Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நல்லூரில் யானையுடன் புகுந்த பெளத்தபிக்கு என்று ஒரு காணொளிவந்தது நல்லூர் கோவிலுக்கு பக்கத்தால் இந்திய ஐயப்பா கடவுள் தமிழ் பக்தர்கள் போகின்றார்கள் 🙄 முருகன் பக்தர்கள் கட்சி மாறிவிட்டர்களா
  3. அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் கலாச்சார நிகழ்வுகள்,இரவு நேரத்தை உற்சாகப்படுத்த பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இன்று இரவு வரை நீடிக்கவுள்ள இந்தத் திருவிழா, காங்கேசன்துறை கடற்கரைப் பகுதிக்கு ஒரு புத்துயிரைத் தந்துள்ளதுடன், ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். https://globaltamilnews.net/2025/225120/
  4. @புலவர் ஐயா, பதில்களை தரவேற்றும்போது பார்க்கின்றேன். எதற்கும் திரும்பவும் ஒருமுறை முழுவதுமாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். திருத்த விரும்பினால் தாராளமாகத் திருத்தலாம்
  5. டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்! கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளார். https://athavannews.com/2025/1457509
  6. தேர்தலில் வெற்றி பெறுவது ஆட்சியை பிடிப்பது சீமான் நோக்கம் இல்லை என்பது இப்போது விளங்கிவிட்டது.. பிஜேபி நிகழ்ச்சி நிரல் படி தமிழ்நாட்டு மக்களை குழப்பி அடித்தல் அந்த கடமையை மிகவும் மோசமாக சீமான் செய்து கொண்டு போகின்றர். சமீபத்தில் பிஜேபி ஆதரவு மேடை ஒன்றில் புர்க்காவால் மூடிய ஒரு பெண்ணை இவர் தான் வீர புலி தமிழிச்சி என்று பேசவைத்தார்.
  7. Today
  8. @கிருபன் 23வது கேள்வியின் பதில் விடுபட்டுள்ளது.ENG மாற்ற முடியுமா?
  9. இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு அரசாங்கம் அவரது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி குடுத்துள்ளதாம். உளறுவாயன், அதை இடுப்பில் செருகிக்கொண்டு, என்னோடு யாராவது எதிர்த்து வாக்குவாதம் செய்தால், அவர்களின் மண்டையில் துளை போட்டுவிடுவேன் என்று பகிரங்கமாக உளறிக்கொண்டு திரிகிறார் அதன் விளைவு தெரியாமல். ஆனால் அவரது தற்போதைய சொல் செயலைப்பார்க்கும் போது செய்தாலும் செய்யக்கூடிய ஆள். இவரது தற்போதைய நடைமுறையை வைத்துப்பார்க்கும்போது எப்போ எது பேசுவார், எது செய்வார் என்றும் சொல்ல முடியாது. துப்பாக்கி என்றவுடன் இவரோடும் பெரிய தலைகள் பேரம் பேசலாம், சில பணிகள் தேடி வரலாம், போதைப்பொருள் வியாபாரிகளின் தொடர்பும் கிட்டலாம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என திரும்பப்பெறவும் வாய்ப்புண்டு. "அத்தைக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்குமாம்." பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் இப்போ முழிக்கிறார், இன்னொருவர் எச்சரிக்கிறார் மக்களை.
  10. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் அர்ஜுனா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கருவி என்று. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான சீரியஸான உரையாடல்களை திசை திருப்பி, தனிநபர் தாக்குதல்கள், குழப்பங்கள்,மோதல்கள் போன்றவற்றின் மூலம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பதுதான் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும். அந்த வேலையை அவர் திறம்படச் செய்கிறார் என்றும்…. இது ஒரு சதிக் கோட்பாடு.இக்கட்டுரை எப்பொழுதும் சதி,சூழ்ச்சிக் கோட்பாடுகளை எடுத்த எடுப்பில் நம்புவதில்லை. மருத்துவர் அர்ஜுனா யாருடைய கருவி என்பதை விடவும் முக்கியமானது, ஆழமானது எதுவென்றால், அவர் உங்களைக் கோபப்படுத்தும்போது நீங்கள் எப்படிப் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கோபப்பட்டு அவரைப்போலவே தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதுதான்.நீங்கள் கோபப்படுவதன்மூலம் அவரை வெற்றி அடைய வைக்கிறீர்களா இல்லையா என்பதுதான். இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,அரசு நிர்வாகிகளுக்கு குறிப்பாக அர்ஜுனா அடிக்கடி நோண்டும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.அவர் உங்களிடமிருந்து கோபமான பதிலை,எதிர்வினையை எதிர்பார்க்கிறார் என்றால் நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் உங்களுடைய முதிர்ச்சி;பக்குவம். ஏன் அதுதான் உரிய உபாயமும் கூட. ஆனால் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைப் பார்த்தால் யாரும் நிதானமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் ஆளுநரும் அரச அதிபரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. அவர்கள் அரச ஊழியர்கள். அரசியல்வாதிகளின் சண்டைகளுக்குள் வாயை கொடுத்து பதவியை கெடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுநரும் அரச அதிபரும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, சில சமயங்களில் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு, சென் பௌத்த ஞானிகள் போல சாட்சிகளாக இருக்கிறார்கள். அப்படி நமது அரசியல்வாதிகளும் இருந்தால் என்ன?அரசாங்கம் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை குழப்புவதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை பின்னிருந்து ஊக்கிவிக்கின்றது என்று கூறுவோமாக இருந்தால், அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம்.அதை மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.அதை அரசாங்கத்துக்கு ஒரு முறைப்பாடாகத் தெரியப்படுத்தலாம். இங்கு பிரச்சினையாக இருப்பது அர்ச்சுனா மட்டுமல்ல.அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்.”இப்படிப்பட்ட குழப்பங்கள், கோளாறுகள் சிங்களப் பகுதிகளில் இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான் இவை காணப்படுகின்றன…” என்று கூறிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி ஒருவர்,அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குள் யாருடைய கமராவை அனுமதிப்பது என்ற முடிவை எடுப்பதன்மூலம் இந்தக் குழப்பங்களை உடனடியாகத் தடுக்கலாம் என்று. ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமல்ல,ஆளுநரும் அடிக்கடி அரச ஊழியர்களை,நிர்வாகிகளைக் குற்றம் சாட்டுகிறார்.சில சமயங்களில் எச்சரிக்கின்றார்.இதன் மூலம் “தமிழ் அரச நிர்வாகிகளில்தான் தவறு உண்டு, அரசாங்கத்தில் இல்லை”என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்படுகிறது. ஆளுநர் யார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.அவர் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்குக் கீழே வேலை செய்யும் நிர்வாகிகளை மாற்றலாம் தண்டிக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்வதை விடவும் அதிகமாக அரச நிர்வாகிகளைக் குறை கூறுகிறார் என்பதுதான் கடந்த பல மாத கால அவதானிப்பு ஆகும். இவ்வாறு தமிழ் அதிகாரிகளை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளோடு மோத விடுவது;தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொள்வது; தங்களுடைய அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் கூட்டங்களை தமிழ் மக்கள் நகைச்சுவை காட்சிகளாகப் பார்ப்பது….போன்றவற்றின் மூலம் தமிழ் அரசியலின் சீரியஸைக் குறைத்து அதை ஒரு பகிடியாக்கி விடுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் குழப்பப்படுவதற்கு அல்லது கோமாளிக் கூத்துகளாக மாற்றப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம் ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல அரசாங்கத்தின் சூதான ஒரு நிகழ்ச்சி நிரல். இரண்டாவது காரணம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர்களின் ஆளுமை குறைவு. மூன்றாவது காரணம்,அர்ஜுனாவும் உட்பட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைப் பேணாமை. நான்காவது காரணம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் கமராக்கள் அனுமதிக்கப்படுவது.அல்லது அங்கே நடக்கும் விவாதங்களை சில ஊடகவியலாளர்கள் வணிக நோக்கு நிலையில் இருந்து கையாள்வது. இதில் முதலாவதாகக் கூறப்படுவது ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு.ஆனாலும் தமிழர்களைத் தமிழர்களோடும் மோத விடுவதன்மூலம் தமிழ்த் தேசிய அரசியலை மதிப்பிறக்கம் செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கையாள முடியும் என்ற சந்தேகம் பலமாக உண்டு. அரசாங்கத்தின் சதி சூழ்ச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால்,அவ்வாறு அரசாங்கத்தால் கையாளப் படத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு என்பது தமிழ் அரசியல் வீழ்ச்சியைக் காட்டுவது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் இல்லை என்பதுதான் இங்கு முதலாவது காரணம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமை எதுவென்பதல்ல இங்கு பிரச்சனை.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை எதுவென்பதுதான் இங்கு முதல் பிரச்சினை. தமிழ்த் தேசிய அரசியல் அவ்வாறு சீரழிந்து போனதுக்கு எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை தோற்கடிப்பது வெளித் தரப்புகள் என்பதை விடவும், தமிழ்த் தரப்பே என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அழைத்துக் கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்களா என்ற பாரதூரமான கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஒரு தேசத்துக்குரிய கூட்டுணர்வோ சகோதரத்துவமோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? ஒருவர் மற்றவரை துரோகியாக்குவது; ஒருவர் மற்றவருக்கு “பார்” பட்டம் சுட்டுவது;ஒருவர் மற்றவரை வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர் என்று முத்திரை குத்துவது; ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் பிரிந்து நின்று ஒன்று மற்றதை அவதூறு செய்வது; யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு எழுந்தால், யாராவது சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முயற்சித்தால், அல்லது நல்லதை சொல்ல முயற்சித்தால்,அவரைச் சந்தேகிப்பது;அவரை அவதூறு செய்வது;வசை பாடுவது; சிறுமைப்படுத்துவது… இப்படியே தமிழ் மக்கள் ஒருவர் மற்றவரை நம்பாமல், ஒருவர் மற்றவரை சந்தேகித்து, ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கி, ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்திச் சீரழிய,தமிழ் சமூகத்தில் யாருமே கதாநாயகர்களாக எழ முடியாமல் போய்விட்டது. தாங்கள் வாக்களித்த தலைவர்களையே ஒரு சமூகம் சந்தேகிக்கின்றது; அவதூறு செய்கிறது என்று சொன்னால்,அது அந்த சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.தான் வாக்களித்த ஒரு தலைவரைப் பார்த்து ஒரு சமூகம் சிரிக்கிறது என்று சொன்னால் அந்தச் சமூகம் தன்னுணர்வை,கூருணர்வை இழந்து வருகிறது என்று பொருள்.இவ்வாறு தமிழர்கள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,யாருமே கதாநாயகர்களாக எழமுடியாத தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில்,தென்னிலங்கையிலிருந்து அனுர குமார திஸநாயக்க கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். அனுரவைப் போல நாயக வலம் வரும் தமிழ்த் தலைவர் யாராவது உண்டா? ஏன் இல்லாமல் போனது? எல்லாத் தோல்விகளுக்கும் எதிரியைப் பழி செல்வதும்,சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்வதும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கே பிழை விட்டோம்? நாங்கள் எங்கே தேசமாக இல்லாமல் போனோம்? என்பதனை தமிழ்த் தரப்பு தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். இது தமிழ் மக்கள் தங்களை தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிகளையும் திட்டிக் கொண்டிருப்பதனால் பிரச்சனை தீராது.உள்ளதில் பெரிய கட்சி கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட தோல்வி காட்டுகிறது.ஒரு தேசமாகத் திரட்டப்படாத மக்கள் சிதறிக் கொண்டே போகிறார்கள்.சிரிப்புக்கிடமாகி விட்டார்கள். அடுத்த ஆண்டாவது தமிழ் மக்கள் தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்காத ஒரு ஆண்டாக மலராதா? https://athavannews.com/2025/1457504
  11. யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்! யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1457475
  12. இவரு(னு) க்கு வகைதொகையின்றி துப்பாக்கிகளை அளித்து, தமிழர் தாயகத்தில் தங்களுக்கு வேண்டாத மக்கள், அரசியற்தலைவர்கள், ஊடகவியலார்கள், சமூக ஆர்வலர் என பல்வேறு கொலைகளை செய்வித்ததும் ஊக்குவித்ததும் முன்னைய ஜனாதிபதிகள் அனைவருமே. வடக்கில் வாள்வெட்டுக்குழு, போதைப்பொருள் குழு வழிகாட்டியும் இவரே(னே). எல்லாம் அந்த பெரிய மனிதர்களின் ஆசீர்வாத்தோடேயே நடந்தன. ஈழமுரசு ஆசிரியர் அற்புதராஜ் அவரது மைத்துனர் சுகிர்தன், நிமலராயன் தொடர்ந்துகொண்டே போகும். றக்பி வீரர் கொலையில் சி. சி. டி. கமரா காட்சி இந்த ஏவல் அடிமையின் காரியாலயத்தில் பதிந்திருந்தது. ஆனால் விசாரணைக்கு அதை கையளிக்க மறுத்து விட்டார்(ன்). காரணம் எஜமானர் விசுவாசம். எஜமானர் பதவியிழந்ததோடு மக்கள் சேவகன் மௌனமானார்(ன்). நான் கூட, பல தடவை நினைத்ததுண்டு, புலிகளின் பொறியில் தப்பிய மனிதன், ஏன் அப்படி ஒரு தவறு நடந்ததென்று, ஒருவேளை இந்தாளுக்கு இதைவிட கொடூரம் நடக்கலாமென தேறிக்கொண்டேன். இப்போ எஜமானர்களை மாட்டி விடுவாரா அல்லது இவர் துப்பாக்கி கொடுத்துவைத்தவர் மாண்டதுபோல் என்கவுண்டரில் போவாரோ தெரியவில்லை. முடிந்தளவு இவரிடமிருந்து பெறக்கூடிய சகல விடயங்களையும் விரைவாக பெற்றுவிட வேண்டும். இவர்(ன்) தமிழர் விரோதி துரோகி. இவர்(ன்) நடத்திய பல நரவேட்டைகளை கண்டு கலங்கியவர்களில் நானும் ஒரு நபர். விடை காணாத பல கொலைகளுக்கு, கொடூரங்களுக்கு, புதை குழிகளுக்கு, இராணுவ அடக்குமுறை காலத்தில் தீவக பாழுங்கிணறு கொலைகள், சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளுக்கு விடை கிடைக்கலாம் யாரறிவார்? இவர்(ன்) மரணம் பிழைத்துபோனதற்கு மிக முக்கிய காரணமிருக்கலாம். இவரோ(னோ)டு வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், பல இராணுவ புலநாய்கள் சிக்க வாய்ப்புண்டு.
  13. ஆட்ச்யை பிடிப்பதை விடுத்து த வெ க மற்றும் நா த க இதில் யார் அதிக தொகுதிகளை வெல்வார்கள்.
  14. இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன. "தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ். "நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன். இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம். நாகப் பாம்பை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,நாகப் பாம்பு நாகம் என்றவுடன் அது படமெடுத்து நிற்கும் என்பதைப் பலரும் நன்கு அறிந்திருப்போம். அச்சம் அல்லது கோபத்தின் வெளிப்பாடாக அவை அப்படி படமெடுத்து நிற்கும்போது, "முன்பகுதியில் இரண்டு பெரிய கரும்புள்ளிகள் இருக்கும். பின்பக்கத்தில் அதேபோன்ற கரும்புள்ளிகளுடன் வெந்நிறத்திலான 'V' போன்ற ஒரு வடிவமும் இருக்கும்," என்று சாம்சன் விவரித்தார். இது மட்டுமின்றி, "நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ். பெரும்பாலும், சாரைப் பாம்பினை நாகம் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. அப்படிக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அவற்றின் கண்களைப் பற்றி அறிந்துகொள்வது உதவும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன் "சாரைப் பாம்பின் கண்ணில் இரண்டு நிறங்கள் இருக்கும். கருவிழி கருப்பாகவும், சுற்றியுள்ள பகுதி தங்க நிறத்திலும் இருக்கும். ஆனால், நாகத்தின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும்." அதோடு, "நாகப் பாம்பின் தலை, கழுத்து என உடல் முழுக்க ஒரே தடிமனாக இருக்கும். ஆனால் சாரைப் பாம்புக்கு தலை பெரிதாகவும், கழுத்து சிறிதாகவும், உடல் தடிமனாகவும் இருக்கும். நிறமும் நாகத்தின் உடல் முழுக்க பழுப்பு நிறத்திலும், சாரை மஞ்சள், பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன. இதை வைத்து அவற்றை வேறுபடுத்திக் கொள்ள முடியும்," என்று விவரித்தார் சாம்சன். இதுபோக, ஓலைப் பாம்பு என்ற நஞ்சற்ற வகையும் நாகத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம், ஓலைப் பாம்பின் தலையிலும் வேல்கம்பு போன்ற வடிவம் இருக்கும் என்பதுதான். ஆனால், அந்த வடிவம் நாகத்தில் இருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் சாம்சன். கட்டு வரியன் பாம்பை அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கட்டு வரியன் கட்டு வரியனை பொறுத்தவரை, பொதுவாக பிற பாம்புகளின் நாக்கு கருமையாக இருக்கும்போது, இவற்றுக்கு மட்டும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ். பிற பாம்புகளைப் போலன்றி, இது சற்று தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்டது என்கிறார் சாம்சன். "கட்டு வரியனின் உடல் முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில், மினுமினுப்பாக இருக்கும்." இந்த மினுமினுப்பு இவற்றுக்கே தனித்துவமானது எனக் கூறிய மனோஜ், "அவற்றின் உடலில் '=' போல இரட்டை இரட்டையாக வெந்நிறத்தில் மெல்லிய கோடுகள் இணையாக இருக்கும். அதுவும் தலையில் இருந்து கழுத்து வரைக்கும் இருக்காது, கழுத்தில் தொடங்கி வால் வரைக்கும் இருக்கும்," என்று விளக்கினார். சில நேரங்களில் தோலுரிக்கும் கட்டத்தில் பாம்பு இருந்தால் இந்தக் கோடுகள் தெளிவாகத் தெரியாது எனக் கூறிய சாம்சன், அத்தகைய சூழ்நிலையில் "இவற்றின் அடர் கருப்பு நிறத்தை வைத்து அடையாளம் காணலாம்" என்றார். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,நஞ்சில்லாத வெள்ளிக்கோல் வரையன், அதன் உடலிலுள்ள பட்டையான கோடுகளின் காரணமாகச் சில நேரங்களில் கட்டு வரியன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக, வெள்ளிக்கோல் வரையன் போன்ற பாம்பினங்களுடன் மக்கள் இவற்றைக் குழப்பிக் கொள்வதாகக் கூறிய சாம்சன், "கட்டு வரியன் போலன்றி, இந்த நஞ்சில்லாத பாம்புகளுக்குத் தலையில் இருந்தே பட்டையான கோடுகள் தொடங்கிவிடும்" என்றார். அதேபோல, எண்ணெய்ப் பனையன் என்ற பாம்பு வகையுடனும் மக்கள் இதைக் குழப்பிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், எண்ணெய்ப் பனையன் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதும் உடலில் கோடுகள் இருப்பதும்தான். ஆனால், இந்த நஞ்சற்ற பாம்புக்கு கருப்பு நிறத்திலான கோடுகள்தான் இருக்கும். அதேபோல முனைவர் மனோஜின் கூற்றுப்படி, வெள்ளிக்கோல் வரையனின் உடல் உருண்டையாக இருக்கும். "ஆனால், கட்டு வரியனின் உடல் முக்கோண வடிவில், முதுகுப்பகுதி மேல்நோக்கிய வகையில் இருக்கும்." அடர்த்தியான கருநீல நிறத்தில், மினுமினுப்பாக இருப்பது இவற்றை அடையாளம் காண்பதற்கான தனித்துவமான பண்புகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கண்ணாடி விரியன் பொதுவாக விரியன் வகைப் பாம்புகள் என எடுத்துக்கொண்டால், அவற்றின் தலைப் பகுதி முக்கோண வடிவத்திலும் கழுத்து சிறியதாக, தடிமன் குறைவாகவும் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ். கண்ணாடி விரியனை பொறுத்தவரை, தலை முக்கோண வடிவில் காணப்படும் என்கிறார் மனோஜ். அதோடு, "அதன் உடல் முழுக்க முதுகின் மேற்புறத்தில் கருப்பு நிற எல்லைகளைக் கொண்ட பாதாம் பருப்பு போன்ற நீள்வட்ட வடிவிலான வட்டங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போல நீண்டிருக்கும்," என்று அவர் விவரித்தார். இந்த நீள்வட்டங்களின் சங்கிலித் தொடர் தலை முதல் வால் வரைக்கும் ஒரே சீராக இருக்கும் எனவும், அதுவே பக்கவாட்டில் அதேபோன்ற நீள்வட்டங்கள் அளவில் சிறிதாக இருக்கும் எனவும் விளக்கினார் சாம்சன் கிருபாகரன். படக்குறிப்பு,யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் மற்றுமொரு தனித்துவமான அம்சமாக முனைவர் மனோஜ், கண்ணாடி விரியனின் மூக்கு துவாரம் இருபுறமும் நன்கு பெரியதாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். முனைவர் மனோஜின் கூற்றுப்படி, அனைத்து கண்ணாடி விரியன்களுக்குமே இந்த வடிவம்தான் பொதுவாக இருக்கும் என்றாலும், மிக அரிதாக இவை எதுவுமே இல்லாமல் கோதுமை நிறத்தில் மட்டும் காணப்படுவதும் உண்டு. ஆனால், அத்தகைய கண்ணாடி விரியனை பார்ப்பது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார். இதைப் பார்த்துப் பல நேரங்களில் மலைப் பாம்பு என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தீங்கற்றது எனக் கருதி அணுகுவதால் பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறுகிறார் சாம்சன். "மலைப் பாம்பு போலவே, இதன் உடல் நன்கு தடிமனாக இருப்பதால் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்வது நடக்கிறது. ஆனால், மலைப்பாம்பின் உடலில் இருக்கும் வடிவங்கள் சீரற்றதாக இருக்கும்." என்றும் அவர் விவரித்தார். சுருட்டை விரியனை அடையாளம் காண்பது எப்படி? பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் (+) வடிவிலான குறியீடு இருக்கும் சுருட்டை விரியன் வறண்ட பகுதிகளில் வாழக்கூடியது. கிராமப்புறங்களில் இவற்றால் பாம்புக்கடி அவ்வப்போது நிகழ்கிறது. சுருட்டை விரியனின் தலை முதல் வால் வரைக்கும், "பக்கவாட்டில் இருபுறமும் ரம்பத்தின் கூர்முனை எப்படி வளைந்து வளைந்து இருக்குமோ அப்படி இருக்கும்" என்றார் மனோஜ். அதுவே அதன் முதுகின் மேற்புறம் பார்க்கையில் 'X' வடிவத்தில் கோடுகள் தென்படும் என்கிறார் சாம்சன். "அதுமட்டுமின்றி, சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் குறியீடு '+' போன்றதொரு வடிவம் இருக்கும். கண்களைப் பொருத்தவரை, சுருட்டை விரியனுக்கு பூனைக் கண்களைப் போல நீள்வட்ட வடிவில், ஒரு மெல்லிய கோடு போன்ற வடிவிலான கருவிழியுடன் காணப்படும்." படக்குறிப்பு,சாம்சன் கிருபாகரன், பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் பொதுவாக பாம்புகள் நேராக முன்னோக்கி ஊர்ந்து செல்பவை. ஆனால், சுருட்டை விரியனை பொருத்தவரை, பக்கவாட்டில் செல்லக்கூடியவை. அதாவது, நேராக ஊர்ந்து செல்லாமல், உடலை வளைத்து, பக்கவாட்டில் நகர்ந்து செல்பவை" என்று விவரித்தார் மனோஜ். தமிழ்நாட்டில் காணப்படும் பாம்புகளில் சுருட்டை விரியன் மட்டுமே இவ்வாறாக பக்கவாட்டில் செல்லக்கூடியது என்று விளக்கிய அவர், மிக மெதுவாக நகரும் நேரங்களில் மட்டும் அவை நேராகச் செல்லும் என்றும் கூறினார். இதேபோல, வறண்ட நிலப்பரப்புகளிலேயே வாழக்கூடிய பூனைக்கண் பாம்புடன் இதைக் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடப்பதாகக் கூறும் சாம்சன், சுருட்டை விரியன் அதிகபட்சம் ஒரு அடி வரைதான் வளரும் என்றும் உடல் சற்று தடிமனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,பூனைக்கண் பாம்பு ஆனால், பூனைக்கண் பாம்பைப் பொருத்தவரை, ஒன்றரை அடி வரைக்கும்கூட வளரும் எனவும் உடல் ஒல்லியாக நீளமாக இருக்கும் என்றும் இரு பாம்புகள் இடையிலான வேறுபாட்டை சாம்சன் விளக்கினார். சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறியீடு இருப்பதைப் போலவே, பூனைக்கண் பாம்பின் தலையில் 'Y' வடிவக் குறியீடு காணப்படும். பாம்புக்கடி காயத்தை வைத்து எந்த பாம்பு என்று அடையாளம் காண முடியுமா? ஒரு குறிப்பிட்ட அளவு வரைக்கும் பாம்புக்கடியால் ஏற்படும் காயத்தை வைத்து, கடித்தது நச்சுப் பாம்பாக இருக்கலாம் என்பதைக் கூற முடியும் என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என்கிறார் முனைவர் மனோஜ். அனைத்து நச்சுப் பாம்புகளுமே கடிக்கும்போது பதியும் நச்சுப் பற்களின் தடம் இரண்டாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் அவர். எனவே, "ஒரு பல் உடைந்திருக்கும் நேரத்தில் அதன் அருகிலேயே மூன்றாவதாகப் புதிய பல் முளைத்துக் கொண்டிருக்கலாம். அதனால் இரண்டு பல் தடங்களுக்குப் பதிலாக மூன்று பல் தடங்கள் பதிந்திருக்கலாம்." அவரது கூற்றுப்படி, பாம்புகளுக்கு ஆயுள் முழுவதுமே பல் மீண்டும் வளரக்கூடியது. இதனால், "அவை கடித்த இடத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு பற்கள் கூடப் பதிந்திருக்கலாம். இல்லையெனில் ஒரேயொரு பல் கூடப் பதியலாம். சில நேரங்களில் ஒரு கீறல் மட்டுமே இருக்கலாம். நஞ்சு உடலுக்குள் செல்வதற்கு அதுவே போதுமானது." அதோடு, "ஒரு சில பாம்புகளில், அதாவது, விரியன் வகைப் பாம்புகள் கடித்தால், கடித்த இடத்தில், வீக்கம், ரத்தக் கசிவு போன்ற வெளிப்புற அடையாளங்களே நன்கு தெரியும். அவற்றின் மூலம் கடித்தது நச்சுப் பாம்புதான் என்பதைக் கண்டறிய முடியும்" என்று விளக்கினார் மனோஜ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8dyv9g1y78o
  15. 2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ... Dec 28, 2025 - 12:07 PM 2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது. அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள், ஜனவரி - 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம் ஜனவரி - 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை பெப்ரவரி - 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம் பெப்ரவரி - 04 புதன்கிழமை – சுதந்திர தினம் பெப்ரவரி - 15 ஞாயிற்றுக்கிழமை –  மகா சிவராத்திரி விரதம் மார்ச் - 02 திங்கட்கிழமை –  மெதின் முழுநோன்மதி தினம் மார்ச் - 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை ஏப்ரல் - 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம் ஏப்ரல் - 03 வெள்ளிக்கிழமை –  பெரிய வெள்ளி தினம் ஏப்ரல் - 13 திங்கட்கிழமை –  சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் ஏப்ரல் - 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு மே - 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம் மே - 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம் மே - 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள் மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம் ஜூன் - 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம் ஜூலை - 29 புதன்கிழமை –  எசல முழுநோன்மதி தினம் ஒகஸ்ட் - 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்) ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம் செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம் ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம் நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம் டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம் டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை https://adaderanatamil.lk/news/cmjpcwz3m0379o29nx5mkv94r
  16. இந்தியாவிடம் இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி; தொடரையும் பறிகொடுத்தது Published By: Vishnu 27 Dec, 2025 | 12:20 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக திருவனந்தபுரம், கிறீன்ஃபீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் மேலும் 2 போட்டிகள் மீதமிருக்க 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரையும் இலங்கை பறிகொடுத்தது. ரேனுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், ஷபாலி வர்மாவின் அதிரடி அரைச் சதம் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்களுடன் இலங்கை மகளிர் அணி களம் இறங்கிய போதிலும் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். விஷ்மி குணரட்ன, காவியா காவிந்தி, ஷஷினி கிம்ஹானி ஆகியோருக்குப் பதிலாக நிமாஷா மீப்பகே, இமேஷா துலானி, மல்ஷா ஸ்னேஹானி ஆகியோர் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் மீண்டும் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அணித் தலைவி சமரி அத்தபத்து (3), ஆரம்ப வீராங்கனையாக உயர்த்தப்பட்ட ஹசினி பேரேரா (25), ஹர்ஷித்தா சமரவிக்ரம (2), நிலக்ஷிக்கா சில்வா (4) ஆகிய நால்வரும் ஆட்டம் இழக்க 10ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் இமேஷா துலானி, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை பெரு வீழ்ச்சியிலிருந்து ஓரளவு மீட்டனர். கவிஷா டில்ஹாரி 20 ஓட்டங்களுடனும் இமேஷா துலானி 27 ஓட்டங்களுடனும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். கௌஷினி நுதியங்கனா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரேணுகா சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அணியில் மீண்டும் இணைந்த தீப்தி ஷர்மா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 113 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 13.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது. ஸ்ம்ரித்தி மந்தனா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ஆனால், ஷபாலி வர்மாவுடன் 27 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தார். தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் ஜெமிமாவின் பங்களிப்பு வெறும் 9 ஓட்டங்களாகும். அதன் பின்னர் ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்த ஷபாலி வர்மா இந்தியாவின் வெற்றியை இலகு படுத்தினார். 42 பந்துகளை எதிர்கொண்ட ஷபாலி வர்மா 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 79 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவிச்சில் கவிஷா டில்ஹாரி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகி: ரேணுகா சிங் https://www.virakesari.lk/article/234505
  17. 3 இந்திய மீனவர்கள் கைது Published By: Digital Desk 1 28 Dec, 2025 | 11:53 AM சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234570
  18. முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது Dec 27, 2025 - 09:51 PM 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2,105 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாவும், ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாவும் வருமானமாக பெறப்பட்டுள்ளது. 2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதியின் ஊடாக 54.6 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டிருந்தது. இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த அரச வருமானம் 35.5% இனால் அதிகரித்து 4,945.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 3,650.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjoica7w036vo29ndf1gzlsj
  19. எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை 27 Dec, 2025 | 05:48 PM தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் " மக்களின் காணி மக்களுக்கே " என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி, அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார். அதனை அடுத்து, காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன், காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட, தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234548
  20. பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு Dec 27, 2025 - 10:13 PM பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது இன்று (27) மாலை 4 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmjoj4sq1036wo29np6kg9fw5
  21. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 75 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 11: இந்த அத்தியாயம் தேவநம்பிய தீசனின் பட்டாபிஷேகம் பற்றியது. தேவநம்பிய (கடவுள்களின் பிரியமானவர்) என்பது மன்னர் அசோகரும் பயன்படுத்திய அதே முன்னொட்டு. அசோகரின் கல்வெட்டுகளைப் வாசித்துப் புரிந்துகொண்ட ஜேம்ஸ் பிரின்செப் [James Princep], இலங்கை அரசு ஊழியரான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843) உடனான கடிதப் பரிமாற்றத்தின் காரணமாக அந்தக் கல்வெட்டுகள், தேவநம்பிய தீசனால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆரம்பத்தில் உருவாக்கினார். மன்னர் அசோகரும் தீசனும் நிலம் மற்றும் கடல் வழிகளில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் வாழ்ந்தவர்கள். அசோகரும் தீசனும் மிகவும் நல்ல நண்பர்கள் என்று மகாவம்சம் கூறுகிறது. இது எழுதப்பட்டது ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு ஆகும். அதாவது தீசனின் காலத்தில் இருந்து 900 அல்லது 800 ஆண்டுகளுக்குப் பின்பு ஆகும். தீசன் மற்றும் புகழ்பெற்ற பௌத்த பேரரசர் அசோகர் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்காவிட்டாலும், அவர்களை நண்பர்களாக காட்டுவதற்கான ஒரு விரிவான முயற்சி இதுவாக இருக்கும். அதாவது, மிகவும் பிரபலமான பௌத்த பேரரசர் அசோகரின் மகிமையைப் பகிர்ந்து கொள்வதும், அவரது மகிமையில் மூழ்குவதும் இதன் நோக்கமாக மகிந்த தேரருக்கு இருக்கலாம்? சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஒருவர் தொடர்பு கொள்ள எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! பருவக்காற்றுகளைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களுக்கு ஒரு சுற்றுப் பயணம் செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கும். ஒரு பருவக்காற்றுடன் பயணம் செய்து, அடுத்த எதிர் பருவக்காற்றுடன் திரும்பிச் செல்ல காத்திருக்கும் சுமார் ஆறு மாத காலத்தில் பொருட்களைச் சேகரிக்கவும் வேண்டி இருந்தது. உதாரணமாக, பாடலிபுத்திரத்தில் [Pataliputra] உள்ள அசோகரிடமிருந்து வந்த செய்தி, முதலில் கிழக்குக் கரையை அடைந்து, தாம்ரலிப்தா [Tamralipti] துறைமுகத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர், வடகிழக்கு பருவமழையுடன் இலங்கைக்கு பயணிக்க வேண்டும். தங்கி, திரும்பும் பயணத்திற்கான பொருட்களை சேகரித்து, பின்னர் தென்மேற்கு பருவமழையுடன் புறப்பட வேண்டும். பண்டைய காலங்களில், வணிகமும் வர்த்தகமும் இன்று இருப்பது போல் பரவலாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்டதாகவோ இல்லை, எனவே கப்பல்கள் பயணத்திற்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஒரு தகவல் தொடர்புக்கு எனவே ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். மறைந்த திரு. எஸ்.யு. குணசேகரம் தனது "The Vijayan Legend and the Aryan Myth" என்ற கட்டுரையில், அசோகர் மற்றும் தீசன் ஆகிய இருவரும் வரலாறு அறிந்த ஆரம்பகால பேனா நண்பர்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார் என்பதைக் கவனிக்க. மேலே கூறிய பலவற்றை மிக தெளிவாக விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. தேவநம்பிய தீசன் முடிசூட்டப்பட்டபோது பல அதிசயங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது; அவருக்கு நம்பமுடியாத பல செல்வங்கள் கிடைத்தன. அத்தியாயம் XI / தேவநம்பிய தீசனின் முடிசூட்டு விழாவில், 8 முதல் 10 வரை: "பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இலங்கைத் தீவு முழுவதும் பூமிக்குள் ஆழப் புதைந்து கிடந்த புதையல்களும், மணிகளும் தரைமட்டத்துக்குத் தாமாக வந்தன. இலங்கைக்கருகே மூழ்கிப்போன கப்பல்களில் இருந்த அணிகலன்கள் பலவும், இயற்கையாகக் கடலிலுள்ள செல்வங்களும் கரையில் வந்து ஒதுங்கின." என்று கூறுகிறது. அவர் அவற்றை தனது நண்பர் அசோகருக்கு அனுப்பினார், அசோகர் அவற்றைப் பிரதிபலனாகப் பெற்று, புத்தரிடம் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு தீசனிடம் கேட்டுக் கொண்டார். அசோகர் அந்தப் பொருட்களைப் பெற்றபோது 'இதோ, எனக்கு இத்தகைய விலைமதிப்பற்ற பொருட்கள் எதுவும் இங்கு இல்லை' என்று நினைத்தார். அசோகர், தீசனின் முதல் முடிசூட்டு விழாவிற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது முடிசூட்டு விழாவைச் செய்யும்படி தீசனைக் கோரினார். இதில் வேடிக்கை என்னவென்றால், தீசன் அனுப்பிய தூதரகள் அங்கு ஐந்து மாதங்கள் தங்கியிருந்து, பின்னர் வெசாக்க மாதத்தில் (மே) திரும்பி வந்து பன்னிரண்டு நாட்களில் தமது வீட்டிற்குச் சென்றனர். மே மாதத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசாது, ஆனால் அவை பன்னிரண்டு நாட்களில் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தனர் ?? பாவம் மகிந்த தேரர், ஏனென்றால் அவ்வளவுதான் அவரின் ஞானம்! இதுவும், கடல் பயணம் பற்றிய விரிவான விளக்கமும், சூழலும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அசோகருக்கும் தீசனுக்கும் இடையிலான நட்பு, கவிஞர் பிசிராந்தையார் மற்றும் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் இடையே தமிழ்நாட்டில் நிலவிய நட்பின் கதையின் நகலாகும் என்பது வெள்ளிடைமலை. “கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும் அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று [புறநானுறு 216, ” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன என்கிறது இந்த சங்கப்பாடல்] இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற மண்ணும் அதாவது செம்மண்ணும் அசோகனால் இலங்கைக்கு கொண்டுபோக கொடுக்கப்பட்டது. இருப்பினும், தம்பபன்னி என்ற பெயர் சிவப்பு நிற மண்ணின் காரணமாக வந்தது என்பதையும் அது இலங்கையின் உட்புறத்தில் ஏராளமாகக் அல்லது தாராளமாகக் இருக்கிறது என்பதையும், அதனால் இது ஒன்றும் விசேடமான பொருள் இல்லை, காவிக்கொண்டு போவதற்கு என்பதை தீசனின் ஆட்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை விசேடமான பொருளாக இலங்கைக்கு கொண்டு போனார்கள். இது எதைக் காட்டுகிறது அல்லது சொல்லுகிறது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். மேலும் கங்கையின் நீர், வலம்புரிச் சங்கு, பருவம் கொழிக்கும் எழில் மங்கை, பொற் கலசங்கள், விலையுயர்ந்த மெத்தை, உயர்ந்த மூலிகைகள், ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி, மற்றும் ஒரு அரசனுடைய கோலாகலமான பட்டாபிஷேக வைபவத்துக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் தன்னுடைய நண்பனுக்கு பரிசுப் பொருள்களாகத் தூதுவர்களின் மூலம் அசோகன் அனுப்பினான் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றைக் கவனியுங்கள் 'ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி' யை இலங்கைக்கு கொண்டு போக அந்தக் காலத்து கப்பல்கள் எத்தனை தேவைப்பட்டு இருக்கும்? கொஞ்சம் யோசியுங்கள்?? அது மட்டும் அல்ல, இந்த அரிசி கொண்டுவரப்பட்டது பறவைகளால் என்ற வரி, ஒளவையார், அகநானூறு: 303: 8-14 பாடலை உங்களுக்கு நினைவூட்டிட வில்லையா? “புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10 நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,” Part: 75 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 11: This chapter is about the consecrating of Devanampiyatissa. Devanampiya (Beloved of the Gods) is the same prefix, the King Asoka also used. James Princep who deciphered the inscriptions of Asoka initially toyed with the idea that Devanampiyatissa of Lanka must have caused those inscriptions to be written because of his correspondence with George Turnour, a Ceylon Civil Servant. The King Asoka and Tissa lived more than two thousand kilometres apart along the land and sea routes. The Mahavamsa claims that Asoka and Tissa were very good friends. This is an elaborate ploy to make Tissa and the glorious Buddhist Emperor Asoka to be friends even though both never met each other. The intention is to share the glory of the most famous Buddhist Emperor Asoka, and to bask in his glory. Imagine the time it would have taken for one to communicate over a distance of more than two thousand kilometres about two thousand four hundred years ago! It would have taken one year to make a round trip for merchant ships using the monsoonal winds. Travel with one monsoonal wind and stay for about six months collecting stuffs to go back with the next opposite monsoonal wind. A message from Asoka in Pataliputra first need to reach the eastern shore, say to the seaport Tamralipti. Then travel with the, say, North-East Monsoon to Lanka. Stay and collect stuffs for the return journey, and then depart with the South-West Monsoon. There would not have been much commerce in those days to have readily available ships to travel. It would take more than one year for one communication. The alleged friendship between Asoka and Tissa would be analysed later. Late Mr. S. U. Gunasegaram in his article “The Vijayan Legend and the Aryan Myth” quipped that these two, Asoka and Tissa, as the earliest pen friends known to history. It is alleged that many wonders happened when Devanampiyatissa was crowned; many unbelievable wealth came available to him. He sent those to his friend Asoka, and Asoka reciprocated in kinds and requested Tissa to take refuge in the Buddha. Asoka thought when he received those goods: ‘Here, I have no such precious things’. Asoka also requested Tissa to have a second coronation, after six months of his first coronation. The embassy sent by Tissa stayed for five months before returning in the month of Vesakha (May) and reached home in twelve days. North East monsoonal wind is not active in the month of May, but they reached home in twelve days. They were given red coloured earth also. However, they should have known that name Tambapanni was because of the red coloured earth and it must have been available in plenty in the interior of Lanka. The king Asoka sent also a maiden in the flower of her youth, 11 – 31. What happened to her when she was handed over to Tissa? The poor girl is left in the lurch! The alleged friendship between Asoka and Tissa is a copy from the story of friendship prevailed in Tamil Nadu between the poet Pisiranthaiyar and the Chola king Koperumcholan. The Chola king Koperumcholan is also an accomplished poet. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 76 தொடரும் / Will follow துளி/DROP: 1960 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75] https://www.facebook.com/groups/978753388866632/posts/33027448740237014/?
  22. சாத்தான், இலங்கையிலேயே…. போர் நடந்த காலத்திலும் சரி, அதற்குப் பின் வந்த காலங்களிலும்… அதிக ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சராக இருந்தவர் ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் என நினைக்கின்றேன். 1) சந்திரிக்கா. 2) மகிந்த. 3) மகிந்த. (இரண்டாம் முறை) 4) மைத்திரி. 5) கோத்தா. 6) ரணில். மேலே உள்ள தரவுகள் பிழை என்றால்…. சுட்டிக் காட்டவும்.
  23. இராணுவ ஒட்டுக்குழு தாடியன், ஜனநாயக நீரோட்டத்தில் நீந்தமுன் பற்றைக்குள் போட்டுவிடு நீந்தப்போக, பாதாள உலக படை அதை களவாடி கொண்டு ஓடிவிட்டது. அதற்காக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தவரை கைது செய்வது எந்த வகையில் நிஞாயம்? இதன் பின்னால் விசாரணையில் இவர் செய்த கொலைகள், கொள்ளைகள், மண்கடத்தல், அதிகார துஸ்பிரயோகம் வெளிவந்தால் அதற்கு இந்த இடிஅமீனே விளக்கம் கொடுக்க வேண்டும். அப்போ.. இவனால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் இவன் நினைவில் வந்து மறைவார்கள், கெஞ்சுவான், அலறுவான். எப்படியெல்லாம் இவனை பார்த்து கும்பிட்டு உயிர் பிச்சை கேட்டிருப்பார்கள், உறவினர்கள் கதறியிருப்பார்கள். கதறக்கதற கலைத்து கலைத்து சுட்டு வீதியில் எறிந்து விட்டு இராணுவ காவலரணில் பதுங்கியிருந்து நோட்டம் வேறு பார்த்தது கொலைக்கும்பல். அன்று இவரோடு இணைந்திருந்தவர்களே இவரை காட்டிக்கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். இராணுவ துணைப்படையில் தனது அடியாட்களை சேர்த்து பணம் பெற்று, ஒரு பகுதியை அவர்களுக்கு அளித்து விட்டு மிகுதியை சுருட்டிக்கொண்டவர். தனது எஜமானர் எல்லாம் தோற்றவுடனேயே இவருக்கு தன் இறுதி தருணம் புரிந்து மௌனமாகிவிட்டார். தப்பித்து விட்டேன் என நினைத்திருப்பாரோ? அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தவருக்கு இப்படி ஒரு கஸ்ரகாலமா?
  24. போட்டி முடிவுக்கு நீண்ட நாட்கள் உள்ளன. பதியும் போது ஏதாவது சந்தேகம் வந்தால் அடுத்தவர் விடையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கூகிள் சீற்றில் பதியும் போது விடைகள் இலகுவாக இருக்கும். இலங்கை இந்தியாவைத் தவிர விளையாடும் நாடுகள் வீரர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.