Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வுக்கலம் எடுத்த காட்சி சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்டியூனிடி (Opportunity) புதிய சாதனை படைத்திருக்கிறது. செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஆய்வுக்கலம் இதுவரை 40 கிலோமீட்டர் தூரத்தை பயணித்திருக்கிறது. இதுவரை காலமும் இப்படிப்பட்ட ஆய்வுக்கலங்கள் பயணித்த அதிகபட்ச தூரத்தை இந்த ஆப்பர்டியூனிட்டி ஆய்வுக்கலம் முறியடித்திருப்பதாக நாசா கூறுகிறது. இதில் சுவாரஸியமான செய்தி என்னவென்றால் இந்த தானியங்கி ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தாலே போதும் என்று தான் நாசா முதலில் எதிர்பார்த்தது. நா…

    • 1 reply
    • 498 views
  2. புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும் வானில் கிரகங்களைக் காண்பது குறித்து இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது. புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி வதங்கிக் கிடக்கிறது. புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம…

    • 6 replies
    • 786 views
  3. கூகிள் நவ் என்ற வசதியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயக்கியிருந்தால் அது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கூகிள் நிறுவனம் இலகுவாக பதிவுசெய்துகொள்வதற்கு உதவும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கூகிள் நவ் ஐ பயன்படுத்தி பயனடைந்தவர்களைத் தவிர்த்து இல்லை அது பற்றி எதுவும் தெரியாது இந்த வசதியும் எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றவர்கள் கூகிள் நவ் மற்றும் அது தொடர்பான இயக்கங்களை முடக்கிவிடலாம் அதை எவ்வாறு செய்வது என்பதை ஆண்ட்ராய்ட் தொலைபேசியொன்றின் திரைப்பதிவு மூலம் விளக்குகின்றது இந்த வீடியோ. http://4tamilmedia.com/knowledge/useful-links/25300-android-4-1-google-now-privacy-settings-4tamilmedia

  4. ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது. ஒளிக்கு திணிவில்லை என்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார். வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர். ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்க முடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை…

    • 11 replies
    • 3.8k views
  5. தற்போதுள்ள இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் நமது கம்ப்யூட்டரில்ஒரு திரைப்படம் டவுன்லோடு ஆகிவிடும். டென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இன்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இன்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 1GB அளவுள்ள திரை…

  6. பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால…

  7. எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா? க. சுதாகர் டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்? எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குற…

  8. வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …

  9. https://www.youtube.com/watch?v=xw9LH_Dp2eM சந்தைக்கு வருகிறது, புதிய... "BlackBerry Passport" உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் BlackBerry நிறுவனம் BlackBerry Passport எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு உடையதும், 1440 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவை தவிர 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது. எதிர்வரும…

  10. செல்போன் வரலாற்றில் இன்று முக்கிய தினம் (ஆகஸ்ட் 16) என்பது உங்களுக்குத்தெரியுமா? என்ன தினம் என்கிறீர்களா? உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமான நாள் ! ஆம், 1994 ம் ஆண்டு இன்றைய தினம் தான் உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த போனை அறிமுகம் செய்தது நீங்கள் எதிர்பார்க்ககூடியது போல நோக்கியாவோ ,மோட்டோரோலோவோ அல்ல. ஆப்பிளும் அல்ல; பிலாக்பெரியும் கிடையாது. முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது, ஒரு காலத்தில் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் மகாராஜாவாக திகழ்ந்த ஐ.பி.எம் நிறுவனம் தான். ஐபிஎம் பரசனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎம் அறிமுகம் செய்த சை…

  11. திருச்செந்துறை ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன அறை | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அ…

  12. அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன். அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின் …

  13. வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி சந்தை வாய்ப்பு! உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண…

    • 0 replies
    • 14.1k views
  14. Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக புதிய தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..? Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! 1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது…

  15. 'பணத்தோட்டம்' என்ற பெயரில் உங்கள் முன் விரியும் இந்தத் தொடர், பெரிதான ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்வதற்காக எழுதப்படுகிறது. 'விவசாயமும் லாபகரமான விஷயம்தான்' என்பதை உரக்கச் சொல்லப்போகும் இந்தத் தொடர் ஒருவழிப் பாதையல்ல... அதனால்தான் விவாதத் தொடர் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். இங்கே நாங்கள் முன் வைக்கும் விஷயங்கள்... திட்டங்கள் எல்லாம் முடிந்த முடிவல்ல. இந்தத் விவசாய புரட்சி திட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எழுதலாம். எதிர்கருத்துக்கள் இருந்தாலும் எழுதலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கடைசியில் வெற்றிகரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த வகையிலாவது விவசாயம் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என்…

  16. வணக்கம் கள உறவுகளே !! ஒரு சிறு அறிவியல் தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எங்கள் மனமானது இரவில் தெளிவான நீல வானில் தெரியும் பௌர்ணமி நிலவையும் , அதன் தொடர்ச்சியான நட்சதிரங்களையும் பர்த்து பல கற்பனைகளையும் மேற்கொள்ளும் . ஏன் இவைகளையெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாதா ?? என்றுகூட சில வேளைகளில் எமது மனம் நினைக்கத் தோன்றும் . எமது பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கோ அதற்கும் அப்பால் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளிக்கும் மனிதன் பயணம் செய்யமுடியுமா ?? என்ற அறிவியல் கேள்விக்கு இந்த தொடர் விடையளிக்கும் என்றே நினைக்கின்றேன் . வழமை போல் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன். ******************************************************************…

    • 44 replies
    • 14.2k views
  17. வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான் எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது. வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும்…

  18. Rosetta has caught up with 67P/Churyumov-Gerasimenko ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்த…

  19. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் எண்ணெய் அரசியல் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் இன்றைய தேவை மாற்று எரிபொருள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர்கள் குழுவினர் நெருப்புக்கு விரோதியான கரியமில வாயுவையே எரிபொருளாக மாற்றும் அரிய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அவர்கள் ஒரு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளார்கள். அந்த கிரியா ஊக்கி வீணாகும் கரியமில வாயுவை ஒரு சின்கேஸ் ஆக மாற்றுகிறது. இந்த சின்கேஸ் என்பதுதான், பெட்ரோல் உ…

    • 0 replies
    • 646 views
  20. சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…

  21. மலேரியா எச்சரிக்கை மருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின. இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய …

  22. சிவகாசி : ""விருதுநகர் மாவட்டத்தில் 1100 ஏக்கரில் கூட்டு பண்ணை விவசாயம் திட்டம் செயல்படுத்த உள்ளதாக,'' எக்ஸ்னோரா நிறுவனம்இன்டர் நேஷனல் சேர்மன் நிர்மல் தெரிவித்தார். சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எக்ஸ்னோரா, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள், இன்னர் வீல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்சிவகாசியில் நடந்த "எக்ஸ்னோரா கோ ஆர்கானிக் எக்போ 2011' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெப்பமயமாதலால் உலகம் மோசமான நிலைக்கு செல்கிறது. கடல் உள்வாங்கி, நிலத்தில் கடல் நீர் புகுந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். 2016-2018ல் பீக் ஆயில் காலமாக மாறும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1000,2000க்கு விற்பனையாகும். இதற்கு தீர்வு, விவசாய நிலத்தை கண் இமைபோல் காக்க வேண்டும். வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளில் வ…

    • 0 replies
    • 703 views
  23. வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம். அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம். பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேற…

  24. மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா? பாஸ்டன் பாலா | இதழ் 110 | 01-08-2014| அச்சிடு மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானவை. ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன. அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game o…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.