Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்போம்! கிருஷ்ணாவுடனான சந்திப்பில் ரணில் உறுதி

Featured Replies

13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்போம்! கிருஷ்ணாவுடனான சந்திப்பில் ரணில் உறுதி

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது தொடர்பாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று செவ்வாய்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின் போது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை என்பன தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்பட்டன. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் அடிப்படையில் அதற்கும் மேலாகச் சென்று பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அது தொடர்பாக இந்திய அமைச்சர் பேச்சுக்களை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

13 வது திருத்தத்தின் அடிப்படையில் இனநெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க நேற்றைய பேச்சுக்களின் போது தெரியப்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

http://www.pongutham...ea-8048a48cdc34

Edited by akootha

  • தொடங்கியவர்

'13 வது திருத்தம் பற்றிய தமது நிலைப்பாட்டை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: ஐ.தே.க. வேண்டுகோள்

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருப்பதாக சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கின்றது.

13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த பின்னரும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.தே.க.வின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க, "அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள வெவ்வேறு கட்சிகள் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அதேவேளையில் அரசாங்கமும் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றது" எனவும் குறிப்பிட்டார்.

''அரசாங்கத்தின் இவ்வாறான முரண்பாடான அணுகுமுறை காரணமாக அனைத்துத் தரப்பினரும் குழப்பமடைந்த நிலையில் உள்ளார்கள். இந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றைய தினம் கொழும்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இந்தக் குழுப்பங்களை மேலும் அதிகரித்திருக்கின்றது.

அரசாங்கம் இவ்விடயத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை பாராளுமன்றத்தில் அறிவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது. உறுதியான அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் தனிப்பட்ட கருத்துக்கள் எந்தவிதமான பங்களிப்பையும் செய்வதாக அமையாது. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை உரிய முறையில் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்திருப்பதாகவே கருதவேண்டும்."

இவ்வாறு கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=5a1cd472-858c-49de-be2f-c648e3234159

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.