அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஒரு சாதாரண குழந்தை பின்னாளில் சைகோவாக மாற கீழ்க்கண்ட விஷயங்கள் தேவை. மிக மோசமான பெற்றோர்கள் (எப்பவும் அடிக்கும் அப்பா; அடங்காப்பிடாரி அம்மா .. etc ) கேலி செய்யும் , கூட சேராத Classmates. சிறுவயதில் பாலியல் தொந்தரவுகள் அல்லது கொலை போன்ற அசம்பாவிதங்களைக் காண நேருதல். செக்ஸ் வாழ்கையில் கேள்விகுறி. வெகு சில தருணங்களில் மூளை கோளாறு. இவை ஐந்தில் ஏதேனும் ரெண்டு இருந்தாலே சமுகத்திற்கு ஒரு சைகோ கில்லர் ரெடி. ஏன் கொலை செய்கிறார்கள் ? சிலர் செக்ஸூக்காக செய்கிறார்கள். சிலர் சில நிமிட சந்தோசத்திற்காக செய்கிறார்கள். சிலர் ‘அந்த ஆளை (அல்லது பெண்ணை) பிடிக்கவில்லை அதனால் கொன்றேன்’ என்கிறார்கள். என்னை வேறு சக்தி ஆட்கொண்டது அது என்னிடம் ‘கொல் கொல்’ என்றது அதனால் கொன்றேன் என்கிறார்க…
-
- 9 replies
- 3.5k views
-
-
மனிதன் இறந்த பிறகும் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் மரணித்த உடன் அவனது மூளையின் செயல்பாடுகள் 20 முதல் 30 வினாடிகளில் நின்று விடும் என இதுநாள் வரையிலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்வது புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது மரணத்திற்கு பிறகும் 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதய துடிப்பு அடங்கிய பிறகு …
-
- 2 replies
- 557 views
-
-
அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது. ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூ…
-
- 0 replies
- 475 views
-
-
''அறிவியலில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் கேட்டுக்கொண்டார். சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி ரமேஷ், பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர். 1987ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பிஎச்.டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டன் மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது பெயர் இந்த ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. "காம்ப்ளக்ஸ் ஆக…
-
- 1 reply
- 485 views
-
-
உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் நறுமணமிக்க அகர்வுட்டும் ஒன்றாகும். இன்று உலகிலுள்ள மிக விலையுயர்ந்த வாசணைத்திரவியங்களில் இந்த அகர்வுட் நறுமணமே பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் தூபம் மற்றும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்காசியா நாடுகளில் பரந்து காணப்படும் எகியுலேரியா மரங்களில் அகர்வுட் பிசின்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் தொடர்ச்சியாக பூஞ்சண பங்கசுக்கள் மற்றும் Phialophora parasitica இனால் தாக்கப்பட்டு, அதற்கு பதிலாக நறுமணமிக்க பிசின்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது பிசின் வகை உலக அரங்கில் மிக பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த அம்சங்கள் உற்பத்திக்கான கேள்வியை அதிக…
-
- 0 replies
- 439 views
-
-
பறவைகள், மரங்கள் தருகின்ற பழங்களைத் திண்பதோடு, மரக்கிளைகளில் கூடுகட்டி மரங்களைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன. பதிலுக்கு அவை மனிதர்கள் போலே 'தேங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு போய்விடுவதில்லை; அதற்கான நன்றியை வேறுவிதமாய்ச் செலுத்துகின்றன. பறவைகளைப் பாடாதா கவிஞனும் இல்லை; மரங்களைப் புகழாத புலவனும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பறவைகளும் மரங்களும் மனிதனிடத்தில் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டுள்ளன. "சின்னஞ்சிறு பறவை போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா. வண்ணப் பறவைகளைக் கண்டால் நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா" விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல்: பாரதியின் இந்தப் பாட்டு பாப்பாவிற்கு மட்டுமல்ல, பாரில் உள்ள அனைவருக்கும்தான். பறவைகளைப் பார்த்து மகிழ்கிறோம்; ப…
-
- 1 reply
- 607 views
-
-
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம் தொலைதூர பால்வெளிமண்டலத்தைக்கூட துல்லியமாக காட்டவல்ல புதிய தொலைநோக்கி இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியிருக்கின்றன. ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட…
-
- 0 replies
- 505 views
-
-
2014 இல் மூவர் மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில்.. அதில் அரைவாசியை வென்ற.. இலண்டனில் வசிக்கும் பேராசிரியர் John O'Keefe ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி இதோ. 2014 மருத்துவம் அல்லது உடற்தொழிலியலுக்கான நோபல் பரிசு மூளையில் உள்ள GPS.. திசைகாட்டிக் கலங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை கண்டறிந்ததை இட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலங்கள் சுண்டெலிகளில்.. 1971 இலேயே கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கலங்களின் செயற்பாட்டை சரியாக விளங்கிக் கொள்வதன் வாயிலாக அல்சிமர்.. டெம்ன்சியா(Dementia) போன்ற மூளை நரம்பியல் நோய்களுக்கு தீர்வு தேட வசதிகள் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதேவேளை இயற்பியல் அல்லது பெளதீகவியலுக்கான 2…
-
- 16 replies
- 5.1k views
-
-
Friday the 13th என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகில் பல நாடுகளில் ஓர் அதிர்ஷ்டமில்லாத நாளாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் அளவுக்கு மீறிய அச்சம் கொண்டாலும், அது மூடநம்பிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பலர் அந்நாளில் ஏதும் தீங்கு நடக்கலாம் என்ற பயத்தில் அவர்களின் வீட்டை விட்டு வெளியே செல்லவே மாட்டார்கள். ஏன், அச்சத்தின் காரணமாகச் சிலர் வேலைக்குப் போகாமல் கூட முழு நாளும் கட்டிலில் படுத்த படுக்கையில் இருப்பார்கள். போதாக் குறைக்கு உலகில் நடந்த சில விபத்துக்கள் கூட 13ம் திகதி வெள்ளிக்கிழமை தான் நடந்துள்ளன. உதாரணமாக: 13.09.1940 இல் இரண்டாம் உலகப்போர் நேரம் பக்கிங்ஹாம் அரண்மனை மீது தாக்குதல் நடை பெற்றது. 13.11.1970 இல் பெரும் புயல் ஒன்றால்…
-
- 3 replies
- 613 views
-
-
2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, 9 கிரங்களில் மிகச் சிறிய கிரகமாக (கோள்) புளூட்டோ கருதப்பட்டது. ஆனால், கிரகங்களுக்கான தன்மையை புளூட்டோ கொண்டிருக்கவில்லை என பலர் விமர்சித்து வந்தனர். அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது. சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக…
-
- 5 replies
- 1.5k views
-
-
ரின்றி உலகு இல்லை. மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்குஏதுவாக நீர் அமைய பெற்றுள்ளது. இந்த நீர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்பட்டு உணவு,பொதுவினியோகம், குடிநீர், தொழிற்சாலை, விடுதிகள், விவசாயம் போன்றவற்றிக்கு பயன்பட்டுவருகிறது. ஆனால், இப்போது நிலவும் சூழ்நிலையில் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகதான்வரும் என எண்ணத் தோன்றுகிறது. நீர், புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி காணப்படுகிறது.மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கிறது. நீரின் அளவு நீர் புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி இருக்கிறது. கடல்கள் -96.5 %, நிலத்தடி 1.7%, பனிப்பாறை 1.7 %, காற்று நீராவி 0.001%, ஆறுகள், ஏரிகள்0.3 % போன்றவை காணப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற…
-
- 0 replies
- 505 views
-
-
இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம். கூடுதல் தகவல்கள் கூடுதல் தகவல்களை், படங்கள் மற்றும் வீடியோவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ஆம்னி பஸ் பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்த…
-
- 0 replies
- 335 views
-
-
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என சுமார் 60 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் இயற்கையையும் பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். நமது தொன்மையையும் பாரம்பரிய பெருமைகளையும் நாம் பாதுகாக்க தவறிவிட்டபோதும் இந்த பிரெஞ்சு நிறுவனம் அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இங்கு ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த நூல…
-
- 1 reply
- 529 views
-
-
மாற்று கர்ப்பப்பை பெற்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணொருவர் பிள்ளை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான். பரிசோதனை முயற்சியாக இப்பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததுபோன மாதம் அந்தப் ஆண் பிள்ளை சற்றுக் குறைமாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியை நடத்திய கோத்தன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேட்ஸ் பிரன்ஸ்ட்ரோம். கூறுகிறார். ஆய்வுப் பரிசோதனையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒன்பது பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரல்லாது வேறு இரண்டு பெண்களும் கருத்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ, அல்லது புற்றுநோய…
-
- 4 replies
- 651 views
-
-
மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது. நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீத…
-
- 0 replies
- 468 views
-
-
உங்களால் நட்சத்திரம் ஒன்றைத் தொட முடியுமா? நான் சொல்வது சூப்பர் ஸ்டார் அல்லது அல்டிமேட் ஸ்டார் இல்லை! இவர்களைத் தொடுவது மிகவும் கடினம். நான் கேட்பது விண்மீன் மற்றும் நாள்மீன் என்றும் அழைக்கப்படும் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரத்தைத் தொட முடியுமா? நட்சத்திரம் என்ற உடனே நீங்கள் நமது சூரியனைத் தான் நினைத்து விடுவீர்கள். அந்தச் சூரியனின் வெப்பம் தெரிந்த உங்களுக்கு என் கேள்வி நகைச்சுவையாகத் தான் இருக்கும். இருந்தாலும் எனது கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன். நமக்கு மிகவும் பழக்கமான நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மையத்திலுள்ள நமது சூரியன் தான். நமது புவியில் இருந்து 149,6 மில்லியன் km தூரத்தில் இருக்கும் இந்த…
-
- 0 replies
- 656 views
-
-
சில மாதங்களுக்கு முன்னால் நான் ஒரு விடுதியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். காலையில் சிறிது உடற்பயிற்சி. சிறிது நேரம் எழுதுவேன். அதன் பின் குளியல், சந்திப்புகள். மாலை முழுக்க சும்மா இருப்பேன். அப்போது தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். சென்ற பதினைந்து ஆண்டுகளாக நான் வீட்டில் தொலைக்காட்சி வைத்துக்கொள்ளவில்லை. ஆகவே விடுதிகளில்தான் தொலைக்காட்சியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அந்த ஒரு வாரமும் இளவரசன் - திவ்யா காதலைப் பற்றி மட்டும்தான் கேரளத்தின் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சிச் செய்திகளும் பேசிக்கொண்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் பின்னால் சென்று அறிவித்துக்கொண்டிருந்தனர். அந்தச் செ…
-
- 0 replies
- 493 views
-
-
36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான 60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது. குழந்தை சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமன்றி.. இன்னொரு புதிய அத்தியாயமாகவும் நோக்கப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு பிறப்பின் போதான பிறழ்வுகளாலும்.. புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையின் தீவிரத்தாலும்.. கருப்பை இழப்பு அதிகம் ஏற்படுகிறது. …
-
- 1 reply
- 526 views
-
-
எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். கின்ஷாஸா நகரம் 1950களில் எடுக்கப்பட்ட படம்ஹெச்.ஐ.வி கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. ஜனத்தொகை பெருக்கம், மக்களின் பாலுறவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற மற்ற இடங்களுக்குப் பரவியதாக இங்கிலாந்தின் ஆஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியுவென் பல்கலைக்…
-
- 0 replies
- 375 views
-
-
மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை மண்புழு மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்யும் முறை தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி செய்யும் முறை பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியத…
-
- 0 replies
- 1.3k views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் கடல் ஆழ அடிப்பரப்பைப் பற்றி புதிய புரிதலை உருவாக்கும் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் தெரியும் நீளமான சிகப்பு கோடு, 5.5 ரிக்டர் அளவுக்கு மேலான பூகம்பப் பகுதிகளைக் காண்பிக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ். கண்டங்கள் உருவான விதம் பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக கடலின் அடிப் பரப்பு (sea floor)குறித்த புதிய விரிவான வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கடலின் அடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள, இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை ‘கடல்மலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உலகில் சிறியது முதல் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த புதிய கடலடித்தள மலைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பது …
-
- 0 replies
- 766 views
-
-
எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவு காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார். இந்த சந்திரக்கிரணகம் காரணமாக பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் ம…
-
- 1 reply
- 523 views
-
-
கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில வேளைகளில் அர்த்தமே இல்லாத கனவுகளாக அமைந்து விடுகின்றன. சில வேளைகளில் ஏதும் பயங்கரமான கனவு காணும் போது எப்படியாவது அந்தக் கனவை விட்டு எழுந்து விடவேண்டும் என்று இருக்கும், அதுவே சில சமயம் நல்ல கனவு காணும் போது எழும்பவே கூடாது என்று இருக்கும். ஆனால் எப்போதாவது உங்கள் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? இல்லையா…? இந்த அறிவு டோஸில் பொதுவாக காணப்படும் 6 விதமான கனவுகளுக்கு உளவியல் (psychological) ரீதியாக என்ன அர்த்தம் என்பதை அறியத்தருகின்றேன். பொது…
-
- 20 replies
- 22.6k views
-
-
உலகளவில் மிகப் பெரிய பிட்காய்ன் வர்த்தக நிறுவனமான எம்டி.காக்ஸ் (எம்டி.ஜிஓக்ஸ்) 25ஆம் நாள் திவால் நடவடிக்கையைத் துவக்கியுள்ளதாக அறிவித்தது. ஜப்பானின் டோக்கியோ நீதிமன்றம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை அது தொடர்பான தீர்ப்பு அளித்துள்ளது. இத்தகவல் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்நிறுவனம், இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் நாள் ஜப்பானில் திவால் பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பம் வழங்கியுள்ளது. பெருமளவிலான இணைய தாக்குதலை சந்தித்ததால், அதற்குச் சொந்தமான 47 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட்காய்ன் திருடப்பட்டது. அது, திவாலாகி விட்டதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. http://tamil.cri.cn/
-
- 0 replies
- 680 views
-
-
நாம் பிராணிகளைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன! பரதன் என்கிற யானை, செயலில் மனிதர்களை மிஞ்ச கற்றுக்கொண்டுவிட்டது. யானைகளின் போக்கில் காணப்படும் மாறுதல்களை டார்வினின் கொள்கைப்படி அறிவதைவிட கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும். பரதன் என்பது தந்தமில்லாத ஆண் யானை. மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளிப் பகுதியில் இப்போது அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் முதுமலை காப்புக்காட்டின் ஓரத்தில் இருக்கும் சின்ன கிராமம்தான் தொரப்பள்ளி. பரதனைப் பார்த்தாலே உள்ளுக்குள் உதறல் எடுக்கும் அளவுக்கு பெரிய மேனி. நல்ல புத்திசாலி. தன்னைச் ச…
-
- 18 replies
- 10.3k views
-