Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின். 123

அறியவேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால் அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு அதனால் மேன்மை உண்டாகும் .

எனது கருத்து :

மற்றவர்கள் பாராட்டவேணும் என்பதற்காக ஒருவரை அறியவேண்டியதெல்லாம் அறிந்து அடக்கமாய் இருக்கவேணும் எண்டு ஐயன் சொன்னாலும் ^_^, ஒருவிடையத்தை அறியவேணுமெண்டால் கேள்வி கேக்கவேணும் :wub: .இதே பாராட்டப்போறாக்கள்தான் சொல்லுவினம் அடக்கமில்லாதவன் எண்டு :lol::D:icon_idea:.

If versed in wisdom's lore by virtue's law you self restrain.Your self-repression known will yield you glory's gain.

Quand quelqu’un acquiert la modestie, sachant que celle-ci est l’intelligence même. les grands (de ce monde) s’en aperçoivent et sa modestie lui donne la grandeur.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது. 124

எத்தகைய சூழ்நிலையிலும் அறநெறியிலிருந்து மாறுபடாமல் அடக்கமுடையவனாய் வாழ்பவனது உயர்வு மலையைவிட மேலானது .

எனது கருத்து :

தன்னரை நேர்மையான வழியைக் கடைசிவரையும் விட்டு விலத்தாமல் அடக்கத்துடன் ஒருத்தர் இருந்தால் , அவரைப்பத்தின மற்றாக்களின்ரை மனத்தோற்றம் மலையைவிட பெரிசு :icon_mrgreen::rolleyes: . உதாரணமாய் எங்கடை தம்பி பிரபாகரன் . ஆனால் இப்பிடிப்பட்டாக்களை உலகத்துக்குப் பிடிக்காது :(:(:icon_idea: .

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view.

La grandeur de l’homme qui, se maintenant dans la vie familiale, est modeste, est plus imposante que celle da montagne.

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவர்உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125

பணிவோடு நடத்தல் எல்லோர்க்கும் நல்லதாகும் . அந்தப் பணிவு செல்வருக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும் .

எனது கருத்து :

காசுபணத்துக்கும் அடக்கத்துக்கு எட்டாப்பொருத்தம் :icon_mrgreen: . அது ஒரேநேர்கோட்டில வாறது மகாகஸ்ரம் :blink: . ஆனால் , பணக்காறனுக்கு அடக்கமும் இருந்தால் அது அவனுக்கு இரட்டிப்பு பணக்காறனாக்கும் எண்டு ஐயன் சொல்லுறார் :D:icon_idea:.

To all humility is goodly grace; but chief to them . With fortune blessed, -'tis fortune's diadem.

La modestie est bonne à tous; mais elle est de plus,

une richesse pour les riches.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து. 126

ஒரு பிறப்பில், ஒருவன் ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்வதைப் போல பாவம் சேராமல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆளவல்லவனாயின் அது அவனுக்கு ஏழு பிறப்புகளுக்கும் காவலாய் உதவும் .

எனது கருத்து :

இதை ஐய்யன் எழுத்தில சொன்னாலும் இப்படி இருக்கிறதைவிட அப்படி ஒரு பிறப்பே தேள்வையில்லை :o:( . ஆறாவது அறிவின்ரை வேலையே ஐம்பொறிகளை உள்வாங்கிறது தான் :lol::D.

Like tortoise, who the five restrains . In one, through seven world bliss obtains.

Si quelqu’un a, dans une vie, la puissance de dompter ses cinq sens, comme la tortue, cette puissance sera sa gardienne dans ses sept autres naissances.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127

ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாளவேண்டும் அங்கனம் அடக்கியாளாவிட்டால் பேசும்போது சொற்குற்றத்துக்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்.

எனது கருத்து :

தம்பி பிராபாகரன் அடிக்கடி ஒரு வசனம் சொல்லுவர் :). தான் சொல்லுக்கு குடுக்கிற முக்கியத்துவத்தைவிட செயலுக்குத்தான் கனக்க குடுக்கிறன் எண்டு இதின்ர அர்த்தம் இந்தகுறளுக்குச் சரியாப் பொருந்தும் :):):icon_idea:.

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep.

Ne peut-on maîtriser tous les sens? Que l’on garde au moins sa langue. Sinon, on souffrira tous les malheurs causés par l’intempérance du langage.

ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின்

நன்றாகாது ஆகி விடும். 128

தீய சொல்லைச் சொல்லி பிறர் மனதைப் புண்படுத்துபவன் செய்யும் நல்ல காரியங்கள் கூட மாறுபட்ட பயனைத் தரும் .

எனது கருத்து :

ஒருத்தர் வாயாலை ஒருக்கா லூசுக்கதை கதைச்சு அது மற்றவையைப் பாதிச்சுது எண்டால் :icon_mrgreen::o, பேந்து அவர் எனதான் நல்லவிதமாய் சொன்னாலும் அது கெட்டதாய் தான் தெரியும் :lol::lol::D:icon_idea:.

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing.

Si par une seule parole blessante, quelqu’un cause de la peine à un autre, il perd tout le bénéfice de ses autres vertus.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ; ஆறாதே

நாவினால் சுட்ட வடு. 129

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒருபோதும் மறையாது

எனது கருத்து:

என்னைக்கேட்டால் உலகத்திலை கெட்ட ஆயுதம் நாக்குத் தான் :o . அது வாய்க்குள்ளை இருக்கிறவரைக்கும்தான் அதுக்கு பெறுமதி :icon_mrgreen:தப்பித்தவறி கோபத்திலை என்ன கதைக்கிறிங்கள் எண்டு தெரியாமல் கதைச்சு மற்றவன்ரை மனசைக் காயப்படுத்தினியள் எண்டால் , அது அவன்ரை மனசிலை ஆறாரணமாய்ப் பதிஞ்சுபோயிருக்கும் :( . எப்பவும் இடம் , பொருள் , ஏவல் பாத்து கதைக்கவேணும் :lol::D:icon_idea: .

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more.

L’ulcère de la brûlure du feu guérite radicalement mais la plaie d’une brûlure de la langue ne guérit pas.

கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

சினத்தைக் காத்து , கல்வி கற்று , அடங்கி வாழும் சிறப்பைப் பெற்றுள்ளவனை அறம் அவன் வழியில் சென்று காத்திருக்கும் .

எனது கருத்து:

நல்ல கல்விமானாய் , கோபங்கொள்ளாமல் , அடக்கமாய் வாழுறவைக்கு அறம் அவைன்ரை வழியிலை காத்திருக்கும் எண்டு ஐயன் சொன்னாலும் :unsure::rolleyes: , இதுகளையே உயிர்மூச்சாய் கொண்ட எங்கடை இனத்துக்கு எந்தவழியிலை அறம் வந்து காப்பாத்தி விட்டது :lol::icon_idea: ?

Who learns restraint, and guards his soul from wrath,

Virtue, a timely aid, attends his path.

Voici un homme qui continent sa colère et est versé dans les arts et les sciences. La vertu guette le moment d’entrer dans son cœur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - அடக்கமுடைமை பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒழுக்கமுடமை(The Possession of Decorum , La moralité )

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். 131

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .

எனது கருத்து:

ஒரத்தருக்கு ஒழுக்கம் , அக ஒழுக்கம் , புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் :icon_mrgreen:. இருந்தால் மட்டும் காணாது :o, அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் . அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது :D:icon_idea:.

'Decorum' gives especial excellence; with greater care

'Decorum' should men guard than life, which all men share.

Puisque la moralité honore tous les hommes,

il faut la conserver de préférence à la vie.

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்

தேரினும் அஃதே துணை. 132

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .

எனது கருத்து:

எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது . ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை . அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க வேண்டிவரும் எண்டு இந்தக்குறள் சொன்னாலும் :unsure:, இதையே உயிர்மூச்சாய் கொண்டு இருந்த எங்கடை போராட்டத்துக்கு என்ன நடந்தது :(:icon_idea: ?????

Searching, duly watching, learning, 'decorum' still we find;Man's only aid; toiling, guard thou this with watchful mind.

Examinez, cherchez à connaître, en contenant votre volonté, vous decouvritrez à la fin que la moralité est votre seule compagne (pour le ciel). Donc, gardez la, même au prix des souffrances.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒழுக்கம் உடைமை குடிமை ; இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். 133

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

எனது கருத்து:

இந்தக் குறளாலாலை ஐயன் சாதிக்கு ஒரு புது இலக்கணம் தாறார் :icon_mrgreen:.

ஒருத்தர் குறைஞ்ச சாதிலை பிறந்தாலும் நல்ல ஒழுக்கமானவாராய் இருந்தால் உயர்சாதியாய் போற்றப்படுவாராம் :) . ஆனால் உயர்சாதீலை பிறந்து ஒழுக்கம் இல்லாட்டி குறைஞ்ச சாதியாய் மதிப்பினமாம் :lol:. ஆக சாதி எண்டுறது ஒருத்தற்ரை ஒழுக்கத்திலைதான் இருக்கிது :icon_idea: .

'Decorum's' true nobility on earth;'Indecorum's' issue is ignoble birth.

La moralité dénote l’homme de race; l’immoralité place l’homme dans la classe inférieure.

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். 134

கற்ற வேதத்தை மறந்தால் மீண்டும் அதை ஓதிக் கற்றுக் கொள்ளலாம் . ஆனால் வேதம் ஓதுவானுடைய குடிப்பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெடும் .

எனது கருத்து:

ஐயர் மந்திரத்தை மறந்தால் பேந்து படிக்கலாம் :icon_mrgreen: . ஆனால் ஐயர் ஒழுக்கம் தவறினால் அவர் கேடுகெட்ட சாதி எண்டு

ஐய்யன் சொன்னாலும் :unsure:, இப்ப புலத்தில இருக்கிற ஐயர்மாரைப் பாத்தால் ஐயன் தன்ரை ஐடியாவை மாத்தியிருப்பார் :lol::D:icon_idea:.

Though he forget, the Brahman may regain his Vedic lore;Failing in 'decorum due,' birthright's gone for evermore.

Le brhame, s’il oublie les vêdas, peut les réétudier, mais s’il manque à la moralité, il perd sa caste.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 135

பொறாமை உடையவனிடத்தில் செல்வம் நில்லாதது போல , ஒழுக்கம் கெட்டவனித்தில் உயர்வாகிய பெருமை நில்லாது .

எனது கருத்து:

எரிச்சல் பிடிச்ச ஆக்களின்ரை சீவியத்தையும் , ஒழுக்கங்கெட்ட ஆக்களின்ரை சீவியத்தையும் உயர்வான வாழ்கையா எடுக்கேலாது :icon_mrgreen: . ஆனால் அவைன்ர சீவியம்தான் இப்ப கொடிகட்டிப் பறக்கிது :(:icon_idea:.

The envious soul in life no rich increase of blessing gains,So man of 'due decorum' void no dignity obtains.

Pas d’enrichissement pour l’envieux: de même pas d’élévation pour l’homme sans mœurs.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து. 136

ஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாவதை அறிந்து , மனவலிமையுடைய சான்றோர் ஒழுக்கத்திலிருந்து ஒரு போதும் பிறழ மாட்டார்கள் .

எனது கருத்து:

ஒழுக்கம் இல்லாட்டி தங்களை கேடுகெட்ட சாதியெண்டு சனம் காறித்துப்பும் எண்டு மனசை கட்டி ஆண்டவைக்குத் தெரிஞ்சதாலதான் அவை எந்தக்கஸ்ரம் வந்தாலும் ஒழுக்கத்தை விடேலை :icon_mrgreen::) . இதில எனக்குத் தெரிஞ்சு தம்பி பிரபாகரன் முதலிடத்தில இருக்கிறார் .

The strong of soul no jot abate of 'strict decorum's' laws,Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Ceux qui, sachant que dévier des bonnes mœurs crée le péché, ne s’écartent pas de la bonne conduite. sont ceux qui ont la force de la volonté.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி. 137

நல்லொழுக்கத்தால் யாவரும் உயர்வடைவர் . ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையக்கூடாத பெரும் பழியையே அடைவர் .

எனது கருத்து:

ஒழுக்கமாய் இருக்கிறவையை சனம் எப்பவுமே மதிக்கும் , மரியாதை குடுக்கும் :) . அதே ஆக்கள் தலைகீழாய் ஒழுக்கமில்லாமல் இருந்தால் சனம் ஏன் நாயே எண்டுங் கேளாதுகள் :lol::D:icon_idea:.

Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

Par les bonnes mœurs, on obtient l’honneur;

c’est l’ignominie qui attend ceux qui s’en écartent.

நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம் ; தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும். 138

நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும் . தீய ஒழுக்கம் இம்மை மறுமை ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும் .

எனது கருத்து:

நல்ல ஒழுக்கமானவை எதைச் செய்தாலும் தொட்டதெல்லாம் துலங்கும் :icon_mrgreen: .ஒழுக்கமில்லாதவை நல்லதைச் செய்தாலும் கெட்டபேரைத்தான் அவைக்கு குடுக்கும் :rolleyes::lol::icon_idea: .

'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally.

Les bonnes mœurs sont les semences de la vertu, les mauvaises causent toujours la douleur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல். 139

மறந்தும் தீமையான சொற்களை தம் வாயினால் கூறுதலாகிய செயல்கள் நல்லொழுக்கம் உடையவர்க்கு இயலாதனவாகும் .

எனது கருத்து:

நல்ல ஒழுகத்தை தங்கடை வாழ்க்கையில கொண்டிருக்கிறவை மறந்தும் தங்கடை வாயாலை கெட்ட சொல்லுகளை சொல்லமாட்டினம் எண்டு ஐயன் சொன்னாலும் :icon_mrgreen: , இப்படிபட்ட ஆக்களை காணுறதே குதிரைக்கொம்பாய்க் கிடக்கு இந்தக்காலத்தில ^_^:(:icon_idea:.

It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill.

Même quand ils s’oublient, il est impossible aux gens de bonnes mœurs de proférer des paroles blessantes.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவுஇலா தார். 140

உலகிலுள்ள உயர்ந்தவர்களோடு ஒத்து ஒழுகுதலை அறியாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரேயாவர் .

எனது கருத்து:

ஒழுக்கம் இல்லாதவை என்னதான் படிச்சு கிழிச்சிருந்தாலும் :icon_mrgreen: ஐஞ்சுசதத்துக்குப் பிரையோசனமில்லாத மோடையங்கள் :lol::D .

Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well.

Ceux qui ne savant pas conformer leur conduite au monde,

sont des ignorants, bien qu’ils aient beaucoup appris.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் - பிறன்இல் விழையாமை .( Not coveting another's Wife , Ne pas convoiter la femme d’autrui ) .

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல். 141

அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை , உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது .

எனது கருத்து :

எல்லா அறத்தையும் பொருளையும் கரைத்துக் குடிச்சாக்களிட்டை பிறன் மனைவியை விருப்பம் கொள்ளுற குணம் இல்லை எண்டு ஐயன் சொன்னாலும் :icon_mrgreen:^_^ , இந்த இந்திரன் ஏனப்பா அகலிகையிட்டை அதுவும் மாறுவேசத்திலை போனவர் :lol::D:icon_idea:?

Who laws of virtue and possession's rights have known,

Indulge no foolish love of her by right another's own.

L’homme qui a étudié les traités de la vertu et de la richesse ne commet pas la sottise de convoiter le femme, qui est le Bien du prochain.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல். 142

அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும் , பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை .

எனது கருத்து:

மற்றவையின்ரை மனுசியை அடையவேணும் எண்டு நினைச்சுக் கொடுக்குக் கட்டிறவை கடைநிலை மனிசரை விடக் கேவலமானவையாம் :icon_mrgreen::) .ஆனால் இப்ப நாங்கள் பாக்கிற

பிரபலங்கள் எல்லாம் தலைகீழாய் எல்லோ நிக்கீனம் :lol::D:icon_idea:.

No fools, of all that stand from virtue's pale shut out,

Like those who longing lurk their neighbour's gate without.

Parmi tous les pécheurs, il n’y a pas de plus sot que celui qui poussé par l’amour, se tient près de la porte du voisin.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்

தீமை புரிந்துதுஒழுகு வார். 143

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியை விரும்புதலாகிய தீமையைச் செய்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர் .

எனது கருத்து :

வீட்டிலை ஆக்களை அடுக்கிறதில வலுகவனமாய் இருக்கவேணும் :icon_mrgreen: . நம்பி விகற்பமில்லாமல் விட்டால் , முதலுக்கே நாசம் செய்வினம் சிலபேர் ^_^:o . அவை செத்த சவத்துக்குச் சமன் எண்டு ஐய்யன் இதில ஒரு பிடி பிடிக்கிறார் :lol:.

They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise.

Celui qui désire pécher avec la femme d’un homme qui est convaincu de son innocence, ne se distingue guère du cadavre.

எனைத்துணையர் ஆயினும் என்ஆம் தினைத்துணையும்

தேரான் பிறன்இல் புகல். 144

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறருடைய மனைவியிடம் செல்லுதல் எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் அவர்க்கு இழிவைத் தருவதின்றி வெறு என்னவாக முடியும் ?

எனது கருத்து :

தாங்கள் பிழை விடுறம் எண்டு தெரிஞ்சுகொண்டும் ^_^ அதைபற்றிக் கொஞ்சங்கூட யோசிக்காமல் அடுத்தவன்ரை மனிசியை பெண்டாள நினைக்கிறவை :( ,எந்தப்பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் அவைன்ரை மரியாதை சொறிநாயை விடக்கேவலமானது :lol::D:icon_idea:.

How great soe'er they be, what gain have they of life,

Who, not a whit reflecting, seek a neighbour's wife.

Celui qui se rend, sans la moindre réflexion, chez la femme du prochain se perd, de quelque haute reputation, qu’il jouisse.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி. 145

இச்செயல் எளிதெனக் கருதி பிறன் மனைவிபால் ஒழுக்கத்தை மீறிச் செல்கின்றவன் எப்போதும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான் .

எனது கருத்து :

இதைப் படிக்கேக்கை எனக்கு ராவணன்ரை ஞாபகம் தான் வருது :icon_mrgreen: .அந்தாள் தேவையில்லாமல் சீதையைத் தொடப்போய் :lol:, ராமன் ஐயா படை எடுத்து வந்து :o , கடைசீல ரவணனுக்கு அரச பதவியும் இல்லை . அந்தாள் செத்தும் இண்டைக்கும் சனம் அந்தாளின்ரை கதையத்தான் சிக்கெடுக்கிதுகள் :(:lol:.

'Mere triflel' saying thus, invades the home, so he ensures. A gain of guilt that deathless aye endures.

Celui qui fréquente le femme du prochain parce qu’il en trouve l’accès facile, se rend coupable d’une faute irrémissible.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்

இகவாவாம் இல்இறப்பான் கண். 146

பகை , பாவம் ,அச்சம் , பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடம் இருந்து என்றும் நீங்காமல் இருக்கும் .

எனது கருத்து :

திரும்பவும் ராவணனுகுத் தான் வரவேண்டி இருக்கு . சீதையின்ரை பிரச்சனையால பகை , பாவம் ,அச்சம் ,பழி எல்லாம் சேந்து தானே கலைச்சு கலைச்சு அடிச்சிது :icon_mrgreen::lol::D:icon_idea:.

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four.

La haine, le péché, la peur et la honte, tous les quatre sont inséparables du violateur du (foyer) conjugal.

Edited by கோமகன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்

பெண்மை நயவா தவன். 147

அறவழியில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் பிறன் மனைவியை விரும்பாதவன் ஆவான்

எனது கருத்து :

நல்ல விசையம் தான் , நேராக சொல்லாவிட்டாலும் மனதால் மற்றவன் மனைவியை நினைப்பவர்கள் தான் கூடவாயிருக்கினம்.

Who sees the wife, another's own, with no desiring eye

In sure domestic bliss he dwelleth ever virtuously.

Celui qui ne convoite pas la femme d’autrui est le père de famille vertueux.

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. 148

பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று நிறைந்த ஒழுக்கமும் ஆகும்

எனது கருத்து :

அப்பிடி ஒரு ஆளை நான் பாக்கேலை .இந்திரன் தேவலோகத்தின் தலைவன் . அவரே தன்ரை இடத்தை விட்டுறங்கி அகலிகையிட்டை , அதுவும் மாறுவேசதத்தில போனால் , மற்றாக்கள் இந்த விசையத்தில ..........

Manly excellence, that looks not on another's wife,

Is not virtue merely, 'tis full 'propriety' of life.

Avoir la virilité de ne jamais désirer la femme d’autrui c’est la vertu des Sages et leur parfaite moralité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்

பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார். 149

கடல் சூழ்ந்த இவ்வுலகில் நன்மைக்கு உரியவர் யார் ? பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்

எனது கருத்து :

மற்றவன்ரை மனிசியை மறந்தும் தொடாதவன் தான் இந்த உலகத்தில பேராய் புகழாய் இருக்கிறதுக்குத் தகுதியானவன் எண்டு ஐயன் சொன்னாலும் , இராவணன்ர பேரும் புகழும் என்ன குறைஞ்சா போச்சுது ??

Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride.

Qui mérite d’avoir tous les Biens de cette terre environnée de l’effroyable océan? C’est celui qui n’enlace pas les bras de la femme d’autrui.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று. 150

ஒருவன் அறநெறியில் நிற்காமல், அறமல்லாதவற்றையே செய்தாலும் செய்தாலும் பிறருக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

எனது கருத்து :

பாவம் செய்தாலும் ஒருத்தன்ரை மனிவியை விரும்பாமல் இருக்கிறது நல்லது எண்டு ஐயன் சொல்லுறார்.

Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not.

Qu’on commette même des péchés, au lieu de pratiquer la vertu ! Il est bon qu’on ne désire pas la femme d’autrui.

Edited by கோமகன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் -பொறைஉடைமை (The Possession of Patience, Forbearance , Supporter les injures ).

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151

தன்னைத் தோண்டுகின்றவர்களையும் விழாமல் தாங்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்து ஆதரித்தலே முதன்மையான அறமாகும்.

எனது கருத்து :

குற்றம் பார்க்கில் சுற்ரம் இல்லை எண்டு சொல்லுவினம் . தோட்டக்காறர் தோட்டம் செய்ய மண்ணைக் கிண்டி சாறுவினம். ஆனால், மண் அவையளை தடுக்கி விழாமல் தாங்கி அவைக்கு நல்ல பயிர் விளைச்சலையும் குடுக்குது .அதே மாதிரி ஆராவது உங்களை கதையால காயப்படுத்தினால் தாங்கித் தரியுங்கோ பேந்து உங்களைத் தான் சனம் தூக்கிப் பிடிக்கும். இது என்ரை அனுபவம் .

As earth bears up the men who delve into her breast,

To bear with scornful men of virtues is the best.

Ainsi que la terre supporte ceux qui la fouillent, supporter ceux qui vous offensent est la première des vertus.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று. 152

பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர்செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க . அதனை அப்போதே மறந்து விடல் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் ஒராளுக்கு ஏதாவது தெரிஞ்சு தெரியாமல் கெட்டதைச் செய்து போட்டால் அதையே வாழ்நாள் முழுக்க நெஞ்சிலை வைச்சு அறுக்கிற ஆக்களும் ஊர் உலகத்தில இருக்கினம் . இவையளைப்போலை இல்லாமல் உடனையே அந்தக் கெட்ட செயலை மறந்தியள் எண்டால் உங்களைச் சுத்தியே ஒரு கூட்டம் இருக்கும் .

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise .

Il est bien de supporter toujours l’injure, mieux de l’oublier.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இன்மையுள் இன்மை விருந்துஓரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை. 153

வறுமையுள் வறுமையாவது விருந்தினரைப் பேணாமல் நீங்குதல் , அதேபோல் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவரைப் பொறுத்தல் என்பதாகும் .

எனது கருத்து :

கஸ்ரத்துக்குள்ளையே (வறுமை ) செரியான கஸ்ரம் வீட்டுக்கு வாற சனத்தை வரவேற்று உபசரிக்காமல் இருக்கிறதுதான் . இதைப்போலைதான் உண்மையான நேர்மையான மன உறுதி என்னவெண்டால் ,ஆரும் மண்டைப் பிழையான ஆட்கள் உங்களுக்குக் கெட்ட வேலையள் செய்தால் பொறுத்துப் போங்கோ எண்டு நான் விளங்கிக்கொண்டாலும் , " குட்டக் குட்டக் குனியிறவனும் மடையன் , குனியக் குனியக் குட்டிறவனும் மடையன் " எண்ட சொலவடையும் மண்டையில ஒரு பக்கத்தில இடிக்கிது .

The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.

Refuser l’hospitalité est la misère des misères souffrir le mal fait par ignorance est la force des forces.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி ஒழுகப் படும். 154

ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையில் இருந்து நீங்காதிருத்தலை விரும்புவனாயின் அவன் பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும் .

எனது கருத்து :

நீங்கள் சில பேரைப் பாத்தியள் எண்டால் நல்லாய்ப் படிச்சு பேருக்குப்பின்னால ஐஞ்சாறு பட்டங்களைக் கொழுவி வைச்சிருப்பினம் . கதையளும் சாதாரணப்பட்ட ஆக்களாலை விளங்கேலாது . ஆனால் அவையை நல்ல வடிவாய் கூர்ந்து பாத்தால் அவைக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது . ஒருத்தர் அறிவாளியாய் மட்டும் இருந்தால் காணாது செரியான பொறுமைசாலியாயும் இருக்கவேணும் .

Seek'st thou honour never tarnished to retain;

So must thou patience, guarding evermore, maintain.

qui désire la perfection, garde et converse sa patience.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155

தங்களுக்குத் தீமை செய்தவரைத் தண்டிப்பவரை உலகம் மதிக்காது; தீமையைப் பொறுத்துக் கொண்டவரையே பொன்போல் மதித்துப் போற்றும் .

எனது கருத்து :

உங்களுக்கு ஆராவது கெட்வேலையள் செய்தால் பொறுத்துக் கொள்ளுங்கோ , சனம் உங்களைத் தங்கத்துக்குச் சமனாய் வைச்சுக் கொண்டாடும் . மாறி நீங்களும் ஏட்டிக்கப் போட்டியாய் கேம் கேக்க வெளிக்கிட்டியள் எண்டால் சனம் உங்களைச் சொறிநாயை விடக் கேவலமாய் மதிக்கும் . வசதி எப்பிடி ??????

Who wreak their wrath as worthless are despised;

Who patiently forbear as gold are prized.

On n’estime pas ceux qui vengent les injures mais on honore dans son cœur et sans cesse comme de l’or, ceux qui les supportent.

  • தொடங்கியவர்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ். 156

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்கு ஒரு நாளைய இன்பமும் , அத்தீமையைப் பொறுத்தவருக்கு உலகம் அழியும் அளவும் புகழும் உண்டாகும்

எனது கருத்து :

இந்தக் குறள் எனக்குப் பிடிச்சதில ஒண்டு . உங்களுக்குஆராவது கெட்ட வேலையள் செய்து அவையளைத் தண்டிச்சியள் எண்டால் நீங்கள் அண்டைக்கு மட்டுந்தான் அதை நினைச்சு சந்தோசமாய் இருப்பியள் . ஆனால் அவயளை நீங்கள் மன்னிச்சு விட்டியள் எண்டால் அதால உங்களுக்கு வாற புகழ் உலகம் அழியும் வரைக்கும் இருக்கும் . எது வேணும் ஒரு நாள் சந்தோசமோ அல்லது அழியாத புகழோ ??

Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.

La vengeance est le plaisir d’un jour, la gloire acquise par le pardon des offenses dure jusqu’à la fin du monde.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று. 157

தகுதியில்லாதவற்றைத் தனக்குச் செய்தால் அதனால் துன்பம் அடைந்து , அறம் அல்லாதவற்றை நாம் அவர்களுக்குச் செய்யக்கூடாது .

எனது கருத்து :

எந்தப் பெரிய பிழையை ஒருத்தர் உங்களுக்கு செய்தாலும் , அதே பிழையை நீங்களும் அவரக்குச் செய்யிறபொழுது அவர் எப்படி மனம் வருந்துவார் எண்டு நினைச்சு நடைமுறைக்கு ஒவ்வாத வேலையளை செய்யாமல் இருக்கிறது நல்லது .

Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep!

Il vaut mieux supporter une cruelle injure qui faire à l’offenseur le contraire de la vertu .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியால் வென்று விடல். 158

மனத்தில் செருக்கினால் வரம்புகடந்த தீச்செயல்களை ஒருவர் தம் பொறுமையாகிய தகுதியினால் வெல்லுதல் வேண்டும்.

எனது கருத்து :

தான் எண்ட ஆணவம் கூடி மண்டைக்கனத்தால எங்களுக்கு கெட்ட வேலையள் செய்யிறவையை எங்கடை பொறுமை என்ற பண்பாலை நீண்ட கால நோக்கத்தில வெல்லலாம் . அந்த நேரம் இந்தப் பொறுமை எண்டது ஒருக்காலும் தோல்வியாய் இருக்காது , அதுதான் உண்மையான வெற்றி . ஆனாலும் எங்கடை விடுதலை போராட்ட விசையத்தில இந்தக்குறள் வேலை செய்யேலை .

With overweening pride when men with injuries assail,

By thine own righteous dealing shalt thou mightily prevail.

Il faut vaincre par la digne patience, ceux qui offensent par orgueil.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159

தீய வழியில் ஒழுகுபவர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர் , துறவிகளைப் போலத் தூய குணமுடையவராவார் .

எனது கருத்து :

ஒருத்தர் தாற சுதந்திரத்தின்ரை எல்லையை மீறி குரங்குக்கதையள் கதைக்கிறவையின்ரை கதையளைப் பொறுத்துக் கொள்ளுறவை ஒரு பரிசுத்தமான துறவியளக்குச் சமனாக இருப்பினம் .

They who transgressors' evil words endure

With patience, are as stern ascetics pure.

Ceux qui supportent les paroles ‘méprisables de ceux qui marchent hors la voie du bien ont la pureté du cœur, comme ceux qui ont renoncé au monde.

Edited by கோமகன்

வாழ்த்துக்கள் கோமகன்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.