Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

HUMAN RIGHTS WATCH REPORT

Featured Replies

இலங்கை: நீதியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

ஊடகம், சிவில் சமூகம், சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறை

January 23, 2012


  • Sri%20Lanka%20WR%202012.jpg

    A member of the Free Media Association shouts slogans in front of an image of missing cartoonist and columnist Prageeth Eknaligoda during a protest in Colombo June 8, 2011. The protest was held to mark 500 days since the disappearance of Eknaligoda, a pro-opposition journalist who worked for Lanka-e-News, a private-owned independent website that was critical of the government. The placard reads "500 days since Prageeth's disappearance."
    © 2011 Reuters

Related Materials:

World Report 2012: Sri Lanka (Tamil Translation)

(நியூயார்க்) – கடந்த வருடத்தில் இலங்கை அரசு, நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் தவறியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)இன்று வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)2012’-ல் தெரிவித்துள்ளது. போரில்-நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை அகலத் திறந்திருந்த போது, அரசு, நாடு முழுவதிலும் அடிப்படை சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்தியது.

பாதுகாப்புப் படையினர் மூலமான கொடுமைப்படுத்துதல்களுக்கும், ஊடகத்தையும் சிவில் சமூகக் குழுக்களையும் மிரட்டியதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பின்மை குறித்த புகார்களை பெருமளவில் நிராகரிப்பதற்கும், நில அபகரிப்பிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (MahindaRajapaksa) அரசு பொறுப்பு கூறும் நிலையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) கூறியது. டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (Lessons Learnt and Reconciliation Commission)நீண்ட-காலம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) நடந்த மே 2009’ல் முடிந்த போரின் இரத்தக்களரியான கடைசி மாதங்களில் இராணுவம் நடந்துகொண்ட முறைக்கு எதிரான குற்றச்சாட்டினின்றும் அதை பெருமளவு விடுவித்தது.

“2011’ல், பொறுப்பேற்றல் என்பது வழக்கற்றுப்போன விடயமாகவே நீடித்தது, ஊடகங்கள் அதிக தணிக்கையை எதிர்கொண்டன, சண்டைக்கு வித்திட்ட நீண்ட கால குறைகள் எதுவும் அக்கறையுடன் கையாளப்படவில்லை,” என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் (Human Rights Watch) ஆசிய இயக்குனர் ப்ராட் ஆடம்ஸ் (Brad Adams) கூறினார். “சர்வாதிகாரத்துவம் அதிகரித்துக்கொண்டுள்ள அரசின் அநீதி, பலவீனமான ஆட்சி அதிகாரம், நில அபகரிப்பு, ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுதல் போன்றவற்றை ஸ்ரீலங்கர்கள் சந்திக்கின்றனர்.

சிலரால் ஊகிக்க முடிகின்ற வகையில் கடந்த வருடம் அரபு நாடுகளில் மக்களின் ஆதரவு பெற்ற எழுச்சிகள் உட்பட 90’க்கும் அதிகமான நாடுகளில் மனித உரிமைகளின் வளர்ச்சியை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)தனது வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)2012’–ல் மதிப்பிட்டுள்ளது. “அரபு எழுச்சியை (Arab Spring)” ஏற்க மறுக்கின்ற வன்முறை சக்திகள் தொடர்பாக, பிராந்தியத்தில் பிறப்புரிமைகளை மதிக்கின்ற ஜனநாயகங்களுக்கு உதவுவதில் சர்வதேச சமூகம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது என வோர்ல்ட் ரிபோர்ட் (World Report)–ல் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)கூறியுள்ளது.

வன்குற்றம் புரிபவர்களை பொறுப்பு கூறத் தவறும் அரசின் செயலானது வருடம் முழுதும் ஓர் மிக முக்கிய விடயமாக நீடித்தது. எல்டிடிஈ (LTTE) உடனான சண்டையின் போது நிகழ்த்திய கொடுமைகளுக்கு எவருமே தண்டிக்கப்படவில்லை. ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் (Ban Ki-moon) தலைமையில் நிறுவப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட, அரசுப் படைகள் மற்றும் எல்டிடிஈ (LTTE) இருவராலும் மேற்கொள்ளப்பட்ட மிகுதியான வன்முறைகள் குறித்த கண்டறிதல்களையும் போர்-விதிமீறல்களை விசாரிக்க நடுநிலையான சர்வதேச அமைப்பிற்கு அழைப்பு விடுத்ததையும் அரசு நிராகரித்தது. பதிலாய், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) சட்டப் பாராதீனம், சமாதானஞ்செய்தல், செயல்படு முறைகள் எனும் அனைத்தும் அதிக குறைபாடு கொண்டவையாய் இருந்தபோதிலும், போர்க்கால குற்றங்களை எடுத்துரைப்பதற்கு தனது ஆணைக்குழுவே சிறந்த அமைப்பு என வலியுறுத்தியது. எல்எல்ஆர்சி (LLRC), போர்-விதிமீறல்கள் தொடர்பாக அரசுப் படைகளை குற்றச்சாட்டிலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது, நீண்ட-கால பரிந்துரைகளுக்கு புதுவடிவம் கொடுத்தது, அத்துடன், பொறுப்பு கூறுதலை துரிதப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் யாவும், மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)உட்பட ஐ.நா. வல்லுனர் குழு, நீதிமன்ற நேரடி வழக்குடன் தொடர்பில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுதல் தொடர்பான ஐ.நா. சிறப்புத் தூதர், அரசுசாரா அமைப்புகள் போன்றோரின் கண்டறிதல்களுக்கு முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. அரசின் வெடிகுண்டுத் தாக்குதல்களின் விளைவாக படைத்துறை சாராதோர் இறந்துள்ளனர் எனும் குற்றச்சாட்டை அரசு விடாமல் மறுக்கின்ற வேளையில், அது உண்மையென எல்எல்ஆர்சி (LLRC) கண்டறிந்தபோதிலும், போர் விதிகளால் தடைசெய்யப்படுகின்ற கண்மூடித்தனமான தாக்குதல்கள் கூடுமான வரை பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் மருத்துவமனைகள் மீதும் தொடர்ந்து நிகழ்வதை அது சற்றும் கருத்தில் கொள்ளவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch) கூறியுள்ளது.

“அரசுப் படைகள் மூலமான வன்முறைகள் குறித்து விவரிக்கப்பட்ட ஐ.நா. வல்லுனர் குழுவின் அறிக்கைகள் யாவும் எல்எல்ஆர்சி (LLRC) ’யின் கண்டறிதல்களில் மர்மமான முறையில் தொலைந்துள்ளது,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “எல்எல்ஆர்சி (LLRC) ’யின் பயனுள்ள பரிந்துரைகளும் கூட, மற்ற ஸ்ரீலங்க ஆணைக்குழுக்களுடன் சேரும் நோக்கில் ஒரு ஓரமாய் கோப்பிலிட்டு புறக்கணித்து ஒதுக்கிவைக்கப்பட்டதாக தெரிகிறது.”

இலங்கையில் சுதந்திரமாய் கருத்து தெரிவிப்பது என்பது 2011’ல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் (Jaffna)-சார்ந்த செய்தித்தாளின் பதிப்பாசிரியர் ஜூலை மாத இறுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுவால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டார். ஜீலை மாதத்திலேயே, ரேடியோ நெதர்லாந்து (Radio Netherlands) பத்திரிக்கையாளர் குழு, போலீசாரால் துன்புறுத்தப்பட்டு பின்னர், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வெட்கட்கேடான அடையாளம் எனும் வகையில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்களால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். மேல்மட்ட ஊழல் பற்றி சண்டே லீடர் (Sunday Leader) பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரைகளுக்கு பதிலடியாக, 2009’ல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதன் வாயிலாக தனது சகோதரர் லசந்தா விக்ரமதுங்கா (Lasantha Wickrematunge)’வை இழந்தவரான, சண்டே லீடர் (Sunday Leader)-ன் நடத்துனரை ஜனாதிபதி ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தாக்குவதாக தனிப்பட்ட முறையில் மிரட்டினார். டிசம்பரில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) திட்டமிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு செல்லும் வழியில் லலித் குமார் வீரராஜ் (Lalith Kumar Weeraraj), குகன் முருகானந்தன் (KuganMuruganathan) எனும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் பலவந்தமாய் கடத்திச் செல்லப்பட்டு மாயமாய் மறைந்து போயினர். அரசியல் தலையீடுகளை தொடர்ந்தால் அகற்றப்படுவாய் எனச் சொல்லிய அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்பாக தனது மகனுக்கு வந்தன என்று வீரராஜின் (Weeraraj) தந்தை தெரிவித்தார்.

நவம்பர் மாதம், நாட்டின் ஊடகங்களுக்கான வழிமுறைகளையும் நடத்தை விதிமுறையையும் அரசு வெளியிடும் என அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் (Daily News) அறிவித்தது. செய்தி இணையதளங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுமாறு ஊடக அமைச்சு அழைப்பு விடுத்தது. நாட்டிற்குள் அரசை குற்றங்கண்ட குறைந்தது ஐந்து இணையதளங்கள் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டன.

“சுதந்திர ஊடகம் என்பது ஜனநாயக அரசின் அத்தியாவசிய கட்டமைப்பு,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “குறைகாணலுக்கு, அடக்குமுறைகளின் வாயிலாக பதிலளிப்பதன் மூலம், ராஜபக்ஷ (Rajapaksa) அரசு இதை அபாயத்துக்கு உள்ளாக்குகிறது.”

நல்லிணக்கம் அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கண்டுள்ளது என அரசு சொல்கிறது, ஆனால் அந்த வாதத்தை ஆதரிப்பதற்கு குறைவான ஆதாரமே உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch)கூறியது. அதிகாரப் பகிர்வு குறித்து அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (TNA) இடையிலான பேச்சுவார்த்தைகள் 2011’ன் பெரும்பான்மையான சமயங்களில் செயலிழந்து நின்றது. ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிகழும் தேர்தல்களை நோக்கிய பிரச்சாரங்களின் போது டிஎன்ஏ (TNA)’வின் உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களும், உலோகக் கம்பிகள், குறுந்தடிகள், கம்புகள் போன்றவற்றைக் கொண்டிருந்த படையினரால் தாக்கப்பட்டனர்.

2011’ல் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களிடத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன. மனித நேயமிக்கவர்கள், உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகங்கள், குடும்பத்தினர் போன்றோர் பெருமளவு அணுகுவதற்கு வடக்கிற்கான சுதந்திர இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வாழ்க்கை நிலைமையை இயல்பாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு 2011’ல் குறைவான அளவே மேற்கொண்டது. பாலினம்-சார்ந்த வன்செயல், அச்சுறுத்தல் மூலம் விபச்சாரம் செய்தல் போன்ற கவலைக்கிடமான சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு என்பது பிராந்தியத்தில் மோசமாகவே நீடிக்கிறது. “கிறீஸ் பூதங்கள்” (greasedevils) எனப்படுகின்ற முகந்தெரியாத ஆண் தாக்குதலாளர்களால் வருட மத்தியில் நிகழ்த்தப்பட்ட நிலைகுலையச் செய்யும் தாக்குதல்கள் யாவும், பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் தேவைகளை போதுமான அளவு எதிர்கொள்வதற்கான பாதுகாப்புப் படையினரின் திறமையிலுள்ள வெற்றிடத்தை வெளிக்காட்டியது. வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செயலானது, பெருமளவிலான தமிழ் மக்களிடையே உள்ள நம்பிக்கையின்மையின் தொடரும் ஆதாரமாக இருந்தது.

பல ஆண்டுகளாய் நீடிக்கின்ற சண்டைக்கு ஆதரவாயுள்ள மைய பிரச்சனைகளில் ஒன்றான நிலப் பிரச்சனை தொடர்ந்து தீர்க்கப்படாததாகவே இருந்து கொண்டுள்ளது. நில உரிமை மற்றும் கோருவதற்கான தகுதி, குறிப்பாக போரின் போது தப்பியோடியவர்களுக்கான தகுதியை எடுத்துரைப்பதற்கு திட்டமிட்ட சுற்றறிக்கை ஒன்றை ஏப்ரல் மாதத்தில் அமைச்சகம் ஏற்றுக்கொண்ட போதும், அதன் சட்டப்பிரிவுகளை அமலாக்குவதற்கு குறைவான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தேவைப்படுமாறு, தேசிய நில ஆணைக்குழுவை (National Land Commission) நிர்ணயிப்பதற்கு அரசு தவறிவிட்டது. வடக்கிலும் நாட்டின் பிற இடங்களிலும் இராணுவத்திற்கு எதிரான நில-அபகரிப்புப் புகார்கள் 2011’ல் அதிகரித்தன. சில வழக்குகளில், ஆக்கிரமிப்பாளர்களால் அல்லாமல் உரிமையாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டபோது மட்டுமே இராணுவம் இங்குமங்குமாய் சில நஷ்டஈட்டை வழங்கியது.

“தமிழ் மக்களின் மனக்குறைகளை எடுத்துரைப்பதற்கான முயற்சியை அரசு போதும் போதாமலும் மேற்கொண்டுள்ளது,” என ஆடம்ஸ் (Adams) கூறினார். “அரசு முக்கியமான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கு பதிலாக, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் யாவரும் மிரட்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.”

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக சிறைப்படுத்தப்பட்ட ஏறத்தாழ 300,000 குடியிழந்தவர்களில் பெரும்பாலானோரால், போருக்குப் பிறகு 2010’ன் துவக்கத்தில் வெளியேற முடிந்தது, ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் இன்னமும் தங்களின் வீடுகளுக்கோ சமுதாயங்களுக்கோ திரும்பிச் செல்ல முடியவில்லை. அவர்களின் பிறப்பிடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் இன்னமும் முடிக்கப்படாத காரணத்தால், ஏறத்தாழ 57,000 மக்கள் உபசரிப்பாளர் இல்லங்களிலும், தோராயமாக 53,000 பேர் இன்னமும் முகாம்களிலும் பகுதியாய் பிரிந்திருக்கின்றனர்.

அரசு, டிசம்பர் மாதத்தில் 1000தவிரஅனைவரையும் விடுவித்திருந்தது, ஆனால் போராளிகள் எனவும் ஆதரவாளர்கள் எனவும் குற்றம்சாட்டி ஏறத்தாழ 12,000 “சரணடைந்த” எல்டிடிஈ (LTTE)’யினரை, அவர்கள் யாவரும் 2012-மத்தியில் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறி குற்றச்சாட்டு தாக்கல் செய்யாமல் அல்லது வழக்கு விசாரணை மேற்கொள்ளாமல் காவலில் வைத்துள்ளது. இந்த முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு, பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு பயிற்றுவிக்கப்படுவார்கள் என அரசு கூறுகிறது. மற்ற 1,000 “தீவிர” எல்டிடிஈ (LTTE) உறுப்பினர்கள் பூசா (Boosa) முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அரசு கூறியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரின் நிலைமையும் அறியப்படாததாகவே உள்ளது. சிறைக்காவலில் மோசமாக நடத்தப்படுத்துவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவில்லை.

நெருக்கடிநிலைச் சட்டங்கள் (Emergency Regulations) யாவும் ஆகஸ்டு 31 அன்று காலாவதியாவதற்கு அனுமதிக்கப்பட்டது, ஆனால் பயங்கரவாத தடுப்புச்சட்டம் (PTA) 1979 மற்றும் மற்ற சட்டங்களும் விதிகளும், 18 மாதங்கள் வரையில் குற்றச்சாட்டை பதிவு செய்யாமல் தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதித்து, தவறான வகையில் தடுப்புக்காவலில் வைத்திருக்கும் ஆட்சிமுறையை விட்டுவைத்திருக்கிறது.

மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் யாவும் ஜனாதிபதி ராஜபக்ஷ’வின் (Rajapaksa)ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (United Freedom People’s Alliance party) பிடிப்பை மேலும் பலப்படுத்தியது. அது, போட்டியிட்ட 322 உள்ளூர் அமைப்புகளில் 270 இடங்களை வென்றது. முந்தைய வருடங்களைப் போலவே, அரசு மீதான தனது பிடிப்பை பலப்படுத்துவதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையே ஜனாதிபதி சார்ந்திருந்தார். ராஜபக்ஷ’வின் (Rajapaksa)பல்வேறு சகோதரர்கள், முக்கிய இலாக்காக்களுடன் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். எதிர்க் கட்சிகள் யாவும் திறமையுடன் ஓரங்கட்டப்பட்டன.

2010 ஜனாதிபதி தேர்தலிலின் போது ராஜபக்ஷ’விற்கு (Rajapaksa) சவால் விட்ட முன்னால் இராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka), ஜனவரி 2012’ல் முடிவடைந்த அவரது தற்போதைய தண்டனைக்குப் பிறகு கூடுதலாக மூன்று வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

“ராஜபக்ஷ (Rajapaksa) அரசு, அரசியல் ரீதியாக தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதால், நாட்டின் அடிப்படை உரிமைப் பாதுகாப்புகள் யாவும் படுமோசமாகியுள்ளன,” என ஆடம்ஸ் (Adams) கூறினார்.

நன்றி இணைப்புக்கு அர்ஜுன்.

யாரவது இந்த அமைப்புக்கு நன்றி கூற விரும்பின் :

to: adamsb@hrw.org

cc: rossj@hrw.org, neistaa@hrw.org, beckerj@hrw.org, singhp@hrw.org

Subject: Sri Lanka: No Progress on Justice

Dear Mr.Brad Adams,

Director, Asia, HRW.

LLRC report falls short of addressing the evidence of war crimes and crimes against humanity. And Tamils have no faith in LLRC as has many previous reports that were mere show. Only an independent investigation by International community can serve justice and pave foundation for real peace with dignity.

Please continue your noble work on Sri Lanka.

Thanks,

Xxxx Yyyyyyyyy

Edited by akootha

நன்றி இணைப்புக்கு அர்ஜுன்.

யாரவது இந்த அமைப்புக்கு நன்றி கூற விரும்பின் :

to: adamsb@hrw.org

cc: rossj@hrw.org, neistaa@hrw.org, beckerj@hrw.org, singhp@hrw.org

Subject: Sri Lanka: No Progress on Justice

Dear Mr.Brad Adams,

Director, Asia, HRW.

LLRC report falls short of addressing the evidence of war crimes and crimes against humanity. And Tamils have no faith in LLRC as has many previous reports that were mere show. Only an independent investigation by International community can serve justice and pave foundation for real peace with dignity.

Please continue your noble work on Sri Lanka.

Thanks,

Xxxx Yyyyyyyyy

mail sent akootha. THANKS FOR MAIL FORMAT,CONTINUE YOUR GOOD WORK.

நேற்று உலகத்தமிழர் பேரவையின் ஒரு உறுப்பினருடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்து. ஜெனீவாவில் சிங்களத்திற்கு ஆதரவை மேற்குலக நாடுகள் தராமல் உள்ள நிலையில் நாம் சிங்களத்திற்கு ஆதரவு தரும் ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைக்கும்

முக்கிய தேவை உள்ளதாக கூறினார்.

தென்னாபிரிக்க பயணம் ஊடாக பல நாட்டு வெளிவிவகார தொடர்புகள் கிடைத்துள்ள நிலையில் அவற்றை பயன்படுத்தி ஆதரவை கூட்ட தமக்கு நிதி உதவி தேவை எனக்கேட்கப்பட்டது.

மேலதிக தகவல் தேவைப்படின் ( பண உதவி செய்ய

http://globaltamilforum.org/gtf/ ) என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளலாம் :D

அதேவேளை தொடர்ந்து கடிதனகளை எழுதவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் :wub:

Edited by akootha

உலகத்தமிழர் பேரவை பற்றிய எனது குறிப்பு ஒன்றை இதில் பார்க்கலாம் :

கனடா: உலகத் தமிழர் பேரவையின் கூட்டம்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.