஒளித்திரையில் காண்பிக்கப்பட்டது.

பின் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கர வாதத்தடைச்சட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தமிழர்களுக்காக வாதிட்டுக்கொண்டிருக்கும் பிரபல வழக்கறிஞர் திரு விக்ரர் கொப்பே அவர்களின் துணை வழக்கறிஞர் திருமதி தமரா அவர்கள் சிறப்புவிருந்தாளராக வந்து நெதர்லாந்து மொழியில் உரையாற்ற தமிழ் உறவுகள் அனைவரும் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது. மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மண்டபம்நிறைந்த தமிழ் உறவுகள் இம்மாவீரர் நிகழ்விலே கலந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி மன நிறைவுடன் அமைதியாக நிகழ்வுகளில் பங்கேற்றனர். பரிசு வழங்கலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு இறுதியாக தமிழ் உறவுகள் அனைவரும் எழுந்து நின்று நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலைக் கைதட்டிப் பாடி 6.00 மணியளவில் நிகழ்வினை நிறைவு செய்தார்கள்.

netha1.JPG

netha2.JPG

netha3.JPG

netha4.JPG

netha5.JPG

netha6.JPG

netha7.JPG

http://news.lankasri.com/view.php?222X22DG3eWQlc2BI3dGLVb3jC24ap2039O2

நேற்று 27 - 11 -2011 ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு எழுச்சியுடனும்,உணர்வுபூராகவும், மிகவும் சிறப்புடனும் நெதர்லாந்து நாட்டில் அல்மேரா என்னும் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து மாவீரர்களை வணங்கி கௌரவித்து நினைவுகூர்ந்தனர்.இந்தநிகழ்வுகளின்போது நெதர்லாந்து நீதிமன்றில் தமிழீழவிடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் தேசப்பற்றுப்பணியாளர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் வாதிட்டு எமக்கு வெற்றியினை பெற்றுத்தந்த மதிப்புக்குரிய சட்டவாளர் விக்டர் கோப் அவர்களுடன் சேர்ந்து வாதிட்ட அவரது உதவியாளர் இந்த நிகழ்வின் போது வந்து சிறப்புரை ஆற்றினார். அவர் மிகச்சிறப்பாக உரையாற்றி இறுதியில் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பாமுழுவதும் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிருபித்து அவர்களுடைய தடையை அகற்ற முயர்சிதுக்கொண்டிருப்பதாக உறுதியளித்தார்.மக்கள் எல்லோரும் எழுந்துநின்று வெகு நேரமாக கரகோஷம் எழுப்பி அவருக்கு தம் நன்றியினை தெரிவித்தனர்.

பின்குறிப்பு;- மாவிரர்களின் படங்கள் இம்முறை மண்டபத்தில் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது அத்துடன் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டிருந்தது. சில வருடங்கள் இந்த நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்த போதும் இம்முறை மீண்டும் இவையனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டது. ஏனனில் இதற்கு முன் காவல்துறையினர் இதற்கு அனுமதியளிக்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பின்பின் இவையாவும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிகழ்வின் போது காவல்துறையினர் அங்கு வந்தனர் ஆனால் எதற்கும் தடை விதிக்கவில்லை.அவர்கள் வருகைக்கு காரணம் என்னவென்று வினவிய போது மண்டபத்தில் வரையறுக்கப்பட்ட மக்களையும் விட அதிகமானோர் இருப்பதாக தமக்கு யாரோ தகவல் கொடுத்ததாக கூறினார்கள்.

உண்மையுடன் தமிழ்ச்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.