Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. எனது கருத்தும் இதுவே. கடந்தகால உதவித்திட்ட அனுபவங்களிலிருந்து, ஏராளன் வெற்றிகரமாக நடத்தி வரும் அமைப்புக்கு இடையூறு ஏற்படுத்தாமல் விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
  3. முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது 05 January 2026 முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதன்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/439109/mullaitivu-girls-death-expert-committees-action-report-released
  4. கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பாதிக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. அதேசமயம், வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதன் ஆதிக்க மனப்பான்மை சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/439137/us-has-no-right-to-annex-greenland-danish-prime-minister
  5. சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.
  6. Today
  7. தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை adminJanuary 5, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார். “பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார். 🔍 பின்னணி: தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/225683/
  8. ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை : adminJanuary 5, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) இன்று (ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை) காலை இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளாா். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்தின் (Ministry of Agriculture) அலுவலகத்தை அமைப்பதற்காக ஒரு தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது அரசாங்கத்தின் விதிகளுக்குப் புறம்பாக அதிகப்படியான வாடகைத் தொகை செலுத்தப்பட்டமை மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களுடன் அவர் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். விவசாய அமைச்சகத்திற்காக ராஜகிரியவில் உள்ள குறித்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சரவையின் அனுமதி மற்றும் கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender Procedures) சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆணைக்குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. https://globaltamilnews.net/2026/225679/
  9. நான் மேலே கூறியவை யாவும் எடுகோள்களே. செய்திக்கு அப்பால் சென்று, என்ன நடக்கிறது என்பதை உய்துணர முயலும் முயற்சி மட்டுமே. இப்படித்தான் நடக்கிறது என்றால்… இந்த சங்கியிலின் ஓரங்கமாகவே நான் டிரம்பின் முதலாவது தேர்தல், பிரெக்சிற், கொவிட் உருவாக்கம், டிரம்பின் 2ம் தேர்வு ஆகியவற்றை காண்கிறேன். பிகு இவை 100% சதிகோட்பாட்டு என புறம்தள்ள தக்க கருத்துக்கள் என்பதை முழுதாக ஏற்கிறேன்.
  10. குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம்.
  11. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 05 Jan, 2026 | 08:35 AM தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார். அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/235232
  12. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை Jan 5, 2026 - 09:49 AM முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைதானார். அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk0nj1jj03ilo29nxi2h1ips
  13. வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு பட மூலாதாரம்,US government படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் மற்றும் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர் வாஷிங்டனில் இருந்து வெனிசுவேலா மீதான அமெரிக்கத் தாக்குதலைப் பார்வையிட்டனர். கட்டுரை தகவல் ஆண்டனி ஸூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் வெனிசுவேலாவில் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் ரகமான ஒரு இரவு நேரத் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் செயலில் இறங்குவது போல் தெரிகிறது. சனிக்கிழமை காலை தனது மார்-ஏ-லகோ ஓய்வு விடுதியில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்கச் செய்தியாளர் சந்திப்பில், கராகஸில் இரவு நேர நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பிடித்ததாக அதிபர் அறிவித்தார். அதன்பிறகு, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் உள்ளிட்ட குழுவினர், வெனிசுவேலா மக்களுடன் இணைந்து, சிக்கலில் தவிக்கும் அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பார்கள் என்று டிரம்ப் கூறினார். "ஒரு பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான அதிகார மாற்றத்தைச் செய்யும் வரை நாங்கள் அந்த நாட்டை நிர்வகிப்போம்," என்று அவர் கூறினார். "நாட்டை நிர்வகிப்பது" என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வாக்குறுதி அதிபரின் போக்கில் முரண்பாடுகளும் அச்சுறுத்தும் தடைகளும் நிறைந்த ஒரு திடீர் மாற்றத்தைக் காட்டுகிறது "முடிவில்லாப் போர்களுக்கு" எதிராகப் பிரசாரம் செய்த, ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் கடந்த கால முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்த மற்றும் "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதாக உறுதியளித்த ஒரு அதிபர், இப்போது தனது அதிபர் பதவியையே பொருளாதாரம் சீர்குலைந்துள்ள மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பல தசாப்த கால சர்வாதிகாரத்தால் சிதைக்கப்பட்டுள்ள ஒரு தென் அமெரிக்க நாட்டை மறுசீரமைப்பதில் பணயம் வைத்துள்ளார். இருப்பினும் டிரம்ப் இடைவிடாத நம்பிக்கையுடன் இருந்தார். தனது நிர்வாகம் "வெற்றி பெறுவதில் ஒரு சரியான சாதனை தடத்தை கொண்டுள்ளது" என்றும் - இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார். வெனிசுவேலாவின் சிதைந்து வரும் தொழில்முறை உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் ஈடுபடும் என்று அவர் உறுதியளித்தார். இது அமெரிக்காவின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதி வழங்கும் மற்றும் வெனிசுவேலா மக்களுக்குப் பயனளிக்கும் என்றார் அவர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல் பற்றி ரஷ்யா, சீனா, கியூபா கூறியது என்ன? குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடித்தால் மாரடைப்பு ஏற்படுமா? தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்? கிரிக்கெட் நடுவராவது எப்படி? தகுதி, தேர்வு முறை, ஊதியம் மற்றும் சலுகைகள் விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது இந்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்க வீரர்களை வெனிசுவேலாவிற்கு அனுப்பும் வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. "நாங்கள் தரைப்படையைப் பயன்படுத்த அஞ்சவில்லை... நேற்றிரவு எங்கள் வீரர்கள் அங்கே இருந்தார்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,Getty Images இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், இப்போது இராக் போரை வடிவமைத்தவர்களில் ஒருவரான வெளியுறவுத்துறை செயலாளர் காலின் பவலின் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியிருக்கும்: "நீங்கள் ஒன்றை உடைத்தால், அதற்கு நீங்களே உரிமையாளர்" நன்மையோ, தீமையோ அமெரிக்கா வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றி அமைத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு அமைதியை நிலைநாட்டுபவராக இருப்பேன் என கூறி டிரம்ப் பதவியேற்றார். ஆனால் உலகம் முழுவதும் ராணுவ பலத்தைப் பயன்படுத்த தயாராக இருப்பதை கடந்த ஒரு ஆண்டில் அவர் நிரூபித்துள்ளார். கடந்த வாரத்தில், சிரியா மற்றும் நைஜீரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 2025-இல் அவர் இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், கரீபியனில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள், ஏமனில் உள்ள கிளர்ச்சிப் படைகள், சோமாலியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்களைத் தாக்க உத்தரவிட்டார். கடந்தகால நடவடிக்கைகள் பெரும்பாலும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை உள்ளடக்கியவை, அவை அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைத்தன. ஆனால் டிரம்பின் வெனிசுவேலா தாக்குதல் - மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது உறுதிப்பாடுகள் - குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை. அவரது குறிக்கோள், வெனிசுவேலாவை "மீண்டும் சிறந்ததாக்குவது" (Make Venezuela great again) என்று அவர் தனது செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். டிரம்பின் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்" என்ற முழக்கத்தின் இந்த தாக்கம், டிரம்பின் சில ஆதரவாளர்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். பட மூலாதாரம்,TRUTH SOCIAL படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ டிரம்ப் ஆதரவாளராக இருந்து, அவர் தனது அரசியல் தளத்தைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி அவரிடமிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபரின் நடவடிக்கைகளைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக பதிவிட்டார். "முடிவே இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்கான நமது அரசின் ஆதரவு மீது அமெரிக்கர்களுக்கு இருக்கும் வெறுப்பு நியாயமானது; ஏனெனில் அதற்குப் பணம் செலுத்த நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இரு தரப்புமே வாஷிங்டனின் ராணுவ இயந்திரத்திற்கு எப்போதும் நிதி வழங்கி அதனைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டார். "இதனை முடிவுக்குக் கொண்டு வரத்தான் தாங்கள் வாக்களித்ததாக பல MAGA ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தவறாக கணித்துவிட்டோம்." டிரம்பின் மற்றொரு முக்கிய விமர்சகரான கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி, மதுரோ மீது ஆயுதங்கள் மற்றும் கோகெயின் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையும், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க எண்ணெயை மீட்டெடுப்பது மற்றும் ஃபென்டானில் உற்பத்தியை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டு விமர்சித்தார். பெரும்பாலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபருக்குப் பின்னால் அணி திரண்டுள்ளனர். சபாநாயகர் மைக் ஜான்சன், ஒரு "குற்றவியல் ஆட்சிக்கு" எதிரான இந்த ராணுவ நடவடிக்கையை "தீர்க்கமானது மற்றும் நியாயமானது" என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது, வெனிசுவேலா நடவடிக்கை தனது "அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை" என்ற கொள்கையையே முன்னெடுத்துச் செல்வதாக டிரம்ப் கூறினார். ஏனெனில் இது அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எண்ணெய்க்கான நிலையான ஆதாரத்தையும் வழங்கும் என்பது அவரது கருத்து. மேற்கத்திய அரைக்கோளம் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்கள்) ஐரோப்பிய சக்திகளின் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்தும் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையான 'மன்றோ கோட்பாட்டை' அவர் மீண்டும் கையில் எடுத்து, அதற்கு "டான்ரோ கோட்பாடு" என்று டிரம்ப் புதிய பெயரிட்டார். பட மூலாதாரம்,Jeenah Moon/Reuters படக்குறிப்பு,மதுரோவை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் ஹெலிகாப்டர் மன்ஹாட்டனில் தரையிறங்கிய போது எடுத்த படம் வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, "மேற்கத்திய அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது" என்பதைக் காட்டுகிறது என்று டிரம்ப் கூறினார். புதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தியின் குறிக்கோள், "நமது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமாக விளங்கும் வர்த்தகம், நிலப்பரப்பு மற்றும் வளங்களைப் பாதுகாப்பதாகும்" என்று அவர் கூறினார். அவர் மேற்கத்திய அரைக்கோளத்தை அமெரிக்காவின் "சொந்த பிராந்தியம்" என்று வர்ணித்தார். மதுரோவை சிறைபிடிக்க டிரம்ப் எடுத்த முடிவு, உலகளாவிய அரசியலில் பெரிய கவலைகளை எழுப்பும். உலகின் பிற முக்கிய ராணுவ வல்லரசுகளுடனான அமெரிக்காவின் உறவுகளையும் பாதிக்கும். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற தாக்குதலுக்கு அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பைடன் நிர்வாகத்தின் போது, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்கா இதேபோன்ற கண்டனங்களைத் தெரிவித்தது. இப்போது டிரம்ப் நிர்வாகம் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பல நேரங்களில் ரஷ்ய தரப்பிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரியும் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நிக்கோலஸ் மதுரோ டிரம்பை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர் இன்னும் நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். "அமெரிக்கா எந்தக் காரணத்திற்காகவும் மற்ற நாடுகளை நிர்வகிக்க கூடாது," என்று செனட் வெளியுறவு குழுவில் இடம்பெற்றுள்ள ஹவாயைச் சேர்ந்த பிரையன் ஷாட்ஸ் கூறினார். "அமெரிக்கர்களுக்குப் பேரழிவைத் தரும் விளைவுகளைக் கொண்ட முடிவில்லா போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை நாம் இந்நேரம் கற்றிருக்க வேண்டும்." நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றினால் சபாநாயகராக வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், "மதுரோ ஒரு குற்றவாளி மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்த சர்வாதிகாரி" என்றார். ஆனால் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காத டிரம்பின் முடிவைக் கண்டித்தார். "டொனால்ட் டிரம்ப் சட்டத்தைப் பின்பற்றவும், அமெரிக்காவில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளார்," என்று அவர் கூறினார். "அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அதுவே தேவை." தாக்குதலுக்கு முன்னதாகவே நடவடிக்கை விவரம் "கசியவிடப்படலாம்" என்ற கவலையாலேயே நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அந்த ராணுவ நடவடிக்கை ஒரு வெற்றியாக அமைந்தது - அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை மற்றும் அமெரிக்க உபகரணங்களுக்குச் சேதம் குறைவாகவே ஏற்பட்டது. டிரம்ப் தனது வழக்கமான பாணியில், இந்த நடவடிக்கையை ஒரு "அற்புதமான தாக்குதல்" என்றும், "அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவ பலம் மற்றும் திறமையின் மிகவும் ஆச்சரியப்படுத்தும், பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்று இது" என்றும் விவரித்தார். இப்போது அவர் அந்த வெற்றி தொடரும் என்பதில் தனது அதிபர் பதவியையே பணயம் வைத்துள்ளார். வெனிசுவேலாவை நிர்வகிப்பதையும் புனரமைப்பதையும் ஏற்பதாக அமெரிக்கா கூறுகிறது அதன் உண்மையான பொருள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. டிரம்பும் அவரது குழுவினரும் பல தசாப்தங்களாகக் குழப்பத்தில் இருந்த ஒரு தேசத்தை வலுப்படுத்தும் அதே நேரத்தில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று எண்ணும் ஒரு பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm2xmd7klrlo
  14. இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார் Published By: Vishnu 05 Jan, 2026 | 03:57 AM இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர் இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்தர தலைவர்களோடு சந்தித்து பன்முக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற இருதரப்பு பணிகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும். இந்த விஜயம், இந்தியா – இலங்கை பாதுகாப்பு மற்றும் இராணுவத் திறன் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235226
  15. அராலிப்பகுதியில் இருந்து முதலாவது வேண்டுகோள் கடிதம். உண்மையில் 10 இலட்சம் ரூபாவில் வீடு கட்டுவது சாத்தியமில்லாத ஒன்று, இவர்களுக்கு மலசல கூடத்தை முழுமைப்படுத்தி வழங்கினால் வீடு கட்ட மலசல கூடத்திற்கு செலவாகும் (1.5 இலட்சம் பிற் வெட்டி, கட்டி முடிக்க) பணம் பயன்படும். (இக் கருத்தை காரைநகர் பிரதேச செயலகர் தன்னுடைய பிரதேச செயலக கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.} "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" குழுவினருக்கு வேண்டுகோள் என இனிவரும் கடிதங்களில் குறிப்பிடவா என கூறுங்கள்.
  16. புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து! திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் , புதிய கல்வி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு இணையாக இந்த புதிய முறைக்கு மாணவர்களை பழக்கப்படுத்துவதற்கான திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பெற்றோர்களுக்கும் இது குறித்த அறிமுகத்தை வழங்குவதற்கான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடத்தெரிவுகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 7,181 பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஊடாக 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிய பாடத் தொகுதிகளுடன் (Modules) தொடர்புடைய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு தற்போது பயிற்சிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக, இந்த புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1458331
  17. ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை! ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (04) ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம். இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம் – என்றார். கடந்த ஆண்டு, ட்ரம்ப் தனது வரி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீத அபராதத்தையும் விதித்தார். சில வகைகளில் மொத்த வரிகளை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த நடவடிக்கை புது டெல்லிக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் கூர்மையான சரிவுக்கு வழிவகுத்தது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய சில வாரங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய அச்சுறுத்தல் வந்துள்ளது. இந்த உரையாடலின்போது, இரு தலைவர்களும் தொடர்ச்சியான வரி பதட்டங்கள் இருந்தபோதிலும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தங்கள் பகிரப்பட்ட முயற்சிகளில் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இரு நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் வரி முட்டுக்கட்டையைத் தீர்க்கும் நோக்கில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அதே நாளில் அவர்களின் உரையாடல் நடந்தது. வரி முட்டுக்கட்டையைத் தீர்க்க இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன, அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீதான அதிக இறக்குமதி வரிகளைத் தடுக்க வொஷிங்டன் கடுமையாக அழுத்தம் கொடுக்கிறது. எனினும், நாட்டின் விவசாயம் மற்றும் பால் துறைகளைப் பாதுகாப்பதில் புது டெல்லி உறுதியாக உள்ளது. https://athavannews.com/2026/1458370
  18. வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolás Maduro) அமெரிக்கா கைது செய்ததன் பின்னர், புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்ததால் வாரத்தின் முதல் நாளான திங்கள் (05) வர்த்தகத்தில் தங்கத்தின் விலைகள் உயர்ந்தன. திங்கள் GMT 05.08 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1.8% உயர்ந்து 4,406.77 அமெரிக்க டொலர்களாக இருந்தது. பெப்ரவரி விநியோகத்துக்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 1.9% அதிகரித்து 4,413.40 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. வெனிசுலாவில் நடந்த நிகழ்வுகள் பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளன, முதலீட்டாளர்கள் புவிசார் அரசியல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க முயற்சிப்பதால் பயனாளிகளிடையே தங்கம் மற்றும் வெள்ளி அதிகரித்துள்ளது என்று KCM வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டரர் கூறியுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் 2025 ஆம் ஆண்டில் சாதனை உச்சத்தை எட்டின, பின்னர் ஆண்டின் கடைசி சில நாட்களில் விலைகள் குறைந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மதுரோவைக் கைது செய்தது – இது 37 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா படையெடுப்பிற்குப் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் வொஷிங்டனின் மிகவும் சர்ச்சைக்குரிய தலையீடாகும். துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வொனிசுலாவின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். எனினும், மதுரோ தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பார் என்றும் அவர் கூறினார். புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதக் குறைப்புக்கள், வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளுக்கான முதலீடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, கடந்த ஆண்டு தங்கத்தின் 64% ஆதாயங்களுக்கு பங்களித்தன. இது 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வருடாந்திர ஆதாயமாகும். இது 2025 டிசம்பர் 26 அன்று $4,549.71 என்ற சாதனை அளவை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (05) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 359,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 332,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1458397
  19. வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்! ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது. கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது. மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. 63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர். https://athavannews.com/2026/1458356
  20. அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்தை மீளப்பெற நிர்வாகிகளை (அதிபர், ஆசிரியர்) தொந்தரவு செய்யவேண்டும். அதனால் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று தர விரும்பினேன். இது சிரமம் என்றால் ஒரு வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன், அதனை "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இணைய வங்கிச்சேவை, குறுஞ்செய்தி வசதி, வங்கி வரவு, செலவு அறிக்கை என்பவற்றை பெறக்கூடிய வகையிலும் செயற்படுத்தி தருவேன். மாதம் மாதம் வங்கி அறிக்கையை இங்கே வெளிப்படையாக பகிர்கிறேன். அரசு கண்காணிப்பு(ஒரு தடவையில் 10 இலட்சத்திற்கு மேல் அனுப்புவது) இருப்பதால் கவனமாக நிதியை கையாளவேண்டும்.
  21. ஈரானில் வலுக்கும் போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு! ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதேவேளை,நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை இராஜினாமா செய்தார். ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். https://athavannews.com/2026/1458369
  22. நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.
  23. கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 03 புத்தான்டுக்கும் தைப்பொங்களுக்கும் இடையில் ஒரு நாள் அவன் காயங்களோடு வந்தான். போலீஸ் தாக்குதல். ஆராதனா முதல் முறையாக அவன் கைகளைப் பிடித்தாள். “நீங்கள் எல்லோருக்காகவும் நிற்கிறீர்கள். உங்களுக்கு யார் நிற்கிறார்கள்?” அடைக்கலம் பதில் சொல்லவில்லை. அவன் முதல் முறையாக தனக்கான ஆதரவை உணர்ந்தான். டிசம்பர் 31 இரவு, நகரம் பட்டாசுகளால் ஒளிர்ந்தது—கண்ணைக் கவரும், காதை கிழிக்கும், ஆனால் நிமிடங்களுக்குள் மறையும் ஒளி. அந்த மகிழ்ச்சி அந்த மண்ணிலிருந்து பிறந்ததல்ல; ஒரு வருடம் முடிந்துவிட்டதென்ற காரணத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தற்காலிக சந்தோஷம். மேலே வானம் மலர்ந்தபோது, கீழே நிலம் மாற்றமின்றியே இருந்தது. சோதனைச் சாவடிகள் தங்கள் இடங்களில் நின்றன. காணாமல் போன பெயர்கள் இன்னும் திரும்பவில்லை. நீதிமன்றங்களின் கதவுகளைத் தாண்டி நீதி இன்னும் வரவில்லை. இந்தக் கொண்டாட்டம் மக்களின் வாழ்விலிருந்து எழவில்லை; அது வெளியிலிருந்து வந்த ஒரு பழக்கம், மீண்டும் மீண்டும் பழகச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு. கடைசி பட்டாசு அணைந்ததும், இரவு தனது பழைய மௌனத்திற்குத் திரும்பியது; புதிய ஆண்டு வந்தது — பழைய சுமைகளைக் தோளில் சுமந்தபடியே. புத்தாண்டு ஆரவாரமாக பிறந்தது “ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல, இது ரோமானிய நிர்வாகம்” என அடைக்கலம் மீண்டும் ஆராதனாவுக்கு கூறினான். “இன்னும்,” ஆராதனா மெதுவாகச் சொன்னாள், “மக்கள் வலி முடிந்து நம்பிக்கை தொடங்கும் ஒரு திகதியை - ஒரு கோட்டை - ஆண்டு தொடக்கத்தை - விரும்புகிறார்கள். [“people want a line where pain ends and hope begins.”]” அந்த நிலையில், அறுவடை முடியும் மாதமான தை மாதம், மண்ணுடன் இணைந்த ஒரு நாளாக, நீங்கள் தேடும் சமயம் தாண்டிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாளாக, "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " - என்று புறநானூறு 172 கி மு 500 ஆண்டிலேயே கூறிய தமிழரின் திருநாளாக, உங்களுக்கு பொருத்தமான ஒரு நாளாக, நான் நம்புகிறேன் என்றவள் பின் மௌனமாக அவனைப் பார்த்தபடியே அருகில் இருந்தாள். கொத்துக் கொத்தாய்ப் பாவிருக்கும் சித்திரையிலே கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே. [பாவேந்தர் பாரதிதாசன்] அன்று இரவு, அவள் குரலைப் போலவே அவள் மௌனத்தையும் தான் நம்புவதை அடைக்கலம் உணர்ந்தான். அதன் பின் இருவரும் ஷாம்பெயின் [champagne] அல்ல, தேநீர் ஒன்றாக அருந்தினர். அப்பொழுது அடைக்கலம் தனக்கு பதவி உயர்வு, பாதுகாப்பு, ஒருவேளை சுதந்திரம் ஆகியவற்றை இழக்கும் வழக்குகளைப் பற்றி அவளுடன் தேநீரை மெல்ல மெல்ல குடித்தபடி பேசினான். அவள் அதை மௌனமாக கேட்டுக் கொண்டு தானும் தேநீர் பருகினாள். தேநீர் அருந்தி முடிந்ததும், அடைக்கலம், அவள் கண்களை நேராகப் பார்த்தபடி, திருமணம் அல்ல, ஆனால் தனது நோக்கத்தை - மோதிரத்துடன் அல்ல, உண்மையுடன் - அவளுக்கு முன்மொழிந்தான் [He proposed then—not marriage, but intention.]. திங்கள் முகம் மடந்தை இவளோ கங்கை நதியின் அழகு இவளோ! மங்கை எனும் மாயை இவளோ அங்கம் எல்லாம் சிலிர்த்தது ஏனோ? மதி ஒளிர்ந்து வானில் தவழ்கிறதோ சதி செய்து என்னை மயக்கிறதோ? ரதிதேவி வடிவான சிலை நீயோ விதி என்னை உன்னிடம் சேர்க்கிறதோ? “திணிக்கப்பட்ட தேதிகள் அல்லது கடன் வாங்கிய கனவுகளில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தை நான் விரும்பவில்லை,” என்றும் அவன் அவளுக்கு கூறினான். “எனக்கு, எங்கள் தாய் நிலத்தில் வேரூன்றிய ஒரு திகதி வேண்டும். அதைத்தான் நீ அடையாளம் காட்டினாய்” என்றான். உழைப்பிற்கு அழகு சேர்த்த தையே பொங்கல் விழா தந்தது அதற்கோ ? அறுவடை தந்த செல்வமும் மகிழ்வும் தை பிறந்தால் வழிபிறக்கும் என்றதோ நன்றி கூறும் பாரம்பரியம் வளர்த்ததோ? இருவராய் இணைய நல்ல தருணமென முன்பனி நீராடி முடிவு எடுத்ததோ? தையில் திருமண வாழ்வு காண கோலம் போட்டு தோரணம் கட்டியதோ? வணங்கி வாழ்த்தி பொங்கல் பொங்கியதோ?" அவள், அவனுடைய முன்மொழிவுக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை, ஆனால், ““நாம் இருப்பது போலவே இருப்போமா?” [“Will we remain who we are?”] என்று ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டாள். அவன் ஒற்றைச் சொல்லில் “ஆம்.” என்றான். அவர்கள் அவசரப்படவில்லை. ஆறுதலாக அந்த சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார்கள். பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் உள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் பொதுவாகத் தெரியாது. தமிழ் நிலங்களில் கார்த்திகை மாதம் வரை மழை இருக்கும். மார்கழி மாதம் வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. அதனால் தை என்னும் பெயர் இந்த மாதத்திற்கு வந்திருக்கலாம்? தை என்றால், தைத்தல் என்று பொருளும் உண்டு. மேலும் உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த தானியத்தை [நெல்லை] மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை அனுபவிக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்தது வழிபட்டனர் என்பது வரலாறு. இது நிலத்துடன் சேர்ந்த ஒன்று. மதத்துடன் அல்ல. இப்படியான, தாய் நிலத்தில் வேரூன்றிய ஒரு நாளைத்தான் அடைக்கலம் தனது திருமணத்துக்குவிரும்பினான். தை பிறந்தால் வழி பிறக்கும் தையல் கனவும் பலன் தரும்! அறுவடை தரும் புது நெல்லில் நறு மணப் பொங்கலும் வரும் ! திருமணம் வேண்டி காத்து இருந்தவள் கரும்பு வைத்து கதிரவன் வணங்குகிறாள்! முன்பனி நீரில் மூழ்கி எழுந்தவள் அன்ன நடையில் அழகு காட்டுறாள்! ஜனவரி மாதம் வந்ததும், ஆராதனா குழந்தைகளுக்கு கால்நடைகள், சூரியன், நிலம் பற்றிய பொங்கல் பாடல்களைக் கற்றுக் கொடுத்தாள். அங்கு எந்த மதமும் இருக்கவில்லை, தமிழர் நிலத்துடன் இணைந்த பண்பாடு மட்டுமே இருந்தது. அதேவேளை, மூதாதையர் மண்ணை விட்டு வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்ட விவசாயிகளை அவன் தன் வாதாடும் திறமையால் பாதுகாத்தான். அங்கே தமிழரின் இருப்பு இருந்தது. ஒரு மாலையில், முதல் முதலாக சம்மதம் தெரிவித்து அவளும் சொன்னாள்: கடன் வாங்கிய தேதிகளில் கட்டமைக்கப்பட்ட ஒரு திகதி எமக்கு வேண்டாம் “கிறிஸ்துமஸ் போப் ஜூலியஸ் I [Pope Julius I] தேர்ந்து எடுத்த நாளில் பிறப்பைக் கொண்டாடுகிறது. புத்தாண்டு ஜூலியஸ் சீசர் [Julius Caesar] தேர்ந்து எடுத்த நாளில் பிறக்கிறது ஆனால் பொங்கல் தாய் மண்ணின் அறுவடையைக் கொண்டாடுகிறது. எவரும் தேர்ந்து எடுக்கவில்லை. மண்ணில் வேரூண்றிய ஒன்று அப்போது அவள் ஏன், தனக்கு உடனடியாக மறுமொழி கொடுக்காமல் காத்திருந்தாள் என்பதை அவன் புரிந்துகொண்டான் - பொங்கலுக்காக காத்திருந்தாள் என்று - தை பொங்கல் அன்று, பொங்கல் பொங்கி வடியும் பொழுது, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்த நாளை, எந்த பேரரசரும் தேதியை பெயரிடவில்லை. எந்த ஆலயமும் அதை உரிமை கோரவில்லை. எந்த அரசும் அதைக் கட்டுப்படுத்தவில்லை. சூரியன், பூமி, மற்றும் உயிர் பிழைத்த மக்கள் மட்டுமே. ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞர். ஒரு இந்து கலைஞர். மதமாற்றம் இல்லை. சரணடைதல் இல்லை. அவர்கள் அழிக்க முடியாத ஒரு அன்பை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1974 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33138870995761454/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.