செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார் உலகம் முழுவதும் பிரபலமுடைய கவர்ச்சி இதழான 'பிளேபாய்'-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் (91) வயோதிகம் காரணமாக இன்று காலமானார். நியூயார்க்: அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' இதழுக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர். 1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனை…
-
- 17 replies
- 957 views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர். அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார். அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கல…
-
- 5 replies
- 439 views
-
-
பொம்மையையும் விட்டுவைக்காத ஆண் பார்வையாளர்கள்! கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது. மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் - குறிப்பாக ஆண்கள் - பொம்மையின் உடல் பாகங்களை…
-
- 9 replies
- 1.6k views
-
-
20 பிள்ளைகளை பெற்று கின்னஸ் சாதனை மாத்தறை தெனியாயப் பகுதியில் வசிக்கும் தாயொருவர் 20 பிள்ளையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைக்கான உரிமையாளர் ஆகியுள்ளதாக தேசிய முதியோர் அலுவலகத்தின் பணிப்பாளர் சுமின்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார். தற்போது 19 பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருவரே கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் எனினும் சட்ட ரீதியான சாதனையை ரொசலின் நோனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 80 வயதான ரொசலின் நோனா கூறுகையில், தனது 20 பிள்ளைகளில் 15 பிள்ளைகளே தற்போது உயிரோடு உள்ளனர். 05 பிள்ளைகள் வயோதிபராகி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தனது மூத்த மகனுக்கு 60 வ…
-
- 4 replies
- 625 views
-
-
தொழில் நுட்ப சூட்ச்சுமம் புரியாமல் பலர் மொக்கையீனப் படுவதுண்டு. ஆனானப்படட அமெரிக்கா, பிரித்தானியாவே டிஜிட்டல் எகானமி வந்தாலும் காசுத்தாள் இல்லாமல் போக ரொம்ப நாள் எடுக்கும் எண்டு சொல்லி விட்டன. மோடி அரசோ, டிஜிட்டல் எகானமி, எல்லோரும் பேங்க் அக்கௌன்ட் திறக்கணும்... பண பரிவர்த்தனை மொபைல் ஊடாக, வங்கிகள் மூலமே நடக்கணும் என்கிறார். மொபைல் போனே இல்லாத அடித்ததட்டு மக்கள், மின்சார வசதி இல்லா கிராமங்களை குறித்த சிந்தனை அறவே இல்லாத, செயல், படிப்பறிவில்லாத பகடர்கள் கையில் நாடு சிக்கினால் என்னாகும் என்பதை தெளிவாக்கியது. அமெரிக்காவில் அடுத்த அறிவாளி. வந்தவுடன் மெஸ்சிக்கோ வேலி போடப் போறேன் என்றார். IT காரர்கள் வருவதை தடுக்கப் போகிறேன் என்றார். பெரும் தொழில…
-
- 3 replies
- 509 views
-
-
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்! [Thursday 2017-09-28 17:00] இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னில…
-
- 1 reply
- 446 views
-
-
தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்! பகிர்க ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த …
-
- 1 reply
- 2k views
-
-
மகள் கல்லூரியில் சேர்ந்தபோது கண்ணீர் விட்டு அழுத பராக் ஒபாமா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2012-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வெற்றிக்கு…
-
- 0 replies
- 240 views
-
-
காலை உணவுக்கு செத்த எலி! டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார். ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப…
-
- 0 replies
- 211 views
-
-
இப்படியும் ஒரு தாய்.! இது தான் கலிகாலம் என்பதா.? இறைச்சியை வாட்டும் உபகரணத்தில் தனது 2 வயது மக ளை உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சட்டக் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளியிடப்படவில்லை. பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நகரிலுள்ள வீட்டின் கார் தரிப்பிடத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயிருடன் நிலக்கரித் தணலைக் கொண்ட உபகரணத்தில் வைத…
-
- 0 replies
- 518 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை t அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை செப்டம்பர் 27, 2017, 04:45 AM ஹூஸ்டன், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர். இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் …
-
- 3 replies
- 291 views
-
-
பெண்களுக்கு “ஹலோ” கூறிய பிக்குகளை நையப்புடைத்த இளைஞர்கள் பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து பிக்குகள் இருவரை பிரதேச இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நையப்புடைத்த சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை – தமன கெமுனுபுர ஸ்ரீ நிக்ரோதாராமவாசி விகாரையைச் சேர்ந்த பிக்குகள் இருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி பொலன்னறுவை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பிக்குகளும், 15 மற்றும் 14 வயதுடையவர்கள் என்று பொலன்னறுவை பொலிஸார் குறிப்பிட்டனர். விகாரையை அண்மித்த வீடுகளிலுள்ள பெண்களுக்கு குறித்த பிக்குகளால் தொலைபேசி அழைப்புக…
-
- 0 replies
- 193 views
-
-
நேரடி ஒளிபரப்பில் வித்தியாசமான தற்கொலை; ‘பாம்பு’ கணவனின் பரிதாப முடிவு மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவர், சமூக வலைதளத்தில் தனது வித்தியாசமான தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. யூட்யூபில் தனது செல்லப் ‘பாம்புகளுடன்’ காட்சி நடத்திவந்தவர் பாம்பு நிபுணர் ஆர்ஸ்லான் வலீவ் (31). இவர் தனது மனைவி எக்டரீனா காட்யாவுடன் நடத்தும் பாம்புக் காட்சிகள் யூட்யூபில் பெருவரவேற்புப் பெற்றவை. இந்த நிலையில், தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் வலீவ், காட்யாவைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் காட்யா பிரிந்து சென்றார். எனினும், சில தினங்களுக்கு முன் தனது செயலுக்கு வருந்த…
-
- 0 replies
- 210 views
-
-
நடிகர் வடிவேலுவைப் போல் வெறியில் தூங்கிய மஹிந்த கைது ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள மதுபானசாலையொன்றின் கூரையை உடைத்து உள்ளே சென்று, பியர் அருந்தி விட்டு வெறியில் வெளியேசெல்ல முடியாமல் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த நபரொருவரை நேற்று(25) கைது செய்துள்ளதாக, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை - சமகிகம பகுதியைச் சேர்ந்த மஹிந்த திலகரெட்ன (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள பியர் ஹவுஸ் கூரையை, சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (24) இரவு உடைத்துக்கொண்டு, கீழே இறங்கியுள்ளார். அங்கு, இலாச்சியில் இருந்த 2,300 ரூபாய் பணத்தை எடுத்து, தன்னுடைய …
-
- 2 replies
- 1.5k views
-
-
உலகின் அதிக எடையுள்ள பெண் காலமானார்! உலகில் அதிக எடை உள்ள பெண், இமான் அஹமது அப்துல்லாடி. எகிப்து நாட்டைச் சேர்ந்த 37 வயதான இமான் இன்று அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். எகிப்தில் இருந்து கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் இமான். அவருக்கு 'பேரியாட்ரிக் சர்ஜரி' (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 250 கிலோ வரை எடை குறைந்தார் இமான். ஆனால், எடை குறைப்புக்குப் பிறகு அவர் மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. பல்வேறு உடல்நலக் கோளாறு காரணமாக அபுதாபியில் இருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இமான் கால…
-
- 0 replies
- 693 views
-
-
வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் செல்பி - வைரல் புகைப்படம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செல்பி எடுக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படு தோல்வி அடைந்தது. அதன் பின் விஜயகாந்தின் உடல் நிலையும் சரியில்லாமல் போனது. எனவே, அவரின் அரசியல் நடவடிக்கைகள் முடங்கிப் போனது. ஆனாலும், பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு அவர் தனது கருத்துகளை மட்டும் தெரிவித்து வந்தார். மேலும், ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஒன்றும் உருவாகவில…
-
- 0 replies
- 834 views
-
-
கூரையைப் பிய்த்துக் கொட்டிய அதிர்ஷ்டம் ஹொரணைப் பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளைக் கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபடுவருக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5 ஆயிரம் ரூபா தாள்கள் 60 கிடைத்துள்ளன. 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 3 லட்சம் ரூபா பணம் இருந்துள்ளது. அந்த நபர் தனக்குக் கிடைத்த பணத்தை உரிமை யாளரிடம் ஒப்படைத்துள்ளார். ஹொரணை நகர்ப் பகுதியில் பழைய பத்திரிகைகளைச் சேகரிக்கும் போது அந்தப் பகுதியில் பெண்ணொருவர் 10 கிலோ கிராம் பழைய பத்திரிகைகளை 100 ரூபாய்க்கு விற்றுள்ளார். பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட பத்திரிகை களைத் தரம் பிரித்தபோது, அதற்குள் 3 லட்சம் ரூபா பெற…
-
- 0 replies
- 346 views
-
-
ஐ.நா. அமர்வில் அஸர்பைஜான் ஜனாதிபதி மகள் செய்த காரியம்! ஐக்கிய நாடுகள் சபையில் அஸர்பைஜான் ஜனாதிபதி மிக முக்கியமான பேச்சை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவையில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது மகள் செய்த காரியம் மக்களை எரிச்சலூட்டியுள்ளது. நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், அஸர்பைஜானுக்கும் அதன் அண்டை நாடான ஆர்மேனியாவுக்கும் இடையில் 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் பற்றி அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹம் அலியேவ் உரையாற்றிக்கொண்டிருந்தார். தம் நாட்டின் மீது ஆர்மேனியா இனப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது என்றும், போர் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகள் லெய்லா அலியேவா (33) தனது கைத்தொலைபேசியில் முக…
-
- 0 replies
- 233 views
-
-
ஏமாற்றமடைந்தார் அமெரிக்க மாப்பிளை. காதலனோடு பெண் தப்பி ஓட்டம் திருமணம் முடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கொழும்புக்கு வந்த மாப்பிளை திருமணம் நடைபெறும் அன்று காலை ஏமாற்றமடைந்தார். தமிழர் தாயகப் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவரை திருணம் முடிப்பதற்கு தாயகத்தின் இன்னுமொரு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த திருமணத்தை உறவினர் ஒருவர் பேசியுள்ளார் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மணமகனின் பெற்றோர் விரும்பம் தெரிவித்து பெண் வீட்டாருடன் பேசியுள்ளனர். அமெரிக்காவில் முக்கியமான துறையில் (PHD) கலாநிதிப் பட்டம் பெற்ற குறித்த மண மகன் தனது பெண் சகோதர்கள் திருமணம் செய்யும் வரை நீண…
-
- 3 replies
- 381 views
-
-
செப்டம்பர் 23: பூமியின் அழிவு ஆரம்பமா? ‘நிபிறு’ என்ற கோள் நாளை மறுதினம் (23) பூமியைக் கடந்து செல்லவுள்ளதாகவும், இதன் தாக்கத்தால் உலகின் அழிவுக் காலம் ஆரம்பமாகும் என்று டேவிட் மெடே தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ஆய்வாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இவரது கருத்து, இலட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ‘நிபிறு’ என்று ஒரு கிரகம் இல்லை என நாஸா மறுத்துள்ள நிலையில், உலகின் அழிவை மக்களிடம் இருந்து மறைக்கவே நாடகமாடுகிறது நாஸா என்றும் டேவிட் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் நிபிறுவை ஜெருசலேம் ஆகாயப் பகுதியில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், நிபிறுவின் ஈர்ப்பு சக்தி பூமியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள…
-
- 5 replies
- 807 views
-
-
3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை. 3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்…
-
- 14 replies
- 4.3k views
-
-
பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பளுவில் நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிக்குண்ட நிலையில் தீயணைப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்படி நபர் 2.5 கிலோகிராம் எடையுள்ள இரும்புப் பளுவுக்குள்ளிலிருந்து தனது ஆணுறுப்பை …
-
- 0 replies
- 2k views
-
-
பறக்கும் விமானத்தில் பணிப்பெண் பாலியல் உறவு ; வெளியான வீடியோ ; நடந்தது என்ன… Weiterempfehlen ஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவு அவ்விமான சேவை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பணிப்பெண் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் காட்சியை அவ்விமானத்தின் விமானியொருவார் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தமது சக விமானிகளுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற விமான சேவை நிறுவனம் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு கடு…
-
- 0 replies
- 425 views
-
-
அடேங்கப்பா.. ஜன்னல் கம்பியில் அமர்ந்து பயணித்த புறா.. டிக்கெட் கொடுக்காத நடத்துநருக்கு மெமோ! பேருந்து ஒன்றில் புறா ஜன்னல் கம்பியில் அமர்ந்துகொண்டு பயணம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட் வாங்கவில்லை என அந்த பேருந்தின் நடத்துனருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அரூரிலிருந்து மலை கிராமமான எல்லவாடிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் பயணம் செய்த குடிமகன் ஒருவர் புறாவிடம் உரையாடிபடியே சென்றுள்ளார். அப்போது பேருந்தை மறித்து ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாவுக்கு அவர் டிக்கெட் வாங்கியுள்ளாரா என கேட்க, நடத்துனர் இல்லை என பதில் அளித்துள்ளார்.உடனே டிக்கெட் பரிசோதகர், அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகளுக்கும் பறவ…
-
- 1 reply
- 486 views
-
-
அரசியல்வாதிகளை பிரமிக்க வைத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ! கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமைச்சரின் மகள் மற்றும் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று இடம்பெற்றது. சமகால அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அகில விராஜ் காரியவசம், ஆடம்பரமின்றி மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். தனது மகன் மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக வித்தியாசமான முறை ஒன்றினை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங…
-
- 6 replies
- 643 views
-