Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கர்ப்பப் பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகள் ஒரே சத்திர சிகிச்சையில் நீக்கம் : உலக சாதனை ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர். எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது. இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பி…

  2. "பூமி அழிவிற்கு ஆயத்தமாகியுள்ளது" இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடுக்கங்களை பூமி சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்குள் உலகம் நிலநடுக்கங்களினால் பல அழிவைச் சந்திக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந் நிலையில் உலக அழிவு ஆரம்பித்துவிட்டது என சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். சதியாலோசனை (Conspiracy theory) கோட்பாடு என்பது யூகத்தின் அடிப்படையில் ஒரு தனி நபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்படும் கோட்பாடு ஆகும். அதன்படி பூமியின் அழிவுக்கு வித்திடும் நிரூபு கிரகம் தற்போது பூமியை நெருங்கி விட்டதாகவும் அதன் அறிகுறியே தற்போத…

  3. 4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம் கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது. மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுற…

  4. விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. வாஷிங்டன்: விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை. அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த விய…

  5. ஷெரீ எச்செசன் 26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்தார் இலங்கையிலுள்ள தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட ஷெரீ எச்செசனின் கோரிக்கையை நியூஸ்பெஸ்ட் இன்று நிறைவேற்றியது. 26 வருடங்களின் பின்னர் தனது உண்மையான தாயை ஷெரீ எச்செசன் இன்று (14) சந்தித்தார். இலங்கையிலுள்ள தமது தாயை கண்டுபிடுத்துத் தருமாறு, சில வாரங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டுக்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய நாம் முன்னெடுத்த உறவுத் தேடல் பயணத்தில கண்டறியப்பட்டவர், ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என…

  6. தினகரனுக்கு கிடைக்காத மூக்குப்பொடி சித்தர் ஆசி... யாருக்கு கிடைச்சிருக்கு பாருங்க! திருவண்ணாமலை : நாட்டு நடப்புகளை முன்கூட்டியே சொல்லியதால் பிரபலமடைந்த மூக்குப்பொடி சித்தரின் ஆசியை பெறுவதற்காக 2 முறை டிடிவி. தினகரன் அவரை நேரில் சந்தித்தார். ஆனால் இரண்டு முறையுமே அவருக்கு மூக்குப்பொடி சித்தர் ஆசி வழங்கவில்லை இந்நிலையில் சித்தர் திருவண்ணாமலையில் உள்ள கடைக்குள் திடீரென சென்றது பக்தர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவர் தற்போது திருவண்ணாமலையில் உணவகம் ஒன்றில் …

  7. அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட் தனது தோழியை விரைவில் மணக்க இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் http://www.yaalaruvi.com

    • 0 replies
    • 280 views
  8. தேரராக மாறிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ! மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில், தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மதின்னாகொடவைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார். அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து, ராஜகிரிய சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை, ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட் சுஹைர் எனவும், தாய் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சித்திரசீமனி ஒலிவர் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சிறுவன் தந்…

  9. சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும் ட்ரம்ப்புக்கு நடுவிரலை தூக்கி காட்டிய 50 வயது பெண் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கத்தைய கலாச்சாரத்தில் நடுவிரலை தூக்கி காட்டுதல் என்பது அவமானத்தின் சின்னமாக கருதப்படுகின்றது. ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால் உடனே ஏதாவது ஒரு கெட்டவார்த்தையுடன் நடுவிரலை தூக்கி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கே நடுவிரலை தூக்கி காட்டியுள்ளார் ஒரு பெண். கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போத…

  10. 2வது மனைவியின் 1வது பிள்ளை: 62 வயதில் கலக்கும் ‘மிஸ்டர் பீன்’! ‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், தனது இரண்டாவது மனைவியின் மூலம்! ரோவன் அட்கின்சன் தனது இரண்டாவது மனைவியுடன்! 62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். ரோவன் அட்கின்சன் தனது மகள் லில்லி மற்றும் முதல் மனைவி சுனேத்ரா சாஸ்திரியுடன்! சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை …

  11. நான் உன்னை மன்னிக்கிறேன்: மகனைக் கொன்றவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தந்தை குற்றவாளி ரெல்போர்ட்(இடது), குற்றவாளிக்கு ஆறுதல் கூறும் அப்துல் முனிம் அமெரிக்காவில் தந்தை ஒருவர், தன் மகனைக் கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளியை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, சலாவுதின் ஜித்மவுத் (22) என்ற இளைஞர் பிசா டெவரி செய்துவிட்டு வரும்போது வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ரெல்போ…

  12. ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 36 வயதான இவான்கா ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான …

  13. கனடாவில் வைரலாகியுள்ள முதியவரின் சலுகை! on: நவம்பர் 07, 2017 கனடாவில் வருடமொன்றிற்கு 30,000 முதல் 36,000டொலர்கள் வரையிலான சம்பளம் வேண்டுமா? நீங்கள் புகை பிடிக்காதவராக அமைதியை விரும்புபவராகவும் அமைதியாக இருப்பவரும் ஊனமுற்ற வயோதிபரை கவனித்து கொள்ள விரும்பினால் அதிஷ்டம் உங்களிற்கு. செய்ய வேண்டியது விறகு சேர்ப்பது உணவு தயாரிப்பது. எதிர்கால வாடகை பற்றிய கவலை கொள்ள வேண்டிதில்லை. நோவ ஸ்கோசிய கேப் பிரெட்டனில் ஒரு கிராம புறத்தில் மனிதனொருவர் தன்னுடன் வசிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த சலுகைகளை வழங்க முன்வந்துள்ளார். தன்னுடன் வசிக்க சரியான ஒருவரை தேட இணையத்தை தெரிந்தெடுத்துள்ளார். 75வயதுடைய ரெறொன் டொட் என்பவர் சக்கர நாற்காலியில் இரு…

  14. 7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …

  15. மன்னார் கடலில் சிக்கிய விசித்திர மீனால் பரபரப்பு!! மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பெரும் மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது. சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்றே மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர் என்று கூறப்படுகின்றது. அந்த மீனை கணக்கான மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். http://newuthayan.com/story/44614.html

  16. பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரா…

  17. வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்! பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது. மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும். இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது. டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் சீன தலைந…

  18. எண்ணெய் தாங்கியுடன் வரிசையில் நின்ற நபர் – வைரலாகும் ஒளிப்படங்கள்!! நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன. http://newuthayan.com/story/44361.html

  19. சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் சீன நாட்­ட­வர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்­திர சதுக்­கத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் திரு­மணம் நடை­பெ­ற­வுள்­ளது. கொழும்பில் உள்ள சீனத் தூத­ரகம் இந்த நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றது. சுதந்­திர சதுக்­கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திரு­மண நிகழ்வு நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகப் பங்­கேற்று, 75 சீன திரு­மண இணை­யர்­க­ளுக்கும், திரு­மணச் சான்­றி­தழ்­களை வழங்­குவார். திரு­மணம் முடிந்த பின்னர், அன்­றி­ரவு பத்­த­ர­முல்ல -வோட்டர் எட்ஜ் விடு­தியில் இராப்­போ­சன விருந…

  20. குடும்பப் பெண்ணை ஓட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் மனநோய்க்குச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னை முதியவர் ஒருவர் ஓட்டோவில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று முதியவருக்கு எதிராகக் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.cineinbox.com

  21. மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…

  22. மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர். சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்ட…

  23. தூவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு FacebookTwitterPinterestEmailGmailViber நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் இன்று காலை இடம்பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வந்தமையினால் பேருந்துக்குள் இருந்த இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததையடுத்து அந்த நபர் தான் விரும்பியதனை போன்று வ…

  24. விண்ணில் பரவிய இறுதி ஆசை! மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார். எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார். விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற…

  25. மூன்று ஆண்களை காதல் நாடகமாடி ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார் தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.