Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50வருடத்தண்டைனையும் இளவயதுச் சிறையும் கொல்கிற சிங்கராசா சொல்கிறான் :-தான்வாழ வேணுமெண்டு நினைக்கேல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கராசாவின் மீது விதிக்கப்பட்டுள்ள கொடிய தீர்ப்பினை உங்களுக்குத் தெரிந்து அறிந்த எல்லா இடங்களுக்கும் தெரிவியுங்கள் உறவுகளே :-

16.07.1993 அன்று தனது 19வது வயதில் இலங்கை இராணுவத்தினரால்; நல்லரட்ணம் சிங்கராசா அவர்கள் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு தற்போது 38வயது. கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனைகளோடும் காயங்களோடும் வாழ்கிற நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு இலங்கை நீதிமன்றம் 50வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

play-button.gif?w=28&h=30சிங்கராசாவின் சோகங்கள் சிங்கராசாவின் குரலில். சிங்கராசாவின் கதையை சிங்கராசாவின் குரலில் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

இவர் மீது 50 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளாக :-

1) பலாலி முகாம் தாக்குதலில் ஈடுபட்டமை.

2) யாழ் கோட்டை முகாம் தாக்குதலில்

ஈடுபட்டமை.

3) ஆனையிறவு முகாம் தாக்குதலில் ஈடுபட்டமை.

4) அருந்தலாவை முகாம் தாக்குதலில்

ஈடுபட்டமை.

5) இலங்கையரசுக்கு எதிராக நாசகார

வேலையில் ஈடுபட்டமை.

ஆகிய 5குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10வருடங்கள் முறையே தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்படி தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்த நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு 15 வருடத்தண்டனை மட்டும் கழிக்கப்பட்டு 35 வருட தண்டனையை உறுதிசெய்து மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பினையும் எதிர்த்து உச்சநீதி மன்றுக்கு மனுத்தாக்கல் செய்த நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு உச்சநீதிமன்றத்தினாலும் மேற்படி தீர்ப்பு சரியானதென பதில் வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பினை எதிர்த்து ஐக்கியநாடுகள் சபைக்கு சட்டத்தரணி திரு.கணேசலிங்கம் அவர்கள் மனுத்தாக்கல் செய்தார். நல்லரட்ணம் சிங்கராசாவின் மீதான தீர்ப்பினை ஆராய்ந்த ஐ.நா.சபை இலங்கை நீதிமன்றால் விதிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்பதனைச் சுட்டிக்காட்டி 3 நிபந்தனைகளை முன்வைத்தது.

நிபந்தனைகள் :-

1) உடன் விடுதலை

2) நட்ட ஈடு வழங்கல்

3) மறுவிசாரணை

மேற்படி 3 நிபந்தனைகளை முன்வைத்து 90 நாட்களிற்கிடையில் நல்லரட்ணம் சிங்கராசாவை விடுதலை செய்யக் கோரியது. ஆனால் ஐ.நா.சபையின் வேண்டுதலும் இலங்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டு இனிமேல் எந்த நீதிமன்றிலும் இவரது வழக்கை நடாத்த முடியாதென தீர்ப்பை எழுதிவிட்டது.

மகன் மீது விதிக்கப்பட்ட கடும் தண்டனையைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிங்கராசாவின் தந்தையார் நல்லரட்ணம் மாரடைப்பால் மரணமடைந்தார். சிங்கராசாவின் சகோதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 1997இல் வீரச்சாவடைந்துவிட்டதோடு தயார் நிரந்தர நோயாளியாகிவிட்டார். சிங்கராசாவின் சகோதரியின் கணவர் இலங்கை இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதோடு இவர்களது குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுவிட்டது.

உழைக்கக்கூடிய வயதில் இருக்கும் சிங்கராசாவும் கொடும் சிறைவாசத்தை அனுபவிக்க வீட்டுப் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாத சகோதரியால் தனது பிள்ளைகளின் கல்வியைக் கூட வழங்க முடியாத நிலமையில் படித்துக் கொண்டிருந்த மகன் கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார்.

தற்போது நுரையீரல் பாதிப்புற்ற நோயாளியான சிங்கராசாவின் தாயாரின் உடல்நிலமை மோசமடைந்துள்ள நிலைமையில் தனது தாயாரின் கடைசி காலங்களைக் கவனித்து உதவ முடியாத கையறு நிலமையில் உள்ள சிங்கராசா தனது தாயாருக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் உதவி வேண்டி நிற்கிற அதேவேளை தனது விடுதலைக்காக மனித நேயர்களையும் மனிதவுரிமை அமைப்புகளையும் உதவுமாறு வேண்டுகிறார்.

சிங்கராசாவின் விடுதலை மீதும் அவரது குடும்பத்தினரின் வாழ்வாதார உயர்விலும் உலகுவாழ் மனிதநேயர்கள் அனைவரும் முன்வந்து ஆதரவு வழங்குமாறு வேண்டுகிறோம்.

இதுபோன்று இலங்கைச் சிறைகளில் பயங்கரவாத அவசரகால தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 800இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைத்துல சமூகமும் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு பாடுபடுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.

Singarasa_Seite_1.jpg

Singarasa_Seite_2.jpg

Singarasa_Seite_3.jpg

இவர்களுக்கு உதவ விரும்புகிற மனிதநேயர்கள் கீழ்வரும் விபரங்களின் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள –முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது வாழ்வையும் இழந்த சிங்கராசாவுக்கு விடுதலை கிடைக்கவும் கடைசிகாலங்களை எண்ணிக் கொண்டிருக்கிற சிங்கராசாவின் தாயாருக்கான ஆதரவினையும் குடும்பத்திற்கு ஒரு நம்பிக்கையையும் வாழ்வாதார உயர்வையும் ஏற்படுத்திக் கொடுங்கள். உதவ விரும்புகிற உறவுகளுக்கு நேரடியாக உதவக்கூடிய ஒழுங்களைச் செய்து தரமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50வருட சிறைத்தண்டனை பெற்ற நல்லரட்ணம் சிங்கராசாவின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக சிறுகடையொன்றை அவரது குடும்பத்தினருக்கான தொழில் முயற்சிக்காக அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு சொந்தக்காணி வீடு எதுவுமில்லை.

சிங்கராசாவின் மருமகன் கூலிவேலை செய்தே குடும்பத்தை கவனிக்கிறார். எங்களுக்காக வாழ்ந்து தனது வாழ்வை இழந்து 50வருட தண்டனை பெற்றுள்ள சிங்கராசாவின் குடும்பத்திற்கு ஒரு சிறுகடையைக்கட்டி தொழிலை ஆரம்பிக்க இலங்கைரூபா இரண்டரை லட்சம் தேவைப்படுகிறது. இவ்வுதவியை சிங்கராவின் மீது கருணை காட்டி உதவுங்கள். பலர் சேர்ந்து இவ்வுதவியைச் செய்யலாம். உதவ விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க முடியும்.

ஏற்கனவே கள உறவு சுண்டல் சிங்கராவின் தாயாருக்கு மருத்துவ உதவிக்கான தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.