செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த, கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார். பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது. இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை, இதையடுத்து வலியால் துடித்த கோர்ட்னி முகத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கொண்டபின் நண்பருக்கு தெரிவித்ததையடுத்து, வைத்தியசாலைக்கு விரைந்துள்ளனர். அங்கு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 653 views
-
-
விநாயகர் படம் பதித்த காலணிகள்.. பிரபல ஷூ நிறுவனம் விஷமம்.. குவியும் எதிர்ப்பு! இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை பிரபல ஷு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்து கடவுளான விநாயகரும் முருகனும் உலகம் முழுக்க பல கோடி மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். இந்து மதத்தை சேராத சில மக்கள் கூட, இந்த இரண்டு கடவுள்களையும் அதிகம் விரும்பி வணங்கி வருகிறார்கள். இந்த நிலையில் விநாயகரை அவமதிக்கும் வகையில் ஹவாயை சேர்ந்த ''மயூ வோக்'' நிறுவனம் ஷுக்களை வெளியிட்டுள்ளது. மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகள், வித்தியாசமான உபகரணங்கள், காலணிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளிலு…
-
- 0 replies
- 700 views
-
-
அட்லாண்டிக் பெருங்கடலை ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது சாதனையாளர்! படகுகளில் பொருத்தப்படும் இயந்திரங்களின் வலு எதுவும் இன்றி, பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தியே அவர் இந்த பீப்பாய் கொள்கலன் மூலம் 4500 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ளார். தேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போன்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி செல்லும் நீர்ப்பரப்பு ‘பெருங்கடல் நீரோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 71 வயதான ஜீன்-ஜாக்குவஸ் சவின் என்பவர் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை கடந்து 2019 மார்ச் மாதம் அளவில் அட்லாண்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
அடப்பாவமே!.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்! பெர்லின்: அடிமை போல் நடத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் வாங்கப்பட்ட 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்ததால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். பின்னர் துருக்கி மற்றும் சிரியா வழியாக ஈராக் சென்ற அவர் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.அவரும் அவரது கணவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை அடிமையாக விலைக்கு வாங்கினர். அந்த குழந்தைக்கு ஒரு நாள் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மெத்தையில் சிறுநீர…
-
- 0 replies
- 601 views
-
-
400 மொழிகள் பேசும் 10 வயது தமிழ் சிறுவன் அக்ரம்
-
- 0 replies
- 849 views
-
-
பிரதமராக்க கோரி கோபுரத்தில் ஏறி, நூதனமாக போராடிய பாகிஸ்தானியர் – சாதுரியமாக கீழே இறக்கிய பொலிஸார்! தன்னை பிரதமராக்கினால் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன், அடுத்த 6 மாதத்தில் அனைத்து கடன்களையும் அடைத்து விடுவேன் என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். பாகிஸ்தான் கொடியை கையில் ஏந்தியபடியே அவர் தொலைபேசி அலைவரிசை கோபுரத்தின் மீது இவ்வாறு கூச்சலிட்டுள்ளார். கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாகிஸ்தான் பொலிஸார் குறித்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு கோரினர். தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் பேசுவேன் அல்லது உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவரது பேச்சை கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர் பொலிஸார் சாதுரியமாக ஒரு காரி…
-
- 0 replies
- 601 views
-
-
4 வருடம் உரிமையாளர் கூடவே கல்லூரிக்குச் சென்று வந்த நாய்.. கவுரவப் பட்டம் வழங்கிய பல்கலைகழகம் ! நியூயார்க்: அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பட்டம் வாங்க உதவிய நாயை கவுரவிக்கும் விதமாக, கவுரவ பட்டம் வழங்கியுள்ளது பல்கலைக்கழகம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பிரிட்னே ஹவுலே என்ற கல்லூரி மாணவி. மாற்றுத்திறனாளியான இவர், எப்போதும் வீல் சேரில் தான் அமர்ந்திருப்பார். இதனால், அவரது அன்றாட பணிகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.இதனால், ஹவுலே கோல்டன் ரெட்ரிவர் வகையைச் சேர்ந்த கிரிப்பின் என்ற நாயை வளர்த்தார். தனக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதற்குப் பழக்கினார் அவர். இதனால் எப்போதும் அது ஹவுலே உடனே வலம் வந்தது.நியூயார்க…
-
- 6 replies
- 906 views
-
-
வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டாரா நித்தியானந்தா? சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளிலும், பாலியல் வழக்குகளிலும் சிக்கிய நித்தியானந்தா சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக பெங்களூருவில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கெனவே கெய்மன் தீவுகளில் அரசியல் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். நீண்ட காலமாக பெங்களூருவிலுள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லாத காரணத்தால் இதுபோன்ற செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி அவரது சீடர்களில் ஒருவர் பேசுகையில், “அவர் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. அவர் வட இந்தியாவில…
-
- 10 replies
- 2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். அவர் கூறியது ‘இது என்னா த…
-
- 5 replies
- 1k views
-
-
ஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ 72 லட்சம் பரிசு; தனியார் நிறுவனம் அறிவிப்பு ..! ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளது. இன்றைய நவீன உலகில் செல்போன் இல்லாமல் ஒரு மனிதனால் 5 நிமிடம் கூட இருக்க முடியாது. பாத்ரூமிற்கு கூட பலர் செல்போனை எடுத்துக் கொண்டு தான் செல்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமை. இந்நிலையில் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையிலும் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு வருடத்திற்கு ஸ்மார…
-
- 0 replies
- 952 views
-
-
முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்..... பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம். தாங்க முடியவில்லை.... இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரி…
-
- 0 replies
- 539 views
-
-
உணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு! கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயதான ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உணவகத்தில் களவாடும் நோக்கில் வந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ பகுதியில் உள்ள குறித்த விருந்தகத்தின் கழிவு எண்ணெய் அகற்றும் குழாயில் இருந்து ‘உதவிக்கான அவலக் குரல்’ வந்ததை அடுத்து அவசர மீட்புப் பிரிவில் அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர். குறித்த நபர் மிகவும் சோரவடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார…
-
- 2 replies
- 1.1k views
-
-
39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்... 39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர். Play Mute Current Time1:06 / …
-
- 15 replies
- 1.9k views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images ஆன்லைன் பதிவு மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் உணவை திறந்து உண்டு மீண்டும் அதனை பேக் செய்து வைப்பது போலக் காட்டும் காணொளி வைரலானதை அடுத்து அந்த ஊழியரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. …
-
- 0 replies
- 926 views
-
-
வெலேரியா பெரஸோ பொது விவகாரங்களுக்கான செய்தியாளர், பிபிசி உலக சேவை படத்தின் காப்புரிமை TODAY'S CATHOLIC/JOE ROMIE ஜெஸிக்கா ஹெய்ஸ், தமக்கு தாமே திருமண உடையையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டார். ஆனால், திருமணத்திற்காக தேவாலயத்தில் பாத…
-
- 0 replies
- 890 views
-
-
தாவூத் இப்ராஹிம் தாதா ஆன கதை ! இந்தியாவின் பெயர்போன கொள்ளைக்கூட்ட தலைவன், தீவிரவாதி. 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் இருந்த மாஸ்டர் மைண்ட்.! பிறந்தது மும்பையை சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிளுக்கு மகனாக.! பிறப்பு தாவூத் பிறந்தது டிசம்பர் 27, 1955ல். இவனது பூர்வீகம் மகாராஸ்டிரா, ரத்னகிரி என்ற பகுதியில் இருக்கும் கேத் எனும் சிறிய றவுன் பகுதி. இவனது அப்பா இப்ராஹீம் காஸ்கர் மும்பை போலீஸ் துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர். இவனது அம்மா அமினா ஹவுஸ் வைஃப்பாக இருந்து வந்தார். ரத்னகிரியில் இருந்து இவனது குடும்பம் மும்பையில் இருந்த டோங்ரி என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தாவூத். ஆன…
-
- 0 replies
- 432 views
-
-
காத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார். காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு குறித்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார். மின்சாரத்தில் இயங்கும் வகையில் கண்டுபிடித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்திற்கு 1200 தொடக்கம் 1500 வரையிலான இடியப்பங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க முடியும். இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் பிடித்துள்ளதுடன் 4 இலட்சம் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ஒரே நேரத்தில் அதிகளவான இடியப்பங்…
-
- 3 replies
- 1k views
-
-
சாக்கடையில் மோதிரத்தை தவறவிட்ட காதல் ஜோடியை கண்டுபிடித்த நியுயோர்க் பொலிஸ்! நியூயார்க்கில் காதல் ஜோடியொன்று நிச்சயதார்த்தத்தில் மாற்றிக்கொள்வதற்கு வைத்திருந்த மோதிரம் ரைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சாக்கடையில் தவறிவிழுந்தது. இந்தநிலையில் நியூயார்க் பொலிஸ்துறை முதலில் மோதிரத்தை கண்டுபிடித்தது. பிறகு அதைத்தவற விட்ட ஜோடியையும் கண்டுபிடித்து அவர்களிடம் மோதிரத்தை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ரைம்ஸ் சதுக்கத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மோதிரத்தை மாற்றிக்கொண்டு திருமண நிச்சயம் செய்து கொள்ள முடிவெடுத்து மோதிரத்தை பயணப் பையில் இருந்து எடுத்த போது அதைத்தவறவிட்டது. சிசிடிவி காணொளியின் ஊடாக அந்த ஜோடியானது மோதிரத்தை எடுக்க பல முறை …
-
- 1 reply
- 460 views
-
-
ரோட்டோரம் நின்று திருநங்கைகளை "அழைத்த" 100 பேர் கைது. திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக 100 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன. அதன்படி, ஒரு சில திருநங்கைகள், நுங்கம்பாக்கம் சாலைகளின் இருபுறமும் இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய சமயங்களில் அவ்வழியாக கார், பைக்கில் போகிறவர்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன.இந்த திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித…
-
- 0 replies
- 570 views
-
-
சிற்றின்பத்திற்கு குட்பாய்.! ஏ ஐ ரோபோட்டுடன் வாழ்க்கை.! அழியும் யப்பான்.! காதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது.டீன் ஏஜ் வயது முதல் பெண்களிடம் ஆண்கள் நெருங்கிய போதும், அவர்கள் மறுத்து அதை மனதைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவதால், பெண்களை ஜப்பான் ஆண்கள் நெருங்குவதும் கிடையாது. திருமணம் ஆன பிறகும் மனைவி மார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.ஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர். இந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம…
-
- 0 replies
- 854 views
-
-
படத்தின் காப்புரிமை Alamy Image caption அரிசி மற்றும் இறைச்சியை வைத்து சமைக்கப்படும் பாரம்பரிய அரேபிய உணவை அப்பெண் சமைத்துள்ளார். (சித்தரிக்கும் படம்.) ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரைக் கொலை செய்து, அவரது உடலின் எச்சங்களைக் கறியாகச் சமைத்து, அதை அருகில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவாகப் பரிமாறியதாக அமீரக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தக் கொலை மூன்று மாதங்களுக்கு முன்னரே நடந்திருந்தாலும், 30 வயதைக் கடந்துள்ள அப்பெண்ணின் சமையலறையில் மனிதப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ப…
-
- 6 replies
- 1.6k views
-
-
சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் 'நன்றி தெரிவிக்கும்' நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க். கிடைத்த லாட…
-
- 0 replies
- 371 views
-
-
பெரிய நாய்க்கறி கசாப்பு மையத்தை மூடும் தென்கொரியா படத்தின் காப்புரிமை Getty Images Image caption நாய்க்கரி கசாப்பு மையம். இந்த இடத்தில் ஒரு பூங்கா அமைக்கப்படும். தங்கள் நாட்டிலேயே மிகப்பெரியதான நாய்க்கறி கசாப்பு மையத்தை இடக்கத் தொடங்கியுள்ளனர் தென் கொரிய அதிகாரிகள். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் நாய்கள் இந்த மையத்தில் வெட்டப்பட்டுவந்தன. சில ஆண்டுகள் முன்புவரை நாய்க்கறி தென் கொரியாவில் சுவையான உணவாகப் பார்க்கப்பட்டது. இப்போது பார்வை மாறி வருகிறது. இந்த மையத்தை மூடவேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர். தென் கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள த…
-
- 3 replies
- 911 views
-
-
அந்தமானின் ரகசிய தீவிற்குள் நுழைந்த நபர்.. 5 நாள் கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள் ! சென்டினல்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறையக் குட்டி குட்டி தீவுகள் உள்ளது. அந்த வகையில் அங்கு இருக்கும் சென்டினல் தீவு மிகவும் பிரபலம். ஆனால் இது சுற்றுலா தலமாகப் பிரபலம் அடையவில்லை.அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் பிரபலம் அடைந்து இருக்கிறது. அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளி உலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ…
-
- 0 replies
- 543 views
-
-
சுவிஸ் குடியுரிமையை இழந்த காரணத்தினால் வாழ்க்கையை இழந்த இலங்கை அரசியல் பிரபலம் சுவிட்சர்லாந்து குடியுரிமையை இழந்த காரணத்தினால் 37 ஆண்டு திருமண வாழ்க்கையை இழக்க நேரிட்டதாக இலங்கையின் அரசியல் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான கீதா குமாரசிங்க அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து திருமண பந்தத்தை தொடர வேண்டுமாயின் சுவிட்சர்லாந்து குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என கணவர் கூறியதாகவும் அதனை தாம் நிராகரித்து இன்று 37 ஆண்டு குடும்ப வாழ்க்கையை இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாய் நாட்டுக்காக அவர் இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும…
-
- 2 replies
- 2.3k views
-