Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. "சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல். — கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் "Independence is not just a flag or a date" 78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions: Are women safe? Are children free from fear? Is justice equal? Is land returned? Is memory a crime? For many—especially Tamil-speaking people— freedom remains selective, justice delayed, and reconciliation conditional. True independence begins when: truth is not silenced, law is not weaponised, and every citizen lives without fear. Until then, February 4th is not just a celebration— it is a reminder of unfinished freedom. — Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"] https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?
  3. அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது. அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.
  4. Today
  5. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 96 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வாசபா - எல்லாளன் உடனான ஒரு ஒப்பீடு: தமிழ் மன்னரான எல்லாளன் 44 ஆண்டுகள் (கிமு 205–161) ஆட்சி செய்தான். அதேபோல, மன்னன் வாசபா கூட, 44 ஆண்டுகள் (கிபி 67–111) ஆட்சி செய்தான். அவர்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை சுவாரஸ்யமானது. எல்லாளன் ஒரு நீதியுள்ள ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார், அதே நேரத்தில் வாசபா நீர்ப்பாசனம் மற்றும் பௌத்த நிறுவனங்களுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக அறியப்பட்டார். விதி மற்றும் மத நன்மைகள்: மகாவம்சம் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளில் புராணக் கூறுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகள் கர்மா மற்றும் தகுதியால் [karma and merit] ஏற்படுகிறது என்று கூறுகிறது. மதச் செயல்கள் காரணமாக வாசபாவின் ஆட்சிக்காலம் [அதனால் ஆயுட்காலமும்] 12 இல் இருந்து 44 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது என்ற கருத்து ஒரு உண்மைக் கணக்கை விட ஒரு புராணக்கதையாகும். பண்டைய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் புத்த சமய நம்பிக்கை மற்றும் புத்தரின் அருள் போன்றவற்றை வரலாற்றில் புகுத்தி, அதை பெருமை படுத்திக் காட்டிட புராணங்கள் அல்லது கதைகள் மூலம் முயலுவது ஒரு வழமையாக காண்கிறோம். ஆனால், புத்தர் இப்படியான செயல்களில் நம்பிக்கையற்றவர், வெறுக்கிறார் என்பது எனோ இவர்களுக்கு புரிவதில்லை? வாசபா அல்லது வசபனின் மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] என்பவன் பருவக் காளையாக வளர்ந்திருந்தான். வசபன் அவனுக்கு ஏற்ற மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களை அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப் பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளை அழைத்து வர ஆளனுப்பினன். செங்கல் தொழிலாளி "இவள் ஒரு ராஜகுமாரி" என்று வசபனிடம் கூறினன். சுபகராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடையாளமாக ராஜ முத்திரையைக் காட்டினன். இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் என்று அத்தியாயம் 35 கூறுகிறது. வங்கனாசிக தீசனும் அவனது மனைவி, பின்னர் மகா மாதா [Mahamatta] என்று அழைக்கப்பட்டவளும் தமிழர்களாக இருக்கலாம்? இருப்பினும், வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மனைவி மகா மாதா இருவரும் தமிழர்கள் என்ற கூற்றைப் பொறுத்தவரை, இதை முழுமையாக ஆதரிக்க வலுவான வரலாற்று ஆதாரங்கள் குறைவு. நாளாகமங்கள் முதன்மையாக மன்னர்களின் அரசியல் மற்றும் மத அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன மற்றும் அவர்களின் இன தோற்றம் பற்றிய வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே வழங்குகின்றன. எனினும் அவர்களின் பெயரின் அமைப்பு, அவர்கள் வாழ்ந்த இடம், மற்றும் அவர்களின் செயல், உதாரணமாக விகாரைக்கு 'வள்ளி விகாரை' என்ற பெயரிடுதல் போன்றவை சான்றுகளாகின்றன. பண்டைய காலக் கதைகளின் படி, மன்னர் வாசபாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அவரது வம்சாவளியைப் பற்றிய கூடுதல் தரவுகளைக் வழங்குகின்றன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள தம்மன்னாவாவில், [Tammannava Inscription (Kurunegala District)] பிராமி எழுத்துக்களில் இரண்டாம் நூற்றாண்டின் பாறைக் கல்வெட்டு, தூதாக - மகாராஜா [Dutaga - Maharaja] என்ற ஆட்சியாளரைக் குறிக்கிறது, அவர் "பெரிய மன்னன் வஹாபா " [Vahaba] வின் (வாசபா) மகனாக அடையாளம் காணப்படுகிறார். மொனராகலா மாவட்டத்தின் புத்தலாவில் உள்ள ஹபேசாவில் உள்ள மற்றொரு கல்வெட்டு [Habessa Inscription (Buttala, Monaragala District)] , வாசபாவின் பேரனும் மன்னன் உத்தராவின் [King Uttara] மகனுமான நாகா [Naga] என்ற உப-ராஜாவைக் [துணை அரசனை] குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் வரலாற்றாசிரியர் பரணவிதான (1969) வாசபாவுக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கூற வழிவகுத்தன: தீசன் (வங்கனாசிக தீசன்), தூதாக மற்றும் உத்தரா. வாசபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இராச்சியம் இந்த மூவருக்கும் இடையில் பிரிக்கப்பட்டது என்றும் தீசன் தலைநகரான அனுராதபுரத்தை ஆட்சி செய்தான் என்றும்; தூதாக குருநாகல் பகுதியை ஆட்சி செய்தான் என்றும்; உத்தரா ருஹுணாவை ஆட்சி செய்தான் என்றும் முடிவு செய்தார். இந்தக் கோட்பாடு, வாசபாவின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற கடுமையான வாரிசுரிமையை, மற்ற எல்லா இலங்கை அரசுகளிலும் பின் பற்றியது போல பின்பற்றாமல், அதற்குப் பதிலாக மூவரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற பரணவிதானவின் கருத்து, மற்றும் பாரம்பரிய நாளாகமங்கள் (மகாவம்சம், தீபவம்சம் போன்றவை) தூதாக மற்றும் உத்தராவைப் பற்றிக் குறிப்பிடாததாலும் உலகளவில் அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், சில வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர்களைக் காட்டிலும், பிராந்திய ஆட்சியாளர்கள் அல்லது உள்ளூர் இளவரசர்களைக் குறிக்கலாம் என்று வாதிடுகின்றனர். Part: 96 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Vannakatissa was Vasabha’s son and the king was looking for a suitable marriage partner for him. By another storey in the chapter 35, Vannakatissa is happened to marry the daughter of the previous king Subharajah. The Husband Vannakatissa and the wife, later Mahamatta, are both Tamils. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 97 தொடரும் / Will follow துளி/DROP: 2010 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615883958060153/?
  6. இன்னொரு விடயம். மேலே எழுதபட்டுள்ளது மிக தந்திரமாக தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதுவாக வரலாற்றை திரிக்கும் முயற்சி. புலிகள் அழிய முன்னோ, அழிந்து கொண்டிருக்கும் போதோ…புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் கூறியதில்லை. சங்கரி, டக்லஸ், கருணாதான் அப்படி கூறியவர்கள். சம்பந்தர் சொன்னது… புலிகள் அழிந்த பின், அவர்களின் அழிவுக்கு பின் தீர்வை தருவோம் என சொன்னோர்… சொன்னபடி தந்தால்…புலிகளின் அழிவை ஒரு நல்ல விடயமாக கருதலாம் என்பதே. இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. இந்தியாவில் போய் போனை ஆப் பண்ணி போட்டு குப்புற படுத்தது - இதை அத்தனை எம்பிகளும் செய்தார்கள். சிலர் இந்தியாவில், சிலர் இலண்டனில், ஈழவேந்தன் கனடாவில், சிலர் கொழும்பில்…. குப்புறபடுத்தார்கள்…எங்கே என்பதுதான் வித்தியாசம். பொன்னரும், சந்திரநேருவும், குதிரை கஜனும்…போரை நிறுத்த சொல்லி ஜெனிவாவில் தீக்குளிக்கவும் இல்லை, இலண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் இல்லை. இவ்வளவு ஏன், முடிவு நெருங்கியதை அறிந்த பின், புலிகளின் தளபதிகள் கூட குடும்பங்களை ஆமி, நேவியிடம் அனுப்பி வைத்தனர்.
  7. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 🌙 பாகம் 07 – மேகங்களைத் தொட்ட கோபுரம் (Palm Tower – பாம் கோபுரம்) துபாயில் காலை சூரியன் வானத்தில் ஒரு தங்க முத்துப் போல உதித்தது. தாத்தா மற்றும் மூன்று பேரன்களும் ஒரு புதிய சாகசத்திற்காக புறப்பட்டபோது காற்று மென்மையாக, சிறு வெப்பத்துடனும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் வீசியது. இன்று அவர்கள் மூச்சடைக்க வைக்கும் காட்சிகள் மற்றும் மேகங்களுக்கு மத்தியில் நடப்பது போன்ற உணர்வைத் தரக்கூடிய ஒரு இடத்துக்கு பயணிக்க முடிவு செய்திருந்தார்கள். தீவின் மையப்பகுதியில் அழகாக உயர்ந்து நிற்கும் பாம் கோபுரத்தை, நிலன் அவர்களின் கார் சாளரத்தின் ஊடாக தூரத்திலேயே பார்த்தான். அதன் தங்கக் கண்ணாடிச் சுவர்கள் [golden glass walls], சூரிய ஒளியை பிரதிபலித்து, கடலின் மேல் மிதக்கும் பொற்கலன் போல் தோன்ற வைத்தது. “தாத்தா, பாருங்க! இது தண்ணீரின் மேல் கட்டப்பட்ட கோபுரம் மாதிரி இருக்கு!” என்று நிலன் ஆச்சரியமாய் சொன்னான். திரேன் மகிழ்ச்சியுடன், கண்கள் விரிந்து தலையசைத்தான். “மேலே இருந்து பார்த்தால், பாம் வடிவிலான முழு தீவையும் நாம் உண்மையில் பார்க்க முடியுமா?” தாத்தா புன்னகையுடன், “ஓ ஆமாம், பசங்களா. இன்று, கற்பனை எப்படி நிஜமாகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.” என்றார். அவர்கள் பாம் டவரில் [Palm Tower] அடியெடுத்து வைத்ததும், மென்மையான இசை காற்றை நிரப்பியது. லிஃப்ட் [elevator or lift] கதவுகள் மூடப்பட்டன, மேலும் அவை உயரத் தொடங்கியதும் விளக்குகள் மங்கின - 10 ஆவது மாடி, 20, 30... இறுதியில் 52 ஆவது மாடி – பாம் கோபுரத்தில் உள்ள காட்சிகள் பார்க்கும் தளத்துக்கு ['The View at The Palm'] அடைந்தனர். அவர்கள் அங்கு அடைய, கதவுகள் திறக்கப்பட்டன, தாத்தாவும் மூன்று பேரன்களும் வானத் தளத்தில் [ஸ்கைடெக்கில் / skydeck] இறங்கினர். ஒரு மென்மையான காற்று அவர்களை வரவேற்றது. அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு காட்சி அவர்கள் முன் விரிந்தது - முழு பாம் ஜுமேராவும் [Palm Jumeirah], அதன் இலைகளும் வட்டங்களும் [பனங்காய் வடிவில்] நீலக் கடலில் [turquoise sea] மிதக்கும் ஒரு பெரிய பாம் மரத்தைப் [Palm tree] போல சரியான வடிவத்தில் இருந்தன. பாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கைத் தீவு ஆகும். பாம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m3 மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். “விமானத்திலிருந்து கீழே பார்ப்பது போல் இருக்கிறது!” என்று திரேன் கிசுகிசுத்தான். நிலன் மூச்சு விடாமல் கண்ணாடிச் சுவரில் கைகளை அழுத்தினான். “எனக்கு அட்லாண்டிஸ் ஹோட்டல் [Atlantis Hotel] தெரியுது ... கடற்கரைகள் கூட!” என்று ஒரு போடு போட்டான். குட்டி ஆரின் வானத்தை நோக்கி தன் சின்னக் கையை நீட்டி, மிதக்கும் மேகங்களைப் பார்த்து சிரித்தான். தாத்தா அவனைத் தூக்கி, மெதுவாகச் சொன்னார், “என் குட்டியே ... பார் கீழே, மேலிருந்து நீ பார்க்கும் போது உலகம் மிகவும் அமைதியாகத் தெரிகிறது இல்லையா ?.” என்று கேட்டார். அவர்கள் நால்வரும் மேகங்களில் தொங்கும் பாலமான, கண்ணாடி வான் நடைபாதையில் [ஸ்கைவாக்கில் / skywalk] கால் வைத்தனர் - அது ஒளிபுகும் கண்ணாடி பலகைகளால் [transparent glass panels] ஆன ஒரு பாலம் ஆகும். நிலன் ஒரு கணம் தயங்கினாலும், பின் கீழே சிறிதாக தெரிந்த சாலைகளையும் கார்களையும், தாத்தாவுடன் பார்த்தான். “கவலைப்படாதே, நிலன்,” தாத்தா அவனின் முதுகைத் தட்டி மெதுவாகச் சொன்னார். “அது வலிமையானது - நம் தைரியத்தைப் போலவே அதுவும் வலிமையானது.” என்றார். அவர் தனது பேரனின் கையைப் பிடித்தார், இருவரும் சேர்ந்து கண்ணாடி பாலத்தில் முன்னேறினர். என்றாலும் திரேன் தைரியமாக தனியாக சிரித்தபடி தாத்தாவை பின் தொடர்ந்தான். அவர்கள் அடியடியாக நகர்ந்தபோது கண்ணாடி கீழே மின்னியது; நீலக் கடல் அதன் அடியில் வைரம் போல ஜொலித்தது. கடற்பறவைகள் [அல்லது கடற்காகம் / Seagulls] தூரத்தில் வானில் பறந்து சென்றன. சூரிய ஒளியில் அவற்றின் சிறகுகள் வெண்மையாக மின்னின. பூமிக்கும் வானத்துக்கும் இடையில் பாதி தூரத்தில், தாத்தாவும் மூன்று பேரன்களும் ஒரு கனவில் நடந்து செல்வது போல் - அது அவர்களுக்கு இருந்தது. “தாத்தா,” என்று, தாத்தாவின் பார்வையைத் தன்மேல் பதித்து, “மேகங்களுக்கு கதவுகள் இருந்தால், இது அவற்றில் ஒன்றாக இருக்கும்!” என்று திரேன் கூறினான். தாத்தா மெதுவாகச் சிரித்து, “ஆம், இன்று, நாங்கள் அதைத் திறந்துவிட்டோம்." என்று ஒருபடி மேலே போனார். அவர்கள் தொலைநோக்கிகள் அமைந்த பார்வையிடும் பகுதிக்குச் சென்றனர், அங்கு ஒரு வழிகாட்டி பாம் ஜுமேரா [Palm Jumeirah] தீவு எப்படி உருவானது என்று விளக்கினார் - கடலில் மணலைக் கொண்டு, பாறையை கொண்டு மனித கற்பனை மற்றும் தொழில்நுட்பத்துடன் வடித்த அற்புதம் அது - 🌴பாம் மரத்தை போல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கதை இதுதான் என்றார்! "ஒரு காலத்தில், இது வெறும் கடல் - ஆனால் யாரோ கடலையே வடிவமைக்க கனவு கண்டார்கள். இது கனவுகளின் மரம் என்று கூட கூறலாம் " தாத்தா, காட்சிகளை உன்னிப்பாக பார்த்துக்கொண்டே கூறினார். நிலன் ஒரு கணம் சற்று யோசித்துவிட்டு, "நாங்கள் மணல் கோட்டைகளை எப்படி கட்டுகிறோம் என்பது போல - ஆனால் இன்னும் பெரியது." என்றான் குறும்பாக. "சரியாகச் சொன்னாய், பாம் மர கோபுரம் உலகின் மிகப்பெரிய மணல் கோட்டை [sandcastle] என்று தாத்தா சிரித்தார். அதன் பின் அவர்கள், அங்கிருந்த வான் கஃபேக்கு [🍹Sky Café] போனார்கள். அங்கு சிறுவர்கள் ஜன்னல் ஓரமாக அமர்ந்து குளிரான பழச்சாறுடன் குரோசண்ட்களை [fruit juice and croissants] சுவைத்தனர். அப்பொழுது அங்கே, கண்ணாடி வழியாக சூரிய ஒளி உள்ளே வந்து, தரையில் மேகங்களின் மென்மையான பிரதிபலிப்புகளை வீசியது. ஆரின் கடந்து செல்லும் ஒவ்வொரு கடற்பறவைக்கும் கைதட்டினான். அதே நேரத்தில் நிலன், தான் பார்க்கும் 'நீல நீர் மற்றும் வெள்ளை படகுகளால் சூழப்பட்ட ஒரு பனை [பாம்மர] வடிவ தீவை' வரைய முயன்றான். திரேன் அதன் மேலே சிறிய நட்சத்திரங்களைத் தீட்டி, "இரவில் இப்படித்தான் இருக்கும்" என்று கூறினான். தாத்தா மெதுவாகத் தேநீர் அருந்திக்கொண்டு கீழே பார்த்து, "தெரிகிறதா, சிறுவர்களே? இங்கிருந்து, உலகம் ஒன்றுபட்டதாகத் தெரிகிறது - கடல், நிலம் மற்றும் வானம். எல்லாம் நம்மைப் போலவே இணைக்கப்பட்டுள்ளது." என்றார். 🌅மாலை நேரம் மெதுவாக மறைந்துகொண்டு இருந்தது. வானம் சிகப்பு, ஆரஞ்சு, தங்க நிறங்களால் பூசப்பட்டது. கோபுரத்தின் கண்ணாடிச் சுவர்கள் மினுமினுக்க, கீழே நகரத்தின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல மின்னின. “தாத்தா,” நிலன் மெல்லச் சொன்னான், “நாம் மேகங்களில் இருக்கிறோம் போலிருக்கிறது.” தாத்தா தன் தலையை அசைத்து, கைகளை அவர்களின் தோள்களில் வைத்தார். “ஆம், என் குட்டிகளே. ஆனால் நினைவில் கொள்க — கீழே இறங்கினாலும், இந்த மேகங்கள் உங்கள் உள்ளத்தில் என்றும் இருக்கும்.” அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று சூரியன் கடலில் மறையும் அற்புதக் காட்சியைப் பார்த்து, தமது அன்றைய நாளை உண்மையிலேயே வானத்தைத் தொட்ட நாளாக நினைவுகூர்ந்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 08 தொடரும் துளி/DROP: 2009 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615262391455643/?
  8. அன்மையில் விளையாடின‌ விளையாட்டை எல்லாம் பார்க்க‌னும் நான் இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ வில்லை இத்தாலி அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் விளையாடுகின‌ம்.............. போட்டி தொட‌ங்க‌ முத‌ல் க‌ல‌ந்து விட்டேன் அண்ணா....................
  9. சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் . எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...? Paranji Sankar
  10. இத்தாலி அணியில் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் அதிக‌ம் த‌லைவ‌ரே இத்தாலி பெரிய‌ அணிக‌ளை வெல்ல‌வும் கூடும்..........................
  11. @goshan_che இப்படி ஆதாரம் கேட்டு ரோதனை பண்ணக் கூடாது. நான் பாடினால் அது கவிதை. நான் வரைந்தால் அது ஓவியம். அப்படி ஏற்று கொள்ளப் பழகவேணும். அதுவே நல்ல பிள்ளைக்கு அழகு. நாங்களும் அப்படி தான் வளர்ந்தனாங்கள். அது தான் எங்க மரபு, பாரம்பரியம், கலாசாரம்.
  12. இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி. இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.
  13. இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml6iaezl04sbo29n9drcx5um
  14. பகிடியான சிகப்பு அட்டை தருணங்கள் .......! 😂
  15. கறுப்பு ஜூலையால் இல்லாமல்போன ஜப்பானின் பெரும் முதலீடு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் #indrajithkumaraswamy #formergovernor #powermoves #NewsFirstTamil #lka #srilanka
  16. அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 100க்கு மேற்பட்டோர் பலி! 03 Feb, 2026 | 04:51 PM அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறபோதும், அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237724
  17. பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!
  18. 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அதனையடுத்து, எப்ஸ்டீன் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, “எப்ஸ்டீன் கோப்புகள்” என்ற பெயரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த ஆவணங்களில், ட்ரம்ப் 13 வயது சிறுமியை 35 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அந்த சிறுமி, தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்தபோது ட்ரம்ப் அந்த சிறுமியை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறித்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 1984இல் மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில் பிறந்த குழந்தையொன்று சிசுக்கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டதை ட்ரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட அந்த குழந்தை ட்ரம்ப்புக்கோ அல்லது வேறு எவருக்கோ பாலியல் உறவினால் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் எப்ஸ்டீன் ஆவணத்தில் சந்தேகக் குறிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எப்ஸ்டீன் ஆவணங்களில் தனது பெயர் வெளியானது குறித்து கருத்து தெரிவித்து வரும் ட்ரம்ப், தனக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள், ஆவணத்தில் தன்னை தொடர்புபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் மறுத்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/237685
  19. மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு Feb 3, 2026 - 12:42 PM இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார். மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml69hpxg04s1o29n5wx83rbk
  20. ராஜ் ராஜரட்ணம் அவர்களுக்கு ஓராண்டு ஆலோசகராகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார். ராஜ் ராஜரட்ணம் அவர்களால் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு சதமும் மீளவழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
  21. இன்று இலங்கை அணியின் A அணியுடன் ஓமான் அணி T20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றது. இலங்கை A அணியில் விஜயகாந்த் விளையாடலாம் என நினைத்தேன் . ஆனால் இலங்கை A அணியில் இருந்த 15 பேரும் சிங்களவர்கள்
  22. கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு 03 Feb, 2026 | 10:34 AM (நா.தனுஜா) புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார். கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக திங்கட்கிழமை (02) நெடுங்கேணியில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சிங்களக்குடியேற்றங்கள் மிகத்துரிதமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சிங்களக்குடியேற்றங்கள் விவசாய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் எனும் பெயர்களில் இந்தக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சிங்களக்குடியேற்றங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது மகாவலி எனும் பெயரில் மட்டக்களப்பிலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில், அதாவது வடமாகாணத்தில் 25 வீதமான சிங்கள மக்களைக் குடியேற்றவேண்டும் என்ற கொள்கை யுத்தத்தின் பின்னர் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களிடம் இருக்கிறது. அதன்மூலம் மாத்திரமே பிற்காலத்தில் தமிழ்மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவ்வரசாங்கங்களிடம் மேலோங்கியுள்ளது. மகாவலி எல் வலயத்தில் சிங்களவர்கள், அதிலும் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள். இன்று அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதற்காக மிச்சம் சொச்சமாக இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்து, சுமார் பத்தாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து, அங்குள்ள சிறு குளங்களை அழித்து, தமிழ்மக்களை அந்த மண்ணிலிருந்து விரட்டி, அங்கு ஒரு புதிய நீர்ப்பாசனத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் யோசிக்கிறது. இந்தக் குடியேற்றங்கள் இதனுடன் முடிந்துபோகாது. நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் என சகல இடங்களிலும் இந்த மகாவலி திட்டத்தின் சிறகுகள் பரந்து விரிந்திருக்கிறது. எனவே அந்தக் குடியேற்றங்கள் வவுனியாவை சுற்றிவளைத்து இடம்பெறும் அதேவேளை, திருகோணமலையில் ஒரு சிங்களத்தொகுதி வந்ததைப்போன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவை இணைந்து ஒரு சிங்களத்தொகுதி உருவாக்கப்படும். இப்புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே இதனைக் கட்டுப்படுத்தி, முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்றார். https://www.virakesari.lk/article/237672
  23. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் .......! --- பூப்பூக்கும் ஓசை ---
  24. மண்ணை நம்பி மரம் இருக்கு ........! 😍
  25. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம் 03 Feb, 2026 | 01:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இது என்ன நியாயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது கேள்வியெழுப்புகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான், பன்சேனை, வாதக்கல்மடு,பாவற்கொடிசேனை, உன்னிச்சை மற்றும் நெடியமடு போன்ற பிரதேசங்களுக்கு இதுவைர குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை. உன்னிச்சையில் இருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டப்போதிலும், உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இந்த பிரதேசத்துக்கு நீர் விநியோகத் திட்டத்தை வழங்கும் முன்மொழிவுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் கிவுல்ஓயா திட்டம் ஊடாக சிங்கள குடியேற்றங்களை முறையற்ற வகையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/237690
  26. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கனடாவை இத்தாலி தோற்கடித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.