Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு

Featured Replies

ஆர்.எஸ்.எஸ். அறிக்கை குறித்து இந்து இளைஞர் பேரவை தலைவர் யோகேஸ்வரன் கவலை தெரிவிப்பு

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்தியா அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறும் செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், இலங்கை இந்து பேரவையின் உபதலைவரும், விஷ்வ ஹிந்து பரிசத்தின் அரசியல் பிரதிநிதியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசரமாக தமது அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமைப்பீடத்திற்கு வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்

கடந்த பல சகாப்தங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் ஏற்பட்ட பாரிய கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகங்கள், கடத்தல், கப்பம் பெறல், சர்வதேச மனிதாபிமான நடவடிக்கையை பேணாமை, மனித உரிமை மீறல், ஒரு இனத்தின் அடிப்படை உரிமை மீறப்பட்டமை என்பன தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை மீது அதிருப்தியுற்ற பல நாடுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய இவற்றுக்கான பொறுப்புக்கூறும் கடமைப்பாங்கில் இருந்து இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாலும், இலங்கை அரசாங்கம் அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அது அமுல்படுத்த தவறியமை காரணமாகவும் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது நடைபெறும் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன்வர வேண்டும் என எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வேளை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்.இந்து மத அமைப்பு தற்போது தீர்மானித்ததாக இலங்கை ஊடகங்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையில் யுத்த சூழலில் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட இந்துக்களுக்கு எதிரானதாக வெளியாகியுள்ள தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் எனவும் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையாக இந்துக்கள் எனவும், அருகில் உள்ள நாட்டில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதற்கு நியாயம் கோரி எடுக்கப்படும் ஒரு ஜெனிவா தீர்மானத்தை இந்துக்களின் தாய்நாட்டில் உருவான ஒரு முக்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஆதரித்து இவ் இந்து மக்களான தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இந்தியாவை இத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க வலியுறுத்த முன்வர வேண்டுமே தவிர இத்தீர்மானத்துக்கு எதிராக செயற்படுமாறு இந்தியாவை வலியுறுத்துவது இந்து தர்மத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமன் எனவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று இலங்கையில் கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் அமைப்புக்கள் இம்மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை எடுக்க ஜெனிவாவை கோரும் போது நீங்கள் முஸ்லிம் அமைப்புக்களும், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இத்தமிழ் மக்களுக்கு நியாயம் கோரி வரும் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தும் உலக முஸ்லிம் நாடுகள் சிலவற்றின் ஆதரவை திரட்டியும் வரும் நடவடிக்கைகளுக்கு அவர்களுடன் தாங்களும் ஒத்துழைத்து 82 வீதம் இந்துக்களைக் கொண்ட இந்திய நாட்டை பயன்படுத்தி இலங்கையில் பாதிக்கப்பட்ட இந்து கிறிஸ்தவ மக்களுக்கு கிடைக்கவுள்ள நியாயத்தை அழிக்க முற்படுவது இலங்கையில் உள்ள இந்துக்களையும் உலகில் வாழும் இந்துக்களையும் வேதனைப்படுத்துவதுடன் தங்கள் அமைப்பு மீது இந்துக்கள் இதுவரை காலமும் கொண்டிருந்த ஆன்மீக விசுவாசத்தை பாதிப்பதாக அமையும் எனவும் தெரிவிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டதுடன்,

தாங்கள் அவசரமாக ஊடகங்களின் குறிப்பிட்டவாறு இவ்வாறான முடிவை மேற்கொள்ள முயற்சித்திருந்தால் அதை உடன் நிறுத்திபாதிக்கப்பட்ட இந்து கிறிஸ்த மக்களுக்கு இலங்கையில் நியாயம் கிடைக்க இந்தியாவை இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஜெனிபாவில் கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றேன் என தமது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளை தமிழ் நாட்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு இவ்வாறான இலங்கை இந்துக்களுக்கு எதிராக இந்தியா ஜெனிபாவில் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என கோரும் தீர்மானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எடுக்கவில்லை தமக்குசெய்தி கிடைத்துள்ளாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

இவ்விடயமாக தமிழ்நாட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனை, ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டு பிரதிநிதிகள், தமிழ் நாட்டு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல இந்து அமைப்புக்களுடன் தொலைபேசி மூலம் விசாரித்ததன் பேரில் இவ் ஊடகங்களின் வெளியான அறிக்கை ஆர்.எஸ்.எஸ். தலைமைப்பீடத்தில் இருந்து வெளியான அறிக்கை இல்லை என்றும் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இவ்விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மிகவும் தீவிரமான நடவடிக்கையை தமிழ் நாடு, கேரளா, கஷ்மீர், அசாம், ஆந்திரா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இந்து அமைப்புக்களின் கவனத்துக்கும் கொண்டுவந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmqyDSdPdjv6.html

குறிப்பு:

இது பிராமண, வட இந்திய ஹிந்தி வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு.

தமிழர்களை அழிக்கும் நோக்குடன் ஈழ மண்ணிலும் தனது காலைப் பதிக்க கடந்த பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. அண்மைக் காலத்தில் இதற்கு ஆதரவாக யோகேஸ்வரனும் செயல்பட ஆரம்பித்துள்ளார். அவர் அதை நிறுத்துவது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிவெறி கொண்ட பிராமணரின் சாதித்துவேசத்தின் தேசமயமாக்கல் வேசம் தான் இந்த "இந்து அமைப்பு" என்ற பெயரீடு. மகிந்தாவின் கட்சி தமிழர்களை உள்வாங்குவது போலவே இதற்குள் உள்ளாவாங்கப்படும் மக்களின் நிலையும்!

  • கருத்துக்கள உறவுகள்

சாதிமத பேதம் இன்றி எமது தேசியத்தலைவர் எமது மண்ணில் மக்களுக்கான போராட்டம் ஒன்றை நடத்தினார் அதன்வழியில் வந்தவர்கள் நாம் இந்த ஆர் எஸ் எஸ் என்ற மத வெறிக்கட்சியின் சதிவலையில் விழுவதற்கு ஈழத்தமிழர்களாகிய நாம் தயாராகவில்லை .......

முள்ளிவாக்கலில் எமது இனம் அழிந்தபோது அதை தடுக்க என்ன முயற்சி செய்தீர்கள் ?

இந்தியக் காட்டுமிராண்டி அரசின் கூலிப்படையான 'ரோ'ப் பயங்கரவாதிகளுடன் நெருங்கி செயல்படும் அமைப்பாக ஆர். எஸ். எஸ். உள்ளது. மேலே ஆசான் குறிப்பிட்டது போல், இது பிராமண, வட இந்திய ஹிந்தி வெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு.

தாயகத்தில் சில காலமாக எச். எஸ். எஸ். (இந்து சுயம்சேவக் சங்கம்) என்ற பெயரில் பதிவு செய்து இயங்கி வருகின்றனர். வட இந்தியப் பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு சில தமிழகத் தமிழர் சிங்கள பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாயகத்தில் பலவருடங்களாக தமிழின விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மலையகத்தில் உள்ள சிலரையும், கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலரையும் மூளைச் சலவை செய்து ஈழத் தமிழரின் கலாச்சாராத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

வன்னிப் பேரழிவின் பின்னர் வன்னி மண்ணில் காலூன்ற இவர்கள் முயன்று வருகின்றனர்.

அண்மையில் வன்னிக்குச் சென்ற பொது, மலையாளபுரம் என்னும் கிராமத்தை இவர்கள் முழுமையாக தமது ஆக்கிரமிப்பில் கொண்டு வந்துள்ளதை அறிய முடிந்தது. நான் அறிந்த சிலரின் சிறுவர்கள் சிலர் எம்மை எமது பெயருடன் "ஜி" சேர்த்து அழைத்தனர். பதுளையில் இருந்து வரும் எச். எஸ். எஸ். உறுப்பினர்கள் இவர்களை பயிற்றுவிப்பதாகவும், பயிற்சிகளின் போது, ஹிந்தியை திணிப்பதையும் அறிய முடிந்தது. ஒன்று, இரண்டுக்குப் பதிலாக ஹிந்தியில் ஏக், தோ, தீன் ... என்று சொல்ல வேண்டும் என்று திணிக்கப்பட்டுள்ளது.

விஷ நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளோம்.

பெரியவர்களிடம் வெளிநாட்டிலுள்ள உறவினர் மூலம் பெருமளவு நிதி திரட்டி தமக்கு தரமுடியுமோ எனவும் இவர்கள் கேட்டுள்ளார்களாம். அவர்களின் "சேவா இண்டர்நஷனல்" (SEWA INTERNATIONAL) மூலம் ஈழத் தமிழரின் பணத்தையும் கொள்ளையடிப்பதில் தற்போது ஆர். எஸ். எஸ். ஈடுபட்டுள்ளது. கீழுள்ள இணையத்தைப் பார்த்தால் இவர்களின் சதித்திட்டங்கள் விளங்கும்.

http://www.stopfundinghate.org/sacw/appendixc.html

புலம் பெயர் தமிழர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.