All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார். டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு… ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... மேலே பத்து, கீழே பன்னிரண்டு என்று எங்கேயோ போய் கூட்டத்தோட கூட்டமாக நிற்கின்றேன்.................... இடையிடையே நாங்கள் நினைக்கிறதையே தெய்வமும் நினைத்தால் நாங்கள் என்ன செய்யிறதாம்.....................🤣.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது நான் முதல்வராக வந்த பிற்பாடு என நினைகின்றேன்....இது அர்ஜூன் ரேஞ்சாக்கும்
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
சுமந்திரன் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதுகூட எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்துச்செல்லவில்லை. அண்மையில் சாணக்கியனை அழைத்துச் செல்வார், அதற்கு முதல் இது, இரகசியமான கூட்டம் யாரையும் அழைத்து வராதீர்கள் என்று தனக்கு மட்டும் அழைப்பு வைப்பார்களாம். அப்படியெனில் அவர்கள் என்னத்தைப்பற்றித்தான் இரகசியமாக பேசியிருப்பார்கள்? அவர்கள் இரகசியமாக சந்தித்ததை, பேசியதை தான் மற்றைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வாராம், படத்தையும் பகிரங்கப்படுத்துவாராம். இதிலென்ன இரகசியம், அதற்கு அவர்களில் ஒருவரை அழைத்துச்செல்லலாமே, ஏன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால்; என்ன பேசினர் என்பதை மற்றவர் நேரில் அறிந்துவிடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார் தில்லு முல்லு சுமந்திரன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்களும் ஒரு மார்க்கமாத்தானிருக்கிறியள்.🤣
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது! https://www.facebook.com/share/v/182Qk3e9jm/
-
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? written by admin February 13, 2026 பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர். இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு. ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது. எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும். இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது. தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே. கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? - Global Tamil News
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக்கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏதோ சொல்லுறதை கேட்டு வாங்கு மாறி இருக்கிறார்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தரமான கேள்வி. பிடிக்காத பெண்டாட்டி, கால் பட்டா குத்தம். கை பட்டா குத்தம். 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😄😄😄😄.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரபாடாவின் பந்து வீச்சு முன்பு போல் இல்லை அவரின் பந்துக்கு எப்பவும் இந்திய மைதானங்களில் அடி தான்................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரதி முதமைச்சர் ...முதலமைச்சராக வர என்னுடைய முற்கூட்டிய வாழ்த்துக்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒரு முடிவோடதான் இருக்கிறியள்🤣, இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியில் ரபாடா விளையாடுகிறாரா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாரே சிலறறை இல்லை ...கடையால் வந்து போட்டுக்கிறேன்....
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
உக்ரேனுக்கு எரிவலு உதவியை செய்ய ஒத்து கொண்ட சீனா! உக்ரேன், சீனா வெளிநாட்டமைச்சர்கள் முனிச் மாநாட்டில் பேச்சுவார்த்தை. # நீ கொஞ்சம் அங்க பாரு கண்ணா # கோமாளி #ராஜதந்திரி
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
https://x.com/visegrad24/status/2022311893281440038?s=46
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் .........! --- உருகி உருகி போனதடி ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெற்றி பெற்ற மாமனுக்கு .......... சரோஜாதேவி & T. K ராமச்சந்திரன் .......! 😍
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்னமாரி செய்திட்டியல் என்ன? நாளைக்கு சவுத் ஆபிரிக்கா உங்களை பதிய விட்டு கிளப்பும் எண்டு ஜக்கம்மா சொல்றா😂
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
87-90 இல் பின்னாளில் கருணா பிரிவின் போது நடந்ததை போல பல சம்பவங்கள் யாழில் அரங்கேறின. மாற்று இயக்க, புலி உறுப்பினர்கள் ஆளை ஆள் சுட்டதை விட, தத்தம் ஆதரவாளர்களை போட்டு தள்ளினர். ஒருநாள் புலி ஆதரவாளர் ஒருவரை ஈபி கொலை செய்தால், ஒரு கிழமைக்குள் புலிகள் ஒரு ஈபி ஆதரவாளரை கொலை செய்தார்கள். இது மறுவளமாகவும் நடந்தது. என்ன கருமம் செய்தேனோ தெரியாது - அப்போ எனக்கு பதின்ம வயது கூட இல்லை, இப்படி 3 கொலைகளை என் கண்ணால் கண்டேன். நாலாவதாக ஒருவரை (புலி ஆதரவாளர்) தேடி வந்த சமயம் அவர் வீட்டில் இல்லை, அவரின் மனைவி என்னை அனுப்பி அவர் நிண்ட வீட்டில் இருந்து அப்படியே கொழும்புக்கு படி தகவல் அனுப்பினார். இதை எல்லாம் இப்போ சொன்னால் எனக்கு PTSD எண்டு சொல்லி போடுவாங்கள். 83 க்கு பின் ஊரில் வளர்ந்த பலருக்கு PTSD இருக்கு - நாம் அதை காட்டி கொள்வதில்லை என்பது என் கருத்து.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள். பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார். @ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.