24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- Today
-
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம் 29 Mar, 2026 | 09:58 PM வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. வலுசக்தி வளங்களை மிகவும் அவதானத்துடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய "எல்-நினோ" வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். இதற்கமைய, இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு அங்கமாக, "இலங்கையைக் காப்போம் - ஒன்றிணைவோம் - ஒளியேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. இதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான அதிக பயன்பாட்டு நேரத்தில் (Peak Hours) மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தல் ‘’இலங்கையைக் காப்போம் ‘’ திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. எனினும், நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த சிக்கனம் தேவை என்பதை இது வலியுறுத்துகிறது. வலுசக்திப் பயன்பாடு குறித்து மக்களிடையே ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தானாக முன்வந்து ஒத்துழைக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/242258
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில் 29 மார்ச் 2026 03:06 PM நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் https://jaffnazone.com/news/55916
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 147 இறுதி முடிவுரை: இலங்கை நாலாகமங்களின் முரண்பாடுகள் தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் ஆகிய நூல்கள் இலக்கிய ரீதியாகப் பெறுமதிமிக்கவை என்றாலும், அறிவியல் பூர்வமாக அவை 'மதச்சார்பு வரலாற்றுப் பதிவுகளாகவே' கருதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக எழுதப்பட்ட இந்நாலாமகம்கள், இலங்கையின் ஆதி குடிகளான இயக்கர்களையும் (வேடர்கள்), தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கடல்வழி வல்லமை மிக்க நாகர்களையும் மற்றும் ஆதித் தமிழர்களையும் திட்டமிட்டே வரலாற்றின் ஓரத்திற்குத் தள்ளின. பாளி நூல்கள் கட்டமைத்த காலவரிசைக்கு முன்னரே, தமிழர்கள் இலங்கையின் பிரிக்க முடியாத அங்கமாக வாழ்ந்தனர் என்பதை நவீன தொல்பொருள் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தின் 'நாகதீபம்' முதல் கல்யாணி (களனி) வரை பரவி வாழ்ந்த நாகர்கள், தமிழகத்தின் திராவிடப் பண்பாட்டுடன் மொழி ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருந்தனர். இதற்கான சான்றுகளாக உடுத்துறை தமிழ்-பிராமி 'நாகபூமி' காசு, அபய நாகன் போன்ற மெய்ப்பிக்கப்பட்ட அரசர்கள் மற்றும் மணிமேகலை காப்பியம் ஆகியவை திகழ்கின்றன. வெல்லாவெளி கல்வெட்டுகள் மற்றும் மாந்தை அகழ்வாராய்ச்சிகள், பாளி நூல்கள் எழுதப்படுவதற்கு முன்பே தமிழர்களும் நாகர்களும் இணைந்து ஒரு செழுமையான நாகரிகத்தைக் கட்டியெழுப்பியதை உறுதிப்படுத்துகின்றன. ஆதி இலங்கையில் புழங்கிய 'எளு' (Elu) மற்றும் தமிழ் வேர்ச்சொற்களுடன், பாளி மற்றும் சமஸ்கிருதம் கலந்த பின்னரே இன்றைய சிங்கள மொழியின் ஆரம்ப வடிவமே உருவானது என்பதையும் கவனிக்க. மிக முக்கியமாக, இந்நாலாமகம்கள் பல இடங்களில் புத்தரின் போதனைகளுக்கே முரணாக அமைந்துள்ளன. உயிர்க்கொல்லாமையை போதித்த புத்தரின் தர்மத்திற்கு மாறாக, 'தர்மத்திற்காகப் போர் புரியலாம்' என்றும், 'நம்பிக்கையற்றவர்களைக் கொல்வது பாவமல்ல' (ஒன்றரை மனிதர்கள் கோட்பாடு) என்றும் இவை சித்தரிக்கின்றன. புத்தரின் புனிதச் சின்னங்களை ஈட்டிகளில் ஏந்திப் போருக்குப் பயன்படுத்தியதாகக் கூறுவது புத்தரின் அமைதி வழிக்கு முற்றிலும் எதிரானது. இத்தகைய பதிவுகள் புத்தரின் உலகளாவிய தர்மத்தை ஒரு குறுகிய 'தேசியவாதக் கண்ணோட்டத்திற்கு' (Dhammadipa Nationalism) மாற்றின. எனவே, இந்த நூல்களை ஒரு முழுமையான வரலாற்று உண்மையாகக் கொள்ளாமல், தொல்பொருள் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே இலங்கையின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க உதவும்." Final Conclusion: The Dichotomy of the Sri Lankan Chronicles "While the Deepavamsa, Mahavamsa, and Culavamsa are invaluable literary monuments, a scientific audit reveals them to be theological narratives rather than objective histories. Written by Buddhist monks to legitimize a specific religious identity, these chronicles often marginalized or 'supernaturalized' the indigenous Yakkhas (Veddas), the seafaring Nagas—a proud clan who spoke Tamil as their mother tongue—and the Early Tamils were systematically marginalized in these historical records. Modern archaeological data confirms that long before the timelines constructed by Pali texts, Tamils lived as an inseparable part of the island’s fabric. The Nagas, who thrived from Nagamadeepa (Jaffna) to Kalyani (Kelaniya), were linguistically and culturally bound to the Dravidian heritage of South India. Concrete evidence for this includes the 'Nākapūmi' Tamil-Brahmi coin found in Uduthurai, historically proven kings like Abhaya Naga, and the descriptions in the Tamil epic Manimekalai. The Vellaveli inscriptions and the Mantai excavations confirm that Tamils and Nagas built a sophisticated civilization together long before the Pali chronicles were written. It is also important to note that the early form of the modern Sinhalese language itself emerged only after Pali and Sanskrit merged with the indigenous 'Elu' (Hela) and Tamil root words already prevalent in ancient Lanka. Crucially, these chronicles contain incidents that directly contradict the Buddha’s core teachings. While the Buddha preached absolute non-violence (Ahimsa), the Mahavamsa justifies the slaughter of thousands through the 'one-and-a-half people' doctrine, claiming the killing of 'unbelievers' was not a sin. Furthermore, depicting relics of the Buddha—a symbol of peace—being carried in war-spears violates the ascetic and pacifist nature of the Buddha's life. These narratives replaced universal Dhamma with a localized 'Dhammadipa' nationalism to serve political-monastic alliances. Therefore, these chronicles should be viewed as subjective religious interpretations that must be cross-referenced with archaeological facts to restore the true, shared, and pluralistic history of the island." மேற்கோள் அல்லது சான்றாதாரம் / REFERENCES 1. Dipavamsa: English translation by Hermann Oldenberg, 1879 2. Mahavamsa or the Great Chronicle of Ceylon, Translation by Wilhelm Geiger, Ph.D., 1912 and the 5th print 2018 3. The Rajavaliya or A Historical Narrative of Sinhalese Kings from Vijaya to Wimala Dharma Suriya 11: English Translation by B. Gunasegara, 1900 4. Asoka and the Decline of the Mauryas by Romilla Tharpar, Third Edition 5. The Buddha and the Sahibs by Charles Allen, Paper back Edition 2003 6. ASHOKA, The Search for India’s Lost Emperor by Charles Allen, 2011 7. Tamils in Sri Lanka; A Comprehensive History (C. 300 B.C. to 2000 A.D.) by Dr. Murugar Gunasingham, 2008, ISBN: 978-0-646-49455-5 8. History of the Tamils, From the Earliest Times to 600 A.D. by P. T. Srinivasa Iyengar, AES Reprint 2012 (First Published 1929) 9. Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums 10. The article “Worship of Muruga or Skanda (the Katragam God)” By Late Sir Ponnampalam Arunasalam KT, M. A. CANTAB , Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, 1924, Volume XXIX, No. 77 11. The Dipavamsa and Mahavamsa and their Historical Development in Ceylon, in German by Wilhelm Geiger in 1905, and the English Translation by Ethel M. Coomaraswamy, in 1908 12. The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26 13. Date of Death of Buddha, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 14. The Day on Which Buddha Died, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 15. The Early History of India by Vincent A. Smith, 3Rd edition, 1914 16. Bones, Stones, And Buddhist Monks by Gregory Schopen 17. Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994 18. Ceylon and its Capabilities by J. W. Bennett, 1843, AES Reprint 1998 19. Ashoka in Ancient India by Nayanjot Lahiri 20. S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985 21. Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919 22. On the Chronicles of Ceylon By B. C. Law, original Calcuuta publication 1947, later reprinted with minor adjustments in Sri Lanka in 2017 23. The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017 24. The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006 25. Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake 26. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s) 27. Buddha and His Dhamma by Dr. B. R. Ambedkar, freely available on the net in memory of the great scholar, intellectual giant and a humanitarian 28. The Sillappadikaram, Translation by V. R. Ramachandra Dikishtar, M. A., 1939 29. Illankayir(t) Tolliyalaivukalum Diradidak Kalaccaramum (In Tamil) by Thanapakkiyam Kunapalasingam, 2001, Mannimeghala Publication. (Archaeological Researches in Ceylon and the Dravidian Cultures) 30. The Great Human Diaspora: The History of Diversity and Evolution By Luigi Luca Cavalli-Sforsa and Francesco Cavalli-Sforsa, 1995, translated from Italian to English 31. The Journey of Man – A Genetic Odessy by Spencer Wells, 2001 32. Deep Ancestry by Spencer Wells, ISBN:0-7922-625-8 33. Peoples and Cultures of Early Sri Lanka by Dr. Siva Thiyagarajah, 2011, ISBN:1 85201 025 8 34. Peopling of Sri Lanka by Subramanian Visakan, 2010, ISBN: 1 85201 022 3 35. Mapping of Human History by Steve Olson, 2002 36. Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 37. Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909 38. Mahavamsa, translated into Tamil by ESPO, 2009, ESPO is a famous writer when I was young, he has some uncharitable comments about the Tamils of Tamil Nadu and Ceylon, but they are under legal and security constraints which is better not discussed 39. The History of Ceylon (Sri Lanka) Through Mahavamsa (in Tamil) by Dr. Kandiah Kunarasa B. A. Hons (Cey), M. A., Ph.D., SLAS, Former Registar – University of Jaffna, Divisional Secretary – Tellipalai 40. Mahavamsam, Ancient History of the Island of Ceylon (Mahavamsa translation into Tamil) by S. Sankaran, 1962, Mr. S. Sankaran must be from Tamil Nadu and the translation appears as though it is the original in easy style, this must be the first translation of Mahavamsa in Tamil 41. The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends 42. The Mahavansi, The Raja-Ratnacari, The Raja-Vali Translation by Edward Upham, M. R. A. S. and F. S. A. Volume 1, 1833 43. Tamils and Their Religions by Dr. Siva Thiagarajah B. Sc., M. B. B. S., Ph. D. 44. King Asoka and Buddhism, Edited by Anuradha Senivaratna, 1994, ISBN 955-24-0065-2 45. Asoka by Radhakumud Mookerji, 1928 46. Buddhist India by T. W. Rhys Davids 47. Ancient Coins and Measures of Ceylon by T. W. Rhys Davids நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] முற்றிற்று / Ended துளி/DROP: 2122 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 147 https://www.facebook.com/groups/978753388866632/posts/34586384894343383/?- சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] அந்தக் கிளர்ச்சி பெரும் முரசொலிகளுடனோ, கொடியேற்றத்துடனோ தொடங்கவில்லை. அது ஒரு சிறிய 'இல்லை' என்ற சொல்லில் இருந்து முளைத்தது. சில கிராமங்கள் வரியாகத் தானியங்களைக் கொடுக்க மறுத்தன; கடலோர மக்கள் தங்களின் உழைப்பை அரசுக் களஞ்சியத்திற்கு வழங்க மறுத்தனர். காடுகளில் ஒதுங்கியிருந்தவர்கள் மெல்ல ஊருக்குள் திரும்பினர். அவர்கள் சண்டையிட வரவில்லை, என்ன நடக்கிறது என்று அமைதியாகப் பார்க்க வந்தனர். பழங்குடி மக்கள் தங்களைப் புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் அதிகாரத்திற்குப் பணியவில்லை. குடியேற்ற அதிகாரிகள் இதை ‘குழப்பம்’ என்றனர். அரசவையினர் ‘துரோகம்’ என்றனர். மடாலயங்களில் இருந்தவர்கள் இதனை ‘தவறான கலகம்’ எனத் தூற்றினர். அனுராதபுரத்திற்குத் தெற்கே, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் (வாவி) அருகே முதல் மோதல் வெடித்தது. வரி வசூலிக்க வந்த அரசுப் படையினர், வலுக்கட்டாயமாகத் தானியங்களைப் பறிக்க முயன்றனர். பல ஆண்டுகளாக மழையே பார்த்திராத அந்த வறண்ட மண், அன்று மனித இரத்தத்தைப் பார்த்தது. சிவா அந்தப் போர்க்களத்தில் இருந்தான். அவன் வெற்றியை எதிர்பார்த்து கிளர்ச்சியில் இறங்கவில்லை; மாறாக, தன் மௌனம் அதிகாரத்தின் அநீதிக்குச் சம்மதமாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுதம் ஏந்தினான். சண்டை முடிந்தபோது பல உடல்கள் மண்ணில் கிடந்தன. அவர்களின் பெயர்கள் எங்கும் குறிக்கப்படவில்லை. அடுத்த நாள் காலையில் பிக்குகள் அங்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் செய்ய வரவில்லை; மாறாக, நடந்தவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பதிவு செய்ய வந்தனர். ஓலைச்சுவடிகள் விரிக்கப்பட்டன. வார்த்தைகள் மிகவும் சாதுர்யமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன: தங்கள் நிலத்தைக் காக்கப் போராடியவர்கள் ‘கொள்ளையர்கள்’ என அழைக்கப்பட்டனர். அவர்களின் எதிர்ப்பு ‘சங்கத்திற்கு எதிரான வன்முறை’ என்று திரிக்கப்பட்டது. வரலாறு பல ஆண்டுகள் கழித்து எழுதப்படவில்லை; அது நடந்த அன்றே அதிகார வர்க்கத்தால் மாற்றியமைக்கப்பட்டது. கலினி இந்தச் செய்திகளைப் பிறர் சொல்லிக் கேட்கவில்லை; அவள் அனைத்தையும் நேரில் கண்ட சாட்சி. அவளது கணவன் அப்போது ஒரு மடாலயத்தில் வரலாற்றுப் பதிவேடுகளை எழுதும் பணியில் உதவியாளராக இருந்தான். ஒவ்வொரு மாலையும் அவன் அன்றைய பதிவுகளைச் சொல்லச் சொல்ல, கலினி மை தயாரித்துக் கொடுத்தாள்; ஓலைச்சுவடிகளை உலர்த்தினாள். ஆனால், அவள் கவனித்துக் கொண்டே இருந்தாள். பழைய ‘ஈழத் தமிழ்’ பெயர்களுடன் இருந்த கிராமங்களின் பெயர்கள் மெல்ல மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிக் கலப்புடன் புதிய பெயர்களாக உருமாறிக்கொண்டிருந்தன. ஒரு இனத்தின் அடையாளமும், நிலத்தின் வரலாறும் எழுத்துக்களாலேயே அழிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள். [வரலாற்றுத் தரவுகள் (Historical Context): காலம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை (பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிய காலம்). மொழி மாற்றம்: ஆதி இலங்கையில் புழங்கிய 'எளு' (Elu) அல்லது 'ஹெல' (Hela) என்றழைக்கப்படும் பிராகிருத மொழியுடன், பௌத்த வருகைக்குப் பிறகு பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்கத் தொடங்கின. இதன் விளைவாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் இன்றைய சிங்கள மொழியின் ஆரம்பக்கால வடிவம் (Old Sinhalese) உருவானது. அரசியல்: அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட மகா வம்சம் போன்ற வரலாற்றுப் பதிவுகள், பெரும்பாலும் மதச் சார்புடனும் அரச ஆதரவுடனும் எழுதப்பட்டவை. கிளர்ச்சி: இக்காலகட்டத்தில் (கி.மு. 300 - 100), வரிப்பளு மற்றும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பூர்வகுடிகளான இயக்கர் (வேடர்கள்) மற்றும் ஆதித் தமிழர்கள் இணைந்து செயல்பட்டதற்கான சான்றுகள் வாய்மொழி வரலாறுகளிலும் மட்டக்களப்பு 'வெல்லாவெளி' (Vellaveli) போன்ற ஆதிப் பிராமி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 'இயக்க' குலத் தலைவர்களும் 'தமெட' (Dameda/Tamil) வணிகர்களும் சமூக மற்றும் நில மேலாண்மையில் ஒருமித்துச் செயல்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.] ஒரு பெயர் என்பது வெறும் சொல் அல்ல; அது அந்த நிலத்தின் ஆதி நினைவு. அந்த மக்களின் மாறாத மரபு. ஒரு இடத்தின் பெயரை மாற்றினால், அந்த இடத்தின் வரலாறே சிதைக்கப்பட்டுவிடும் என்பதை கலினி உணர்ந்தாள். மடாலயத்தின் ஓலைச்சுவடிகளில், பழங்காலச் சிறு தெய்வக் கோயில்கள் “கைவிடப்பட்ட இடங்கள்” என்று குறிக்கப்பட்டன. அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் பதிவிடப்படவில்லை. “கைவிடப்பட்டது” என்ற ஒரு சொல், அந்த நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்ற பிம்பத்தை உருவாக்கியது. இதன் மூலம் அந்த இடங்களை அரசு எளிதாகக் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் “குழப்பங்கள்” எனத் திரிக்கப்பட்டன. புதிய ஆட்சி மட்டுமே “ஒழுங்கை நிலைநாட்டியதாக” எழுதப்பட்டது. தங்கள் மண்ணிற்காக நின்ற மக்கள், அமைதிக்குக் குந்தகம் விளைவித்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். ஒரு இரவு, கலினி தன் கணவனிடம் மெல்லிய குரலில் கேட்டாள்: “அங்கே காலம் காலமாக வாழ்ந்த அந்த மக்களைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்?” அவன் தயக்கத்துடன் சொன்னான்: “அவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்... ‘தடைகள்’ (Obstacles) என்று.” “தடைகள்” — அந்த ஒரு சொல் கலினியின் இதயத்தை ஈட்டியாய் ஊடுருவியது. அவர்கள் பெயர்களோடும், கதைகளோடும் பதியப்படவில்லை; அவர்கள் வெறும் தடைகளாக மட்டுமே சுருக்கப்பட்டனர். ஒரு சமூகத்தைத் ‘தடை’ என்று முத்திரை குத்தினால், அவர்களை அந்த நிலத்திலிருந்து அகற்றுவது ‘தார்மீகமான செயல்’ போலத் தோன்றும். அவர்களின் வலியும் துயரமும் வரலாற்றின் பக்கங்களில் தேவையற்றதாகிவிடும். அப்போதுதான் கலினிக்கு ஒரு உண்மை புரிந்தது — இது வெறும் நிலத்துக்கான போர் அல்ல; இது நினைவுகளுக்கான போர். இது பெயர்களுக்கான போர். இது சொற்களால் கட்டமைக்கப்படும் அதிகாரம். அவளது அமைதி இனி கீழ்ப்படிதல் அல்ல; அது உள்ளுக்குள் கனலும் எதிர்ப்பு. அதே நேரத்தில், வெளியே ஒரு மௌனமான வெளியேற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிழைப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். மன்னார் (Mantai/ Mathoddam) கடற்கரையிலிருந்து அந்திப் பொழுதில் படகுகள் புறப்பட்டன. அந்த மக்கள் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தங்கள் நிலத்தின் ஆதிப் பாடல்களையும், குலதெய்வச் சிலைகளையும் மட்டுமே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கடலில் பயணிக்கத் தொடங்கினர். வரலாற்றுப் பின்னணி (Facts & Context): இடப்பெயர் மாற்றம் (Toponymy): இலங்கையின் ஆதிப் பெயர்களான 'எளு' (Elu) மற்றும் தமிழ் பெயர்கள் காலப்போக்கில் பாலி மற்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட சிங்களப் பெயர்களாக மருவின. உதாரணமாக, 'மணிநாகதீபம்' மற்றும் 'மாதோட்டம்' போன்ற பெயர்கள் பிற்காலப் பதிவுகளில் மாற்றமடைந்ததை மொழியியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாந்தை (Mannar): இது கி.மு. காலத்திலிருந்தே இலங்கையின் முதன்மையான சர்வதேசத் துறைமுகமாகவும், தென்னிந்தியாவையும் மேலைநாடுகளையும் இணைக்கும் கடல்வழி வணிக மையமாகவும் திகழ்ந்தது. இது 'மாதோட்டம்' எனத் தமிழ் இலக்கியங்களிலும் குறிக்கப்பபட்டுள்ளது. மதமாற்றமும் வரலாற்றுப் பதிவும்: 'மகாவம்சம்' போன்ற பௌத்த வரலாற்று நூல்கள், பௌத்தத்தைப் பரப்ப வந்தவர்களை நாகரிகத்தை நிலைநாட்டியவர்களாகவும், அங்கிருந்த பூர்வகுடிகளான இயக்கர் மற்றும் நாகர்களை "இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களாக" அல்லது "தடைகளாகவும்" சித்தரித்தன. இது ஒரு மதச்சார்பு வரலாற்றுப் பார்வையாகவே (Ideological Narrative) இன்று கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தின் தாக்கம்: பௌத்த மதப் பரவலோடு வந்த பாளி மற்றும் சமஸ்கிருத சொற்கள், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 'எளு' மற்றும் தமிழ் மொழிகளுடன் கலந்து, புதிய அதிகாரப்பூர்வ மொழிக் கட்டமைப்பிற்கு (Early Sinhala) வித்திட்டன. இது அரச நிர்வாகத்திலும் மதச் சடங்குகளிலும் மேலாதிக்கம் செலுத்தியது. அவர்கள் தங்கள் நிலத்தை இழந்திருக்கலாம், ஆனால் தங்கள் மொழியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. இடம்பெயர்ந்தவர்களில் சிலர் புத்தளம் (Puttalam) பகுதிக்குச் சென்று புதிய வாழ்வைத் தொடங்கினர். இன்னும் சிலர், ஆதித் துறைமுகமான மாந்தையில் இருந்து கடலைக் கடந்து தமிழகத்தின் பாண்டிய நாட்டு கடற்கரையை அடைந்தனர். அங்கு அவர்கள் அந்நியர்களாகக் கருதப்படவில்லை; ஒரே மொழி, ஒரே பண்பாடு மற்றும் இரத்த உறவு அவர்களைத் தாய்மையுடன் வரவேற்றது. புலம்பெயர்ந்த அந்த மக்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தங்களின் பழைய ஊர் பெயர்களைத் திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுத்தனர். "பெயர்கள் அழிந்தால், நம் அடையாளமும் வரலாறும் அழிந்துவிடும்" என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம், "ஒருகாலத்தில் நாம் அந்த நிலத்தில் வாழ்ந்தோம்..." என்று கதைகளைச் சொல்லத் தொடங்கினர். அது வெறும் கதையல்ல; அது ஒரு சமூகத்தின் இருப்பிற்கான சாட்சியம். இதற்கிடையில், வடக்கில் இருந்த சிவா இந்தச் செய்திகளைக் கேட்டான். வன்முறையும் திரிபுகளும் நிறைந்த அந்த இடத்தை விட்டு, அமைதி நிலவும் இடத்திற்குச் செல்ல அவன் விரும்பினான். அவன் கலினியை ஒரு மடாலயச் சுவருக்கு அருகே ரகசியமாகச் சந்தித்தான். "என்னுடன் வந்துவிடு, இங்கே இனி உண்மைகளுக்கு இடமிருக்காது" என்று அவன் அழைத்தான். ஆனால் கலினி மறுத்துவிட்டாள். அவள் சொன்னாள்: “உண்மையையும் நினைவுகளையும் சுமந்திருப்பவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டால், இங்கே அதிகாரத்தால் எழுதப்படும் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்ல யார் இருப்பார்கள்?” உண்மையைக் காக்க வரலாற்றில் இரண்டு வழிகள் எப்போதும் உண்டு. ஒன்று, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று அந்த உண்மையைப் பாதுகாப்பது. மற்றொன்று, ஆபத்தான இடத்திலேயே நின்று அந்த உண்மை சிதைக்கப்படுவதை எதிர்த்துச் சாட்சியாக வாழ்வது. கலினி அந்த இரண்டாவது சவாலான வழியைத் தேர்ந்தெடுத்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் எதையும் தந்து கொள்ளவில்லை. அவர்களின் பாதைகள் வேறானவை. சில காதல்கள் கூடி வாழ்வதன் மூலம் அர்த்தப்படும்; சில காதல்கள் பிரிந்திருந்தாலும் உயர்ந்த லட்சியத்திற்காக உயிர்வாழும். அன்று இரவு, அனுராதபுரத்தின் அரசவை வெளிச்சத்தில் அதிகாரப்பூர்வமான 'புதிய வரலாறு' ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது. அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஒரு அகதிக் குடியிருப்பில் ஏதோ ஒரு குடிசையில் முதல் விளக்கு ஏற்றப்பட்டது. ஒரு பக்கம் எழுதப்பட்ட வரலாறு (Written History); மற்றொரு பக்கம் சொல்லப்பட்ட நினைவுகள் (Oral Tradition). கலினியும் சிவாவும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், தாங்கள் இருவரும் அந்த நிலத்தின் 'உண்மையைக்' காப்பதாகவே நம்பினர். வரலாற்றுத் தரவுகள் (Historical Context): இலங்கை - தமிழக உறவு: கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்தின் பாண்டிய, சோழ அரசுகளுக்கும் இலங்கையின் பூர்வகுடிகளுக்கும் இடையே நெருங்கிய வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தன. மன்னார் வளைகுடா வெறும் கடல் அல்ல, அது இரு நிலப்பரப்புகளையும் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலமாகச் செயல்பட்டது. வாய்மொழி வரலாறு (Oral Tradition): 'மகாவம்சம்' போன்ற எழுதப்பட்ட அரச வரலாறுகள் ஒருதலைப்பட்சமான (Viharist perspective) மதக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தபோது, மக்கள் தங்கள் உண்மையான வரலாற்றை தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் 'கூத்து' வழியாகத் தலைமுறைகளைக் கடந்து பாதுகாத்தனர். புத்தளம் மற்றும் மன்னார்: இவை கி.மு. காலத்திலிருந்தே தமிழகத்துடனான வர்த்தகப் போக்குவரத்துகளுக்குப் பிரதான வணிக மையங்களாக (Trading Ports) விளங்கின. இவை வெறும் தங்குமிடங்கள் மட்டுமல்ல, தென்னிந்தியப் பண்பாடு இலங்கைக்குள் நுழைந்த முக்கிய வாயில்களாகவும் இருந்தன. மொழிப் பரிணாமம்: இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 'தமிழ்-பிராமி' (Tamil-Brahmi) கல்வெட்டுகள், அக்காலத் தமிழ் மற்றும் ஆரம்பக்கால சிங்கள மொழி ஆகிய இரண்டிற்கும் பொதுவான எழுத்து ஊடகமாக இருந்தன. இது இரு மொழிகளுக்கும் இடையிலான ஆதித் தொடர்பையும், சொற்கள் பரிமாறப்பட்ட விதத்தையும் உறுதிப்படுத்தும் வலுவான தொல்பொருள் சான்றாகும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 6 தொடரும் துளி/DROP: 2121 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/34586294014352471/?- உணவு செய்முறையை ரசிப்போம் !
மீல்மேக்கர் இருந்தா இப்டி செய்ங்க ருசிய மறக்கவே மாட்டிங்க......! 👍- ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை!
ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 02:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து உறங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெப்பத்திலிருந்து தப்பிக்கக் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைப்பது இயல்பானதே. ஆனால், அவ்வாறு செய்யும் போது முறையான இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன்னர் அனைத்துக் கதவுகளும், வெளிப்பக்க வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வெளிச்சத்தைப் பேணுவது ஊடுருவல்காரர்களைத் தடுக்க உதவும். உங்கள் வீட்டின் அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். https://www.virakesari.lk/article/242227- "இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை!
"இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 05:09 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மீதான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் பாப்பரசர் லியோ உலகத் தலைவர்களை நோக்கி மிகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போரை நியாயப்படுத்த எவரும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் திரண்டிருந்த புனித பேதுரு சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) உரையாற்றிய பாப்பரசர், "எமது கடவுளான இயேசு அமைதியின் அரசர். அவர் போரை வெறுக்கிறார். போரை நியாயப்படுத்த எவரும் அவரைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். எந்தவொரு தலைவரின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஈரானில் தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களையே அவர் சூசகமாகச் சாடியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். திருவிவிலியத்தின் வாசகங்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "போர் புரியும் தலைவர்கள் எத்தனை பிரார்த்தனைகளைச் செய்தாலும் கடவுள் அவற்றைச் செவிமடுக்க மாட்டார். ஏனெனில் உங்களது கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உள்ளிட்ட அதிகாரிகள், ஈரானுக்கு எதிரான போரை ஒரு 'கிறிஸ்தவ தேசத்தின் புனிதப் போர்' எனச் சித்தரித்து வருவதற்கு பாப்பரசர் லியோ மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இயேசு தன்னை கைது செய்ய வந்தவர்கள் மீது வாள் வீசிய சீடரைத் தடுத்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பாப்பரசர், வன்முறை எப்போதும் கடவுளால் நிராகரிக்கப்படும் ஒன்றே என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் பிறந்த முதல் பாப்பரசர் என்ற பெருமைக்குரிய லியோ, தனது சொந்த நாட்டின் போர் நடவடிக்கைகளை இவ்வாறு பகிரங்கமாக விமர்சித்து வருவது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242245- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா முகாமில் இஸ்ரேல் தாக்குதல், ஒருவர் பலி.- நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்?
நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்? பட மூலாதாரம்,Photos: New York Fed / Editing: Caroline Souza கட்டுரை தகவல் கில்லெர்மோ டி. ஓல்மோ பிபிசி முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில், தரைக்குக் கீழே 25 மீட்டர் ஆழத்தில் ஃபெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில் பெருமளவு தங்கத்தைப் பாதுகாத்து வருகிறது. இந்தத் தங்கம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் பல மத்திய வங்கிகள், அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அங்கு அரை மில்லியனுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகம், மிகவும் வலிமையான 90 டன் எடையுள்ள எஃகு கதவால் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கதவு ஒருமுறை மூடப்பட்டால், அடுத்த நாள் வரை அதை மீண்டும் திறக்க முடியாது. இந்த இடம் ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகம் (Fed's Gold Vault) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது உலகின் மிகப்பெரிய தங்கச் சேமிப்புக் கிடங்காக அறியப்படுகிறது. இது சுமார் 6,300 டன் தங்கத்தை வைத்துள்ளது. இன்றைய விலையில், இதன் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% ஆகும். இந்தப் பாதுகாப்புப் பெட்டகம் உலகளாவிய நிதி அமைப்புக்கு மிகவும் முக்கியமானது. தங்கம் மிகவும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுவதால், பல நாடுகள் தங்கள் தங்கத்தை இங்கு சேமித்து வைக்கின்றன. நாடுகள் தங்களது நாணயத்தை ஆதரிக்கவும், நிதி நெருக்கடிகளின்போது ஏற்படும் சிக்கல்களைக் கையாளவும் இதைப் பயன்படுத்துகின்றன. நிதி நெருக்கடி, அரசியல் பதற்றங்கள், பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைதல் ஆகிய காலங்களில், தங்கம் எப்போதுமே பணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு "பாதுகாப்பான இடமாக" பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவை, தங்களது கையிருப்பு நிதியில் பெரும் பகுதியைத் தங்கமாக வைத்திருக்கிறார்கள். கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பண அமைப்பு நிபுணரான பேரி ஐகென்கிரீன், பிபிசி முண்டோவிடம் பேசியபோது, "இது அவர்களின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று. ஏனெனில், பாதகமான புவிசார் அரசியல் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இறுதிப் புகலிடக் கடன் வழங்குநராகச் செயல்படவும், அந்நிய செலாவணி சந்தையில் தலையிடவும் இது அவர்களுக்கு உதவுகிறது," என்று கூறினார். பல ஆண்டுகளாக, அமெரிக்காவும் அதன் ஃபெடரல் ரிசர்வும் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கு மிகவும் பாதுகாப்பான, நம்பகமான இடங்களாகக் கருதப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியனால் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்த காலகட்டத்தில், தங்கத்தின் பெரும் பகுதியை அமெரிக்காவில் வைத்திருந்தன. ஆனால், இப்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சில ஐரோப்பிய தலைவர்களும் நிபுணர்களும் தங்களது தங்கத்தைத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பக் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்களை முழுமையாகப் பின்பற்றாதது, வர்த்தக வரிகள், கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் கட்டுப்பாடு, சமீபத்தில் இரானுடனான போர் போன்ற விவகாரங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பது போன்ற டிரம்பின் நடவடிக்கைகளால் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னைகள், அமெரிக்காவில் சேமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தங்கம் முழுமையாகப் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த கவலையை உருவாக்கியுள்ளன. பட மூலாதாரம்,Harry Benson / Getty படக்குறிப்பு,கடந்த 1950கள் முதல் சோவியத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை அமெரிக்காவில் குவித்து வைத்தன. ஐரோப்பிய தங்கம் அமெரிக்காவுக்கு வந்தது எப்படி? சாத்தியமான மேற்கத்திய தடைகளில் இருந்து தங்கத்தைப் பாதுகாக்க, ரஷ்யா தனது தங்கத்தைத் தனது நாட்டிலேயே வைத்திருப்பதைப் போலன்றி, பல ஐரோப்பிய நாடுகள் இன்றும் தங்கள் தங்கத்தைப் பிற நாடுகளில், குறிப்பாக நியூயார்க்கில் உள்ள நியூயார்க் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் 1950களில் இருந்து தங்களது தங்கத்தை அங்கு சேமிக்கத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஐரோப்பிய பொருளாதாரங்கள் மெதுவாக மீண்டு வந்து, அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கின. "ஜெர்மனி மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்துக் கொண்டிருந்த பிற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து, தங்கம் மற்றும் டாலர்கள் கலந்த வடிவத்தில் பணத்தைப் பெற்று வந்தன," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார். மேலும், "தங்கத்தை ஒரு கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி, அந்தப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிக்கக் காப்பீடு எடுப்பதற்குப் பணம் செலவாகும். எனவே, அதை ஃபெடரல் ரிசர்வ் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிப்பது ஒரு நல்ல யோசனை என்று அவர்கள் கருதினர். ஏனெனில், அது பாதுகாப்புக்காகக் கட்டணம் வசூலிப்பதில்லை," என்றும் அவர் விளக்கினார். கடந்த 1944இல், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு என்றழைக்கப்படும் ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அமெரிக்க டாலர் ஒரு நிலையான மதிப்பில் தங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக, தங்கமும் அமெரிக்க டாலரும் மிகவும் நம்பகமான, நிலையான பண வடிவங்களாக மாறின. போருக்குப் பிறகு பலவீனமடைந்திருந்த ஐரோப்பிய நாடுகள், தங்களது தங்கத்தை எந்த சேமிப்புக் கட்டணமும் செலுத்தாமல் ஃபெடரல் ரிசர்வில் பாதுகாத்து வைத்திருப்பதைப் பயனுள்ள விஷயமாகப் பார்த்தனர். பட மூலாதாரம்,New York Fed படக்குறிப்பு,பிற நாடுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்விடம் ஒப்படைக்கும் தங்கத்தை ஒரு பாதுகாப்புப் பெட்டகம் பாதுகாத்து வைக்கிறது. அந்தக் காலகட்டத்தில், இரும்புத் திரையின் மறுபுறத்தில் இருந்த சோவியத் யூனியன் குறித்த அச்சமும் இருந்தது. எனவே, தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது சோவியத் யூனியன் இல்லை. மேலும் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதால், அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு சில பதற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது பெரிய தங்க இருப்பைக் கொண்டுள்ள ஜெர்மனியில் பல நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் இருப்பதால், ஏதேனும் தவறு நடந்தால் ஜெர்மனி அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். முன்னர் பன்டெஸ்பேங்கில் (Bundesbank) தலைமை ஆய்வாளராகப் பணியாற்றிய பொருளாதார நிபுணர் இமானுவேல் மோன்ச், நியூயார்க்கில் வைத்துள்ள தங்கத்தை ஜெர்மனி திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஜெர்மன் ஊடகங்களின்படி, ஜெர்மனி அங்கு சுமார் 1,200 டன் தங்கத்தைச் சேமித்து வைத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பட மூலாதாரம்,Chip Somodevilla / Getty படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் (வலது) மீது டிரம்ப் தொடுத்துள்ள தாக்குதல்கள், பிற நாடுகளின் தங்கத்தைப் பாதுகாக்கும் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. "தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது ஆபத்தானதாகத் தெரிகிறது. தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவது ஜெர்மனிக்கு அதிக மூலோபாய சுதந்திரத்தை அடைய உதவும்" என்று கூறுகிறார் மோன்ச். அதேபோல, ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மைக்கேல் ஜாகர், "டிரம்ப் கணிக்க முடியாதவர் மற்றும் வருவாயை ஈட்டுவதற்காக எதையும் செய்யக்கூடியவர். அதனாலேயே நமது தங்கம் இனி ஃபெடரல் ரிசர்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்காது," என்று கூறினார். மேலும் அவர், "கிரீன்லாந்து மீதான ஆத்திரமூட்டல் தொடர்ந்தால் என்ன நடக்கும்? இது பன்டெஸ்பேங்க் தனது தங்கத்தை அணுக முடியாமல் போகக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே அதன் கையிருப்பைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்," என்றும் அவர் கேட்டார். இந்தக் கவலைகள், அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான சி.டி.யு-வின் உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் குழுக்களாலும் எழுப்பப்படுகின்றன. இருப்பினும், பன்டெஸ்பேங்கின் தலைவர் ஜோக்கிம் நாகல், இந்த அச்சங்களைத் தணிக்க முயன்றுள்ளார். கடந்த அக்டோபரில் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நானய நிதியத்தின் கூட்டத்தில் அவர், "கவலைப்படத் தேவையில்லை" என்று கூறினார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... பிப்ரவரியில், அவர் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "இது என் தூக்கத்தைக் கெடுப்பதில்லை. அமெரிக்க மத்திய வங்கியில் உள்ள எங்கள் சகாக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார். ஆனால் அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் அல்லது டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஆகிய இரண்டுமே இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்குத் தெளிவாக உறுதியளிக்கவில்லை. பகுப்பாய்வாளர் பேரி ஐகென்கிரீன், "நான் எந்த உறுதியளிக்கும் வார்த்தைகளையும் கேட்கவில்லை. மேலும் இது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். பிபிசி முண்டோ ஃபெடரல் ரிசர்வை தொடர்புகொள்ள முயன்றது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அமெரிக்காவுக்குள் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்ததால், டிரம்ப் பாவெலை பலமுறை விமர்சித்துள்ளார். நீதித் துறையும் பவலுக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்தைக் குறைப்பதற்கும், அதை "அதிபரின் விருப்பங்களைப் பின்பற்றுமாறு" கட்டாயப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் "மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களின்" ஒரு பகுதியே இந்த விசாரணை என்று பாவெல் கூறினார். பட மூலாதாரம்,New York Fed படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் 6,000 டன் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. திடீரென வீழ்ந்த தங்கத்தின் மதிப்பு ஜெர்மனி மட்டுமே நியூயார்க்கில் தங்கத்தை வைத்திருக்கும் ஒரே ஐரோப்பிய நாடு இல்லை. இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் அங்கு அதிக அளவில் தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. சில நாடுகள் கடந்த காலங்களிலேயே தங்கள் தங்கத்தைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வரத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, நெதர்லாந்து 2014இல் இதைச் செய்யத் தொடங்கியது. அது ஃபெடரல் ரிசர்வில் வைத்திருந்த தங்கத்தின் அளவை 51% என்பதில் இருந்து 31 சதவிகிதமாகக் குறைத்தது. ஏறக்குறைய அதேநேரத்தில், ஜெர்மனியும் தனது சில தங்கக் கட்டிகளைத் திரும்பக் கொண்டு வந்தது. ஆனால் அதன் பெரும்பாலான தங்கம் இன்னும் அமெரிக்காவிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. "அது கிரேக்க கடன் நெருக்கடி, யூரோ நெருக்கடியின் காலம். மேலும் ஐரோப்பியர்கள் தங்கள் நாணயம் மற்றும் வங்கி வைப்புத் தொகைகள் உறுதியான ஒன்றால் ஆதரிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்பினர்," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார். இதற்கும் முன்னதாக, 1960களில், சார்லஸ் டி கோல் பிரான்சின் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வர முடிவு செய்தார். அமெரிக்க டாலர் திடீரென மதிப்பிழக்கக்கூடும் என்று அவர் அஞ்சியதாகப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின்கீழ், டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பிற்கால நிகழ்வுகள் அவரது கவலை சரியானது என்பதை நிரூபித்தன. 1971இல் டாலர்களை தங்கமாக மாற்றும் முறையை ரிச்சர்ட் நிக்சன் நிறுத்தினார். இந்த முடிவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய நிதி அமைப்பைப் பலவீனப்படுத்தியது. பிரான்ஸ் ஏற்கெனவே தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வந்திருந்ததால், அதுவொரு சிறந்த நிலையில் இருந்தது. தங்கள் தங்கத்தை நியூயார்க்கில் வைத்திருந்த பிற நாடுகள், டாலர் மதிப்பில் தங்களது தங்கத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைவதைக் கண்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப்பெரிய தங்க இருப்பைக் கொண்ட நாடாக ஜெர்மனி திகழ்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வசம் உள்ள தங்கத்தை மீண்டும் தனது நாட்டுக்கே கொண்டு வருவது குறித்த விவாதமும் எழுந்துள்ளது. தங்கத்தை இடம் மாற்றுவது செலவுமிக்க முயற்சி நியூயார்க்கில் உள்ள தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் இப்போது முன்பைவிடக் குறைவான தங்கமே உள்ளது. ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின்படி, 1973இல் 12,000 டன்களுக்கும் அதிகமாக இருந்த தங்கத்தின் அளவு, அன்று முதல் மெதுவாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், தங்கத்தை அங்கேயே வைத்திருப்பது நல்லது என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். ஜெர்மனியில் உள்ள ஐ.எஃப்.ஓ பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிளெமென்ஸ் ஃப்யூஸ்ட், தி கார்டியன் பத்திரிகையிடம் பேசுகையில், "தங்கத்தை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது, தற்போதைய சூழ்நிலையின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும்" என்றும் எதிர்பாராத சிக்கல்களை அது உருவாக்கக்கூடும் எனவும் கூறினார். டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்திடம் இருந்து ஃபெடரல் ரிசர்வ் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, தங்கம் இன்னும் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை இடம் மாற்றுவது மிகவும் செலவுமிக்கது, கடினமானது மற்றும் ஆபத்தானது எனவும், அதற்கு வலுவான பாதுகாப்பும் கவனமான திட்டமிடலும் தேவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், ஐரோப்பிய தங்கத்தைப் பாதுகாக்க அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியுமா என்பது குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக இருந்து வரும் உலகளாவிய அமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடும். இதுகுறித்து விளக்கிய பேரி ஐகென்கிரீன், "தங்கத்தைத் திரும்பப் பெறுவதால் அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த பின்விளைவுகள் ஏற்படாது. இருந்தாலும், நேட்டோவின் பாதுகாப்புக் குடை அல்லது உலகளாவிய நாணயமாக டாலர் இருப்பது ஆகியவற்றைப் போலவே, நண்பர்களையும் வர்த்தகப் பங்காளிகளையும் உருவாக்கிக் கொள்வதற்கு ஈடாக தங்கம் ஓர் உலகளாவிய சொத்தாக உள்ளது. அதை அமெரிக்கா இலவசமாக வழங்கியுள்ளது," என்று கூறினார். படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் மேலும் பேசிய அவர், "அமெரிக்கா இலவசமாக சேவைகளை வழங்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் நம்பவில்லை. அதோடு அமெரிக்காவில் உள்ள தங்கள் வைப்புத் தொகைகளின் பாதுகாப்பு குறித்து நட்பு நாடுகளின் சந்தேகங்களைத் தூண்டும் எதுவும், நாட்டின் மீதான அவரகளின் நல்லெண்ணத்தை மேலும் சிதைக்கிறது. உதாரணமாக, மத்திய கிழக்கில் ஒரு போருக்கு அவர்களின் உதவி தேவைப்படும்போது இது அவசியமான ஒன்றாகும்," என்றும் தெரிவித்தார். இதுவரை டிரம்பின் இந்த இரண்டாவது பதவிக் காலத்தில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவதாக அதிகாரபூர்வமாக முடிவு செய்யவில்லை. ஆனால் கிறிஸ்டின் லகார்டின் வார்த்தைகள் இன்னும் பல தலைவர்களின் மனதில் இருக்கலாம். அவர் கடந்த ஆண்டு ஓர் உரையில், "சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில், அசைக்க முடியாததாகத் தோன்றிய அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கும் நேரங்கள் உண்டு" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg05nn5pv8o- ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம்
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 04:52 PM லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். லெபனானின் 'ஜெஸின்' நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் 'அல் மனார்' தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அலி ஷோயப், 'அல் மாயடீன்' ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்பாத்திமா மற்றும் முகமது ஃபெடோனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர் இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர், "இது தற்செயலான தாக்குதல் அல்ல, மாறாக உண்மையை உரக்கச் சொல்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனச் சாடியுள்ளார். இதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கத்தாரின் 'அல்-அரபி' செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் முற்றாகச் சேதமடைந்ததால், அங்கிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நேரலை ஒளிபரப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகத்திற்கு வெளியேயிருந்த வாகனங்கள் மற்றும் வீதிகள் பாரிய அளவில் உருக்குலைந்துள்ளன. https://www.virakesari.lk/article/242244- அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 12:12 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்ப் ட்ரம்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 70 இலட்சம் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. "ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியைப் போல எங்களை ஆள நினைக்கிறார். ஆனால் இது அமெரிக்கா, இங்கு அதிகாரம் மக்களுக்கே உரியது; மன்னர்களுக்கோ அல்லது அவர்களின் கோடீஸ்வர நண்பர்களுக்கோ அல்ல" எனப் போராட்ட அமைப்பாளர்கள் கோசமிட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களைக் கிண்டல் செய்துள்ள வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர், இவை "ட்ரம்ப் மீதான மனநோய் சிகிச்சை அமர்வுகள்" எனச் சாடியுள்ளார். தேசிய நினைவிடங்கள் மற்றும் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்துள்ளன. டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், மன்ஹாட்டன் பகுதியின் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் குடிவரவு அதிகாரிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளான ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி அங்குப் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அங்குப் பாடல்களைப் பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் மட்டுமன்றி, லண்டன், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற உலக நாடுகளின் தலைநகரங்களிலும் புலம்பெயர் அமெரிக்கர்கள் திரண்டு ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். அங்குப் ஜனாதிபதி ட்ரம்ப்பை "போர்க்குற்றவாளி" மற்றும் "பாசிசவாதி" எனப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தண்டிக்க முற்படுவதாகவும், இராணுவத்தை உள்நாட்டு நகரங்களில் நிலைநிறுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/242214- அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு 29 Mar, 2026 | 01:06 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர். உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/242217- மோடிக்கு நன்றி கூறிய அநுர
மோடிக்கு நன்றி கூறிய அநுர Mar 29, 2026 - 03:41 PM எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnblnbxc000n356p0byh5vr2- ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி!
ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி! Mar 29, 2026 - 02:39 PM பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது ஈரானால் எடுக்கப்பட்ட மிகவும் சாதகமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்... இது அமைதிக்கான ஒரு முன்னோடியாகும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும்" என இஷாக் தார் அங்கு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnbik3dy000m356ph638jyp3- மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை
மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை 29 Mar, 2026 | 01:07 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர். மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர். https://www.virakesari.lk/article/242218- அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன? பட மூலாதாரம்,American marin VANO SHLAMOV AFP via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்). 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், 'தெஹ்ரான் டைம்ஸ்' பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்து, 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்று எழுதியுள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்பதுதான். அதில், "இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' ஆங்கில இதழ் எழுதியிருந்தது. "பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் சதி மறுபுறம்" பட மூலாதாரம்,Ghalibaf NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், இரான் "அவமானத்தை" ஏற்காது என்று கூறினார் (கோப்புப் படம்). இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்த செய்தியை இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உள்ளிட்ட பல இரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி விடுத்த இந்தச் செய்தியில் காலிபாஃப் கூறுகையில், "எதிரி பகிரங்கமாகப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளைத் தருகிறதி, ஆனால் திரைக்குப் பின்னால் தரைவழித் தாக்குதலுக்கான சதியைத் தீட்டுகிறது" என்றார். மேலும் அவர், அமெரிக்கா "போரின் மூலம் அடைய முடியாத 15 அம்சப் பட்டியலுடன் தனது விருப்பங்களை முன்வைக்கிறது" என்றும் கூறினார். " அவர்கள் மீது நெருப்பை மழை எனப் பொழிவதற்காக அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக இரான் படைகள் காத்திருக்கின்றன, " என்றும் காலிபாஃப் கூறினார். இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு, அரபு மொழியில் பதிலளித்த காலிபாஃப், இரான் வழங்கும் செய்தி 'மிகவும் தெளிவானது' என்றும் அது 'அவமானத்தை' ஏற்காது என்றும் கூறினார். இதற்கிடையில், சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள், டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், வருங்காலத் தலைவராகவும் கருதுவதாகக் கூறுகின்றன. தரைவழித் தாக்குதலுக்குத் தயாரிப்பா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. அப்பத்திரிகையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், போரின் ஒரு புதிய கட்டம் தொடங்கும். இது முதல் நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று, 'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவின்படி, யுஎஸ்எஸ் திரிப்போலி தலைமையிலான பிரிவில் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளனர், அவர்கள் பல போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தற்போதைய திட்டங்களின்படி, இத்தகைய தரைவழி நடவடிக்கைகள் முழு அளவிலான தாக்குதலாக இருக்காது, மாறாக சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படை வீரர்களின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலில் உள்ள கப்பல்களில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் வளைகுடா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, 82-வது ஏர் போர்ன் டிவிஷனின் பாராட்ரூப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கூடுதல் வீரர்களை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் எகிப்து, செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தானில் கூடியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதுவரை அமெரிக்கா என்ன கூறியுள்ளது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமையன்று கூறினார். இந்த மாதத்தில் முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் எங்கும் படைகளை அனுப்பவில்லை" என்றார், ஆனால் உடனடியாக அவர், "ஒருவேளை நான் அனுப்பிக் கொண்டிருந்தால், நிச்சயமாக உங்களிடம் சொல்ல மாட்டேன்" என்றும் சேர்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே" அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். சமீபத்திய ராணுவ நகர்வுகள் டிரம்பிற்கு வாய்ப்புகளை வழங்குவதற்காகவே என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், "சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்ற அதிபருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார். யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை அடைந்துவிட்டதாக அமெரிக்க செண்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மீதான அவநம்பிக்கை புதியதல்ல அமெரிக்கா மீது காலிபாஃப் அவநம்பிக்கை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் பிபிசிக்குத் தெரியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. 1979 புரட்சிக்குப் பிறகு, இரான் கொள்கைகள் பெருமளவிற்கு மேற்கத்திய அரசியல், கலாச்சார மற்றும் கருத்தியல் செல்வாக்கிற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. மேலும் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தனது முக்கிய எதிரிகளாகப் பார்க்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தற்போதைய போர், ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முகமது பாகர் காலிபாஃப், இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர். கடந்த கோடைகாலத்திலும், அமெரிக்காவும் இரான் நாடும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இரான் மீதான தாக்குதல்கள் தொடங்கின. இதன் காரணமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது, மேலும் அமெரிக்கா இரான் நாட்டின் மூன்று முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. 2015 ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறிய பிறகு, அமெரிக்காவை நம்ப முடியுமா இல்லையா என்ற அளவுகோலிலேயே இரான் அதிகாரிகள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் முன்பை விட அதிக சந்தேகத்துடன் உள்ளனர். கத்தார் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடத்திய 10 ட்ரோன்களை செளதி அரேபியா தடுத்தது இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் செளதி அரேபியா கடந்த சில மணி நேரங்களில் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் இரவு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளன. கத்தாரின் அல் அரபி தொலைக்காட்சி நிறுவனம், தெஹ்ரானிலுள்ள அதன் அலுவலகம் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. துபையிலுள்ள எமது செய்தியாளரின் கூற்றுப்படி, கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddqy1l8238o- எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து
எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 11:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது. பயணிகள் தங்களது பயண அட்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. அனைத்து நுழைவு வாயில்களும் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும். இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது, அதற்கான காப்புறுதியை அரசாங்கம் ஏற்கும். தற்போது அவுஸ்திரேலியாவிடம் 39 நாட்களுக்கான ப பெற்றோலும், 30 நாட்களுக்கான டீசலும் கையிருப்பில் உள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/242192- அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல் Mar 29, 2026 - 02:18 PM அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத் தவறியதை நிலைநாட்ட முயல்கிறது என்றார். அமெரிக்க வீரர்கள் தரைவழியாக உள்ளே நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருப்பதாகவும், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம் என்றும் கலிபாப் எச்சரித்துள்ளார். ஈரான் சரணடைவது குறித்த கேள்விக்கு அரபு மொழியில் பதிலளித்துள்ள கலிபாப், ஈரானின் செய்தி தெளிவானது என்றும், தாங்கள் ஒருபோதும் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் கலிபாப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், ஒருவேளை எதிர்காலத் தலைவராகவும் கருதியதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmnbiod140000356pm1cq3tv6- 5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது
5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது 29 Mar, 2026 | 11:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது. ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார். எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார். இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம். இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது. அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242202- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை. சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.- தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்
நீங்கள், இவ்வளவு நாளும் புடுங்கின ஆணியே போதும். இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். தமிழருக்கு, நீங்கள் தான் பிரச்சினையே.... முதலில்... உங்கள் கட்சியின் பிரச்சினையை தீருங்கள். மிச்சத்தை பிறகு பாப்பம்.- யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம்
கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை திரும்பவும் அள்ளிய இடத்தில் கொண்டு கொட்டச் செய்தால் நிலம் பழுதாகாது பாதுகாக்கப்படுமே.🤔 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.