Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படிச் சொல்கிறார்கள் இவர்கள்: மடுவுக்குப் போக புலிகளின் அனுமதியா?- மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-chavakachcheri.jpg

மடுவுக்குச் செல்வதற்கு புலிகளின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது அந்தப் பயணத்தையே கைவிட்டதாக கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் உரையாற்றிய அவர்,

“நான் பிரதமராக இருந்த காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகளைக் கையாண்டேன். மடுத்தேவாலயத்துக்கு வீதியை அமைத்துத் தருமாறு என்னிடம் கேட்டனர். 40 அடி அகலமுள்ள வீதியை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன்.

அந்த வீதியை திறக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்த மன்னார் ஆயர், விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் தான் நீங்கள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்றும் கூறினார்.

எனது ஆயுதப் பாதுகாவலர்கள் என்னுடன் விழாவில் பங்கேற்க முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் தீவிரவாதிகளிடம் அனுமதி பெறவோ நிகழ்வில் பங்கேற்கவோ இல்லை.

யாருடைய அனுமதியும் பெறாத ஒரு சூழலில் தான் மடுவுக்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

2007 செப்ரெம்பரில் தொடங்கப்பட்ட வன்னி மீதான போரின் முதலாவது வெற்றியாக 2008 ஏப்ரலில் மடுவைப் படையினர் கைப்பற்றினர்.

அதன்பின்னரே அங்கு சென்றேன்.“ என்றார் மகிந்த ராஜபக்ச.

உள்நாட்டுப் போர்களை உருவாக்கும் மேற்குலகம் - திஸ்ஸ விதாரண

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

இதன்மூலமே தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான பிரிவினைவாத சக்திகளை தமிழ் மக்கள் நிராகரிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“2033ம் ஆண்டளவில் உலகில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதனைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்றன.

இதன் ஒரு அம்சமாக பல்வேறு நாடுகளிலும் உள்நாட்டுப் போர்களை உருவாக்கி அதன் மூலம் இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே எமது நாட்டை இத்தகைய சிக்கல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பது அவசியம்.

அதற்கு நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு என்பன சாத்தியமாகும்.

நாம் அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் போது சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. நிர்வாகத்துறை, தேர்தல் முறைமை மற்றும் சட்டவாக்கம் போன்றவற்றிலேயே அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியமானது.

வரவுசெலவுத்திட்டத்தில் நாணயத்தின் பெறுமதியை குறைப்பதற்கு லங்கா சமசமாசக் கட்சி பரிந்துரை செய்யாது. மூன்று வீதத்தினால், நாணயப் பெறுமதி குறைக்கப்பட்டுள்ளது விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கும்.

ஏனைய பல விடயங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு வேறு பல வழிகளும் உள்ளன.“என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கழுத்துப்பட்டியை கழற்றிதால், மாநாடு நின்று விடாது - பீரிஸ்

கொமன்வெல்த் இலச்சினை பொறித்த கழுத்துப்பட்டியை ரணில் விக்கிரமசிங்க கழற்றிக் காண்பித்ததால், சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நிறுத்திவிடப் போவதில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து கொமன்வெல்த் இலச்சினை பொறித்த கழுத்துப்பட்டியை கழற்றியவாறு அவர் வெளிநடப்புச் செய்திருந்தார்.

அதன்பின்னர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜி.எல்.பிரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு ஒரு நாடு கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் இவ்வாறு கூறுவது வெட்கக்கேடானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புலிகளுடன் இணைகிறது ஜேவிபி - எஸ்.பி.திசநாயக்க

ஜேவிபியின் ஒருபகுதியினர் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இணைந்து கொள்ள முனைவதாக சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கூரைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இந்தக் குண்டுகள் 1988-89ம் ஆண்டு கிளர்ச்சிக்காலத்தில் மறைத்து வைக்கப்பட்டவை.

அனைத்துப் பல்கலைகழக மாணவர் அமைப்பு ஜேவிபியின் ஒரு அங்கம் அல்ல. அது ஜேவிபியின் கிளர்ச்சிக்குழு. இந்தக்குழு வன்முறைகள், ஆயுதங்கள், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டது.

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் நாட்டில் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. ஆபத்து முற்றாகவே நீங்கிவிடவில்லை.

ஜேவிபியினர் இன்னமும் 1988-89 காலப்பகுதியில் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர். விமல் வீரவன்ச போன்றோர் இதனால் தான் அதிலிருந்து வெளியேறினர்.

ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்“ என்றும் எஸ்.பி.திசநாயக்க மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20111130105126

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.