Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டுள்ளம…

  2. இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …

    • 0 replies
    • 562 views
  3. 170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில்…

  4. மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா.?? ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர். சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது. சரியான 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது. இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது. ஆனா…

  5. இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…

    • 0 replies
    • 389 views
  6. வந்துவிட்டது ஹிலாரி மோஜி! பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள். கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள். இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்…

  7. கமரூன் மக்கள் பேசும் தமிழ்

    • 1 reply
    • 449 views
  8. நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதை முடிவு செய்யும் வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. அந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இறந்த பின் நம் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை இப்போதே முடிவு செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த வசதி ‘Legacy Contact' என்ற பெயரில் கொடுக்கப்பட்…

  9. வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன? ---------------------------------------------------------------------------------------------------------------------------- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்…

    • 3 replies
    • 777 views
  10. பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது 2016-06-30 12:10:05 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒரு­வரின் கணி­னியில் தானாக விண் டோஸ் 10 மென்­பொருள் தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டதால் அப்­ பெண்­ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்கு மைக்­ரோ சொப்ட் நிறு­வனம் இணங்­கி­யுள்­ளது. டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப்­ பெண்ணின் கணி­னியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் தனது அனு­ம­தி­யின்றி அக்­ க­ணி­னி யில் தானா­கவே விண்டோஸ் 10 பதிப்பை தற­வி­றக்கம் செய்யும் முயற்சி இடம்­பெற்று தோல்­வி­ய­டைந்­த­தாக அப் பெண் தெரி­வித்­துள்ளார்…

  11. மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம். அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும். லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=160488&categor…

  12. எச்சரிக்கை !! பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. …

  13. ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஐ-போனை மேலும் மூன்று மாதிரிகளாக செப்டம்பரில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ-போன் 6, 6 ஸ்யை ஆகியவற்றைத் தொடர்ந்து ஐ-போன் 7, ஐ-போன் 7 ப்ள்ஸ், ஐ-போன் 7 ப்ரோ ஆகிய மாடல்கள் வர்த்தக சந்தைக்கு வெளிவர தயாராக உள்ளது. இதனுடைய கூடுதல் அம்சங்களை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இது டுயல் கேமரா [Dual Camera] மற்றும் வயர்லெஸ் சார்சர் [Wireless charger] , ( ஐ-பேட் ப்ரோ போன்று) 4.7, 5.5 அங்குலம் அகலங்கள் உள்ள திரை [Display] பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை, மற்ற ஐ-போன்களைவிட 150 டாலர் கூடுதலாக இருக்கக்கூடும்…

  14. வாஷிங்டன், புதிய கிரகங்கள், நட்சத்தி ரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக் காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.சமீபத்தில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. . தற்போது கெப்லர் விண்கலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஆனால் பூமியை விட இளமையான கிரகம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளது.இதற்கு கே2-33 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந…

  15. நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும். இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கல் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போத…

  16. ஃபேஸ்புக்கில் புதுவரவு: 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை காண வசதி பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றவும், பார்க்கவும் ஏற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ஸ் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360டிகிரி புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணிணி திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்…

  17. உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்! உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண…

  18. சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ) புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரி…

  19. முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…

  20. கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 'கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து , அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள். அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது. இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்…

  21. காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…

  22. பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது. சுமார்ட் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. “வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சத…

  23. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? நன்றி, அர்ஜூன் (9790395796, 9500378441, 9500378449) . இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449) ஆம். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? என்பதை பார்போம். . “இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு! அரசாங்கம் / பொறுப…

  24. செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அங்கு கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவனபகுதிகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க நிபுணர் ஜானிஷ் பிஷப் ஆய்வில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158330&category=WorldNews&language=tamil

  25. கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை அறியும் வின்செங்கா என்ற மொபைல் ஆப்பை உகாண்டாவை சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தென் ஆப்பிகாவிலுள்ள உகாண்டா உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகும். இங்கு உள்ள பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன. பிரசவ காலத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் 'அல்ட்ராசவுண்ட்' எனப்படும் இயந்திரத்தினை வாங்கும் அளவிற்கு, உகாண்டாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிதி இல்லை. இதனால், பல ஆண்டு காலமாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ள, 'பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.