stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 29 Dec, 2025 | 02:49 PM தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை ஏற்படுத்தி, தமிழகத்தின் நிகரற்ற அரசியல் சக்தியாக திகழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த குரு பூஜையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி பேரணியாக வருகை தந்து அவருக்கு குருபூஜை செய்தனர். இந்த தருணத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஜி கே வாசன், எல் . முருகன் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றி கேப்டன் விஜயகாந்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் இந்நிகழ்வில் பங்கு பற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/234667
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம் அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. "யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான். அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள். ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது. 'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான். 'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான். முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை. யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள். அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள். சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும் சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ? தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க? அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது. ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான். அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள். மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும் நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள். ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான். "நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி. “வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்: "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!] இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும். யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று. ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்! ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?
-
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
- மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்
மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம் 30 Dec, 2025 | 03:51 PM மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து நான்கு இலட்சம் கியுபிக் மண் அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன. அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார். https://www.virakesari.lk/article/234753- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
நான் நேற்று.... ரணில், கேகலிய ரம்புக்வெல மாதிரி, கைது செய்யப் பட்டவுடன் டக்ளஸ்ஏன், மருத்துவ மனைக்கு செல்லவில்லை என நினைத்து சந்தோசப் பட்டேன். அந்தத் சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. வைத்தியசாலையில் ஜாலியாக போய்... டக்கி, படுத்து விட்டது. பார்க்கப் போனால்.... பிள்ளையான் மட்டும்தான், உடல் ஆரோக்கியமான மனிதன் போலுள்ளது. மறியலுக்குப் போன நாளில் இருந்து, மாதக் கணக்கில் வைத்திய சாலைப் பக்கமே போகாமல், கம்பிக்குப் பின்னால் இருந்து களி தின்று கொண்டு இருக்கின்றார். இல்லாவிடில்... பிள்ளையானுக்கு, வைத்தியசாலையில் போய் படுத்திருந்தால் விசேட கவனிப்பு இருக்கும் என்று ஒருவரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ. என்ன இருந்தாலும்... பிள்ளையானுக்கு, கெட்டித்தனம் காணாது. 😂- பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள்; வவுனியாவில் போராட்டம்
பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம் 30 Dec, 2025 | 02:19 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர். https://www.virakesari.lk/article/234747- இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார்
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார். பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார். கழக மட்டத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் றாகமை விளையாட்டுக் கழகம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார். விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய கடைசி போட்டியில் (2018 டிசம்பர் 14) முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலைக்குரிய முடிவை குறிக்கிறது. முன்னாள் சக அணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளது. அக்ஷு பெர்னாண்டோவை அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது குணம் மற்றும் சிறந்த மனப்பான்மைக்காக கிரிக்கெட் சமூகம் என்றென்றும் நினைவுகூறும் என்பது உறுதி. அவரது ஆத்துமம் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. https://www.virakesari.lk/article/234742- அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjsephjz03amo29nh9e6dysp- காலிதா ஜியா: 'கூச்ச சுபாவமுள்ள' ஒரு இல்லத்தரசி ராணுவத்தையே எதிர்த்து நின்று பெரும் தலைவரான கதை
காலிதா ஜியா: 'கூச்ச சுபாவமுள்ள' ஒரு இல்லத்தரசி ராணுவத்தையே எதிர்த்து நின்று பெரும் தலைவரான கதை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காலிதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக இருந்தார். 1991 முதல் 1996 வரையிலும் 2001 முதல் 2006 வரையிலும் ஆட்சி செய்தார். 30 டிசம்பர் 2025, 08:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான காலிதா ஜியா, தனது 80 வயதில் காலமானார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் அதிபராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், தனது இரண்டு மகன்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று காலிதா ஜியா விவரிக்கப்பட்டார். ஆனால், 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கணவரின் வங்கதேச தேசியவாதக் கட்சியை (BNP) வழிநடத்தினார். முதலில் 1990-களிலும் பின்னர் 2000-களின் தொடக்கத்திலும் என இரண்டு முறை பிரதமராக அவர் பொறுப்பேற்றார். வங்கதேச அரசியலின் கடுமையான சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பல ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். 2024-ல் போராட்டத்தின் விளைவாக அவரது நீண்டகால அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, காலிதா ஜியா மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கதேச அதிபர் ஜியாவுர் ரஹ்மான், 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன். பேகம் காலிதா ஜியா 1945-ல் மேற்கு வங்கத்தில் பிறந்தார். ஒரு தேயிலை வியாபாரியின் மகளான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இப்போது வங்கதேசமாக இருக்கும் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். காலிதா ஜியா, தனது 15-வது வயதில், அப்போதைய இளம் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை மணந்தார். 1971-ல், மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்த ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். 1977-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ரஹ்மான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார். அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களையும் அவர் மீண்டும் அனுமதித்தார். பின்னர் மக்கள் வாக்களிப்பின் மூலம் அதிபராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவப் புரட்சிகளை எதிர்கொண்டு, அவற்றை மிகக் கடுமையாகக் கையாண்டார். அப்போது ராணுவ வீரர்கள் பெருமளவில் தூக்கிலிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் 1981-ல், சிட்டகாங்கில் ராணுவ அதிகாரிகளின் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1987ஆம் ஆண்டு அரசு எதிர்ப்பு போராட்டங்களின் போது, காவல்துறையால் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். அதுவரை, காலிதா ஜியா பொது வாழ்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் அவர் பிஎன்பி (BNP) கட்சியில் உறுப்பினராகி, அதன் துணைத் தலைவராக உயர்ந்தார். 1982-ல் வங்கதேசத்தில் ஒன்பது ஆண்டுகால ராணுவ சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது, ஜியா ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். ராணுவம் அவ்வப்போது தேர்தல்களை நடத்தினாலும், அவை தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்ட தேர்தல்களாகவே இருந்தன. அந்தத் தேர்தல்களில் பங்கேற்க தனது கட்சியினரை காலிதா ஜியா அனுமதிக்கவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், காலிதா ஜியா தொடர்ந்து மாபெரும் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தார். இது இறுதியாக ராணுவத்தை அடிபணியச் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 பிப்ரவரியில் வங்கதேச தலைநகரமான டாக்காவில் தேர்தல் பிரசாரம் செய்யும் காலிதா ஜியா 1991-ல், ராணுவ ஆட்சிக்குப் பிந்தைய தேர்தலில் காலிதா ஜியாவும் அவரது பிஎன்பி (BNP) கட்சியும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தன. பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார். முந்தைய அதிபர் முறையிலிருந்த பெரும்பாலான அதிகாரங்களைப் பெற்ற அவர், வங்கதேசத்தின் முதல் பெண் தலைவராகவும், ஒரு இஸ்லாமிய நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண்மணியாகவும் ஆனார். வங்கதேசக் குழந்தைகள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்று வந்த நிலையில், அவர் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமானதாகவும் மாற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியிடம் அவர் தோல்வியடைந்தார். 2001-ஆம் ஆண்டு தேர்தலில் காலிதா ஜியா சில இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வசப்படுத்தினார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில், பெண் எம்.பி.க்களுக்காக சட்டமன்றத்தில் 45 இடங்களை ஒதுக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 70% பெண்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த அந்த நாட்டில், இளம்பெண்களுக்கு கல்வி வழங்க அவர் பாடுபட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1991 தேர்தலில் காலிதா ஜியாவின் தேர்தல் பிரசாரப் போஸ்டர். அக்டோபர் 2006-ல், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காலிதா ஜியா பதவியில் இருந்து விலகினார். ஆனால் அப்போது வெடித்த கலவரங்களால் ராணுவம் தலையிட்டது. தேர்தல் தள்ளிப்போனது. இடைக்கால அரசாங்கம் பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்ததுடன் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது அனைத்துக் கட்சியினரையும் பாதித்தது. ஓராண்டுக்குப் பிறகு, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாகவே, வங்கதேசத்தின் முதல் அதிபரின் மகளும், காலிதா ஜியாவின் அரசியல் போட்டியாளருமான அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவும் கைது செய்யப்பட்டிருந்தார். இருபது ஆண்டுகளாக மாறிமாறி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த இவ்விரு பெண்களும் திடீரென நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1995 ஆம் ஆண்டு, தனது முதல் பிரதமர் பதவிக் காலத்தில் காலிதா ஜியா. காலிதா ஜியா மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2008-ல் அவர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த தேர்தலில் அவர் பங்கேற்றார். அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தார். 2011-ல், ஊழல் தடுப்பு ஆணையம் ஜியா மீது ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மறைந்த கணவரின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக நிலம் வாங்க, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டார். 2014-ல், அவாமி லீக் கட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் என்று கூறி, காலிதா ஜியா ஆதரவாளர்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணித்தனர். அந்தத் தேர்தலின் போது, பிஎன்பி (BNP) ஆதரவாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர் மற்றும் நாடாளுமன்றத்தின் பாதி இடங்களுக்குப் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு, தேர்தல் புறக்கணிப்பு நடந்ததன் ஆண்டு நிறைவில் ஜியா புதிய தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டார். இதற்கு எதிர்வினையாக, தலைநகர் டாக்காவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி அவரை வெளியேற முடியாமல் பாதுகாப்புப் படைகள் தடுத்தன. டாக்காவில் அனைத்துப் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அப்போது, அரசாங்கம் மக்களிடமிருந்து "துண்டிக்கப்பட்டுவிட்டது" என்றும், அதன் நடவடிக்கைகளால் "முழு நாட்டையும் சிறைபிடித்துள்ளது" என்றும் காலிதா ஜியா விமர்சித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2015 ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாற்றும் காலிதா ஜியா. ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பானவை. 2003-ல் சரக்கு முனையங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கோகோ அவரை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. அவர் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட ஓர் அனாதை இல்ல அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2,52,000 டாலர் பணத்தை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2018-ல் காலிதா ஜியாவிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டாக்காவின் பழைய மற்றும் தற்போது பயன்பாட்டில் இல்லாத மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே கைதி அவர் தான். இந்தத் தண்டனையின் காரணமாக அவர் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2018 ஆம் ஆண்டு டாக்காவில் ஆயிரக்கணக்கான பி.என்.பி. ஆதரவாளர்கள், ஜியாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார். ஓராண்டுக்குப் பிறகு, 73 வயதான காலிதா ஜியாவுக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இறுதியில், உடல்நிலை காரணங்களுக்காக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். 2024-ஆம் ஆண்டில், மக்களின் பெரும் அதிருப்தி அலையால் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. அரசுப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது, கடுமையான அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கம், காலிதா ஜியாவை விடுவிக்கவும், முடக்கப்பட்ட அவரது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் உத்தரவிட்டது. இந்த நேரத்தில், அவர் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொடர்ச்சியான பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். ஜனவரி 2025-ல், ஜியா வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e0ey3ykz9o- இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
இவர் மாற்றி மாற்றி பேசுவார், தான் சொன்னதை சொல்லேலை என்பார், சொல்லாததை சொன்னது என்பார். அன்று தகாத சொற்பிரயோகங்களை பாவித்து பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் இவர், என்னோடு யாராவது தகராறு செய்தால் மண்டையில் ஓட்டை போட்டுவிடுவேன் என்று இவரே பகிரங்கமாக சொன்னார், அண்மையில் கூட தேரர் ஒருவர் அனுராவைப்பற்றி ஏதோ தன்னிடம் கூறியதாக சொன்னார், பின் அந்த தேரரிடம் மன்னிப்பும் கேட்டார், தேரர் சொல்லாததை சொன்னதாக தான் கூறியதற்காக. இவருக்கு ஏதோ மனக்குழப்பம் என்று நினைக்கிறன், அல்லது எதிலும் நிலைத்து நிதானித்து கவனம்செலுத்தி செயற்படமுடியாத ஒரு நோயாக இருக்கலாம்.- பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்!
பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்புக்கான 50,000 ரூபா இழப்பீட்டிற்கு பதிவு செய்கின்றீர்களா? என பிரதேச செயலரிடம் அருச்சுனா கேள்வி எழுப்பினார். அந்த விண்ணப்ப படிவம் இருப்பதாகவும், அதனை வழங்கவில்லை எனவும் பிரதேச செயலர் கூறினார். அந்த படிவங்களை வழங்கி மக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குங்கள். தெற்கில் பலர் இந்த கொடுப்பனவுக்கான பதிவுகளை மேற்கொண்டு பணத்தினை பெறுகின்றனர். நானும் பழைய ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி 50,000 ரூபாவை எடுத்தேன். நீங்களும் அவ்வாறு பொய்யாவது கூறி அந்த பணத்தை எடுங்கள். 300 வீடுகளுக்கு பாதிப்பு என்று கூறி எனக்கு மக்கள் அழைப்பு மேற்கொண்டு கூறினார்கள். காணொளி, படங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக அந்த கொடுப்பனவுகளை மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள் என அருச்சுனா கூறினார். இன்போது கருத்து தெரிவித்த சமூகமட்ட அமைப்பு ஒன்றின் பிரதிநிதி, குறித்த பதிவுகள் தொடர்பாக மக்களுக்கு சரியான விளக்கத்தை பிரதேச செயலகம் வழங்கவில்லை. கிராம சேவகர்கள் வீடுகளை வந்து பார்க்கவில்லை என தெரிவித்தார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjsdtkh603ako29ntw8e818a- Today
- IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmjs6zdv803a4o29n4syz1a8r- தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா?
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா? 29 Dec, 2025 | 12:40 PM 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி இணையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி - நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம்- சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி - என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்முறையாக நேரடியாக தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு களம் காணும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக மக்கள் அலை உருவாகி இருக்கிறது என தேர்தல் வியூக நிபுணர்கள் தொடர்ந்து தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய தேர்தல் சின்னமாக விசில் / மோதிரம் ஆகியவற்றை பரிசீலிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதால்.. சேலத்தில் விரைவில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தலைவர் விஜய் இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே திரையில் விஜய் தோன்றினால்.. ரசிகர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தற்போது விசில் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்படுவதால்.. அதனையும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து விஜயை- தமிழக வெற்றி கழகத்தை- ஆட்சி கட்டிலில் அமர செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234659- டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
இருந்தாலும், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், இவர் என்ன சொல்ல வருகிறார் இப்போ? குற்றவாளிகளை சிறையிற்தானே அடைப்பார்கள். அப்போ ஐந்து நட்ச்சத்திர விடுதியில் தங்க வைக்கவேண்டுமோ? தமிழ் அரசியற்கைதிகள் சிறைச்சாலையில் தாக்கப்பட்ட போதுகூட இவர் அதைப்பற்றி ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையே? இருந்தாலும் ராகவனையும் விசாரிக்க வேண்டும், அவர் வெளியுலகில் இருந்தபோது ஆபத்து இருந்ததென்றால் சிறையில் யாரால் அவருக்கு ஆபத்து, ஏன் ஆபத்து என்பதை இவர் தெளிவு படுத்தவேண்டும். சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லையாம். அதற்கு யார் காரணம்? ஏன் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார் என்பதையும் இந்த ராகவன் விளக்க வேண்டும்.- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
தேர்தலில் போட்டியிடுவார்கள், அமைச்சுப்பதவி வகிப்பார்கள், ஊடக சந்திப்பு நடத்துவார்கள், மருத்துவமனைப்பக்கமே போயிருக்க மாட்டார்கள். ஆனால் பாருங்கோ.... கைது, விசாரணை என்றவுடன் சொல்லி வைத்த மாதிரி இந்த அரசியல் வியாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவார்கள். அதெப்படி வியாதி உள்ளவர்களால் அரசியல் செய்ய முடிகிறது?- இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
https://www.facebook.com/reel/1567565054- ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
கோட்டு ஓவியங்கள் வரைபவர்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் ராமு அவர்கள். அவரது ஓவியங்கள் அநேகமாக குமுதம் இதழில் வெளியாகியிருந்தன. இதே நேரத்தில், கல்கி இதழில் சிறுவர் கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் ரமணி என்பவர் வரைந்துவந்தார்.ரமணியின் ஓவியங்கள், ராமு அவர்களின் ஓவியங்களைப் போலவே நிறைந்த கறுப்பு நிறங்களால் இல்லாமல், தனி கோடுகளில் எளிமையாக, நேர்த்தியாக அமைந்திருந்தன. ரமணி அவர்களின் ஓவியங்களில், அவரது ஒற்றைக் கோடு மூலம் அழகிய படங்களை வரைந்து மக்களை கவரும் திறமை, ஈழத்து ஓவியர் சுப்பிரமணியம் அவர்களிடமும் இருந்தது. எழுபதுகளில், (சுப்பி)ரமணி(யம்) ஓவியங்களை சிறுவர் பாடப் புத்தகங்களில் பார்த்தேன். அந்த ஓவியங்களை கண்டு வியந்து, “இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமணி என்ற ஓவியரா?” என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அதே சமயம், அவரது ஓவியத்தில் ஒன்றான, மகிழ்ச்சியுடன் ஓடிவரும் சிறுமியின் படத்தை பார்த்தபோது, அதை பின்பற்றி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பியின் முகப்பிற்காக நான் வரைந்திருந்தேன். அந்த படத்தை பார்த்ததும், மார்க் மாஸ்ரர் அவர்கள் “இது ரமணியின் ஓவியமாக இருக்கிறது” என்று கூறினார். அப்பொழுதுதான் ரமணி அவர்களும் மார்க் மாஸ்ரரின் ஒரு மாணவன் என்பதை, நான் அறிந்து கொண்டேன். ஓவியர் ரமணியை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது படைப்புகளின் மேல் என் ரசனை எப்போதும் இருக்கின்றது. ஈழத்து தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தில் அவர் மிக முக்கியமான இடம் வகிக்கிறார். இவரது ஓவியங்களில் எப்போதும் நிறைவான அழகு, நுணுக்கம் செறிந்திருக்கும். ஓவியர் ரமணி அவர்களுக்கு எனது இதயபூர்வ அஞ்சலிகள்.- கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
ஈழத்து கலைஞர்களும், சமூக சேவையாளர்களது படங்கள்-
ஓவியர் ரமணி (வைத்தீஸ்வரன் சுப்ரமணியம்)
-
அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி(ஓவியர்)
-
பண்டிதர் வீ.பரந்தாமன், கவிஞர், சமூக செயற்பாட்டாளர்
-
புஷ்பராணி சிதம்பரி (போராளி,எழுத்தாளர்)
-
ஆனந்தி சூரியபிரகாசம் , வானொலி
-
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் - இசை, நடனம், வானொலி
-
இராசநாயகம் பாரதி, ஊடகவியலாளர்
-
மாவை சேனாதிராஜா, அரசியல்
-
ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை (வைகறை ரவி) இலக்கியம், சமூகசேவையாளர்
-
குழந்தை ம.சண்முகலிங்கம் (நாடகம்)
-
அன்ரனி ஜீவா எழுத்தாளர்
-
ஏ.மார்க் ஓவியர்
-
நா.யோகேந்திரநாதன் (எழுத்தாளர்)
-
கலாநிதி மகேஸ்வரன் அரசியல்,சமூகசேவையாளர்
-
வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் (ஈழத்து சௌந்தரராஜன் (பாடகர்)
-
மு.பொன்னம்பலம் (முபொ) எழுத்தாளர்
-
விறாஜ் மென்டிஸ் , சமூகசெயற்பாட்டாளர்
-
விக்கிரமபாகு கருணாரத்ன, பேராசிரியர், அரசியல்வாதி
-
போல் சத்தியநேசன், சமூக சேவையாளர்
-
இரா.சம்பந்தன் அரசியல்வாதி, தமிழரசுக்கட்சி (தலைவர்)
- சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
மாற்றம் ஒன்றே மாறாதது. அமெரிக்காவின் ஏற்றம் இறங்கத் தொடங்கியுள்ளது. 🤔- கருத்து படங்கள்
- இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு! யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா, யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன். ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை. கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர். எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர். கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை. மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால். பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள். வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக நான் கைது செய்யப்பட்டேன். தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள். கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது. ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா… யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால் பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன். நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன். சட்டம் அமல்படுத்தப்படவில்லை என.. அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார். ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்… வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது, எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1457659- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1457695- காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் !
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்! இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி வாழ்க்கை மூன்று தசாப்தங்களாக நீடிக்கிறது, 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார். https://athavannews.com/2025/1457746 - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.