அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…
-
- 0 replies
- 387 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
திருச்செந்துறை ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன அறை | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அ…
-
- 0 replies
- 387 views
-
-
பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANA BERRY Image captionஅந்த பூமிக்கு விஞ்ஞானிகள் வைத்து பெயர் ஜி ஜே 1132பி நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படு…
-
- 1 reply
- 387 views
-
-
பூமிக்கு அடுத்தபடி இன்செலடஸினில் உயிர்கள் வாழ முடியும் என்று எதிர்பார்ப்பு நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும். உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. சூரி…
-
- 2 replies
- 386 views
-
-
“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்…
-
- 0 replies
- 386 views
-
-
ஆப்பிள் பே கேஷ், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுடன் ஐ.ஓ.எஸ். 11.2 வெளியானது ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவன சாதனங்களில் திடீரென ஏற்பட்ட ரூட் லாக்-இன் எனப்படும் பாதுகாப்பு பிழை அனைத்து பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்பட்ட பிழை அடிக்கடி சாதனத்தை ரீபூட் செய்தது. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சரியாக 12.15 மணிக்கு ஏற்பட்ட பிழை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த விடாமல், ரீஸ்டார்ட் செய…
-
- 0 replies
- 386 views
-
-
தமிழால் இணைவோம் அணு உலைக்கு மாற்றாக மிதக்கும் சூரிய மின்சக்தி தீவுகளை உருவாக்குகிறது சுவிட்சர்லாந்து ! சுவிஸ் நாட்டில் உள்ள ஏரியில் மூன்று மிதக்கும் சூரிய ஒளித் தீவுகளை உருவாக்கி வருகிறது இரு தனியார் நிறுவனங்கள். இத்தீவுகள் செயற்கையாக உருவாகப்படுபவை. ஒவ்வொரு சூரிய தீவுகளிலும் 100 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மிதக்கும் தீவும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது . இவைகள் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் சோதனைக் கூடமாக செயல்படும் . இதில் உள்ள சூரியத் தகடுகளில் படும் ஒளி அருகில் உள்ள வெந்நீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அதிலிருந்து உருவாகும் நீராவியை குழாய்கள் வழியாக கரையில் இருக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நீராவியால் இயங்கும் …
-
- 0 replies
- 386 views
-
-
லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
வியாழனின் துணைக்கோளுக்கு விண்கலத்தை அனுப்ப ஆய்வுகள் வியாழன் கிரகத்தின் துணைக் கோளை ஆராய்வதற்கு சிறந்த வழியைபரிசீலிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் இந்த வாரம் கூடுகின்றனர். பல நாடுகள் வியாழன் கிரகம் மற்றும அதன் துணைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே 2020ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்கா இது தொடர்பில் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, இவர்களது எண்ணங்களும் கருத்துக்களும் கூடுதல் உதவியாக அமையக்கூடும். தொலைதூர உணர்வுக் கருவிகளை பயன்படுத்துவது தொடக்கம், உறைபனி படர்ந்துள்ள அதன் மேற்பரப்பை ஊடுருவி உள்ளே சென்று ஆராய்வது வரை, பல ஆலோசனைகளை இவர்கள் விவாதிப்பார்கள். இதில் எந்தக் கருத்து அல்லது ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ,அதற்கு முதலில் ஐர…
-
- 0 replies
- 385 views
-
-
காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…
-
- 0 replies
- 385 views
-
-
செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல் செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டு களாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு கூறும்போது, “இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. அதே நேரம் உடனடியாக இது நிகழாது. அடுத்த 2 கோடி முதல் 4 கோடி ஆண்டுகளில் போபோஸ் உடைந்து சிதறும். இந்த துகள்கள், சனி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல, அடுத்த 1 கோடி முதல் 10 கோடி ஆண்டு களுக்குள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் ஒரு…
-
- 0 replies
- 385 views
-
-
பெருவிண்மீன் வெடிப்பு உருப்பெருக்கப்பட்ட படம். விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி திரும்பத் திரும்ப அரங்கேறும் அதிசயம்! ‘கிரவுண்டுஹாக் டே’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல் அண்டவெளியிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1993-ல் பில் முர்ரேயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கிரவுண்டுஹாக் டே’. தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் கதாநாயகன் மீண்டும் மீண்டும் ஒரே நாளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார். ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வானியலாளர்களும் பெருவிண்மீன் வெடிப்பில் (சூப்பர்நோவா) ஒரே விண்மீன் திரும்பத் திரும்ப வெடித்துச் சிதறுவதைக் கண்டதாகச் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் ஒளியியல் (ஆப்டிக்ஸ்) கூறும் தோற்…
-
- 0 replies
- 384 views
-
-
செயற்கை உடல்வலு, நுண்ணறிவு மூலம் படைகளைப் பலப்படுத்த பச்சைக்கொடி! பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மரபுப் போர் முறை வடிவங்கள் அடியோடு மாற்றம் பெறவுள்ளன.மனிதனிடம் இயற்கையாக உள்ள உடல், உள நுண்ணறிவு வலுக்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது இனிமேல் காலங்கடந்த பழைய தத்துவம் ஆகிவிடப்போகிறது. இயற்கைக்குப் புறம்பாக உருவாக்கப்படும் “பயோனிக்” வீரர்களும் (bionic soldiers) செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட(artificial intelligence) துப்பாக்கிகளும் மோதுகின்ற அரங்குகளாகப் போர்க்களங்கள் மாறப்போகின்றன. எதையும் நிச்சயித்துக் கூறமுடியாத தொற்றுநோய்ப் பேரனர்த்தம் உலகைச் சூழ்ந்துள்ள நிலைமையிலும் கூட படைவலுப் பெருக்கங்களும் பரீட்சார்த்த…
-
- 0 replies
- 384 views
-
-
கடலில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் ரோபோ அறிமுகம்: ஒரே நேரத்தில் ஐவரை மீட்கும் (Video) வளைகுடா நாடுகளில் முதன்முறையாக கடற்கரைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில், கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், இராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்புக் குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர். ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் …
-
- 0 replies
- 383 views
-
-
பூமிக்கு மிக அருகில் பாரிய விண்கல், இன்று கடந்து செல்கிறது : பூமிக்கு என்ன நடக்கும் தெரியுமா..? சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது. புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 4.4 மில்லியன் மைல் தொலைவல் கடந்து செல்லவுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்துடன் ஒப்பிடுகையில் 18 மடங்காகும். இந்த விண்கல் இதுவரை அறியப்பட்ட பூமிக்கு அருகில் கடந்து சென்ற விண்கற்களிலேயே மிகவும் பெரியதாகும். இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிய நேரிடும் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச…
-
- 3 replies
- 383 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரேல் பதவி, அறிவியல் ஆசிரியர் 10 ஜூன் 2024, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா? இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்த…
-
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ நடைபெற்றது. இதில் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது. வழக்கமான, கன்வென்ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணாடிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில்நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குற…
-
- 0 replies
- 382 views
-
-
கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும் பின்தள்ளிப் போடுவது வழமையாகவுள்ளது. இந்நிலையில் இத்தகையவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்க கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ன் போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மூலம் கண்ணின் முன் மற்றும் பின்பக்க புகைப்படங்களை இலகுவாக எடுப்பதற்கு வழிவகை செய்யும் இணைப்பு உபகரணமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பமான கண் கவனிப்பு சேவைகளை பெறுவதை அதிகரிப்பதுடன் கண் கவனிப்பு தொடர்பில் மருத்துவர்கள் நோயாளிக்கு தூர இருந்து ஆலோசனை வழங்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவும் உள்ளதாக மேற்படி உபகரணத்தை உருவாக்கும் செயற்கிரமத்தின் பங்க…
-
- 0 replies
- 382 views
-
-
நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடரபுகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 17, 2020 11:55 AM வாஷிங்டன் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர். …
-
- 0 replies
- 382 views
-
-
பட மூலாதாரம்,UCL படக்குறிப்பு, பனியுகம் குறித்த மர்மத்தை கார்வெல்லாக் தீவுகள் அவிழ்க்கலாம் என நம்பப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 செப்டெம்பர் 2024, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவுக் கூட்டம், பூமியின் மிகப் பெரும் மர்மத்தைக் கட்டவிழ்க்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கார்வெல்லாக் தீவுகள், சுமார் 720 மில்லியன் (72 கோடி ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகப் பெரிய பனியுகத்தில் நுழைந்தது என்பதற்கான மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டுள்ளதாக, …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
கொசுகள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்? ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் தி கன்வெர்சேஷன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது. கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசு…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
ஜேர்மனிய அணுசக்திப் பரிசோதனையின் போது அதி வெப்பமான ஹீலியம் பிளாஸ்மா வாயு தோற்றம் Published by Gnanaprabu on 2015-12-15 09:49:39 ஜேர்மனிய அணுசக்தி பரிசோதனையின் போது விசேடமான அதி வெப்பமான வாயு ஒன்று தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி வாயுவானது புதிய தூய மற்றும் மலிவான சக்தியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பிக்கையைத் தருவதாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஐதான முகில் போன்ற ஏற்றமுள்ள துணிக்கைகளைக் கொண்ட இந்த ஹீலியம் பிளாஸ்மா வாயுவானது ஒரு செக்கனில் பத்தில் ஒரு பங்கு நேரத்துக்கு மட்டுமே நீடித்துள்ளது. இதன்போது சுமார் ஒரு மில்லியன் பாகை செல்சியஸ் வெப்பநிலை தோன்றி…
-
- 0 replies
- 381 views
-
-
2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு? புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83 சதவீதத்தில் ஒன்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது தற்போது 27 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறு கோள் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைப் போல பாதி அகலம் கொண்டது. நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், சுற்றுப்பாதை …
-
- 1 reply
- 381 views
-
-
இங்கிலாந்தில் உள்ள விண்வெளி இயற்பியல் நிபுணர்கள் நாசாவின் ஹெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மற்றும் போட்டோக்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் பூமியின் இரட்டை வாயு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளன. அவற்றுக்கு ‘கே.ஓ.ஐ–314சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் விட்டம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாக உள்ளன. இந்த கிரகங்களில் பல நூறு மைல் சுற்றளவுக்கு நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் சூழந்துள்ளன. அதனால் இவை எடையின்றி மிகவும் லேசாக உள்ளன. ஆனால் மிகவும் தடிமனான அளவில் இக்கிரகங்கள் உள்ளன. இங்கு எப்போதும் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அது உயிரினங்கள் வாழ தருதியற்ற தட்ப வெப்ப நிலையாகும். …
-
- 0 replies
- 381 views
-