Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு

Featured Replies

இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு

இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு தம் மக்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறது: சீமான்

இலங்கையில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்படும் புகையிரத திட்டங்களுக்காக ஆயிரகணக்கான கோடி ரூபாய் அளிக்கும் மத்திய அரசு, இந்த நாட்டில் இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களிற்காக வெறும் 500 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளதாக சீமான் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்க உடனடி நிவாரணமாக ரூ. 2000 கோடியை அளித்து, அதனை பொங்கல் திருநõளிற்கு முன்னர் மக்களை சென்றடையும் வகையில் அளித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 500 கோடி இடைக்கால நிவாரணம் மிகவும் குறைவானதாகும்.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்துவரும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பும், ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்கள் புயல், மழையால் சிதைவுக்குள்ளாகியுள்ளதும் அங்கு இயற்கை ஏற்படுத்திய பேரிடர் ஆக அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஒட்டுமொத்த இழப்பு 5,175 கோடி ரூபாய் என்றும் அதனை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக வெறும் ரூ. 500 கோடியை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

மத்திய குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் 50 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என அவ் அறிக்கை கூறுகிறது.

http://www.alaikal.com/news/?p=93803

Edited by akootha

உங்களின் மதிய அரச பயங்கரவாதிகள் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை, பணங்களை வாரி இறைப்பது தமிழினத்தை அழிப்பதற்கு!

உங்களின் மதிய அரச பயங்கரவாதிகள் தமிழர் பகுதிகள் சூறாவளியால் பாதிக்கப்பட்டால் சில்லறை உதவிகள் மட்டுமே செய்வர்!

இந்த நிலையை தெரியாமால் சீமான் இன்னும் கற்றுக்குடியாக உள்ளார்!

எதைச் செய்தால் தமிழினத்தை காப்பாற்ற முடியும் என்ற தெளிவு எப்போது கிடைக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.