செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7112 topics in this forum
-
மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை! adminJanuary 28, 2025 சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.01.25) சென்ற இருவர் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை (சோலார் ) பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து , வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து , அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை ம…
-
- 0 replies
- 173 views
-
-
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய…
-
- 1 reply
- 394 views
- 1 follower
-
-
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண். சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன…
-
-
- 2 replies
- 338 views
- 1 follower
-
-
பிகார்: சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,சிது திவாரி பதவி,பிபிசி செய்தியாளர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ. அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைய…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு திருவனந்தபுரம்: காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஜன.20) அறிவிக்கப்படுள்ளது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளை…
-
-
- 3 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,KAIKYOKAN படக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி' காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கோ ஈவ் பதவி, பிபிசி நியூஸ் ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால். இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியி…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
23 JAN, 2025 | 11:03 AM பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர். இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலை…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு! ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன. சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படு…
-
-
- 2 replies
- 182 views
-
-
நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் மு…
-
- 1 reply
- 373 views
-
-
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம்; இரண்டு மாடுகள் மாயம் 18 JAN, 2025 | 11:50 AM நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு! கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழம…
-
-
- 17 replies
- 660 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. "கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. …
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
-
- 1 reply
- 156 views
-
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எ…
-
-
- 26 replies
- 1.1k views
-
-
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்? Kumaresan MJan 10, 2025 14:40PM கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கொச்சியிலுள்ள டல்க் டல்க் ஹோட்டலில் இருந்து கொச்சி போர்ட் பகுதி ஆட்டோ ஓட்டுநரான சித்திக் ஹூசைனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. ஆட்டோவில் ஒரு விவிஐபி பயணித்து நகரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, 4 ஆட்டோக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, சித்திக் தனது ஆட்டோவுடன் மேலும் 3 ஆட்டோக்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர், ஆட்டோக்கள் முற்றிலும் சோதனையிடப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் சித்திக்கிற்கு யார் அந்த விவிஐபி என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கொஞ்ச நேரத்தில் சாதாரண சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் வந்துள்ளார்…
-
- 0 replies
- 144 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை…
-
- 1 reply
- 169 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமைய…
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய் January 9, 2025 12:35 pm மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது. முதலில் உச்சந் தலையில் சிறிது அரிப்பு ஏற்பட்டு சில நாட்களில் ரோமத்தின் தன்மை சொரசொரப்பாக மாறி 72 மணித்தியாலத்துக்குள் முடி தானாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதாக கூறப்படுகிறது. தலைமுடியை மெதுவாக வருடி விட்டால் கூட கையோடு வந்து விடுவதாகவும் இதுவரையில் அந்தக் கிராமத்தில் சுமார் 50 பேர் வரை இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்…
-
- 0 replies
- 231 views
-
-
31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம். தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தி…
-
- 0 replies
- 149 views
-
-
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/art…
-
-
- 17 replies
- 1k views
- 1 follower
-
-
படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜக்தாப் பதவி, பிபிசி மராத்திக்காக ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்? இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவைச் சேர்ந்த ஒரு…
-
-
- 3 replies
- 321 views
- 1 follower
-
-
ஜாம்பியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி கைது! ஜாம்பியாவில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு டஜன் கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பறியும் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஃபிரி செவ்வாய்க்கிழமை காலை “போதையில் இருந்த நிலையில்” செல் சாவிகளை வலுக்கட்டாயமாக கைப்பற்றினார் என்று ஜாம்பியாவின் பொலிஸ் சேவை புதன்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பிறகு, அந்த அதிகாரி ஆண் மற்றும் பெண் செல்களை திறந்து, சந்தேக நபர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி, அவர்கள் புத்தாண்டை கொண்டாட சுதந்திரமாக இருப்பதாக கூறியதாக பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. தலைமறைவாக உள்ள 13 கைதிகளுக்கு உண்டான த…
-
- 0 replies
- 183 views
-
-
நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி கைது! பலாங்கொடை: இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி, பொது பாதுகாப்பு பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த மூடைகள் பலாங்கொடை நகரின் கடைகளுக்கு விநியோகிக்க பணி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. சம்பவம், பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் அருகே நடைபெற்றது. அங்கு, லொறியில் அரிசி மூட்டைகளை இறக்கும் பொழுதில், நாய்கள் மூட்டைகளுக்கு இடையில் இருந்ததை கண்டெடுத்த ஒரு நகரவாசி, அதை கைத்தொலைபேசியில் பதிவு செய்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பினார். அதன்பேரில், அதிகாரிகள் லொறியை கைப்பற்றி மேலதிக விசாரணைகள் மேற்கொண்டனர். அந்த லொறியில் 21 இலட்சம் ரூபாவிற்கும் அதிக வில…
-
- 0 replies
- 171 views
-
-
கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுக…
-
-
- 3 replies
- 394 views
- 1 follower
-
-
2025; தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள். உலகின் புகழ்பெற்ற தீர்க்கத்தரிசிகளான பாபா வங்கா மற்றும் மைக்கேல் டி நோஸ்திரதாம் ஆகியோர் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலும் ஒரே மாதிரியான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசிகள், மனிதர்களுடன் அன்னிய தொடர்பு, விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சி, பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான தீர்க்கதரிசனங்களைச 2025 ஆம் ஆண்டுக்கு கணித்துள்ளனர். இவர்கள் 470 வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும், நவீன வரலாற்றில் இதுவரை நடக்காத சில பெரிய நிகழ்வுகளை இருவரும் கணித்துள்ளனர். பாபா வங்கா (Baba Vanga) பாபா வங்…
-
- 0 replies
- 163 views
-