All Activity
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஆம். நன்றி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஹொல்ட் ஓன் ப்ரோ… ஐ ஆம் ஒன் மை வே… நாளைக்கு நானும் நமிபியாவும் சேர்ந்து உங்களை மேலே தூக்கிறம்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀. 😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை, ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும். முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார். இதைத்தான் நான் சொன்னேன். கருத்து சொல்வதை அல்ல.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…. தொடர்ந்து எழுதுங்கள். யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள். இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை. துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின் அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா. துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை. இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை. அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம். ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀. இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடக்கும் போல என்று குருவி சொல்லுது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்ப என்ன, நபீயாவின் வெற்றியுடன்..... நமீபிய அணி.... தென்னாபிரிக்காவின் B அணி போன்ற ஒரு அணி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
"தெரிவு செய்யவில்லை" என்பதுதான் அவரின் தெரிவு இல்லையா. 😁 (இது நகைச்சுவை என்பதைத் தெரிவித்துக்கொண்டு)😁
- Yesterday
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
"முந்தானை முடிச்சு" திரைப் படம முருங்கைக் காய் விடயத்தை தமிழர்களிடையே பரப்பிய மாதிரி, சிறீப்பிரியா நடித்த "நீயா" படம் இந்தச் சோடிப் பாம்பு பற்றிய கதையைப் பரப்பியது. பாம்பு, பென்குயின் போல ஒரே சோடியோடுவாழ் நாளைக் கழிக்கும் உயிரினம் அல்ல. அப்படியெல்லாம் அடித்தவரைச் சோடி அடையாளம் கண்டு வருவதானால், ஒரு சோடிகளின் படையே வர வேண்டும். அந்தளவுக்குப் பல தார மணம் செய்வது பாம்பினம். அப்படியெதுவும் நிஜத்தில் நடப்பதில்லை, திரையில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். நாளைய முதலமைச்சர் @செம்பாட்டான் ?அல்லது @ஏராளன் ? ஆக @வீரப் பையன்26 ஓடி வாப்பா. அக்காவுக்கு அதிஸ்டம் அடிக்க போகுது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்பாவிகளையும், பத்திரிகையாளர்களையும் கொன்ற டக்கியை நீங்கள் "ஜனநாயக நீரோட்டத்தில்" இணைந்தவர் என்று கருதுவதாலா இந்தக் கேள்வி😂?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் இந்தியாவில் பரோடா அணிக்காக 2021 இல் விளையாடி இருக்கிறார். இதனால் 2022 ஐபிஎல் இல் பஞ்சாப் அணியில் இந்தியா uncapped வீரராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. பிறகு கனடாவுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார். ஐபிஎல்லில் இனிமேல் இவர் சேருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஐபிஎல் ஏலத்தின் ஒரு அணி அதிக பட்சம் 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யமுடியும். அவர்களில் ஒரு போட்டியில் அதிக பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆனால் இந்தியர்கள் என்றால் ஒரு அணியில் ஏலத்தில் குறைந்தது 17 வீரர்களை தெரிவு செய்யமுடியும்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா செம்பாட்டான் ஈழப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே நந்தன் நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 சுவி அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா நிலாமதி இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கப்பல் கரையை தட்டிவிட்டது...................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁
-
ஆடுகளம்
-
Molt Book AI கடவுள்!
புலவர் started following Molt Book AI கடவுள்!
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நீ தமிழன் என்றால் நான் கூறும் தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதை நான் செயற்படுத்துவதையும் அந்த செயற்பாட்டையும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எதிர் பார்கின்றனர். அவரகள் உரு வந்து ஆடுவதை சாந்தப்படுத்தி நல்வழிப்படுத்த கோசான் சிலவற்றை சிலவற்றை சொல்ல வேண்டும் தானே! அதில் தவறில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்ப அந்ததலையீடுகள் இருப்பதாக தெரியவில்லையே...சிலவேளை இது அமசடக்கமோ...ஒரு தலையீடு மட்டும் பார்த்தேன்...அனுர பாகிஸ்தான் தலைவரிடம் இந்தியாவுடன் விளையாடும்படி கேட்டது....😁 இது ஒருவகை...அதிர்ஸ்டம்...இலங்கை தப்பித்தது இதுதான் நம்ம ஸ்டைலு...குத்திற இடத்தை குத்துவம் ....பின்னர் பம்மிக்கொண்டு திரிவம்- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும். தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கோசான், “போராடி இருக்கவே தேவையில்லை, இலங்கை தேசியத்தைள் கரையலாம்”, என்பது எனது கருத்து அல்ல. அப்படி மக்களை நினைக்க வைத்தவர்கள் இந்த தீவிர தமிழ் தேசியர்களே. நடைமுறைச் சாத்தியமற்றதை வேண்டி பிடிவாதம் பிடித்து பெறக்கூடியவற்றை தொடர்ந்து இழப்பது குறித்தே எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன். 2002 ல் இருந்து அரசியல் போராளிகள் ஐரோப்பா முழுவதும் செல்வதற்கும் உலக நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடி எமது பக்க நியாங்களை எடுத்து கூறவும் நல்லுறவுகளை வளர்தது லொபி செய்யவும் அதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவதற்கான சிறந்த வாய்பபு கிடைத்தது. நோர்வே அநுசணை விசா கிடைத்து ஐரோப்பா வந்தவர்கள் எல்லோரும் அடுத்த யுத்தத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் மக்களை சந்திப்புகளில் மட்டுமே அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டிருந்தனர். மக்களின் ஆவலை தூண்ட யுத்தக் கதைகளை சுவார்சியமாக கூறி மக்களை உசுபேற்றி விட்டு சென்றனர். இது தமிழ் தேசியத்தை வளர்ததா? அல்லது அதற்கு ஆப்பக அமைந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன். துரையப்பா மீதும் அவரது அரசியல் மீதும் எவர் அவதூறுகளை சுமத்தினாலும் விமர்சனங்களை வைத்தாலும் யாழ்பாணத்திற்கு அவரைப் போல ஒரு சிறந்த மேயர் இதுவரை கிடைக்கவில்லை என்பது எவரலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியை பகீரங்கமாக ஆதரித்தார் என்பதே அவர் மீதான துரோகி பட்டம். ஆனால் இன்று ஆளும் கட்சியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்று அவர்களைத் துரோகிகள் என்று மக்களிடம் கூற முடியத கையறு நிலை. அத்துடன் மாநகர சபைக் கட்டத்தினுள் ஒரு சிறிய அறையில் இருந்த நூல் நிலையத்தை மாற்றி யாழ்பாணத்திற்கு ஒரு அழகிய நூலகம் கட்டம் தேவை என்று 1050 களின் நடுப்பகுதியிலேயே பேரவா கொண்டு நூல்நிலைய கட்டட நிர்மாணிப்பில் key role ஆக செயற்பட்டவர் அவராகும் . 1950 களில் வெளிவந்த பத்திரிகைகளை பார்ததால் அவரது அந்த பங்களிப்பு தெரியும். நூல் நிலைய எரிப்பை வைத்து அரசியல் செய்த தேசியர்கள் அவரது அந்த பங்களிப்பை கபடத்தனமாக மறைத்து அவர் மீது அவதூறுகளையே பொழிந்தனர். அது தான் தமிழரசுக்கட்சியின் அரசியல். காரணம் அவர் இருந்தால் யாழ்பாண தொகுதி கிடைக்காது என்ற பயமே.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@vasee பலர் மனங்களில் இது வந்து போகும் 2010 அந்த காலப் பகுதியில் தான் பலருக்கு தெரியும் அப்கானிஸ்தான் அணி என்ர ஒன்று இருக்கேன்று 1996களில் முதல் முறை உலக கோப்பை தூக்கின இலங்கை அணி கிட்ட தட்ட 20வருடமாய் மலை போல் பலமாய் இருந்த அணி அப்கானிஸ்தானின் அசுர வளர்ச்சி இலங்கையின் வீழ்ச்சியாக மாறி விட்டது கிரிக்கேட்டில் இனி இலங்கை உலக கோப்பை வெல்லும் என்று கேட்டால் அது நூற்றுக்கு பூச்சியம் என தான் சொல்லுவேன்..................... மலை போல் இருக்கும் இந்தியாவை இப்போது உள்ள ஆசிய நாடுகளால் வெல்ல முடியாது................. அவுஸ்ரேனியா தென் ஆபிரிக்கா இங்லாந் நியுசிலாந் இந்த நாடுகள் கிரிக்கேட்டில் நல்ல நிலையில் இருக்கினம்............... இலங்கை கிரிக்கேட்டை அழித்து நாசம் ஆக்கின பெருமை இலங்கை அரசியல் வாதிகளையே சேரும்......................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகம் போற போக்கு அப்பிடித்தானே. பொல்லாப்பு நிறைந்த உலகமப்பு. 😉
Important Information
By using this site, you agree to our Terms of Use.