24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? அது இந்திய இலங்கை விசுவாசிகளை மகிழ்விப்பதற்காக சொல்லபட்ட தமிழ்யுரியுப் செய்தியாக தான் இருக்கும்
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரினால் அங்கே ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கடுமையாக ஒடுக்கபடுகின்றார்கள் மக்களை ஒருங்கிணைக்கும் எதிர்கட்சி தலைவர்கள் மாடியில் இருந்து தள்ளி விடப்படுவார்கள் அல்லது தேநீரில் விசம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இலங்கை நோக்கி வரும் அமெரிக்கா வழங்கிய 10 ஹெலிக்கொப்டர்கள்! 18 Mar, 2026 | 11:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட TH-57 Sea Ranger ரக 10 ஹெலிக்கொப்டர்கள் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஹெலிக்கொப்டர்கள், கடந்த 15ஆம் திகதி அலபாமா மாநிலத்தில் உள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவ பதிப்பாகிய இந்த ஹெலிக்கொப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் Bell 206 ரக விமானங்களுடன் இவை இணைவதன் மூலம் விமானப்படையின் செயல்திறன் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய ஹெலிக்கொப்டர்கள் மூலம் மேம்பட்ட விமானி பயிற்சி நடவடிக்கைகள், பேரிடர் கால அவசர மீட்புப் பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பொது பயன்பாட்டு சேவைகள் எனப் பல முக்கிய துறைகளில் திறன்கள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த ஹெலிக்கொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பு அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை விமானப்படையின் உயர்மட்ட குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து, இந்த ஹெலிக்கொப்டர்களை நேரில் பார்வையிட்டு, கப்பல் மூலம் அனுப்பும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதாகவும் தூதுவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241269
-
இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!
எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன Mar 18, 2026 - 10:19 AM திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். "எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. அவற்றில் சில சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு களஞ்சியசாலைகளில் உள்ளன. ஏனையவை மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டுள்ளன. நாம் மேலும் ஒரு எரிவாயு கப்பலை ஓடர் செய்துள்ளோம். அதன்படி நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் கிடைக்கவுள்ளது. எனவே, எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படாது. அடுத்ததாக ஏப்ரல் 21-23 காலப்பகுதியில் எரிவாயு வழங்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் அடுத்த கப்பலை அவர்கள் எமக்கு வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம். எரிவாயு சந்தையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு," என அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmvk9a2i0001356paqurd7xc
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் வருகிறது. மாறாக கூட்டணிவைத்த கட்சிகள் தேய்ந்து கொண்டு வருகின்றன.காலம் பதில் சொல்லும்.
-
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி: ஈராக்கின் இணக்கப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியது 18 Mar, 2026 | 10:36 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இன்று புதன்கிழமை (18) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெண்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 67 சதவீதத்தால் (0.65%) வீழ்ச்சியடைந்து 102.75 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (17) இதன் விலை 3 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், இன்று இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.18 டொலர்களால் (1.23%) வீழ்ச்சியடைந்து 95.03 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. துருக்கியின் செய்ஹான் துறைமுகத்தினூடாக மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பிப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கும் குர்திஷ் அதிகாரிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241256
-
2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
2025 க.பொ.த உயர்தர பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு 18 Mar, 2026 | 10:02 AM (இணையத்தள செய்திப் பிரிவு) எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். சாதாரணதரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் சாதாரணதரப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/241250
-
கருத்து படங்கள்
- இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா! Mar 18, 2026 - 08:35 AM அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள சதித் தன்மை குறித்த மேலதிக உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தின் போது, முடிவில்லாத போர்களில் அமெரிக்காவை சிக்க வைக்காமல் இராணுவ பலத்தை எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து அவருக்குச் சிறந்த புரிதல் இருந்ததாக கென்ட் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே உயர் இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் உள்ள செல்வாக்குமிக்க குழுக்கள் இணைந்து மிகவும் நுணுக்கமான முறையில் தவறான தகவல்களைப் பரப்பும் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் ட்ரம்ப்பின் 'அமெரிக்காவிற்கே முதலிடம்' என்ற கொள்கையை முழுமையாக முடக்கி, ஈரானுடன் ஒரு போரை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை அவர்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்போது தாக்குதல் நடத்தினால் மிக விரைவான வெற்றியைப் பெறலாம் என்றும் ட்ரம்ப் ஏமாற்றப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலத்தில் அமெரிக்காவை ஈராக் போரில் சிக்க வைப்பதற்காக இஸ்ரேல் பயன்படுத்திய தந்திரம் என்றும் ஜோ கென்ட் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். 45 வயதான கென்ட், அமெரிக்க விசேட படையணி மற்றும் சி.ஐ.ஏ ஆகியவற்றின் அனுபவமிக்க அதிகாரி ஆவார். இராணுவ வீராங்கனையான இவரது மனைவி ஷானன் கென்ட், 2019 ஆம் ஆண்டு சிரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvge9y90005356pfxy9d6y7- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு! கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில், பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் அனுமதியளித்த நிலையில் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை காரியாலயத்தில், சிவசேனை அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றதாக சிவசேனை அமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிவசேனை அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1468946- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ஷிடம் இலஞ்ச ஆணைக்குழு இரு மணிநேரம் விசாரணை Published By: Vishnu 18 Mar, 2026 | 05:25 AM (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (17) அவரிடம் விசேட விசாரணை ஒன்றினை நடத்தியது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் விசாரணைகளை நடத்தியதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்தது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்த பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் இருந்த காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டு, அந்த வீடமைப்புத் திட்டங்களில் உள்ள வீடுகள் பயனாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்தது. https://www.virakesari.lk/article/241245- இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அமெரிக்காவின் அதிரடி நன்கொடை: இலங்கைக்கு வரும் 10 ஹெலிகொப்டர்கள்! Mar 18, 2026 - 07:29 AM அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10 ஹெலிகொப்டர்களும் மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த ஹெலிகொப்டர்கள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த ஹெலிகொப்டர்களையும் இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெலிகொப்டர்கள் கணிசமான அளவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நன்கொடையானது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துவதாகவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகொப்டர்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவொன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தது. இந்த பெறுமதியான நன்கொடைக்காக இலங்கை தனது மனமார்ந்த நன்றியை அமெரிக்காவிற்கு தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmve2a3c0000356p3aj9w6ai- பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி!
பிரதமர் ஸ்டார்மர் – ஜனாதிபதி ட்ரம்ப் இடையே சமரசம் கோருகிறார் செலென்ஸ்கி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer ஆகிய இரு தலைவர்களும் சந்தித்துப் பேசி, ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். லண்டனில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசிய பின் பிபிசி-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் செலென்ஸ்கி இதனைத் தெரிவித்தார். ஈரான் மீதான போர் காரணமாக சர்வதேச நாடுகளின் கவனம் உக்ரைன் மீதிருந்து திசைமாறுவதாகவும், இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போவதாகவும் அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மீது ட்ரம்ப் அண்மையில் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை மிக அவசியம் என Zelensky சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ரஷ்யாவும் ஈரானும் வெறுப்பினால் இணைந்த ஆயுதச் சகோதரர்கள் என்றும், இத்தகைய ஆட்சிகள் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். ஈரான் போர் சூழலால் உக்ரைனின் நான்கு ஆண்டுகாலப் போராட்டம் பாதிக்கப்படுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் Volodymyr Zelensky கோரிக்கை விடுத்தார். https://athavannews.com/2026/1469024- ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன! ஈராக் அரசாங்கமும் குர்திஷ் அதிகாரிகளும் துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியமை மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளித்து. இதையடுத்து, சர்வதேச சந்தையில் புதன்கிழமை (18) எண்ணெய் விலைகள் ஓரளவு சரிந்தன. எனினும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைப் பெருமளவில் நிறுத்தியுள்ள ஈரான் மோதல் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை கடந்த நான்கு தொடர்ச்சியான அமர்வுகளாக ஒரு பீப்பாய் 100 டொலருக்கு மேல் நிலைபெற்றுள்ளது. செவ்வாயன்று 3% க்கும் அதிகமாக உயர்ந்த பின்னர், பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை புதன்கிழமை 0209 GMT நிலவரப்படி 67 சென்ட்கள், அதாவது 0.65% சரிந்து, ஒரு பீப்பாய் $102.75 ஆக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் $1.18, அதாவது 1.23% சரிந்து, $95.03 ஆக இருந்தது. பாக்தாத்தின் அரச ஊடக தகவல்களின்படி, செய்ஹானில் இருந்து எண்ணெய் வரத்து புதன்கிழமை காலை 0700 GMT மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈராக்கின் எண்ணெய் அமைச்சர் ஹயான் அப்தெல்-கனி தெரிவித்தார். அத்துறைமுகம் வழியாக ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100,000 பீப்பாய்கள் மசகு எண்ணெயை அனுப்ப ஈராக் முயன்று வருவதாக இரண்டு எண்ணெய் அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். ஈராக்கின் பெரும்பாலான மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் அதன் முக்கிய தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் உற்பத்தி 70% சரிந்து, ஒரு நாளைக்கு வெறும் 1.3 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது என்று மார்ச் 8 அன்று தகவல்கள் தெரிவித்தன. உலகளாவிய எண்ணெயில் சுமார் 20% கடந்து செல்லும் முக்கிய ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதே இதற்குக் காரணம். இதேவேளை, இஸ்ரேலிய தாக்குதலில் தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கிய முதல் நாளிலிருந்து குறிவைக்கப்பட்ட மிக மூத்த தலைவர் இவரே ஆவார். இடைநிலை நாடுகள் தெரிவித்த பதற்றத்தைத் தணிக்கும் சலுகைகளை ஈரானின் புதிய உச்ச தலைவர் நிராகரித்துவிட்டதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறினார். ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அங்குள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் கடற்கரையோர இடங்களைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் செவ்வாயன்று கூறியது. லாரிஜானியின் மரணம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய கடலோர நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்கள், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற சில நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன என்று சைனா ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி மற்றும் இரசாயனங்களுக்கான தலைமை ஆராய்ச்சியாளர் மிங்யு காவ் கூறியுள்ளார். மார்ச் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு 6.56 மில்லியன் பேரல்கள் அதிகரித்துள்ளதாக, செவ்வாயன்று வெளியான API புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் 13-ஆம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு சுமார் 380,000 பேரல்கள் அதிகரித்திருக்கும் என ரொய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2026/1468929- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் Mar 18, 2026 - 06:59 AM ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தளம் ஒன்றின் மீது நேற்று (17) மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், தூதரக வளாகத்திற்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmvd3ih40003356pla2h2uyu- Today
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானின் 'மூளை'யை சாய்த்த இஸ்ரேல்! உறுதிப்படுத்திய ஈரான்! Mar 18, 2026 - 06:51 AM இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில், லரிஜானியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் பாராட்டியுள்ளது. ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது. ஈரானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக அவர் விளங்கியதால், அவரது மரணம் தற்போதைய போர்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலி லரிஜானி, 2025 ஓகஸ்ட் மாதம் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன், அவர் ஈரான் ஜனாதிபதியினதும் மற்றும் மறைந்த ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvcv36w0002356p1selt0i1- இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோ கென்ட் நீண்டகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராகவும், அமெரிக்க இராணுவத்தின் கௌரவிக்கப்பட்ட ஒரு படைவீரராகவும் இருந்து வருகிறார். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர் வெள்ளை மாளிகையிலிருந்து 13 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இரானால் அமெரிக்காவிற்கு "உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார். "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள சக்தி வாய்ந்த அதன் ஆதரவு சக்திகளின் அழுத்தம் காரணமாகவே இந்த நிர்வாகம் போரைத் தொடங்கியது" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகை இந்தக் கடிதத்தை நிராகரித்துள்ளது. இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான "வலுவான ஆதாரங்கள்" அதிபரிடம் இருப்பதாக அது கூறியுள்ளது. அமெரிக்காவின் வெறுப்புணர்வைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று, கென்ட் "யூத எதிர்ப்பு உணர்வுகளைத்" தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஜோ கென்ட்டின் விலகல், டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே இருந்து இரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலைப் பகிரங்கமாக விமர்சித்த மிக உயர்மட்ட நபராக அவரை மாற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், கென்ட் ஒரு "நல்ல மனிதர்", ஆனால் "பாதுகாப்பு விஷயத்தில் பலவீனமானவர்" என்று கூறினார். கென்ட்டின் ராஜினாமா கடிதம் குறித்து பேசிய டிரம்ப் "அவர் வெளியேறியது ஒரு நல்ல விஷயம்" என்பதைத் தனக்கு உணர வைத்திருப்பதாக கூறினார். கடிதத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில், "உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகள்" மற்றும் செல்வாக்கு மிக்க அமெரிக்க பத்திரிகையாளர்கள் "தவறான தகவல்களைப்" பரப்பியதாகவும், இது அதிபரின் "அமெரிக்காவே முதன்மை" என்ற கொள்கையை சீர்குலைக்க வழிவகுத்ததாகவும் கென்ட் குற்றம் சாட்டியுள்ளார். "இரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்ப வைக்க இந்தத் தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இது ஒரு பொய்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நீண்டகாலமாக டிரம்பின் ஆதரவாளராக இருந்த கென்ட், இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். டிரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே அவர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்று பதவியேற்றார். 2022 தேர்தலின் போது 'பிரவுட் பாய்ஸ்' (Proud Boys) என்ற தீவிர வலதுசாரி குழுவின் உறுப்பினரை ஆலோசகராக நியமித்ததற்காக கென்ட் மீது ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் வைத்திருந்தனர். தனது நியமன உறுதிப்படுத்தல் விசாரணைகளின் போது, அமெரிக்க கேபிட்டலில் ஜனவரி 2021-ல் நடந்த கலவரத்தை பெடரல் ஏஜென்ட்கள் தூண்டிவிட்டார்கள் என்றோ, 2020 தேர்தலில் டிரம்ப் தோற்கடிக்கப்படவில்லை என்றோ அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்க கென்ட் மறுத்துவிட்டார். எதிர்ப்புகளும் எதிர்வினைகளும் அமெரிக்காவின் யூத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான 'அவதூறு எதிர்ப்பு லீக்' (ADL), கென்ட்டின் குற்றச்சாட்டுகள் "பழைய கால யூத எதிர்ப்பு கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன" என்று கூறியுள்ளது. "அவர் இஸ்ரேல் மீதும் ஊடகங்கள் மீதும் பழி சுமத்துவதில் ஆச்சரியமில்லை," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஆதரவு குழுவான அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (Aipac), ADL-இன் அறிக்கையை எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு Aipac உடனடியாகப் பதிலளிக்கவில்லை. தாராளவாத இஸ்ரேல் ஆதரவுக் குழுவான ஜே ஸ்ட்ரீட்டின் மூத்த அதிகாரியான இலான் கோல்டன்பெர்க், கென்ட்டின் கடிதத்தை "மிக மோசமான யூத-விரோதக் கருத்துகளைப் பயன்படுத்தும் அருவருப்பான விஷயம்" என்று விவரித்தார். சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி 45 வயதான கென்ட், அமெரிக்கச் சிறப்புப் படை மற்றும் சிஐஏ (CIA) ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவியும், கடற்படை குறியீட்டு தொழில்நுட்ப வல்லுநருமான ஷானன் கென்ட், 2019-ல் சிரியாவில் நடந்த ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படை உட்பட, அமெரிக்க ராணுவத்துடன் 11 முறை வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் சிஐஏ-வில் துணை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார், அதன்பின்னர் தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து அரசுப் பணியிலிருந்து விலகினார். தனது கடிதத்தில் இராணுவச் சேவை மற்றும் மனைவியின் இறப்பைக் குறிப்பிட்டுள்ள கென்ட், "அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் தராத, அமெரிக்க உயிர்களின் இழப்பிற்கு நியாயம் கற்பிக்க முடியாத ஒரு போரில் அடுத்த தலைமுறையினரைச் சண்டையிட அனுப்புவதை என்னால் ஆதரிக்க முடியாது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில், கென்ட் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டின் கீழ் பணியாற்றினார். கென்ட்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, துளசி கப்பார்ட் இரான் மீதான டிரம்பின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "அதிபர் அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவை எடுத்தார்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "முப்படைத் தளபதி என்ற முறையில், எது உடனடி அச்சுறுத்தல், எது அச்சுறுத்தல் அல்ல என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அதிபருக்கு உள்ளது" என்று அவர் கூறினார். "தனக்கு முன் இருந்த அனைத்து தகவல்களையும் கவனமாக ஆய்வு செய்த பின்னர், இரானில் உள்ள பயங்கரவாத இஸ்லாமிய ஆட்சி உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற முடிவுக்கு டிரம்ப் வந்தார், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "மற்றவர்களின் செல்வாக்கின் பேரில்தான் டிரம்ப் இந்த முடிவை எடுத்தார் என்ற கென்ட்டின் கருத்து அவமதிப்புக்குரியது மற்றும் வேடிக்கையானது," என்றார். "டிரம்ப் வெளிப்படையாக கூறியது போல, இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான வலுவான சான்றுகள் அவரிடம் இருந்தன," என்றார். பழமைவாத ஊடக விமர்சகரான டக்கர் கார்ல்சன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனக்கு நெருங்கிய உறவான கென்டைப் பாராட்டினார். "எனக்குத் தெரிந்தவர்களிலேயே ஜோதான் மிகவும் தைரியமானவர், அவரை ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்று ஒதுக்க முடியாது," என்று கார்ல்சன் கூறினார். "உயர்மட்ட, தொடர்புடைய உளவுத் தகவல்களை அணுகும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய ஒரு வேலையை அவர் விட்டுச் செல்கிறார். அதற்காக பழமைவாதிகள் அவரை அழிக்க முயற்சிப்பார்கள்." "அது தெரிந்தும் அவர் அதைச் செய்தார்," என்றார் அவர் . கென்ட் விலகலை தொடர்ந்து, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் அமலாக்க இயக்குநர் மார்கரெட் ரியான் மற்றும் கென்னடி மையத்தின் தலைவர் ரிக் கிரெனெல் உட்பட, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் முந்தைய 2017-21 காலகட்டத்தை விட இப்போது அதிகாரிகளின் மாற்றம் குறைவாகவே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70n0zdjryro- வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன — கருணாகரன் —
பகிர்விற்கு நன்றி அண்ணை.- ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
ஏன் தம்பி ஒரு சாரதியைப் போட்டு ஓட்ட வேண்டியது தானே. உங்க கதையைக் கேட்டா நாட்டில சனத்தொகை கூடிடுமே?- இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
QR குறியீட்டை பெற்றுக்கொள்ள விசேட WhatsApp இலக்கம் அறிமுகம் Mar 18, 2026 - 12:18 PM தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்பதுடன், வழங்கப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvofz4o0008356prof4au6u- ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்
ஒரு மரத்திற்கு ரூ.1 கோடி 'இழப்பீடு' வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் வாங்கிய விவசாயி மரணம் – ரயில்வே கூறுவது என்ன? பட மூலாதாரம்,Bhagyashree Raut படக்குறிப்பு,கேஷவ் ஷிண்டே மற்றும் அவரது நிலத்தில் உள்ள மரம் கட்டுரை தகவல் பாக்யஶ்ரீ ராவத் பிபிசி மராத்தி 17 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரின் நிலத்தை கையகப்படுத்திய ரயில்வே துறை, அவர் நிலத்தில் உள்ள சிவப்பு சந்தன மரத்திற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரயில்வே துறையும் இழப்பீட்டு தொகையை செலுத்திய நிலையில், அது சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் அது சுமார் ரூ.10,000 மதிப்புள்ள சாதாரண மரம்தான் என்றும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததால் இந்த வழக்கு புதிய திருப்பத்தைச் சந்தித்தது. ஆனால் இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நிவாரணம் பெற்ற விவசாயி தற்போது உயிரிழந்துவிட்டார். மகாராஷ்டிராவின் யவாட்மாலை சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த கேஷவ் ஷிண்டே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரின் குடும்பம் தெரிவித்தது. ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டில் அவர் ரூ.50 லட்சத்தை எடுத்துள்ள நிலையில் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் தற்போது உயர் நீதிமன்றத்தில் வைப்பு நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் கேஷவ் எடுத்திருந்த 50 லட்சம் ரூபாய் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவரின் வாரிசுதாரர் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என ரயில்வே நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. ரயில்வே துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீர்ஜா சௌபே கூறுகையில், "உயர் நீதிமன்றம் எங்களை கீழமை நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இது சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் பிஜாசல் மரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார். தற்போது இது சிவப்பு சந்தன மரமா, இல்லையா என்பதை கீழமை நீதிமன்றத்தில் விவசாயி தரப்பில் நிருபிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அதை நிருபிக்க முடியவில்லை என்றால் மரத்தின் மதிப்பு ரூ.10,000 ஆக குறைந்துவிடும் என்றும் மீதமுள்ள பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்த மதிப்பீடு தவறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என விவசாயி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. விவசாயி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா ராவத், "நீதிமன்றத்தில் ரயில்வே தாக்கல் செய்த அறிக்கையில் மரத்தின் மதிப்பு சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மற்றும் திருடப்பட்ட மரக்கட்டையின் மதிப்பை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மரம் அப்படியே உள்ளது. மரத்தின் எடை 400 டன் ஆக உள்ளது. அதற்கேற்ப மதிப்பிடப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார். மரம் மீண்டும் மதிப்பிடப்படும் என விசாரணையின்போது நீதிமன்றம் வாய்மொழியாக தெரிவித்ததாக குறிப்பிடும் அவர், "மரத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால் ரயில்வே தரப்பு கூடுதல் தொகையை விவசாயியிடம் செலுத்த வேண்டும், அதற்கு குறைவாக இருந்தால் விவசாயி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது. ஆனால் எழுத்துப்பூர்வமான உத்தரவு தற்போது வரை கிடைக்கவில்லை." என்றார். இந்த வழக்கு தற்போது யவாட்மலில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது. விவசாயியின் வாரிசுகள் என்ன சொல்கிறார்கள்? கேஷவ் ஷிண்டே எடுத்த ரூ.50 லட்சத்தை அவரின் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில் மதிப்பீடு குறைந்து போனால் அவரின் வாரிசுகள் அந்தப் பணத்தை எப்படி திருப்பிச் செலுத்துவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டால் பணத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக கேஷவ் ஷிண்டேவின் மூத்த மகன் பஞ்சாப் ஷிண்டே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை அவர்தான் கையாண்டு வருகிறார். இந்த மரம் ரூ.10,000 மதிப்புள்ளதுதான் எனக் கூறி ரயில்வே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,கேஷவ் ஷிண்டே மற்றும் அவரது மகன் பஞ்சாப் ஷிண்டே "எங்களின் மரம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே மரம் வழங்கும் ஆக்சிஜன் மற்றும் அதன் சூழலியல் மதிப்பும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் மதிப்பீட்டை தவறான வழியில் செய்துள்ளார்கள். 100 ஆண்டு பழமையான மரத்தை நாம் மதிப்பிட்டால் அது 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செல்லும்." என பஞ்சாப் ஷிண்டே தெரிவித்தார். மேலும் அவர், "அந்த மரம் முறையாக மதிப்பிடப்பட வேண்டும். அதன் செல்லுபடித்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். அது நடந்தால் விதிப்படி பணத்தை திருப்பிச் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றார். என்ன நடந்தது? விவசாயியான கேஷவ் ஷிண்டே 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, தனது சிவப்பு சந்தன மரத்திற்கு இழப்பீடு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது நிலத்தை ரயில்வே பணிகளுக்காக ரயில்வே துறை கையகப்படுத்தியிருந்தது. அந்த நிலத்திற்கான இழப்பீட்டை அவர் பெற்றிருந்தார். அதோடு நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் நிலத்தடி குழாய்க்குமான இழப்பீட்டை அதிகாரிகளிடம் கோரி வந்தார். ஆனால் 'சிவப்பு சந்தன' மரம் முதலில் மதிப்பிடப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறி வந்த நிலையில் மதிப்பீடு நடத்த வனத்துறையிடம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. கேஷவ் ஷிண்டேவின் நிலத்தில் மா மரங்களும் இதர பழத்தோட்டங்களும் இருந்ததாக அவரின் மகன் பஞ்சாப் ஷிண்டே தெரிவிக்கிறார். "அந்த மரங்களுக்கு இழப்பீடு கிடைத்தது. கிணற்றுக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்தது. ஆனால் குழாய் மற்றும் சந்தன மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கு இழப்பிடு கிடைக்கவில்லை. இதற்காக 2014-ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட ஆட்சியர், வனத்துறை, ரயில்வே, பாசனத் துறை ஆகிய துறைகளுக்குத் தொடர்ந்து எழுதி வந்தோம். ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை, எனவே உயர் நீதிமன்றத்தை அணுகினோம்." என்றார். பட மூலாதாரம்,Bhagyashree Raut படக்குறிப்பு,சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ள மரம் இந்த வழக்கில் ரயில்வே ரூ.1 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ரயில்வே 1 கோடி ரூபாய் தாக்கல் செய்த நிலையில் அதில் 50 லட்சம் ரூபாயை விவசாயி எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் மரம் மதிப்பிடப்படவில்லை. மரத்தை மதிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மதிப்பீட்டிற்குப் பிறகு இழப்பீடு அதிகரித்தால் ரயில்வே கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு மரத்தை மதிப்பிடும் பணி பெங்களூருவில் உள்ள சர்வதேச மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் வனத்துறையால் வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய அறிக்கையில் அந்த மரம் சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் அது பிஜசல் மரம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை நாடியுள்ள ரயில்வே மரத்தின் மதிப்பு வெறும் சுமார் 10,000 ரூபாய் எனத் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddn1vjyv0eo- வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி!
வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி; 0.07% எதிர்ப்பு வாக்குகள் குறித்து இணையத்தில் நகைச்சுவைப் பதிவுகள் 18 Mar, 2026 | 12:16 PM வட கொரியாவில் நடைபெற்று முடிந்த 2026 நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 வீத வாக்குகளை பெற்றதோடு, அனைத்து இடங்களையும் கைப்பற்றி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் சாதனை படைத்துள்ளன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99 வீதம் பேர் வாக்களித்துள்ளனர். 0.0037 வீதம் பேரால் வாக்களிக்க முடியவில்லை. 0.00003 வீதம் பேர் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர். வாக்களித்தவர்களில் 99.93 வீதமானோர் வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். 0.07 வீதமானோர் எதிராக வாக்களித்துள்ளனர். இந்த எதிர்ப்பு வாக்கு வீதமானது இணையத்தில் கிண்டலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. “அந்த 0.07 வீதமானோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி” என்றும் “அந்த 0.07 வீதம் பேரின் பெயர்களை கூறுங்கள்” என்றும் பலர் நகைச்சுவையாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/241275- புற்றுநோயால் போராடும் குழந்தைகளுக்கு 1996 உலகக்கிண்ண வீரர்கள் இணைந்து நம்பிக்கையை விதைத்த சிறப்பு நிகழ்வு
புற்றுநோயால் போராடும் குழந்தைகளுக்கு 1996 உலகக்கிண்ண வீரர்கள் இணைந்து நம்பிக்கையை விதைத்த சிறப்பு நிகழ்வு 18 Mar, 2026 | 10:35 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட 1996 உலகக்கிண்ண வெற்றியின் 30ஆம் ஆண்டு நினைவாக, சிறப்பு நினைவுவிழா ஒன்று செவ்வாய்க்கிழமை (17) மஹரகமவில் அமைந்துள்ள Indira Cancer Trust வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு Sri Lanka Cricket Foundation மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் இணைப்பில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1996 உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியின் முக்கிய வீரர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்தவாஸ், ரொஷான் மஹாநாம, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டதுடன் நவீன் திஸாநாயக்க தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, 1996 உலகக்கிண்ணத்தை (World Cup Trophy) பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் அந்த வரலாற்றுச் சாதனையின் சின்னத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றதுடன், அவர்களின் மன உறுதியும் உற்சாகமும் உயர்ந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது, 1996 உலகக்கிண்ண அணியின் வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நினைவுவிழாவுடன் இணைந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் Sri Lanka Cricket Foundation மற்றும் Indira Cancer Trust ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை, புற்றுநோய் மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, மனநலம் சார்ந்த ஆதரவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி வருகிறது. அதேபோல், 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளை, விளையாட்டு வளர்ச்சியுடன் சமூக நலத்திட்டங்களிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த நிகழ்வு, 1996 உலகக்கிண்ண வெற்றியின் பெருமையை நினைவுகூருவதோடு, மனிதநேயப் பணிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியதாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/241260- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சர்வாதிகாரத்தின் குரல் அக்கறையாகவே தென்படும் By ஆர். அபிலாஷ் March 15, 2026 //வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம். இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும்.// - ஜெயமோகன்" என்னப் பிரச்சினை என்றால் ஜெயமோகன் அளிக்கும் விருதோ அவரது பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படும் விருதுகளோ எழுத்தாளர்களை நாவற்றவர்களாக மாற்றுகின்றன, ஒருவித கண்காணிப்புப் பிரதேசமாக, போலீஸ் ஸ்டேட்டாக தமிழ் இலக்கியத்தை மாற்றுகிறது. அவரது பாசிசப் போக்கு இங்கு சுதந்திரமான உரையாடலுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. அவரது கூட்டங்களில் கைகட்டி அமர்ந்து பழகுவோர் பிறகு எங்கும் மனம் திறந்து பேசவோ எழுதவோ முடியாதவர்கள் ஆகிறார்கள். அவர்கள் எதிர்ப்புணர்வை இழந்தால் ஒழிய அவர் 'அளிக்கும்' பரிசுகளை, விருதுகளைப் பெற இயலாது. ஜெயமோகன் ஒவ்வொரு படைப்பாளிக்கு விருது கொடுக்கும்போது பூனையின் நகங்களைப் பிடுங்கிவிட்டு அதைப் பதுமையாக்குவதைப் போலத்தான் அவர்களைத் தன்வயப்படுத்தி மேடையில் முன்வைக்கிறார். ரமேஷ் பிரேதனுக்கு உதவுகிறேன், கௌரவிக்கிறேன் எனும் பெயரில் அவரை இவர் அவமதித்ததை மறக்க முடியாது. அதைப் பார்ப்பவர்களும் அதன்பிறகு வாயை மூடிக் கொள்வது, ஜெயமோகனைப் பிரதியெடுப்பது, ராணுவ ஒழுங்குடன் பின்தொடர்வதுதான் தம்மை முன்னேற்றும் என உபமனத்தில் நம்பத் தொடங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற விருதுகள், இலக்கிய இயக்கங்களைப் போல் அல்லாது அவர் வழங்கும் விருதுகளும் நடத்தும் இயக்கமும் அவரை மையமிட்டு அவரைப் புகழ்ந்தே வழங்கப்படுகின்றன, நடத்தப்படுகிறது. அவரது எல்லா கேடுகளும் ஹிட்லர்தனங்களும் அவற்றிலும் கலந்து விடுகிறது. ஜெயமோகனின் பெரிய பிரச்சினை அவருக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, அடுத்தவர்கள் இடத்தில் தன்னை வைத்துப் புரிந்துகொள்ளும் திறனும் இல்லை என்பது. இயல்பிலேயே ஹிட்லருக்கு இருந்த மிகை தன்மதிப்பு, வெறுப்பின் அடிப்படையில் சதா சிந்திப்பது, இருமையாக உலகைப் பாவிப்பது ஆகிய குணங்கள் இவரிடமும் உண்டு. இந்த வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தையும் பாருங்கள், முழுக்க முழுக்க அவர்கள் vs நாம் எனும் முரணெதிர்வையே கட்டமைக்கிறார். அதோ அங்கே ஓடுகிறவன் துரோகி, நம் மதத்தை வெறுப்பவன் , அவனை நோக்கிக் கல்லெறியுங்கள், நாமெல்லாம் உத்தமர்கள், அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் எனும் இந்த முரணெதிர்வு தர்க்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் எல்லா முழக்கங்களிலும் உண்டு. அதை ஜெயமோகன் அதோ ஓடுகிறவன் நம் இலக்கிய மேன்மைக்கு விரோதி, அவனைக் கல்லெறியுங்கள், அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னிடம் இணையுங்கள், செயல்படுங்கள் என மாற்றுகிறார். இதைத்தான் ஹிட்லரும் பயன்படுத்தினார். இது சுயபரிசீலனையை, சுயவிசாரணையை, கேள்வியை மறுக்கும் போக்கு. இது ஜனநாயக விரோதமான ஒரு உத்தி. ஆக, ஜெயமோகன் இங்கு முன்வைக்கும் சீர்திருத்த நடவடிக்கை எனக்கு மோடியின் பொருளாதார, கலாச்சார சீர்திருத்தங்களைத்தாம் நினைவுபடுத்துகின்றன. எந்த உரையாடலும், ஜனநாயக நடைமுறைகளும் இல்லாத மேல்-கீழ் படிநிலையை வலியுறுத்துகிற எதேச்சதிகார முயற்சிகள். அதனாலே, வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் செய்வதை விட ஜெயமோகன் செய்வது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பண்பாட்டுத்தளத்தில் ஜனநாயக விழுமியங்களை ஒழித்து ஒற்றை மைய, எதேச்சதிகாரப் போக்கை நிறுவுவதே ஜெயமோகனின் நோக்கம், அவருக்கான இடுபணி. பாஜக தேசிய அளவில் செய்வதை அவர் இங்கு பண்பாட்டுத் தளத்தில் செய்ய முயல்கிறார். "குற்றமும் தண்டனையும்" நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் நாட்டில் உள்ள அத்தனை அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகளைப் பட்டியலிட்டுவிட்டு இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கொலை செய்யப் போகிறேன் என்பான். எனக்கு ஜெயமோகனின் கொந்தளிப்பான வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தைப் பார்க்கையில் அதுதான் நினைவுக்கு வருகிறது. சர்வாதிகாரத்தின் குரல் ஆரம்பத்தில் அக்கறையாகவே தென்படும். https://www.writerabilash.in/2026/03/blog-post_73.html - இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.