Jump to content

10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Woman in coma for over a decade gives birth

10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை.

அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோமாவில் இருந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், டாஷா மெனாகர் கூறுகையில், ''கோமா நிலையில் உள்ள பெண்ணை கர்ப்பமாக்கிய கயவனை பிடிக்க, மருத்துவமனையில் பணியாற்றும், ஆண் ஊழியர்களிடம், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/washington/woman-coma-over-decade-gives-birth-338307.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா!

 
அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாசிண்ட்டா மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்மணி கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி  திடீரென்று பிள்ளை பெற்றெடுத்தார். இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில் இந்த  பெண்மணி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் அறியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நீண்ட பத்தாண்டு காலம் அந்த மருத்துவமனையில் தாம் பணியாற்றியதாகவும், அப்போது இதுபோன்று கோமா நிலையில் இருந்த ஆண் நோயாளி ஒருவர் தொடர்பில் அவரது பாலுறுப்பு குறித்து அங்குள்ள நர்சுகள் ஆபாசமாக கிண்டல் செய்ததை தாம் காதால் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி பெண் நர்சுகளால் அந்த நோயாளி துஷ்பிரயோகத்திற்கு இரையாகியிருக்கலாம் எனவும், ஆனால் இந்த விவகாரத்தை பில் டிம்மன்ஸ் மேலிடத்திற்கு தெரிவிக்காமல் மூடிமறைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். பில் டிம்மன்ஸ் என்றாலே அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் பயந்து நடுங்குவதாகவும், அவருக்கு தெரியாமல் அந்த மருத்துவமனையில் எதும் நடக்காது எனவும் அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ளார். தற்போது கோமாவில் இருந்த பெண் பிள்ளை பெற்ற விவகாரத்திலும் அதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது அவர்களின் உடல்களை துடைக்கும்போதோ போதுமான தனியுரிமை இல்லை என முறைகேடு குறித்து புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்தவொரு தகவலையும் தர மறுத்துவிட்டார் ஃ பீனிக்ஸ் காவல்துறை செய்திதொடர்பாளர்.

 

 

http://akkinikkunchu.com/?p=71412

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆண்டுகளாக கோமாவிலிருந்த பெண் குழந்தை பிரசவிப்பு ; சந்தேகநபர் சிக்கினார்

 

14 ஆண்டுகளாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண் தாதியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

usa.jpg

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 29 வயதான பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.  

இந் நிலையில் அவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி குழந்தையொன்றை பிரசிவித்துள்ளார். இது அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற கோணத்தில் பொலிஸார் உண்மையை கண்டறிவதற்காக வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இன்போதேபே கோமாவில் இருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததற்கு வைத்தியசாலையில் பணிபுரியும் 36 வயதுடைய ஆண் தாதியர் ஒருவர் காரணம் என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பீனிக்ஸ் நகர பொலிஸார் அவரை கைது செய்ததுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/48682

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் வைக்கோல் போருக்குள் இல்லை என்பதாக, டிஎன்ஏ டெஸ்டுக்கு முதலே, பிள்ளையின்ற, நிறம், தலை சுருளல் வைத்தே, இது ஒரு கறுவல்லம்மான் வேலை என்று இலகுவாக போலிசார் ஊகித்திருப்பாரகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.