அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3266 topics in this forum
-
செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு ESA செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும். ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்…
-
- 0 replies
- 374 views
-
-
இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டு தயாராகும் கேலக்ஸி நோட் 8 சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அந்நிறிவனம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 வெற்றி பெறாத நிலையில், புதிய நோட் 8 ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …
-
- 0 replies
- 374 views
-
-
விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை... நாசா வெளியிட்ட வீடியோ! அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், யூகேன் கெர்னன் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ இசையை கேட்டனர். அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவு செய்து வைத்துள்ளது. இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு…
-
- 0 replies
- 373 views
-
-
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில…
-
- 0 replies
- 373 views
-
-
ஸ்மார்ட் வாட்டர்: இந்தத் தண்ணீரை தெளித்தால் குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்க முடியும் ஷியோனா மெக்கலம் தொழில்நுட்ப செய்தியாளர் 19 பிப்ரவரி 2022 புற ஊதாக் கதிர்களின் ஒளியின் கீழ் மட்டுமே தெரியக்கூடிய ஒரு தடயவியல் திரவமான 'ஸ்மார்ட் வாட்டர்' தெளிக்கப்பட்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொழில்நுட்பம் காவல்துறையினரால் பரிசோதிக்கப்படுகிறது. இந்தத்…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
சூரியனில் நேற்றுக்காலை நிகழ்ந்த பாரிய வெடிப்பு! – பூமிக்கு ஆபத்து இல்லையாம். [Wednesday, 2014-02-26 18:04:48] சூரியனில் நேற்று காலை கடுமையான வெடிப்பு ஏற்பட்டு உள்ளது .இதனால் விண்வெளியில் மணிக்கு 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு வெளியாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் கவலைப்பட தேவை இல்லை இது பூமியை தாக்காது எனவும் கூறி உள்ளனர். நேற்று காலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டது சூரியனின் தென்கிழக்கு பகுதியில் பூமியை நோக்கிய பகுதியில் இந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. 2014 இல் ஏற்பட்டு உள்ள மிகப் பெரிய சூரிய வெடிப்பு இதுவாகும். இதனால் செயற்கைகோள்கள் அல்லது ரேடியோ தகவல் தொடர்பு பாதிக்கப்படாது என எதிர்பார்க்கபடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 373 views
-
-
பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாய…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா ஒரு விண்கலத்தை அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் முதலாம் திகதி நிலவில் பாதுகாப்பாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது. அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி அந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த …
-
- 0 replies
- 372 views
-
-
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=80874&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 371 views
-
-
வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான் எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது. வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும்…
-
- 0 replies
- 371 views
-
-
அருகி வருகிறதா டிஜிட்டல் பாதுகாப்பு? உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிய பெருமை இணையத்தையே சேரும். "இன்டர்நெட் என்பது ஆடம்பரம் அல்ல. அத்தியாவசியம்!" என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பார். உண்மையில் இணையம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகத்தான் இன்றைக்கு மாறியிருக்கிறது. நாளுக்குநாள் இணையத்தின் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டிருக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது. மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்காக PIN அல்லது பேட்டர்ன் லொக் (Pattern Lock) பயன்படுத்துவதைப் பார்த்திருப்போ…
-
- 0 replies
- 370 views
-
-
பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது 2016-06-30 12:10:05 அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணினியில் தானாக விண் டோஸ் 10 மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட்டதால் அப் பெண்ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்குவதற்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் இணங்கியுள்ளது. டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப் பெண்ணின் கணினியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது அனுமதியின்றி அக் கணினி யில் தானாகவே விண்டோஸ் 10 பதிப்பை தறவிறக்கம் செய்யும் முயற்சி இடம்பெற்று தோல்வியடைந்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 370 views
-
-
பெண் குரங்குகளுக்கு ஆணிடம் என்ன பிடிக்கும்? கெலாடா சமூகத்தில் பெண்களின் ஆதிக்கமும் அதிகாரமும் அதிகம் ஒரு கோழிக் கூட்டத்தில் மிகவும் பெரிய அல்லது மூத்த கோழி மற்ற கோழிகளின் தலையில் கொத்தும். ஒவ்வொரு கோழியும் தன்னைவிட, இளைய கோழிகளைக் கொத்தும். வீட்டில், கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அரசியல் இயக்கங்களில் என்று எங்கும் ஒவ்வொருவரும் தன்னை அடுத்துக் கீழ்நிலையில் இருப்பவரின் தலையில் குட்டுவார்கள். இதை ‘கொத்தல் வரிசை’ எனலாம். கல்வி நிலையத்தில், அலுவலகத்தில், வீட்டில் அல்லது வீதியில் கொத்தல் வரிசையில் நமது இடம் எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தியோப்பியாவின் மேட்டு நிலங்களில் மட்டுமே காணப்படுக…
-
- 0 replies
- 370 views
-
-
வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்? பிபிசி முண்டோ . 16 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைக…
-
- 1 reply
- 370 views
- 1 follower
-
-
செவ்வாயில் ‘பொ்சிவரன்ஸ்’ எடுத்த துல்லியப் படங்களை வெளியிட்ட நாசா
-
- 0 replies
- 369 views
-
-
வானில் ஓர் அதிசயம்.. பூமியை நெருங்கும் நிலா. வரும் 14ஆம் தேதி ஒரு அதிசயம் நடைபெற இருக்கிறது. பவுர்ணமி நாளான அன்று நிலவு தனது சுற்றுவட்டப்பாதை பூமிக்கு மிக அருகே வரவுள்ளது. இதனால் அன்றைய நாள் 'super moon' அதாவது நிலா மிகப் பெரியதாக காணப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.1948ஆம் ஆண்டுக்கு பின்னர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு நிலா பூமியை நெருங்குகிறது. இதனால் வரும் 14 ஆம் தேதி வழக்கத்தை விட நிலவு பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்போது இந்த பெரிய நிலாவைக் காண தவறினால் நீங்கள் 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்! நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 0 replies
- 369 views
-
-
கம்பத்துக்குப் பின் நில அதிர்வு.... நேபாள பூகம்பத்துக்கு பின் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வில் பீஹாரில் 17 பேர் இறந்தனர் நேபாளத்தில் ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்ப அழிவில் 8,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டு, மேலும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இயற்கை பேரழிவுகள் இது போல ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்வதில்லை, ஆனால் பூகம்பங்கள் ஒரு விதிவிலக்கு. பெரும் நில நடுக்கங்கள் ஏற்படும்போது அவைகளைப் பின் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் பொதுவாக ஏற்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 7.3 அளவு கொண்டது ஆனால் அது ஏப்ரல் 25ம் தேதி தாக்கிய முதல் பூகம்பம் போல 7.8 அளவு கொண்டதல்ல. இருந்தாலும…
-
- 0 replies
- 369 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியைச் சுற்றியுள்ள மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் மூன்றாவது புலத்தை "குழப்பங்களின் முகவர்" என்று விவரிக்கின்றனர். இது பூமியைச் சுற்றியுள்ள "இருமுனை புலம்" (ambipolar field). நாசாவின் எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இந்த தொலைதூர புலம் இன்றியமையாத அங்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அதனை முதல் முறையாக அளவிட்டுள்ளனர். இதுவரை, நமது க…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள் காய்லி ரிம்ஃபெல்டு &மார்கெரிட்டா மலான்சினி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். படத்தின் காப்புரிமைEYE UBIQUITOUS/UIG VIA GETTY IMAGES பள்ளிகளில் குழந்தை…
-
- 0 replies
- 367 views
-
-
விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் …
-
- 0 replies
- 367 views
-
-
நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவே…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக்கின் புது அப்டேட் - ப்ரொஃபைல் வீடியோ மணிக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கில் டிபி மாற்றும் தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு ஃபேஸ்புக் கொண்டு சென்றுள்ளது. அதன் துவக்கம்தான் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வீடியோ! நீண்ட நாட்களாக விரைவில் வெளியாகும் என கூறிவந்த ஃபேஸ்புக், தற்போது ப்ரொஃபைல் வீடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருந்து ஃபேஸ்புக் ஆப் மூலம் நேரடியாக வீடியோவை அப்லோட் செய்ய முடியும். மேலும் நம் கேலரியில் உள்ள வீடியோவையும் ப்ரொஃபைல் பிக்சராக்க முடியும் என்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கின் புதிய இந்த ப்ரொஃபைல் வீடியோ வசதி, இளைஞர்களை பெரிதும் கவரும் விதமாக அமையும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போகும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து போ…
-
- 0 replies
- 367 views
-
-
சனி கிரகத்தின் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) ஆறு இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் உள்ள நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாஸாவின் காசினி செயற்கைக்கோள் செப்டம்பர் 26ஆம் தேதி எடுத்துள்ள மிக துல்லியமான புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. டைட்டனின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது. இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது. இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாக நாஸாவின் ஜெட்…
-
- 0 replies
- 367 views
-
-
அறிவியல் சிக்கல்: தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சிலர் இதை மறுபிறவி என்பார்கள். 1870-களில் 'ஏற்கெனவே பார்த்தது' என்று பொருள்படும்படியாக பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி தேஜாவு என இதற்குப் பெயர் வைத்தவர் எமிலி போயராக். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஞானி. …
-
- 5 replies
- 367 views
- 1 follower
-
-
உருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைESO / A. MÜLLER ET AL. ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 367 views
-