Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகளாக தமிழ்நாட்டிற்கு சென்றோர் மெதுவாகவே தாயகம் திரும்பகின்றனர் - ஐ.நா அகதிகள் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A%20recent%20returnee%20-Tamil%20Nadu.jpg

சிறு வயதில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்கள் அல்லது இந்திய முகாங்களில் பிறந்த பிள்ளைகளுக்கு நாடொன்றிற்கு திரும்பி வந்ததென்பது சவால் மிக்க விடயமாக உள்ளது.

இவ்வாறு IRIN இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

முன்னர் யுத்தம் இடம்பெற்ற சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கு மீளத் திரும்பி வந்த தங்கம்மாவிற்கு [பெயர் மாற்றப்பட்டுள்ளது] அது ஒன்றும் குறுகிய பயணமாக அமைந்துவிடவில்லை. "இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு இருபதாண்டுகளாக நான் காத்திருந்தேன்" என அவர் கூறுகிறார்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 முகாங்களில் ஒன்றில் அகதிகளாக பல ஆண்டுகளைக் கழித்த பின்னர் தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ள குறைந்த எண்ணிக்கையிலான சிறிலங்காத் தமிழர்களில் 65 வயதுடைய தங்கம்மாவும் ஒருவராவார்.

தனிநாடு கோரி 1983ம் ஆண்டிலிருந்து போராடி தற்போது தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்திலிருந்து தப்பித்து 100,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் துணைக் கண்டமான இந்தியாவிற்குத் தப்பிச்சென்றிருந்தனர்.

"எமக்கு வேறு தெரிவு இல்லாததால் நாம் அங்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த முகாங்களில் எமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிற்கு நாம் நன்றி கூறுகின்றோம்" என சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள யுத்தத்தால் அழிந்த பிறிதொரு நகரமான சாவகச்சேரிக்குத் திரும்பி வந்துள்ள பார்த்தசிங்கம் தெரிவித்துள்ளார் [பெயர் மாற்றப்பட்டுள்ளது].

இந்தியாவிலுள்ள பெரும்பாலான சிறிலங்கா அகதிகள் தாம் மீளவும் திரும்பிச் செல்வதற்கான சரியான நிலைமை தமது நாட்டில் இன்னமும் வரவில்லை எனக் கூறும் அதேவேளையில், மே 18,2009 ல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து, தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பிய 4500 இற்கும் மேற்பட்ட அகதிகளிற்கு ஐ.நா அகதிகள் அமைப்பான UNHCR உதவிபுரிந்துள்ளது.

இவ்வாறு திரும்பி வந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாவட்டமான திருகோணமலைக்கும் இதனைத் தொடர்ந்து மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய வடக்கில் அமைந்துள்ள மாவட்டங்களிற்கும் சென்றுள்ளனர்.

ஐ.நா அகதிகள் அமைப்பின் திட்டத்தின் கீழ், இவ்வாறு சிறிலங்காவிற்கு மீளத் திரும்பிய தமிழ் மக்களுக்கு அவர்களின் போக்குவரத்துச் செலவாக தலா 30 அமெரிக்கா டொலரையும், இதற்கு மேலாக சிறுவர் மற்றும் இளையோரிற்கு தலா 65, 88 டொலர்களையும் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தின் செயலகங்கள் இவ்வாறு மீளத் திரும்பி வந்தவர்களிற்கு அடிப்படை வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்கியுள்ளன.

இதற்கும் மேலாக, இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு மீளத் திரும்பி வந்துள்ள தமிழ் மக்கள் நிலக்கண்ணி வெடி அபாய விழிப்பூட்டல் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்பையும் ஐ.நா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. தற்போது பெரும்பாலான அகதிகள் விமானம் மூலமே சிறிலங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த ஒக்ரோபரில் UNHCR முதன் முதலில் தூத்துக்குடி – கொழும்பு கப்பல் சேவைக்கு ஊடாக அகதிகளைக் கொண்டு வந்தது. பின்னர் இச்சேவை தற்காலிகமாக கடந்த நவம்பர் இறுதிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

"UNHCR எதிர்பார்த்ததை விட இவ் அகதிகள் வருகை மிக மெதுவாகவே இடம்பெறுகின்றது. ஆனால் இந்தியா –சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிற்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நாட்டிற்குச் செல்வதற்கான ஆர்வத்தைத் தெரிவித்த இந்தியாவிலுள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகமானதாகும்" என கொழும்பிற்கான UNHCR இன் வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் குறிப்பிட்டுள்ளார்.

"எனது வீடு அழிந்துவிட்டது. நாம் முதலிலிருந்து எல்லாவற்றையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. ஆனால் நாம் மீண்டும் எமது சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கின்றோம் என்பதில் மகிழ்வடைகின்றோம்" என தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அகதிகள் முகாம் ஒன்றிலிருந்து சிறிலங்காவிற்கு மீளத் திரும்பிய 44 வயதுடைய சாருஜா சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்கள் அல்லது இந்திய முகாங்களில் பிறந்த பிள்ளைகளுக்கு நாடொன்றிற்கு திரும்பி வந்ததென்பது சவால் மிக்க விடயமாக உள்ளது.

"இந்திய வாழ்க்கை கடினமானது, ஆனால் நான் தற்போது அதை இழந்துள்ளேன்" என 24 வயதுடைய பெருமாள் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்துள்ளார். இவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பாகவும், தங்குமிடம், நீர் மற்றும் சுகாதார வசதிகள், தனது பிள்ளைகளின் கல்வி போன்றவை தொடர்பாக கவலைப்படுகின்றார், ஆனால் இவர் தனது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் சிறிலங்காவில் வாழ முடியும்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெயர்ந்த 280,000 மக்களின் தேவைகளையே அரசாங்கம் முதன்மைப்படுத்துகின்றது. இறுதிக் கட்டப் போரில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வரும் அகதிகள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்கள் பெருமளவில் ஒத்ததாகக் காணப்படுவதாக UNHCR தெரிவித்துள்ளது.

"பொதுவாக நாட்டிற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்து மீளவும் தமது நாட்டிற்குத் திரும்பியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் ஒத்ததாகும். இவ்விரு தரப்பினர்களுக்கும் வீடு, வாழ்வாதாரம், கல்வி, ஆவணங்கள் போன்றவற்றைப் பெற்றுத் தர வேண்டிய தேவையுள்ளது" என UNHCR இன் வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது உலகம் பூராவும் 65 நாடுகளில் 140,000 சிறிலங்கா அகதிகள் உள்ளதாக UNHCR தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள 112 முகாங்களில் 70,000 மக்களும், முகாங்களிற்கு வெளியே 30,000 மக்களும் வாழ்கின்றனர். எஞ்சியோர் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகளாக உள்ளனர்.

இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிற்கு சிறிலங்காவிலிருந்து நான்கு கட்டங்களாக அகதிகள் சென்றுள்ளனர்: முதலில் 1983ம் ஆண்டிலும், பின்னர் 1989 தொடக்கம் 1992 வரையிலும், மூன்றாவதாக 1995 தொடக்கம் 1999 வரையும், இறுதியில் 2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியிலும் ஆகும்.

http://www.puthinapp...?20120113105362

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது யார் ஸ்ரீ லங்காவில் அமைதி திரும்பியது எண்டது?

தலையில் ஊசி ஏற்றுவது, அமைச்சர்களே கடத்தல் தொழிலில் ஈடுபடுவது, கிரீஸ் ஜட்டி மனிதன் ஓடு பிரிப்பது என்று தமிழீழத்தில்

வசந்தம் நாறுது. இதுக்குள்ள திரும்பி யாராவது வருவானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.