செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கேமரூனை தேர்தல் பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்டு திணறடித்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர். இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக அந்நாட்டு பிரதமரான டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, சுதந்திர கட்சி என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு... இங்கிலாந்து பிரதமரையே திணறடித்த 10 வயது இந்திய வம்சாவளி சிறுமி! தேர்தலை முன்னிட்டு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்…
-
- 0 replies
- 529 views
-
-
984kbps | HDS (akamai_hds_hds_hds_hds_hds) | unmediated | 640x360 பொதி வைக்கும் இடத்தில் விமான ஊழியர் தூக்கம், திரும்பியது விமானம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் சரக்குகள் வைக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் தூங்கியதை அடுத்து, விமானம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் அடிப்பகுதியில் பயணிகளின் பெட்டி போன்ற சரக்குகளை வைக்கும் இடத்தில், பெட்டிகளை வைக்கும் ஊழியர்களில் ஒருவர் தூங்கிவிட்டாராம். திடீரென்று விழித்துக்கொண்ட அவர், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்து, அந்த சரக்குப் பகுதியின் கதவைத் தட்ட, என்னவோ ஏதோ என்று கவலை அடைந்த விமானிகள் மீண்டும் விமானத்தை சியாட்டில்…
-
- 2 replies
- 329 views
-
-
இறந்த பின் மனித உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும் காட்சி https://www.youtube.com/watch?t=24&v=GhSvZ9IOAaw
-
- 7 replies
- 1.7k views
-
-
வீதியோரம் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியர் ஜெசிந்தாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் என்ன? April 12, 20159:25 am மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தம்மை உருக்கி வெளிச்சம் கொடுப்பது ஆசிரியர்கள். அவர்கள் போற்றத்தக்கவர்கள். இந்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கல்வி கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியை ஒருவருக்கு நிகழ்ந்த துயரச் சம்பவம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் நானாட்டான் ம.வி மற்றும் மன்னார் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியை திருமதி ஜெசிந்தா மத்தேயு பிள்ளை (வயது-51) என்பவருக்கே உயிர் பிரியும் அளவிற்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தூசி தட்டினார் ரணில்! 800 மில்லியன் புலிகள் விவகாரம் மீண்டும் களத்தில். April 12, 201510:34 am விடுதலைப் புலிகளுக்கு மகிந்த அரசாங்கம் பணம் கொடுத்ததாக நீண்ட நாட்களாக , ஒரு பேச்சு அடிபட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. உண்மையில் என்ன நடந்தது…… 2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை , அவரது அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் தான் ( “ராடா” )Reconstruction and Development Agency (RADA),. டிரான் அலஸ் அதன் முகாமையாளராக கடமையாற்றினார். சுணாமியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புது வீடுகளை அமைப்பதே இந்த ராடாவின் நிகழ்ச்சி நிரல் என்று கூறப்படுகிறது. திறைசேரியில் இருந்து சுமார் 803 மில்லியன் ரூபா , ராடா என்னும் திணைக்களத்தின் …
-
- 2 replies
- 610 views
-
-
மின்னல் தாக்கி கடலை நோக்கி பாய்ந்த விமானம்: கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய விமானி [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 12:12.57 பி.ப GMT ] பிரித்தானியாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை மின்னல் தாக்கியபோது, கடலில் விழுந்து மூழ்க இருந்த விமானத்தை கடைசி நொடியில் விமானி காப்பாற்றியுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Aberdeen நகரிலிருந்து Loganair Saab 2000 G-LGNO என்ற உள்நாட்டு விமானம் 30 பயணிகள் மற்றும் 3 விமான குழுவினருடன் Shetland நகருக்கு புறப்பட்டது. வடக்கு கடற்பரப்பிற்கு மேல் விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, விமானத்தை ‘Auto Pilot’ (விமானம் தானாக இயங்கும்) முறைக்கு விமானி மாற்றி அமைத்துள்ளார். சிறிது நேரத்தில், வானிலை மாற்றத்தால் இடி மற்று…
-
- 5 replies
- 611 views
-
-
அது நியூயார்க்கில் இருந்து லண்டன் புறபட்ட விமானம் நியூயார்க்கை சேர்ந்த பிரான்சிஸ்கா ஹோகி (வயது 40) என்பவர் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்பொது அடுத்த இருக்கைக்கு உரிய பழமையான யூத மனிதர் ஒருவர் வந்தார். அவர் தனது அருகே ஒரு பெண்ணுக்கு இருக்கை ஒதுக்கபட்டு இருப்பது கண்டு தான் அந்த இருக்கையில் அமரமாட்டேன் என மறுத்து விட்டார்.தன்னுடைய மத வழக்கபடி மனைவி அருகில் மட்டும் தான் அமர வேண்டும் என கூறி உள்ளார். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த விவாதம் இறுதியில் அந்த பெண் இருக்கை மாற ஒத்து கொண்டார். லாரா ஹிவுட் (வயது 42) தனக்கும் இது போல் ஒரு அனௌபொஅவம் நிகழ்ந்ததாக கூறினார்.தான் சாண்டியாகோவில் இருந்து நியூயார்க் வழியாக லண்டன் செல்லும் போது மத்திய் இருக்கையில் இருந்தேன். ஒரு நபருக்கு …
-
- 9 replies
- 854 views
-
-
யு.எஸ்.- ரென்னிஸ்சி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்பினியாக இருக்கும் போது பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. கோமா நிலையில் இருந்த இப்பெண் கடந்த புதன்கிழமை கண்விழித்தார். அப்போது தான் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். சரிஸ்டா ஜில்ஸ் என்ற 20-வயதுடைய இவரின் குடும்பத்தினர் இரண்டு அதிசயங்களை கொண்டாடினர். பெற்ற தாய் கண் திறந்ததோடு தனது குழந்தையையும் பார்த்தது என்பனவாகும். நான்கு மாத கர்ப்பினியாக இருக்கும் போது டிசம்பர் மாதம் கார் விபத்து நடந்து கோமா நிலைக்காளானார். வைத்தியர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தாங்கள் நம்பிக்கையோடு இருந்ததாகவும் சரிஸ்டாசவின் உறவினர் தெரிவித்…
-
- 0 replies
- 367 views
-
-
அமெரிக்காவின் மிசௌரியை சேர்ந்த பெண்மணி, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய தனது மகளுடன் 49 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்தார். கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வேறொரு குடும்பம் பிரைசின் பெண் குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தது. சில வருடங்களுக்கு பின், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரிந்து கொண்ட பிரைசின் பெண் மெலானி டயானே கில்மோரே, தனது தாயை தேடியவாறு இருந்தார். மெலானிக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயா…
-
- 0 replies
- 360 views
-
-
மைதானத்துக்கு சிங்கக் குட்டியுடன் வந்த ரசிகரால் பரபரப்பு.! பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து, விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், அரங்கில் ந…
-
- 0 replies
- 508 views
-
-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 1958-1992 காலகட்டத்தில், 34 ஆண்டுகாலம் என்ஜினீயராக பணியாற்றியவர் மெக்ளிலாந்து. நாசாவின் 650 திட்டங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. இவர் 1991-ம் ஆண்டு, அமெரிக்காவில் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நாசாவின் விண்வெளி திட்டம் ஒன்றை 27 அங்குல மானிட்டரில் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் சுமார் 9 அடி உயரம் உடைய வேற்று கிரகவாசி ஒருவர் கலந்துரையாடியதை பார்த்தேன் என்ற தகவலை கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். “அந்த வேற்று கிரகவாசிக்கு 2 புஜங்கள், 2 கைகள், 2 கால்கள், 2 பாதங்கள், மெல்லிய தேகம், தலையுடன் இருப்பதை கண்டேன். இரண்டு கால்களில் நேராக நின்றதை பார்த்தேன்” என கூறி மேலும் …
-
- 5 replies
- 560 views
-
-
கொச்சி: ஏமனில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டு விமானத்தில் இன்குபேட்டரில் வைத்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து 4 ஆயிரத்து 600 இந்தியர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. ஏமனில் வசித்து வந்த ராஜி என்பவர் குறைமாதத்தில் பார்வதி என்ற பெண் குழந்தையை பெற்றார். இந்நிலையில் குழந்தையுடன் ராஜி ஏமனில் உள்ள சனா நகரில் இந்தியர்கள் மீட்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர்கள் விமானம் மூலம் அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைக்கு மஞ்சள்காமாலை, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பது தெரிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் குழந்தையை இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் குழந்தையை இன்குபேட்டருடன்…
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடி யாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்ய வில்லை. இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002-ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது. காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்த வரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார். தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார். அந்…
-
- 4 replies
- 450 views
-
-
ஞான சார தேரரின் மறுபக்கம்.. மகள், மனைவி! பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..?? April 11, 20156:19 am ஏ எம் எம் முஸம்மில்- பதுளை- கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும். இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப் படி இயங்கியவர் என்று பரவலாக பேசப் படுகின்றது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும் இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியது. இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக …
-
- 0 replies
- 486 views
-
-
மட்டுநகர் பிரபல ஹோட்டலில் “உள்ளக” அசிங்கம் அம்பலம். April 09, 201512:13 pm மட்டக்களப்பில் முன்னால் பொருளாதார ஊழல் அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் துணையுடன் மீன்பாடும் வாவியை சட்டவிரோதமாக நிரப்பி “ஈஷ்ட்லகூன்” எனும் பெயரில் விடுதி நடாத்தும் செல்வராசா என்பவர் தமது அந்த விடுதியில் தங்க வரும் இளம் தம்பதியினரை குளியல் அறையில் இரகசியமாக வீடியோ எடுக்கும் கும்பல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக ஆதாரத்துடன் அறியமுடிகிறது. 08/04/2015 புதன் இரவு புதிய திருமணத்தம்பதியினர் மேற்படி “EAST LEGOON HOTEL” விடுதியில் 503 ம் இலக்க அறையில் தங்கி இருந்த மட்டுநகர் பகுதியை சேர்ந்த திருமணத்தம்பதியினர் இரவு 10 மணிக்கு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கதவில் துவாரம் ஒன்றினால் இரு இளைஞர்கள் பா…
-
- 11 replies
- 1.4k views
-
-
சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். April 10, 201512:16 am ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார். 23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை அழைத்துள்ளனர். Brunoy (Essonne) காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் இங்குள்ள Val d’Yerres 2 பல்பொருங் அங்காடிகள் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் தொடர்மாடிக் கட்டடத்திற்கு வந்த காவற்துறையினர், அங்கு ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர். தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
நள்ளிரவில் கோழைத்தனமாய் நடந்து கொண்ட தென்கொரியா: சீறும் வடகொரியா (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 04:08.25 பி.ப GMT ] வட கொரிய ஜனாதிபதியை Kim Jong-un வர்ணித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட பலூன்களை தென்கொரியா நள்ளிரவில் பறக்கவிட்டுள்ளதை வடகொரியா கண்டித்துள்ளது. வடகொரியா எல்லையில் நேற்று நள்ளிரவில், தென் கொரியா ஆர்வலர்கள் 'தி இன்டர்வியூ' படத்தின் டி.வி.டி-க்களை பறக்கவிட்டுள்ளனர். இதில் பல பலூன்கள் வட கொரிய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில் தென் கொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா கூறியதாவது, தென் கொரியாவின் கோழைத்தனமான செயலை நாங்கள் முறியடித்து விட்டோம் என்றும் இதன் மூலம் எங்களது மிரட்டலுக்கு அந்த நாடு பணிந்துவ…
-
- 0 replies
- 491 views
-
-
மரண படுக்கையில் கெஞ்சிய மகன்: கடைசி ஆசையை நிறைவேற்றிய பெற்றோர் (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 08:27.10 மு.ப GMT ] மரண படுக்கையில் இருந்த மகனின் கடைசி விருப்பமாக மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Teignmouth நகரில் ஜெம்மா-கிரெய்க் எட்வாட்ஸ்(Jemma-Craig Edwards) என்ற தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு Corey Edwards(5) என்ற மகனும், Isabella(2) Caitlyn(6 month) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் கோரி கடந்த சில மாதங்களாக கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள Bristol Royal Hospital for Children மருத்துவமனையி…
-
- 0 replies
- 869 views
-
-
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் ரணிலின் ஏற்பாட்டில் பாரிய மகாநாடா..? April 09, 20159:33 pm பல்வேறு வழிகளில் தமிழரை கட்டுப்படுத்திய கடந்த நிகழ்கால அரசுகள் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்த முடியாது இருந்தமை யாவரும் அறிந்தது. அந்த வகையில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களை கட்டுப்படுத்தும் பெறுப்பை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்திருப்பதாகவும், அதன் ஆரம்ப கூட்டம் சுவிட்சலாந்தில் சூரிச் மாநிலத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி கொழும்பில் இருந்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். புலம் பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றூம் இலங்கையில் இருந்தும் பல தமிழர்கள் இக் கூட்டம் இடம் …
-
- 1 reply
- 370 views
-
-
ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆவதுடன், அவரது உடல் நிலையும் மோசமாகிவருகிறது. இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலையை, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் பொறுத…
-
- 2 replies
- 687 views
-
-
ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஜப்பானியப் பள்ளிக்கு இவரை இடமாற்றம் செய்து அனுப்பியது. அங்கு பல ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் அன்றாடம் பல விபசாரிகளுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தினம் ஒரு புது மலர் என கொண்டாட்டம் போட்ட யுஹே டகாஷிமா, தனது ஒவ்வொரு படுக்கை தோழியுடனும் புகைப்படம் எடுத்து சேகரிக்க தொடங்கினார். மணிலாவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பி வந்து செட்டில் ஆன பிறகும் பிலிப்பைன்ஸ் பெண்களை மறக்க முடியாமல் ஆண்டுக்கு ஒருமுறை ‘செக்ஸ் டூர்’ சென்ற இவர், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து புத்தம்புது மலர்களாக பதம் பார்க்க தொடங்கினார். இப்படி …
-
- 11 replies
- 1.8k views
-
-
தப்பான இடத்தில், துப்பாக்கியை வைத்து "சூடு" வாங்கும் அமெரிக்கர்! நி்யூயார்க்: அமெரிக்கர்களுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வருகிறது பாருங்கள். அங்கு துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகம். ஆளாளுக்கு துப்பாக்கியுடன் திரிவது அங்கு சகஜமானது. ஆனால் இதனால் எதிர்பாராத சில புதிய விபரீதங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து அமெரிக்கர்கள், பேன்ட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தபோது, வைத்தபோது எதிர்பாராதவிதமாக அது சுட்டு தங்களது ஆணுறுப்பை இழந்துள்ளனராம். இப்படிப்பட்ட விபத்துகள் அதிகரிப்பது ஆண்களுக்கும், அரசு நிர்வாகத்தினுக்கும், மருத்துவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,18 வயதான மைக்கேல…
-
- 11 replies
- 1.1k views
-
-
மனம் மட்டுமல்ல... உடலாலும் பொருத்தமானவர்கள் சுதாவும், குமரனும்! இருவரும் மாற்றுத்திறனாளிகள்; காதலித்து மணம் முடித்தவர்கள். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தங்கள் இல்லத்தில், அழகான வாழ்க்கையை சமீபத்தில்தான் ஆரம்பித்திருப்பவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னோம்! போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் செயல் இழந்த சுதா, மெல்லப் பேசினார். ‘‘என் சொந்த ஊர் வாலாஜா. காலுக்கு பதிலா, கடவுள் எனக்கு தைரியம் நிறையக் கொடுத்துட்டார். வாலாஜா, ராணிப்பேட்டை, சென்னைனு என் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிச்சேன். இப்போ காட்பாடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதுக்காக காட்பாடியில ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தப்போ, தினமும் பள்ளி முடிந்ததும் சமையலுக்க…
-
- 0 replies
- 375 views
-
-
-
- 3 replies
- 663 views
-
-
யாழில் இருந்து தாயாரைத் தேடி கொழும்பு சென்ற மகள் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தந்தையுடன் தாயும் சேர்ந்து கொழும்பு சென்று பின்னர் தாயார் சுகவீனம் அடைந்துள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் என மனைவியை கொழும்பில் விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்த தந்தை தனது பிள்ளைகளுக்கு தெரிவித்துள்ளார். “அம்மாவுக்கு என்ன நோய்’ என மூத்த மகளான குறித்த யுவதி கேட்டும் தந்தை சொல்லாத காரணத்தால் மகள் சந்தேகம் அடைந்து தனது தாய்க்கு ஏதோ பாரதுாரமான நோய் என எண்ணி துக்கப்பட்டுள்ளாள். அதன் பின்னர் தாயார் அ…
-
- 7 replies
- 1.2k views
-