Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரட்டலால் சாதிக்கலாம் என நினைக்காதே’ வடகொரியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை!

Featured Replies

கொரியாவின் இராணுவ சூனியப் பிரதேசத்தில் ஒபாமா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 மார்ச், 2012 - 11:06 ஜிஎம்டி

120325074945_barack_obama_304x171_ap.jpg

கொரிய எல்லைக் கண்காணிப்பு சாவடியில்

வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் (வடகொரிய-தென்கொரிய எல்லை) 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றுள்ளார்.

அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா, அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார்.

வடகொரியா எதிர்வரும் ஏப்ரலில் ஏவத் திட்டமிட்டுள்ள ராக்கெட் ஏவுகணைப் பரீட்சார்த்தமொன்றுக்கான முன்னோடு நடவடிக்கையே என்று அமெரிக்கா கூறிவருகிறது- ஆனால் தனது நாடு விண்வெளியில் செய்மதி ஒன்றைச் சேர்ப்பிக்கவே முயற்சிக்கிறது என்று வடகொரியா வாதிடுகிறது.

தென்கொரிய தலைநகர் சோல் இல் நடக்கும் அணுப்பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் திங்களன்று கலந்துகொள்ளவுள்ளார்.

50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த இரண்டு-நாள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அணு ஆயுதங்கள் குற்றக்கும்பல்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் சென்றடையாதவாறு தவிர்ப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

வடகொரியாவின் அணுத் திட்ட விவகாரம் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் இல்லை. அத்தோடு வடகொரியாவும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை.

ஆனால் ரஷ்யா மற்றும் சீனத் தலைவர்களுடன் நடத்தும் இருதரப்பு பேச்சுக்களின் போது, அதிபர் ஒபாமா வடகொரியா மற்றும் இரானின் அணுத்திட்டங்கள் தொடர்பில் விவாதிப்பார் என்று அமெரிக்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஒபாமா முதற்தடவையாக சென்றுள்ள, 4 கிலோமீட்டர் அகலமான இந்த இராணுவ சூனியப் பிரதேசம் உலகில் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எல்லைப் பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk...obmakorea.shtml

obama67-100x100.jpg

சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டிற்காக, தென் கொரியாவிற்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மிரட்டல்களால் எதையும் சாதிக்க முடியாது என, வடகொரியாவை எச்சரித்துள்ளார்.

தென் கொரியத் தலைநகர் சியோலில், நேற்றும் இன்றும் சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 53 நாடுகளின் தலைவர்கள் சியோலுக்குச் சென்றுள்ளனர். சியோல் சென்ற ஒபாமா, முன்னதாக, தென் கொரியா, வடகொரியா இடையிலான ராணுவம் புகக் கூடாத பகுதிக்கு சென்றார். அங்கு, அமெரிக்காவின் படைமுகாமில் உள்ள வீரர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, சியோலில், தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக்கைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அளித்த பேட்டியில், “வடகொரியாவிற்கு தனது கடமைகள் என்னவென்று தெரியும். அதை, சரியான நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்ற வேண்டும். மாறாக, மிரட்டல்கள் விடுப்பதன் மூலமோ, அண்டை நாட்டைத் தூண்டி விடுவதன் மூலமோ, எதையும் சாதிக்க முடியாது’ எனத் தெரிவித்தார். இதற்கிடையில், அடுத்த மாதம், 12 முதல் 16ம் தேதிக்குள் ஒருநாள், வடக்கு பியான்கன் மாகாணத்தில் உள்ள டோங்சங் ரி என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோளை ஏவுவதில், வடகொரியா தீர்மானமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட்டின் முக்கிய பாகம் ஒன்று, டோங்சங் ரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக, தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவும் கண்டனம்: பிரதமர் மன்மோகன் சிங், தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக் இருவரும் சந்தித்துப் பேசிய பின் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில்,”கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும். ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களை மீறுவதன் மூலமோ, இந்த மண்டலத்தில் பதட்டத்தை அதிகரிப்பதாலோ, எதையும் செய்து விட முடியாது’ எனத் தெரிவித்தனர்.

obama1.jpg

obama67.jpg

http://www.saritham.com/?p=55223

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.