Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டிலிருந்து வந்து யாழ்.செல்லவிருந்த தமிழரிடம் வாங்கிக்கட்டிய ஏமாற்றுப் பேர்வழி!- வெள்ளவத்தையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

colombo_beach.jpg

வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பி யாழ்ப்பாணம் செல்லவிருந்த நபர் ஒருவரிடம் பணம்,பொருட்கள் என்பனவற்றைக் கொள்ளையிட முயன்ற நபர் ஒருவர் வசமாக வாங்கிக் கட்டிய சம்பவம் ஒன்று நேற்று வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றிலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். அவர் வழமையாக வெள்ளவத்தையிலேயே தங்குவதுண்டு. எனினும் சம்பவதினம் விமானம் தாமதமானதால் நேர காலத்துக்கு வர முடியவில்லை.

இரவு 12 மணியளவிலேயே வெள்ளவத்தையை வந்தடைந்ததுடன் அங்கு மங்களா பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கி தங்குவதற்கு லொட்ஜ் ஒன்றைத் தேடியுள்ளார். இரவு வேளை என்பதாலும், லொட்ஜ் வழங்குவதில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாகவும் அவருக்கு எதுவும் கிட்டவில்லை.

இந்நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் சுத்தத்தமிழில் பேசி லொட்ஜுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வெள்ளவத்தைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றுள்ளார். குறித்த நபருக்கோ ஒன்றும் புரியவில்லை. இங்கும் லொட்ஜ் இருக்கலாம் என்பது அவரது எண்ணம்.

உடனே அந்த நபர் கத்தியைக்காட்டி, கையிலுள்ள பணம் மற்றும் டொலர் என்பனவற்றை எடுக்குமாறு கேட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போதிலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட குறித்த யாழ். வாசி, அவனது கையிலிருந்த கத்தியைப் பறித்ததுடன் அடித்து நொறுக்கி அவனது முகத்தை நன்கு பதம் பார்த்துள்ளார்.

இதனால் இரத்தம் பீறிட்டுப்பாயவே உடனே கொண்டு வந்த பொருட்களையும் அந்த இடத்திலேயே போட்டுவிட்டு அவர் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையம் சென்று அங்கு நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

உடனே பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு குறித்த நபர் அமர்ந்திருந்த அதேவேளை, கத்தியிலிருந்து இரத்தம் வழிந்தோடிய வண்ணமிருந்துள்ளது.

அதேவேளை அங்கு விட்டுச் சென்ற பெட்டியையும் குறித்த நபர் நன்கு ஆராய்ந்து அதில் எதுவும் இல்லாததையடுத்து சற்று தொலைவில் வீசியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அந்த இரவுப் @பர்வழியை வைத்தியசாலையில் சேர்த்ததுடன், யாழ்.வாசியை பொலிஸ்நிலையத்தில் பாதுகாப்பாக காலை 5 மணி வரை வைத்திருந்து அனுப்பிவைத்துள்ளனர்.

http://www.tamilthai.../newsite/?p=582

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.