அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
360 பாகையில், போட்டோ எடுக்கலாம். இதோ கேமரா வந்தாச்சு. இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க. இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும். ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம். இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற வேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை. இது ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம். விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அ…
-
- 0 replies
- 789 views
-
-
மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி வி…
-
- 4 replies
- 884 views
-
-
சென்னை: சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், நகர் முழுவதும் 1,000 கி.மீ., துார சாலைகளில், 50 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. போதுமான நீர்நிலைகள் இல்லாத நிலையில், ஆறுகளும் கடுமையாக மாசடைந்துள்ளதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது. 20 மீ., இடைவெளியில்... நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கவும், சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை நகர சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், 5,000…
-
- 4 replies
- 827 views
-
-
பாரம்பரிய நெல் வகையை பயிரிட்டு, ஏக்கருக்கு, 30 மூட்டை மகசூலை பெற்று சாதித்த, 33 வயது பட்டதாரி, கருணாகரன்: நான், விருதுநகர் மாவட்டம், வத்றாப்கொடிக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். விவசாயத்தில் எனக்கு, 'ரோல் மாடல்' எங்கம்மா பங்கஜவள்ளி தான். பள்ளியில் படிக்கும் போதே, தோட்டம், வயல் வேலைகளில் ரொம்ப விருப்பம். அதனால், பி.ஏ., வரலாறு முடித்ததும், முழு நேர விவசாயி ஆனேன். நம் முன்னோர், 10 ஆயிரத்திற்கும் மேம்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வந்தனர். ஆனால், நவீன வேளாண்மை என்ற பெயரில், இன்று அனைத்தும் அழிந்து விட்டன. இதற்கு காரணம், அதிக மகசூலும், லாபமும் இல்லை என்ற, 'சால்ஜாப்பு' தான். ஆனால், இவற்றில் உண்மை இல்லை. முறையாக விவசாயம் செய்தால், அனைவரும் நல்ல லாபம் ஈட்டலாம். சவாலுக்காக …
-
- 1 reply
- 2.6k views
-
-
சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது. விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்ட…
-
- 1 reply
- 697 views
-
-
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த தனியார் கம்பனியொன்று தினசரி 10முழுமையான வீடுகளை உருவாக்கி வருகிறது. அந்தக் கம்பனியானது 10 மீற்றர் நீளமும் 6.6மீற்றர் அகலமும் உடைய முப்பரிமாண அச்சிடும் கருவியைப் பயன்படுத்தி சீமெந்து மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக்களைக் கொண்டதாக சுவர்களை உருவாக்குகிறது. மேற்படி வீடுகளை உருவாக்குவதற்கு குறைந்த அளவான நிர்மாணப் பணியாளர்களே தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு வீடும் 5000 டொலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் இலத்திரனியல் ரீதியாக எந்த வீட்டு வடிவமைப்புக்கும் ஏற்ப தாம் வீடுகளை அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த வின்சன் கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகா…
-
- 0 replies
- 490 views
-
-
அகர் மரம் வளர்ப்பு. "செலவில்லாமல் வருமானம் பெறலாம்!' உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள…
-
- 2 replies
- 38.8k views
-
-
நீர்நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்தது, "அசோலா'. இலைகளில் ஒட்டி வளரும். "அனபீனா' என்ற நீலபச்சை பாசி உதவியுடன், காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உட்கிரகித்து, வளரும் தன்மையுடையது. நெற்பயிருக்கு சிறந்த உரமாகும். கால்நடைகள், கோழிகளுக்கு சிறந்த புரதச்சத்தாக இருப்பதால், தீவனச்செலவை கணிசமான அளவு குறைக்கும். இதில் 25 - 27 சதவீத புரதச்சத்து, 15 சதவீத நார்ச்சத்து, 3 சதவீத கொழுப்புச்சத்து, 45- 50 சதவீத மாவுச்சத்து மற்றும் தாதுஉப்புகள் உள்ளன. தாவர இலைகளில் காணப்படும் "டானின்' என்ற நச்சு, அசோலாவில் மிககுறைவாக இருப்பதால், மரபுசாரா தீவனப்பயிராக விளங்குகிறது. ஒரு எக்டேர் நிலப்பரப்பில் எளியமுறையில், ஓராண்டில் 70 - 80 டன் உலர்தீவனத்தை உற்பத்தி செய்யலாம…
-
- 1 reply
- 1.7k views
-
-
விதை நெல்லை வீரியத்தோடு பாதுகாக்க, நம் முன்னோர் கையாண்ட, 'கோட்டை கட்டுதல்' முறை பற்றி கூறும், இயற்கை வேளாண் வல்லுனர், கோ.சித்தர்: விவசாயத்திற்கு தேவையான விதைகளில், 16 சதவீதம் மட்டுமே, அரசு உற்பத்தி செய்து தருகிறது. மீதி நெல்லுக்காக, ஒவ்வொரு முறையும் தனியார் நிறுவனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்றைய விவசாயிகள், விதைகளை பாதுகாத்து வைக்காமல், தேவைக்கு ஏற்ப விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால், இன்றைய விவசாயிகளுக்கான லாபம் குறைகிறது. ஆனால், நம் முன்னோர் தங்களுக்குத் தேவையான விதைகளை, தாங்களே உற்பத்தி செய்து, அவற்றை வீரியம் குறையாமல் பாதுகாத்து வந்தனர். இதற்காக, அவர்கள் பயன்படுத்திய முறை தான், 'கோட்டை கட்டுதல்!' நம் விவசாயிகள், காலப்போக்கில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் ரோபோ அமெரிக்காவில் தயாரிப்பு. [saturday, 2014-04-26 09:18:52] பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியிருப்பவர்களை காக்கும் புதுவித ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் உருவாக்கி உள்ளது. இது பார்ப்பதற்கு ஹாலிவுட் படமான டெர்மினரேட்டரில் வரும் ரோபோ போன்ற உருவத்தில் உள்ளது. ஆறடி 2 இன்ஞ் உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு அட்லஸ் என பெயரிட்டுள்ளனர். இது பூகம்பத்தின் போது இடிபாடுகளுக்குள் சென்று அதில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வெளியே கொண்டு வரும் திறன் படைத்தது…
-
- 0 replies
- 469 views
-
-
தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள் நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். தென்னையில் ரகங்கள் தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன. இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால்…
-
- 1 reply
- 3k views
-
-
திருப்பூர் : ""கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் "வெப்ப அயர்வு' நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,'' என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் "வெப்ப அயர்வு' நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது. உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை; வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும். வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் சாப்பிடும்போது, அதை ஜீரணிக்க, அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, காலை 7.00 மணிக்குள், அளவான தீவனம் கொடுக்க வேண்டும்; ம…
-
- 0 replies
- 573 views
-
-
கோடையில் நெல் பயிரிட கூடாது! நிலத்தடி நீரையும், மண்ணின் வளத்தையும் பாதுகாக்க, கோடை நெல் நடவை தவிர்க்க வேண்டும் என்கிறார், விவசாய ஆராய்ச்சியாளர், வே.ரவி: நான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நீர் மற்றும் நில வள ஆராய்ச்சி மையத்தின், தலைவராக பணியாற்றுகிறேன். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், அதிலும் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதிகளில், கோடையில் நெல் சாகுபடி செய்வதை தவிர்ப்பது, மிகவும் நல்லது.ஏனெனில், கோடை நெல் சாகுபடி செய்யும் போது, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக, நாம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம், அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு.மேலும், இந்த ஆண்டு பருவ மழையும் தமிழகத்தை ஏமாற்றி விட்ட காரணத்தால், பல இடங்களில்…
-
- 0 replies
- 527 views
-
-
இயற்கை உரம் தயாரிக்க நினைக்கிறேன். இதை வெற்றிகரமான தொழிலாகச் செய்ய முடியுமா? நீங்கள் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால், இயற்கை உரம் தயாரிப்பது எளிதான விஷயமே. 10 சென்ட் இடம் தேவை. மாட்டுச்சாணம், இலை தழைகள் எளிதாக கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். குறிப்பாக மண்புழு அவசியம். உலர்ந்த சருகுகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதன் மேல் மண்புழுக்களை போட்டு விட்டு, குறிப்பிட்ட நாட்கள் கழித்து எடுத்தால் இயற்கை உரமாக மாறியிருக்கும். 1 3 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். KVIC (Khadi and Village Industries Commission) மற்றும் KVK (Krishi Vigyan Kendra) ஆகிய அமைப்புகள் இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி கொடுக்கிறார்கள். இயற்கை உரத்துக்காக நீங்கள் பயன்படுத்தும் மண்புழுக்கள் பல்கிப்…
-
- 0 replies
- 491 views
-
-
Augmented Reality இந்த தொழில் நுட்பத்தை தமிழில் மிகை யதார்த்தம் அல்லது இணைப்பு நிஜமாக்கம் என்று அழைக்கலாம். இதைப் பற்றி யாழில் ஒரு பதிவிட வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம், இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது .. நீங்கள் சென்னையில் அண்ணா சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கிருந்து நீங்கள் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் வழிநெடுக விளம்பர பதாதைகள் இருந்தும் வழி தெரியவில்லை. இப்பொழுது "இணைப்பு நிஜமாக்கம்(Augmented Reality)" தொழிநுட்பம் மூலமாக விளம்பர பதாதைகளை(advertisement board) நமது திறன்பேசியில்(Smart phone) பதியப்பட்டுள்ள மென்பொருளை பயன்படுத்தி புகைப்படக்கருவி மூலம் தூழவுவதன்(scanning) வாயிலாக அந்த இடத்தைப் பற்றிய தகவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோள்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [Friday, 2014-04-18 20:44:07] அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோள் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கோளை சுற்றிலும் வியர்வை சுளிகள் போன்ற அமைப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதால், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என பெயரிடப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=107781&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 724 views
-
-
அப்பளம் பிசினசில், எல்லா செலவுகளும் போக, மாதம், ௧௫ ஆயிரம் சம்பாதிக்கும், கல்லுாரி மாணவன், சுந்தரேசன்: சிறு வயது முதல், நான் அப்பள கடைக்கு வேலைக்கு சென்றேன். இங்கு, 'மிஷின்'களின் வேலையை விட, மனிதர்களின் பங்கு அதிகம். அதனால், எப்போதும் எங்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. அப்போதிலிருந்தே, இந்த தொழிலை தனியாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என, எண்ணுவேன். ஆனால், பணம் தான் இல்லை. திடீரென்று அப்பா இறந்து விட, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் என் மேல் விழுந்தது.பொருளாதார ரீதியாக, என் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பா எங்களை விட்டு பிரிந்ததைவிட, அடுத்து வரும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது தான், பெரும் கவலையாய் இருந்தது.ஏனெனில், என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்கா…
-
- 0 replies
- 2.8k views
-
-
விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கருவி! [Thursday, 2014-04-17 14:12:16] விண்வெளி வீரர்களின் சிறுநீர் குடிநீராகிறது விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள் நீண்டகால பயணமாக செல்வது வாடிக்கை. இப்படி செல்பவர்களின் கழிவுகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். அதே சமயம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் குடிநீர் குறையும் போது அதனை பூமியில் இருந்து கொண்டு செல்வதற்கும் கூடுதலான செலவு ஆகிறது. இந்த இரண்டையும் தவிர்க்க, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் அவர்கள் குளிக்கும்போது கிடைக்கும் கழிவுநீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும், சிறுநீர…
-
- 2 replies
- 601 views
-
-
உலகில் அறிவியலில் புரட்சி - உலகம் எதிர்பார்த்த கூகுல் கண்ணாடி வெளிவந்துவிட்டது! [Wednesday, 2014-04-16 13:06:12] தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்…
-
- 0 replies
- 499 views
-
-
சிவந்த நிலாவை இன்று காணலாம் செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 13:17 சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தி…
-
- 2 replies
- 576 views
-
-
தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்பம் - ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி! [Tuesday, 2014-04-08 23:30:20] கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'நிலையற்ற பொருட்கள்' அல்லது 'நிலையற்ற மின்னணுவியல்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் அவர் இதற்கான மூலப…
-
- 0 replies
- 438 views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் மனிதர்களை ஒரு வழி பயணமாக அனுப்ப மார்ஸ் ஒன் என்னும் நிறுவனம் முயன்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று உள்ள புகைப்படங்கள், நாசா செவ்வாய்க்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தால் பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள நாசாவால் அங்கு அனுப்பப்பட்ட, விண்கலம் கியூரியாசிட்டி ரோவர். இந்த விண்கலம் செவ்வாய் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவைத்து வருகிறது. இந்நிலையில், கியூரியாசிட்டி ரோவர் கடந்த 6 ஆம் தேதி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செ…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுத் தொகுதியில் சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை நடக்கிறது. செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் நாளை நிகழ்கிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=424562843007297552#sthash.yLRMWdDK.dpuf
-
- 0 replies
- 607 views
-
-
என்செலாடஸ் மேற்பரப்பில் வரிவரியாக உள்ள பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுகிறது சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர…
-
- 0 replies
- 577 views
-
-