stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
- Today
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
/ .
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாளக் கடற்கரையிலும் சோழமண்டலக் கடற்கரையிலும் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் சில. மேலிருந்து கீழாக: சுருளன் வள்ளம் வலவராயன் வள்ளம் வஞ்சி இ: தெரியவில்லை, வ: மசுலா இ: தெரியவில்லை, வ: பத்தேமாரி
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை
- வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
Kerala - Tara vanchi, தரை வஞ்சி.jpg
-
kerala vallam - unknown type name.jpg
-
Kerala- Muri vallam முறி வள்ளம்.jpg
-
Valiya Vallam, Kerala | வலிய வள்ளம்.
-
kayal vallam, Kerala | காயல் வள்ளம்
-
Cuddalore Vaththal SV BARADHALASHMI CLR 97, Bombay, 1973.jpg
-
Cuddalore Vaththal SENBHAGAM CLR 42, Bombay, 1973.jpg
-
kanna boats. .. cuddalore.jpg
-
Kerala boats of backwater (3). | The big ones: These types of boats in cuddalore are called Kanna padaku
-
Kerala boats of backwater (2).webp
-
Kerala boats of backwater (4).jpg
-
Kerala boats of backwater (3).jpg
-
Kerala boats of backwater (3).jpg
-
Kerala boats of backwater (2).jpg
-
Sangkadam - Kerala boats of backwater (1).jpg
-
beypore.jpg
-
battelah beypore.jpg
-
stearn pattamar.jpg
-
pattamar.jpg
-
Pattamar, Bombay, 1973.jpg
-
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட கடற்கலம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு Washtakes உண்டு. (தென் தமிழீழத்திலிருந்த வள்ளங்கள் போன்று தோற்றமளிக்கிறது)
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லதிலிருந்த ஒரு வகையான சிலை இரு படையணிக் கொடிகள் பறப்பதைக் காண்க இது குடும்பிமலை வடிவத்திலுள்ளது- தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி! இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.- இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
மழை வெள்ளத்தில் சிலிப்பர்கட்டைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன, ரயில்வே பாலங்கள் உடைந்துவிட்டன என சொல்லப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டனவா? @சுவைப்பிரியன் எதற்கும் லைப் ஜெக்கெற், பெரு நடைக்கு தேவையான பூட்ஸ், உலர் உணவு, தண்ணீர், படுக்கும் பை, ரோச் லைட் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறவும்.- வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
இந்த ஆண்டின் வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் (FeTNA) வருடாந்த ஒன்று கூடல் வட கரோலினாவில் 3 நாட்கள் நடந்தது. அழைப்பிதழில் வாகீசனும் வந்து நிகழ்ச்சி செய்வார் என்று இருந்தது, ஆனால் அவர் வரவில்லை. ஏன் வரவில்லை என்று விசாரித்த போது சில தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிகழ்ச்சிக்காக ஒரு 3 பேர் கொண்ட கலைஞர் குழுவாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறது வாகீசன் குழு. குழுவின் முகாமையாளர் என்ற பெயரில் இராசையா உமாகரனைக் குறிப்பிட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். உமாகரனின் முகநூல் பதிவுகளை அமெரிக்க விசாப் பிரிவில் பரிசீலித்திருப்பார்கள் போல. வாகீசன் குழுவுக்கு அமெரிக்க விசா மறுக்கப் பட்டிருக்கிறது.- முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள்
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள் Dec 24, 2025 - 07:09 PM முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmjk29f030335o29n7uysh1yz- அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை கட்டியெழுப்ப Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நன்கொடை Published By: Vishnu 24 Dec, 2025 | 06:38 PM "இந்த நோக்கத்திற்கு ஆதரவாக முன்வந்த முதலாவது IT நிறுவனம் நாமே." - டெக்னோசிட்டி நிறுவன தலைவர் ஃபமி இஸ்மாயில் இலங்கையில் HP, ASUS, MSI, Lenovo, BenQ, Raidmax, Kaspersky போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முன்னணி விநியோகஸ்தரான Technocity Pvt Ltd (டெக்னோசிட்டி) நிறுவனம், ரூ. 50 மில்லியன் பெறுமதியான பாரிய நிவாரண உதவியை வழங்க முன்வந்துள்ளது. 'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டடங்கள் மாத்திரமன்றி, பல பாடசாலைகளின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளன. இந்த அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டு, Technocity நிறுவனம் ரூ. 50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் உட்கட்டமைப்புகளை சீரமைப்பதற்காக ரூ. 20 மில்லியன் பணமாகவும், ரூ. 30 மில்லியன் பெறுமதியான அதிநவீன கணனி சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) வசதிகளும் வழங்கப்படவுள்ளது. இதன் கீழ், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 50 'Techno View' 65" மற்றும் 86" செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ஸ்மார்ட் போர்ட்கள் (Interactive AI Smart Board Display Panels), மடிகணனிகள், All-in-one பிரின்டர்கள் மற்றும் போட்டோபிரதி இயந்திரங்கள் ஆகியன வழங்கப்படவுள்ளன. இந்த அதிநவீன சாதனங்கள் வகுப்பறைகளை மீள நவீனமயப்படுத்தவும், அனர்த்த நிலைமையிலும் கூட சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமையை உறுதி செய்யவும் வழிவகுக்கும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகத்துடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், இந்த மனிதாபிமான முயற்சியானது ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, Technocity நிறுவனத்தின் தலைவரும் அதன் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில், இதற்கான காசோலையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார். இந்த பணியின் பின்னாலுள்ள முக்கியமான கடமை தொடர்பில், Technocity மற்றும் Laptop.lk ஆகிய நிறுவனங்களின் தலைவரும் அவற்றின் நிறுவுனருமான ஃபமி இஸ்மாயில் கருத்து வெளியிடுகையில், “உட்கட்டமைப்பு சேதங்கள், கல்வி மற்றும் அத்தியாவசிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளைப் பாதிக்கும் வேளையில், மனிதாபிமானமே முன்னிற்க வேண்டும் என்பதை இத்தகைய தருணங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கௌரவத்துடனும் வலிமையுடனும் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதே எமது நோக்கமாகும். அத்துடன் இந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்த முதலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நாம் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார். இன்று, இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்துள்ள நிலையில், Technocity நிறுவனத்தின் இந்த மனிதாபிமானம் மிக்க தலைமைத்துவமானது, தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இலங்கை மக்கள் இவ்வாறான கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்பார்கள் எனும் காலத்தால் அழியாத உண்மையை இந்த உதவியானது வலியுறுத்துகிறது. இடமிருந்து வலமாக – புகைப்படத்தில், Technocity நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தலைவர் சஞ்சுல ஹெட்டிகே, ஜசீம் ஜுனைதீன் (CFO), மின்ஹாஜ் பாரூக் (சில்லறை வணிக பிரவின் தலைவர்), அக்ரம் பதுர்தீன் (CEO), பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்த்ரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தலைவர் மொஹமட் ஃபமி இஸ்மாயில், விநியோக முகாமையாளர் ஜெஹான் தங்கப்பன், கேமிங் விநியோகப் பிரிவு தலைவர் மொஹமட் காதிர் இஸ்மத், நிஸ்ரான் ஷியாத் ஆகியோரை காணலாம். https://www.virakesari.lk/article/234353- 'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
இங்கும் என்பு முறிவுக்குள்ளான மாணவி ஒருவர் ஓராண்டாக 2/3 தடவை சத்திரசிகிச்சை செய்தும் குணமடையாத நிலையில் மருத்துவரை மாற்றி மீள ஆணிகளைக் கழட்டி பொருந்த வைப்பதாக கூறியுள்ளார்கள். பழைய சிகிச்சையின் போது என்பு பொருந்தும் இடம் நெருக்கமாக இல்லையாம்!- இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்
இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூட்டுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி, வீக்கம், சிவத்தல் ஆகியவையும் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். கட்டுரை தகவல் சுமன்தீப் கவுர் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் எழும்போது கால் மூட்டுகள் விறைப்புடன் இருப்பதையோ, கால் அல்லது மூட்டுகளில் லேசான வலி இருப்பதையோ, வயது அல்லது சோர்வு காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுவதையோ நாம் புறக்கணித்து விடுகிறோம். ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட அது காரணமாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் அல்லது ஆர்த்ரிட்டீஸ் எனப்படுகிறது. யூரிக் அமிலம் என்பது என்ன, அது ஏன் நம் உடலில் அதிகரிக்கிறது, சரியான நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்துவது ஏன் முக்கியம் என்பவை குறித்து மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயல்வோம். குர்காவுனை சேர்ந்த மூத்த வாத நோய் (rheumatologist) மற்றும் நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் ரேணு டாபர், உடலில் உருவாகும் இயற்கைக் கழிவுகளே யூரிக் அமிலம் என விளக்கினார். "இவை பியூரின்கள் எனப்படும் கரிம சேர்மங்கள் உடையும்போது உருவாகின்றன. பியூரின்கள் என்பது உடலின் செல்களில் இயற்கையாகக் காணப்படும் வேதிம சேர்மங்களாகும். மேலும் அவை சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இவை உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது" என்றார். ஹைப்பர்யூரிசெமியா (Hyperuricemia) என்பது ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இதனால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் ஆகியவை ஏற்படுகின்றன. யூரிக் அமிலம் எப்படி உருவாகிறது? லூதியானா சிவில் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சௌரவ் சிங் சிங்லா, பியூரின் வளர்சிதை மாற்றம் அடையும்போது உருவாவதாகவும் அது இரண்டு வழிகளில் உருவாவதாகவும் விளக்கினார். முதலாவது உடலின் திசுக்களிலேயே, அதாவது கல்லீரல், குடல், தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் வாஸ்குலர் எண்டோதெலியம் (vascular endothelium - ரத்த நாளங்களை உருவாக்கும் உட்புறச் சுவரை உருவாக்குகின்ற மெல்லிய செல் அடுக்கு) ஆகியவற்றில் உருவாகிறது. இரண்டாவது வழி, உடலுக்கு வெளியே, அதாவது விலங்குப் புரதங்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உருவாகிறது. மேலும் அவர் கூறுகையில், "இந்த பியூரின் நியூக்ளியோடைடுகள் (nucleotides) நொதிகள் மூலம் ஹைபோக்ஸன்தைன் (hypoxanthine), ஸன்தைன் (xanthine) ஆகியவையாக உடைந்து, பின்னர் மேலும் ஸன்தைன் ஆக்ஸிடேஸ் (xanthine oxidase) எனும் நொதி மூலம் யூரிக் அமிலமாக மாறுகின்றன" என விவரித்தார். "மனிதர்களிடத்தில் யூரிகேஸ் (uricase) எனும் நொதி இல்லை என்பதால் யூரிக் அமிலம் உடையாமல் இருக்கும். எனவே அது சிறுநீரகங்களையே சார்ந்திருக்கிறது. அதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலத்திற்கு தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக இருக்கும். எனவே, அது மிக அதிக அளவில் இருந்தால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும்." "மற்ற விலங்குகளிடம் யூரிக் அமிலத்தை மேலும் உடைத்து வெளியேற்றும் யூரிகேஸ் நொதி உள்ளது. ஆனால் மனிதர்களிடம் இந்த நொதி இல்லை. எனவே, யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது." யூரிக் அமிலத்தின் இயல்பு அளவு ஆண்கள் மற்றும் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள்: 3.5-7.2 mg/dL மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள்: 2.6–6.0 mg/dL பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பியூரின் எனப்படும் ஒரு பொருள் சிதைக்கப்படுவதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது. யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் காட்டும் அறிகுறிகள் நிபுணர்களின் கூற்றுப்படி யூரிக் அமிலம் 6.8 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், மோனோசோடியம் யூரேட் படிகங்கள் (crystals) உருவாகத் தொடங்கும். இந்தப் படிகங்கள், மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும். சில மருத்துவ ஆதாரங்கள், ஆண்களுக்கு 3.4-7.0 மற்றும் பெண்களுக்கு 2.4-6.0 என்பதை இயல்பு அளவாகக் குறிப்பிடுகின்றன. எனினும் நிபுணர்களின் கூற்றுப்படி, "வெவ்வேறு ஆய்வகங்களில் அதன் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கும். ஆனால், 7 mg/dLக்கு மேலே இருப்பது அதிகமான அளவாகக் கருதப்படுகிறது" என்றார். மருத்துவர் ரேணு விளக்கும்போது, கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் வரை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பது பெரும்பாலும் அறிகுறிகள் வாயிலாக எளிதில் தெரிய வருவதில்லை என்றார். "திடீரென மற்றும் கடுமையாக அழற்சி கீல்வாதம் ஏற்படும். இதனால் மூட்டுகளில் வீக்கம், சிவப்பாகுதல், சூடாகுதல் மற்றும் கடுமையான வலி ஏற்படும்," என்று அவர் விளக்கினார். "இந்த வலி கை, கால்களின் பெருவிரலில் ஆரம்பித்து, குதிங்கால், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் சிறு மூட்டுகளுக்குப் பரவும். இந்த வலி இரவு ஓய்வில் இருக்கும்போது ஆரம்பித்து ஓரிரு நாட்களில் அதிகபட்ச வலியை எட்டும்." யூரிக் அமிலம் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள் மருத்துவர் சௌரவ் இதுகுறித்து விளக்கியபோது, யூரிக் அமிலம் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார். "சுமார் 90% நோயாளிகளில், யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் முறையாக வெளியேற்றாததால் அதிகரிக்கும். 10% நோயாளிகளில் உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் உற்பத்தியாவது காரணமாக இருக்கிறது." பட மூலாதாரம்,Getty Images யூரிக் அமிலம் எதனால் உருவாகிறது? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? நிபுணர்களின் கூற்றுப்படி, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கீல்வாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. வாழ்வியல் முறை: அதிகளவிலான இனிப்பு உணவுகள், மது (குறிப்பாக பீர்) மற்றும் இனிப்பு கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது. அதிகமாக மது அருந்துவது, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, பியூரின்களின் அளவை அதிகரிக்கிறது. உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் ரத்தத்தில் யூரிக் அமிலம் செறிவூட்டப்படுகிறது. இதுதவிர, வேகமாக உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் சார்ந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது போதிய உடலுழைப்பு இல்லாமல் போனால் இவ்வாறு யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. மரபியல்: பிறவி நொதிக் குறைபாடுகள் (congenital enzyme deficiencies) அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் குடும்பத்தில் ரத்த உறவுகள் யாருக்காவது இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புண்டு. பட மூலாதாரம்,Getty Images உடல்பருமன் (வயிற்றுப்பகுதி பருமனாக இருத்தல்): இதனால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே யூரிக் அமிலம் உருவாவதையும் அது சுரப்பதையும் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகமான அல்லது குறைவான கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு (metabolic syndrome) ஆகியவற்றாலும் சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறுவது குறைகிறது. ரத்த புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள்: நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம். வயது மற்றும் பாலினம்: இந்தப் பிரச்னை பெண்களைவிட ஆண்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். மேலும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, வீக்கம், சிவந்துபோகுதல் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம். இத்தகைய காரணங்களும் அறிகுறிகளும் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் (hyperuricemia) உள்ளதா என்பதை வழக்கமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்தல், ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் எப்போது இந்த பிரச்னை அதிகமாகும்? மருத்துவர் ரேணு கூறுகையில், அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், கீல்வாதம் தவிர மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் நீண்ட கால விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும். "சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் படிந்துவிடும்" என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, "இதனால் எலும்பு சேதமடைந்துவிடும், இதை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன்கள் மூலம் பார்க்கலாம். இதில், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள நீரை நீக்குவதன் மூலமும் இத்தகைய படிகங்களை அடையாளம் காண முடியும்." அவரை பொறுத்தவரை, "இந்தப் படிகங்கள் சிறுநீரகங்களில் படிந்து, சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்." சிறுநீரக நோய் (Nephropathy) என்பது சிறுநீரகங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் சிறுநீரகம் அதன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போகும். இதற்கு சிகிச்சை என்ன? மருத்துவர் சௌரவை பொறுத்தவரை, மருந்துகளுடன் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதைச் சார்ந்தே கீல்வாதத்திற்கான சிகிச்சை உள்ளது. அதுகுறித்து விளக்கியவர், "இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்," என்றார். பாதிக்கப்பட்ட மூட்டுகளை ஓய்வில் வைத்திருத்தல், அதில் ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதோடு, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பலன் தரும் என்றும் இவை உடல்நலத்தைப் பேணவும் மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறுகின்றனர். மேற்கொண்டு விளக்கிய மருத்துவர் ரேணு, "மது மற்றும் இனிப்பு நிறைந்த பானங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்." "கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய், செர்ரி, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். போதுமான தண்ணீரைப் பருகுவதும் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் அல்லது 6-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு உதவும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyvee7j1r7o- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://www.facebook.com/reel/25453132194339109/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e யார் சொன்னது நரி தான் தந்திரமானது என்று நான் சொல்கிறேன்……..- 'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
உண்மை, மருத்துவர் ஒரு நிறுவன மருந்தை எழுத, மருந்தகர் வேறொரு நிறுவன மருந்தைத் தருகிறார். கேட்டால் ஆ.ஓ.கAOK வைக் கேட்கச் சொல்கிறார்கள். மனிதத் தவறுகள் மருத்துவத்துறையில் நிகழ்வதானது உயிரோடு விளையாடுவதாகும். இன்றும் ஒருதகவலை அறிந்தேன். ஒரு இளம் மாணவிக்கான எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சையின்போது தவறு நடைபெற்றுள்ளது. ஆணிகளைக் கழற்றி எடுத்துவிட்டு மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளார்கள். யேர்மனியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மருத்துவத்துறையையும் பாதித்துவருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
விமான நிலையத்திலிருந்து கோட்டடைக்கு ஒரு பேருந்து ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு போகுதாம்.அது இப்பவும் இருக்கா.- இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
Mobitel வட்டிக்கையாளர் எனில் இங்கே டிக்கெட் வாங்கலாம். நான் டயலாக் ஆனால் நண்பர் வாங்குவார். https://www.mobitel.lk/online-ticket-reservation#e-Ticket- தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
திராவிடப் பெயர் கொண்ட கட்சிகள் தான் அறிக்கை விட்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் பெயரைக் காணவில்லை? பிரபாகரன் போஸ்ரரை வைத்து வாக்குக் கேட்கும் நன்றிக்காகவாவது அறிக்கை விடலாமே? - தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.